Pages

Tuesday, January 28, 2014

கர்ப்பப்பை வலிக்கு சிறந்த மருந்தாக கருஞ்சீரகம்


http://www.tamilula.com/uploads/images/lifestyle/shoba/karum%20seer.jpg



பொதுவாகவே கருஞ்சீரகம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இது எல்லோரின் வீட்டிலும் சமையல் அறையில் காணப்படும் பொருள் தான், இருந்தாலும் இதன் மகத்துவம் என்னவென்று அறிந்துக் கொள்ள வேண்டாமா?
* அடிக்கடி ஜலதோஷத்தால் பாதிக்கப்படுவோர் கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் விட்டால் ஜலதோஷத்துக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.
* கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீரக‌ கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும்.
* கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.
* சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.
* கருஞ்சீரகத்தைக் விநிகரில் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும். பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
* பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
* கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்து. சொரி, சிரங்கு, நாய்க்கடி, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணி.

No comments:

Post a Comment