Pages

Tuesday, October 29, 2013

ஆண்களுக்கான சிறப்பு மருந்துகள்


வணக்கம்.
இந்த பகுதியில் வாரம் ஒன்றிரண்டு சித்த ஆயுர்வேத மற்றும் யுனானி மருந்துகளை அலசுவோம். இந்த மருந்துகள் முழுவதும் பெரிய பக்க விளைவுகள் அற்றது, நிரந்தர தீர்வுக்கானது. மேலும் இவ்வகைகள் OTC (over the counter) என்றழைக்கப்படும் வகையைச் சார்ந்தது. இதற்கென, மருத்துவர்களின் மருந்துச் சீட்டு தேவைப்படாது. ஆனால் Sildenafil citrate, tadalafil citrate, Dapoxetine chloride போன்ற ஆங்கில மருந்துகளுக்கு சட்டப்படி மருந்து சீட்டு அவசியம். (டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமல் விற்பது சட்டப்படி குற்றம், ஆனால் மருந்துக்கடைகள் பெரும்பாலும் இதை மதிப்பதில்லை). இந்த வாரம் வெளிப்பூச்சுக்கான மருந்துக்களைப் பார்ப்போம்.

1. HIMCOLIN - Himalaya Healthcare

புகழ் பெற்ற ஆயுர்வேத நிறுவனத்தின் படைப்பு. இது ஆண்களுக்கான வெளிப்பூச்சு வகையைச் சார்ந்தது.

உயயோகம்:

இதில் சிறிதளவு எடுத்து, ஆண்குறியில் அடிப்பகுதி வரை முழுதும் தடவிக் கொள்ளவும். (மசாஜ் செய்வதை போன்று) மொட்டுப்பகுதியில் கண்டிப்பாக வேண்டாம். புண்கள், காயம் போன்றவை இருந்தால் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டாம்.

காலம்:
உடலுறவுக்கு முன் சுமார் 1 மணி நேரத்திற்கு முன் பூசிக்கொள்ளவும்.

உட் பொருட்கள்:

1. வாலுளுவை அரிசி - Celestrus paniculatus
2. கஸ்தூரி வெண்டை - Hibiscus abelmoschus
3. பாதம் (அ) வாதுமை - Prunus amygdalus
4. நொச்சி - Vites negundo
5. பருத்தி - Gossypium herbaceum
6. பிஸ்தா - Pistacia vera
7. ஜாதிக்காய் - Myristica fragrans
8. கிராம்பு - Syzygium aromaticum
9. லவங்கம் - Cinnamomum cassia

இவை அனைத்தும் சித்த மருத்துவத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.

அளவு:
30 gm அளவுகளில் கிடைக்கிறது.

பலன்
இது எழுச்சி குறைவானவர்களுக்கு சிறப்பாக வேலை செய்கிறது. மேலும் நீண்ட நேரம் தாக்குப்பிடிப்பதாகவும் சிலர் சொல்வதுண்டு. நரம்புகளை இளக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் எழுச்சி சிறப்பாக இருக்கும். Topical anesthesia போன்ற செயல்பாடு இருப்பதால் விரைவில் விந்து வெளியாவதில்லை.

குறிப்பு:
வாய்வழி இன்பம் செய்பவராக இருந்தால் ஆண்குறியை நன்கு கழுவிக்கொண்டு செய்யவும்.


தயவுசெய்து உபயோகித்து பலனை எழுதுங்கள் அடுத்தவர்களுக்கு மிகவும் பயன்படும். இதேபோல எராளமான சித்த ஆயுர்வேத யுனானி மருந்துகள் உண்டு. தெரிந்தவர்கள் உபயோகித்தவர்கள் கேள்விப்பட்டவர்கள் எழுதுங்கள். அவற்றை நன்கு ஆராய்ந்து, மூத்த மருத்துவர்களிடம் ஆலோசித்து விளக்கமாகவும் அறிவியல் பூர்வமாகவும் எழுத முயற்சிக்கிறோம்.

 2. கோபால் தைலம் (Shri Gopal Tailam)

இதுவும் மேல்பூச்சு வகையைச் சார்ந்தது தான்.

உபயோகம்:
சிறிதளவு எண்ணையை எடுத்து ஆண்குறி முழுவதும் (மொட்டு தவிர்த்து) நன்கு படும்படி மசாஜ் செய்யவும்.

காலம்:
உடலுறவுக்கு முன் சுமார் 1 மணி நேரத்திற்கு முன் பூசிக்கொள்ளவும்.

விரைப்புத்தன்மை மிகவும் குறைந்தவரானால் தினசரி இரவு படுக்கும் முன்னர் தடவி மசாஜ் செய்து கொண்டு வரவும். நல்ல பலன் கிடைக்கும்.

உட் பொருட்கள்:
அஸ்வகந்தா,
தண்ணீர் விட்டான் கிழங்கு
நெல்லி
சந்தனம் போன்ற 20 க்கும் மேற்பட்ட மூலிகைகளை எள்ளெண்ணையில் சேர்த்து செய்வது

அளவு:
15 - 30 ml அளவுகளில் கிடைக்கிறது.

பலன்
இது எழுச்சி குறைவானவர்களுக்கு சிறப்பாக வேலை செய்கிறது. நரம்புகளை இளக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் எழுச்சி சிறப்பாக இருக்கும்.

அனைத்து புகழ் பெற்ற ஆயுர்வேத நிறுவனங்களிலும் இந்த தயாரிப்பு உள்ளது.

 3. அஸ்வகந்தாதி யமகம் (Aswagandhathi yamakam)

இது கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலை-கேரளா -வின் தயாரிப்பு.

உபயோகம்:
சிறிதளவு எண்ணையை எடுத்து ஆண்குறி முழுவதும் நன்கு படும்படி மசாஜ் செய்யவும். இது நெய் போன்று கெட்டியாக இருக்கும். ஒரு ஸ்பூன் அளவு கரண்டியில் எடுத்து சிறிது சூடாக்கி தண்ணீர் போல் ஆன பின்பு (வெது வெதுப்பாக) ஆண்குறி முழுவதும் மசாஜ் செய்யவும். (இதனை நான் கல்லூரி படிக்கும் பொழுது உபயோகிப்பது உண்டு, நல்ல பலன் உண்டானது. இதனை நான் மெழுகுவர்த்தி சூட்டில் சூடாக்கி பூசிக்கொள்வதைப் பார்த்த என் நண்பன் எரிச்சலாகி "பேசாம எண்ணையை நல்லா கொதிக்க வைத்து ஆண்குறியை உள்ளே விடுடா ஒரே நாளில் பெரிசாகிவிடும்" என்று சொல்வதுண்டு)


காலம்:
இதனை இரவு படுக்கும் முன்னர் அல்லது காலையில் குளிப்பதற்கு ஒரிரு மணிக்கு முன்பாக பூசி மசாஜ் செய்துவிடவும். இது உடனடி பலனுக்கானது அல்ல தொடர்ச்சியாக உபயோகிப்பதற்கான எண்ணை. கண்கூடான பலனுக்கு குறைந்தது ஒரு மாதம் ஆகும்.

உட்பொருட்கள்
அஸ்வகந்தா
நெய்
(இது AVS -ன் தனிப்பட்ட தயாரிப்பு, எனவே மற்ற உட்பொருட்கள் விவரம் இல்லை)

அளவு:
200 ml

பலன்
இது எழுச்சி குறைவானவர்களுக்கும் ஆண்குறி பருக்கவும் சிறப்பாக வேலை செய்கிறது. நரம்புகளை இளக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் எழுச்சி சிறப்பாக இருக்கும்.

குறிப்பு:
சூடு பதமாக இருக்கவேண்டும், கவனம். சிறிது குதிரை வாசம் வீசும் (அஸ்வகந்தா இருப்பதால், அஸ்வம் - குதிரை, கந்தா - சக்தி ) எனவே துணிகளில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.

4. Vita-Ex massage oil - By Baidyanath

இது புகழ்பெற்ற Baidyanath எனும் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையத்தின் படைப்பு

உபயோகம்:
சிறிதளவு எண்ணையை எடுத்து ஆண்குறி முழுவதும் (மொட்டு தவிர்த்து) நன்கு படும்படி மசாஜ் செய்யவும்.

காலம்:
உடலுறவுக்கு முன் சுமார் 1 மணி நேரத்திற்கு முன் பூசிக்கொள்ளவும்.

விரைப்புத்தன்மை மிகவும் குறைந்தவரானால் தினசரி இரவு படுக்கும் முன்னர் தடவி மசாஜ் செய்து கொண்டு வரவும். நல்ல பலன் கிடைக்கும்.

உட் பொருட்கள்:
இது 4 வகையான ஆயுர்வேத எண்ணைகளின் கூட்டு.

1. மேற்சொன்ன Shri Gopal Thailam
2. சந்தன எண்ணை
3. மல்ல தைலம் (malla thailam)
4. Malkangni Tailam

அளவு
100 மி.லி

பலன்:
இது எழுச்சி குறைவானவர்களுக்கும் ஆண்குறி பருக்கவும் சிறப்பாக வேலை செய்கிறது. நரம்புகளை இளக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் எழுச்சி சிறப்பாக இருக்கும். அதீத சுய இன்பப் பழக்கத்தால் நரம்புகள் வலுவிழந்திருந்தால் இது நரம்புகட்கு நல்ல வலுவையும் உரத்தையும் கொடுக்கும்.

இத்துடன் வெளிப்பூச்சுக்கான மருந்துகள் முடிந்தது. எதாவது விடுபட்டிருந்தால் சுட்டிக்காட்டவும்.

11 comments:

  1. நீர்முள்ளி 200 கிராம்
    ஓரிதழ்தாமரை 200 கிராம்
    ஜாதிக்காய் 100 கிராம்
    நெருஞ்சி 100 கிராம்
    முறையாக 60 நாட்கள் சாப்பிட அனுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும்
    9600299123

    ReplyDelete
  2. ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் அனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் ...கலப்படம் இல்லாத. ..ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
    Replies
    1. மிக நன்று என்ன விலை pasymai yugam

      Delete
    2. மிக நன்று என்ன விலை pasymai yugam

      Delete
  3. ஓரிதழ் தாமைரைைரைமைரைைரை

    சுுரணம் சாப்பிட்டால் விைரைபா்புைரைபா்புைரைிைரைப்புைரைப்புைரை்பா்பு
    அதிகரிக்குமா

    ReplyDelete
  4. நீர்முள்ளி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 200 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
    50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 50 கிராம்
    தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம்
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
  5. உருப்பு பெரியதாக

    ReplyDelete