Pages

Wednesday, January 29, 2014

சிறுநீரகமும் அதன் தொழில்பாடும்

kidney
சிறுநீரகம் இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டின் இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக (இரண்டு) விலா எலும்புகளின் கீழ்ப்புறத்தில் அவரை விதை வடிவுள்ள இரு உறுப்புகள் ஆகும்.

ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம். மனித உடலின் ஆதார சுருதி சிறுநீரகம்
சிறுநீரகம் என்றால் பிறப்புறுப்பு என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. நாம் உயிர் வாழ இன்றியமையாத அங்கங்களில் சிறுநீரகமும் ஒன்று. மிகச்சிறிய உறுப்பாயிருப்பினும் சிறுநீரகங்களின் பணி வியக்கத்தக்கது.
சிறுநீரகம் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் முக்கியமான பணியை மேற்கொள்வதால் இரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் ஆகியவை அதிகரித்தால் சிறுநீரகம் பாதிப்படைந்ததாக அறிய முடியும். இவற்றில் யூரியாவின் அளவு 100 மிலி, ரத்தத்தில் 20 முதல் 40 மி.கி. வரை இருக்கலாம். இந்த இரண்டு சிறுநீரகங்களும் நமது உடலின் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் அங்கமாக மட்டுமே செயல்படுவதில்லை.
இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது எலும்புகளை உறுதிப்படுத்துவது, இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவது, உடலின் நீர் மற்றும் அமிலப் பொருள்களைச் சீரான அளவில் கட்டுப்படுத்துவதன் முலம் உயிர் நிலைப்பதற்கான இரசாயன அளவீடுகள் கண்காணிக்கப்படுவது போன்ற இன்றியமையாத பணிகளைச் செய்யும் சிறுநீரகங்கள் உண்மையிலேயே வியப்புக்குரியவைதாம்.
சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகி வரும் சிறுநீர் இக்குழாய் முலமாக சிறுநீர்ப் பையினை அடைக்கின்றது. சிறுநீர்ப் பையானது விரிந்து கொடுக்கக்கூடிய தசைகளால் ஆன பகுதி. அவ்வப்போது இத்தசைகள் சுருங்கி உள்ளிருப்பதை வெளியேற்றுகின்றன.
சிறுநீர் இறக்கு குழாய் அமைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. பெண்களுக்கு இது வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறது.
நரம்பு மண்டலம் சிறுநீர்ப் பையில் சில சிறப்பான பணிகளை செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகுழாய்கள் முலம் துளித்துளியாக சிறுநீர்ப் பைக்குக் கொண்டு வந்து சேர்க்க உத்தரவளிப்பது, சிறுநீர்ப்பையை விரிவடையச் செய்து சிறுநீரைத் தேக்கி வைப்பது, சிறுநீர்ப்பை ஓரளவு நிரம்பியதும் முளைக்கு தெரிவிப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது.
திடீரென்று இரவில் மட்டும் அதிகச் சிறுநீர் கழிப்பது பெரும்பாலும் சிறுநீரகப் பாதிப்பின் முதல் அறிகுறியாகும். இதுதவிர சிறுநீர் பாதையில் கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதனாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயினாலும் வயது முதிர்ந்த ஆண்களுக்கு சுக்கிலன் பெருத்துப் போவதாலும் இந்நிலை ஏற்படலாம்.
சிறுநீர் இறங்காமையும் ஒருவித நோய்தான். குறைந்தது பன்னிரண்டு மணி நேரம் சிறுநீர் பிரியாமல் இருந்தால் அது மிகவும் பயப்படத்தக்க நிலையாகும்.
சிறுநீர்ப் பாதையில் கற்கள் தானாகவே தோன்றும். இவை தோன்றுவது எதனால் என்று இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லை. இக்கற்கள் பெரும்பாலும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். இந்த வலி முதுகின் மேல்புறம் விலா எலும்புகள் முடியும் இடத்தில் ஏற்படும். கற்கள் சிறுநீர்க் குழாயில் இருந்தால் வலிமேலிருந்து கிழாக விட்டுவிட்டுத் தொடரும்.
பொதுவாக இதுபோன்ற சிறுநீரகக் கல்லடைப்பு நோய் ஏற்படாமல் தடுக்க மிக அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர்ப் பாதையில் கற்களுக்கான கரு தோன்றும்போதே அதை அடித்து செல்லும் அளவுக்கு தண்ணீர் குடிப்பது நல்லது.
பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம். அவற்றை முழுமையாகத் தவிர்க்க முடியா விட்டால் முடிந்த அளவு குறைத்து உட்கொள்ளலாம்.
கற்களின் இராசயன குணத்திற்கு தக்கவாறு உணவு உட்கொள்வதை மாற்றிக்கொள்ளவேண்டும். உதாரணமாக கந்தகச் சத்து அதிகம் உள்ள கற்களினால் இறைச்சி, மின், முட்டை ஆகியவை அதிகம் உண்ணக்கூடாது.
மனித உடலின் ஆதார சுருதியான சிறுநீரகம் பல்வேறு நோய்கள் உருவாவதற்கும் ஆதாரமாக இருக்கிறது. இதனை உணர்ந்தே சித்தர்கள் சிறுநீரகச் செயல்திறனை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தவும் யோக மார்க்கங்களையும் சித்த லிகை ரகசியங்களையும் கண்டறிந்து உலகிற்குப் பரிந்துரை செய்திருக்கின்றனர்.
சிறுநீரகத்தில் கற்கள்
உடலில் தண்ணீர் குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி அவஸ்தைப்படுத்தும். அதற்கு தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவது நல்ல பலனளிக்கும்.

சிறுநீரகக் கற்கள்
சிறுநீரகக் கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக் குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும்.

காரணங்கள்
சில பொருட்களினால் சிறுநீர் அடர்கரைசலாகும் போது சிறுநீரகக் கற்கள் தோன்றலாம். சிறுநீரில் காணப்படும் இந்த பொருட்கள் சிறிய படிகங்களை உண்டாக்கி, அவை கற்களாக மாறலாம். சிறுநீர் கற்கள் உண்டாகி சிறுநீரகக் குழாய் வழியாக கீழே இறங்கும் வரை எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது. சிறுநீரகக் கற்கள் சிறுநீர் குழாய் வழியாக கீழ்நோக்கி நகரும்போது வலியினை ஏற்படுத்தும். இவ்வலியானது, அடிக்கடி பின்புற விளாவின் இரண்டு பக்கங்களிலும் ஆரம்பித்து கீழ்நோக்கி நகரும்.

கற்களின் வகைகளாவன
கால்சியம் கற்கள் அதிகமாக ஏற்படக்கூடியவை, அவை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஆண்களுக்கு ஏற்படும். சாதாரணமாக 20 வயது முதல் 30 வயதுடையவர்களுக்கு ஏற்படும். திரும்பத் திரும்பத் ஏற்படும் தன்மையுடையது. கால்சியம் பிற பொருட்களான ஆக்ஸலேட் (மிக அதிகளவிளான பொருள்), பாஸ்பேட் அல்லது கார்போனேட் போன்றவையுடன் சேர்ந்து கற்களை உண்டாக்கும்.

யூரிக் அமில கற்கள் - இவைகளும் அதிக அளவில் ஆண்களுக்கு ஏற்படும்.
ஸ்ட்ருவைட் கற்கலள்- (மெக்னீஸியம் அமோனியம்/ பாஸ்பேட் படிகங்களால் ஏற்படும் கல்)  என்பது முக்கியமாக பெண்களில் சிறுநீர் குழாய் சம்பந்தமான தொற்று நோய் கண்டதினால் ஏற்படக்கூடியவை. அவை மிகப்பெரியதாக வளரக் கூடியவை. மேலும் சிறுநீரகங்கள், சிறுநீர்குழாய் அல்லது சிறுநீர் பையில் அடைப்பை ஏற்படுத்தக் கூடியவை.

சிறுநீரகத்தை தாக்கும் நோய்கள்:
இது இரு வகைப்படும். சிறுநீரக அழற்சி (Nephritic Syndrome)  சிறுநீரக அழற்சி (Nephrotic Syndrome) என்று இருவகைப்படும். சிறுநீரக அழற்சியை, பொதுவாக ஆங்கிலத்தில் Urinary Inflamation என்றும் கூறுவர்.

I சிறுநீரக அழற்சி - (Nephritic Syndrome
இது சிறு குழந்தைகளையும், பள்ளிச் சிறுவர்களையும் பாதிக்கிறது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் சொறி, சிரங்கு, கொப்பளம் மற்றும் தொண்டைப்புண் போன்றவை மூலமாக ஸ்ட்ரேப்டோக்காக்கஸ் (Streptocococcus) என்ற விண்கிருமிகள் முக்கியமாக ரெப் ரிடோஜெனிக் ஸ்ட்ரேப் டோக்காக்கஸ் (Repriotogenic Streptocococcus) என்ற கிருமி இரத்தத்துடன் கலந்து சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

இக்கிருமிகளை எதிர்க்க, வெள்ளை அணுக்கள் உண்டாக்கும் எதிர்ப்பு சக்தியுடன் (Antibiotics இக்கிருமிகள் உண்டாக்கும் எதிர் சக்தியும் (Antigen) சேர்ந்துகொண்டு (இதை அழிப்பதற்குப் பதிலாக) கூட்டாக ஒரு அணி சேர்த்துக் கொள்ளுகிறது. இதை ஆற்றல் இல்லாத கூட்டுப்பொருள் (Immune Complex) என்று அழைக்கலாம். இது சிறுநீரகத்தினுள் சிறுநீரை வடிகட்டும் ஆற்றல் உள்ள மிகமிக நுண்ணிய இரத்தக் குழாய்களில் (Glomeruli) படிந்து அதனுடைய வடிகட்டும் ஆற்றலைக் குறைக்கிறது. இதற்கு குளோமருலினஸ் (Glomerrullinus) என்று பெயர்.

இதனால் சிறுநீரக அழற்சி ஏற்பட்டு, சிறுநீரகத்தின் வடிகட்டும் ஆற்றல் குறைந்து, சிறுநீருடன் புரதம் மற்றும் இரத்தமும் கலந்து வெளியேறி விடுகிறது. அடுத்ததாக, புரதம் இப்படி வெளியேறிவிடுவதால், இரத்த பிளாஸ்மாவில் உள்ள சோடியம் திசுக்களின் வெளியே உள்ள நீருடன் கலந்து உடல், முகம், கை_கால்கள் போன்றவை ஊதிப் பெருத்து விடுகின்றன. அதாவது, திசுக்களினால் நீர் கோர்த்துக்கொண்டு விடுகிறது.

இந்நோய் கண்டவர்கள் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். சிறுநீரில் உள்ள புரதம், யூரியா, கிரியேட்டினின் (Creatinine) போன்றவைகளை பரிசோதனை செய்ய வேண்டும். இவர்களுக்குப் பொதுவாக இரத்த அழுத்தம் கூடுதலாகவே இருக்கும். ஆகவே, அதைக் குறைக்கவும் மற்றும் சிறுநீரகச் செயல்பாட்டை சரிசெய்யவும் தக்க மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

உப்பை மிகக்குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உப்பு உள்ள பொருட்கள் முக்கியமாக ஊறுகாய், அப்பளம், இளநீர் போன்றவற்றை அறவே ஒதுக்க வேண்டும். சிறுநீரகம் சரிவர இயங்க குறைந்தது ஒரு மாதம் ஆகலாம். அதுவரை வியாதியஸ்தரை மிகவும் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.

II சிறுநீரக அழற்சி - (Nephrotic Syndrome)
இதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. ஆனால், பலவகையான தொற்றுக்கிருமிகளாலும், தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ளுவதாலும், ஒவ்வாத தாதுப்பொருட்கள் கொண்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளுவதாலும், மற்ற சில வியாதிகளுடன் இதுவும் சேர்ந்தே வருவதாலும், அடுத்து சிறுநீரக அழற்சியோடும் வருவதாலும், இதை அலட்சியப்படுத்துவதாலும் வருகிறது என்று பலவாறாகக் கூறுகிறார்கள்.

இந்நோய் கண்டால், திடீரென்று கை கால்கள் மற்றும் உடல் முழுவதும் வீக்கம் கண்டு, கண் இமையில் வீக்கம் கண்டு இமை தொங்குதல், சிறுநீர் சரிவர போகாது. சிறுநீரில் புரதம் மிக அதிகமாக வெளியேறுதல், இரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருத்தல், இரத்தத்தில் புரதம் மிகக் குறைவாக இருத்தல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

சாதாரணமாக, சில வேளைகளில் 150லிருந்து 200 மி.கி. அளவு புரதம் வெளியாகலாம். ஆனால், இந்த வியாதி கண்டவர்களுக்கு ஒரு நாளைக்கு 3லிருந்து 4 கிராம் அளவு புரதம் சிறுநீரில் வெளியாகும்! இந்தச் சிறுநீரகச் செயல் இழப்பால் பல தொற்றுக்கிருமிகள் சிறுநீரகத்தைத் தாக்கும்.

சிறுநீரகத்திலிருந்து, சிறு சதையினை எடுத்து பரிசோதனை செய்து (Biopsy), நோயாளியின் உண்மையான பாதிப்பு என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டும். இந்தப் பரிசோதனைதான் சிறுநீரகப் பாதிப்பை சரியாக எடுத்துக்காட்டும்.

சிறுநீரகக் கோளாறுகள் எலும்புகளை எப்படிப் பாதிக்கிறது?
எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமான மூலப்பொருட்கள் கால்சியம் (சுண்ணாம்பு) பாஸ்பரஸ், புரதம் போன்றவை. கால்சியம் வேலை செய்ய வைட்டமின் D தேவை. இந்த D வைட்டமின் சூரிய ஒளியிலிருந்தும், நாம் உண்ணும் ஆகாரத்திலிருந்தும் கிடைக்கிறது. இது ஈரலில் (Liver) சில மாறுதலுக்கு உட்பட்டு, சிறுநீரகத்தில் சுத்தமாக்கப்படுகிறது. அப்பொழுதுதான் அது சக்தியுடையதாகி வேலை செய்யும் தன்மையை அடைகிறது. இதற்கு D3 என்று பெயர்.

இந்த D3 தான் குடலிலிருந்து கால்சியத்தை எடுக்க மிகவும் உதவுகிறது. இது குறைந்தால் இரத்தத்திலும் கால்சியம் அளவு குறைந்துவிடும். இதன் விளைவாக பாரா தைராய்டு (Paratharmoan) சுரப்பிகள், பாராத்தார்மோன் (Paratharmoan) என்ற ஹார்மோனை அதிகமாகச் சுரந்து, எலும்பிலுள்ள கால்சியத்தைக் கரைத்து இரத்தத்தில் அதன் அளவைச் சமன்செய்கிறது. இதனால் எலும்புகள் பாதிக்கப்பட்டு, வளர்ச்சி இன்றி வலுவிழந்து விடுகின்றன. இதற்கு ரிக்கெட்ஸ் (Ricketis) என்று பெயர்.

சிறுநீரகச் செயல்இழப்பு சிறுகுழந்தைகளுக்கு ஏற்பட்டால், முக்கியமாக தொற்றுக்கிருமிகளால் பல பின்விளைவுகளில் எலும்பு வளர்ச்சி பாதிப்பும் ஒன்று.

இதன் அறிகுறிகள்:

a.ஒன்றரை வயதில் மூடவேண்டிய தலைக்குழி மூடாமல் இருத்தல்.
b. தலை எலும்புகளின் வளர்ச்சி குன்றி, முன் மண்டை பெரிதாக இருத்தல்.
சத்து குறைவான நிலை, முக்கியமாக இரும்பு மற்றும் புரதக்குறைவு.
கால், கை, முட்டி தட்டி இருத்தல், நெஞ்சு எலும்புக் கூடாக இருத்தல், கூன் விழுந்த முதுகு… இவை அனைத்தும் ரிக்கெட்ஸ்ஸின் அறிகுறிகளாகும்.

இந்த D3 வைட்டமின் உற்பத்தி, நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் பாதிக்கப்பட்டு, வயதான காலத்தில் எலும்புகள் வலுவிழக்கின்றன. ஆகவேதான் வயதானவர்களுக்கு, சற்றுகீழே விழுதல்கூட, எலும்பு முறிவை ஏற்படுத்திவிடும். இதற்கு இரத்தத்தில் உள்ள யூரியா மற்றும் அமிலத்தன்மை மாறுபாடும் ஒரு காரணமாகிறது. இதற்கு ரீனல் ஆஸ்ட்ரோடிஸ்ட்ரோப்பி (Renal Ostro Dystrophy) என்று பெயர்.

இதற்குத் தக்க மருந்துகளும், டயாலிசிஸ் போன்றவைகள் தகுந்த பலன் கொடுக்கும்.

No comments:

Post a Comment