குறட்டை சத்தம் அதிகமா இருக்கா ??? அதை நிறுத்த இதோ சில டிப்ஸ்..!!!
இன்றைய காலத்தில் நிறைய மக்கள் குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். இத்தகைய குறட்டையை
நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை
அறியாமலேயே குறட்டையானது வந்துவிடுகிறது. இதனால் நம்முடன் படுப்பவர்கள் பல
நாட்கள் தூக்கத்தை தொலைத்துவிடுகின்றனர். அப்படி உங்கள் குறட்டையை நிறுத்த
வேண்டுமானால், தொடர்ந்து படித்து பாருங்கள். பொதுவாக குறட்டை என்பது ஒரு
கோளாறு. இது குரல் வளையில் காற்றானது அளவுக்கு அதிகமாக செல்லும் போது,
அதிகப்படியான ஒலியை உண்டாக்குகிறது. அதிலும் காற்றானது வாய் மற்றும்
மூக்கின் வழியாக இடையூறுடன் செல்லும் போது அது பலத்த ஒலியை உண்டாக்குகிறது.
குறிப்பாக சளி அல்லது மூக்கடைப்பின் போது இந்த மாதிரியான சப்தம்
ஒலிக்கப்படும். மேலும் குறட்டையானது வயது, சைனஸ், அதிகப்படியான உடல் எடை
மற்றும் புகைப்பிடித்தல் ஆகிறவற்றின் காரணமாகவும் ஏற்படும். இப்படி குறட்டை
விட்டால், அது உடல் நலத்தைப் பாதிப்பதோடு, உறவுகளில் தொல்லையை
உண்டாக்கும்.
ஆகவே அந்த குறட்டையை நிறுத்துவதற்கு ஒருசில எளிய வழிகளை உங்களுக்காக
கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை பின்பற்றி குறட்டையை
தவிர்த்திடுங்கள்.
* தலையணை: படுக்கும் போது தலையணை பயன்படுத்தாமல் சாதாரணமாக படுப்பதற்கு
பதிலாக, சற்று அதிக அளவில் தலையணையைப் பயன்படுத்தி தூங்கினால், குறட்டையை
தவிர்க்கலாம்.
* பக்கவாட்டில் தூங்கவும்: இப்படி இரவு முழுவதும் படுப்பது சாத்தியம் இல்லை
தான். இருப்பினும் இப்படி பக்கவாட்டில் படுத்தால், அது குறட்டையை
தடுக்கும்.
* நீராவிப் பிடிப்பது: ஆவிப் பிடித்தாலும், குறட்டை வருவதை தவிர்க்கலாம்.
ஏனெனில் இது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல
வழிவகுக்கும்.
* புகைப்பிடிப்பதை தவிர்ப்பது: புகைப்பிடித்தால் உடலுக்கு ஏற்படும் பல்வேறு
பிரச்சனைகளில் ஒன்று தான் குறட்டை விடுவது. ஏனெனில் புகைப்பிடிக்கும்
போது, அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குவதால், அது
மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.
* மது அருந்துதலை நிறுத்துவது: மது அருந்துவது, தூக்க மாத்திரைகளை
உட்கொள்வது போன்றவற்றை நிறுத்தினால், அது தசைகளை தளர்வடையச் செய்து, காற்றை
எளிதாக செல்ல உதவும்.
சளிக்கு நிவாரணம் அளித்தல்: சளி அல்லது ஜலதோஷம் பிடித்தால், அதற்கு உடனே
சரியாக சிகிச்சை அளித்து வந்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம்.
* தூங்கும் நேரம் ஸ்நாக்ஸ் வேண்டாம்: இரவில் தூங்கும் போது பிட்சா, பர்கர்,
சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால்,
அது சளியின் உற்பத்தியை அதிகரித்து, குறட்டைக்கு வழிவகுக்கும். எனவே
கொழுப்புச்சத்துள்ள உணவுப் பொருட்களை இரவில் தவிர்ப்பது நல்லது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment