Pages

Tuesday, December 31, 2013

ஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு



இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட இரு வேறு உடல்களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும் உடல் உறவே ஆகும்.

சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களில் ஒருவர். மனோ வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கியமான “தூண்டுதல் சக்தி” எல்லாவித பாசிடிவ் செயல்கள், கிரியேடிவ் செயல்கள் இவையெல்லாமே செக்ஸ் உந்துதல் தான் என்கிறார் ஃப்ராய்டு.

உடலுறவின் நன்மைகள்:

ரத்த அழற்சி சீராகி மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது.

கலவியின் போது பல ரசாயன மாற்றங்கள் உடலில் நிகழும். மூளையில் டோஃபாமைன் அளவுகள் ஏறும்.

உடலுறவு ஆஸ்த்மாவை கட்டுப்படுத்தும்.

மகிழ்ச்சியான உடலுறவில் பெண்களின் அழகு கூடுகிறது. ஏழு நாட்களில் 4 முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் 10 வருட வயது குறைந்தவர்களாக தெரிகின்றனர். இவை சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பவை.

உடல் உறவு என்பது அற்பநேர சந்தோஷத்திற்காகவோ அல்லது இனவிருத்திக்காகவோ மட்டுமல்ல அதையும் விட மகத்தான பல பங்குகளைக் கொண்டது. சமீபகால ஆராய்ச்சிகள் இதனை தெளிவுபடுத்தியுள்ளன. நீண்ட நேரம் உடலுறவு கொண்டு கருத்தரிக்கும் பெண்களுக்கும் அதிக நேரம் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறைகின்றன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பெண்கள் அதிக நேரம் உடலுறவு கொள்வதால் பெண் உறுப்பில் உள்ள தசை நார்கள் வலுவடைய உதவுவதாகவும் இது பிற்காலத்தில் ஏற்படும் சிறுநீர்க் கசிவு உபாதைகளைப் போக்கிடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.


உடல் உறவு என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழியாகவே கருதப்படுகின்றது. இதனையே மேலை நாட்டு ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன. உடலுறவு கொள்வதால் மன இறுக்கம் குறைகின்றது. மனச்சோர்வு நீங்குகின்றது. மனது மகிழ்ச்சியடைகின்றது. சீரான சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு அவசியமாகின்றது.

கணவன் – மனைவி இருவரும் சராசரியாக வாரம் இருமுறை உறவு வைத்துக் கொள்வது உடல் நலத்தை பெருக்கி உடல் ஆரோக்கியத்தை பேணிட உதவுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வாரம் இரு முறை குறைந்த பட்சம் உறவு வைத்துக் கொள்வது ஜலதோஷத்தை அண்டவிடாது தடுத்திடும் வயிற்றுப் பிரச்சனைகளான நெஞ்செரிச்சல், அல்சர் வலி போன்றவற்றையும் போக்கிடும்.

உடலுறவு என்பது பல விதமான உடல் மற்றும் மனரீதியான உபாதைகளுக்கு ஒரு வடிகால் போன்று விளங்கினாலும் அளவோடு வைத்துக் கொள்வது மட்டுமே சிறந்த பயனை தந்திடும். அளவுக்கு அதிகமான உடலுறவு சோர்வை கொடுத்து உடலை பலவீனமடையச் செய்து விடும். குறைந்த இடைவெளியில் வாரத்திற்கு இரண்டு முறைக்கு மிகாமல் உறவு கொள்வதே ஆரோக்கியத்தை பெருக்கிடும் என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு உறவு கொள்வது உடலில் இம்மியூளோகுளோபுலின் – ஏ என்ற நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிடும் இராசயன் பொருளை உடல் தேவையான அளவு சுரந்திட வழி வகுக்கும். இதனால் உடல் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றிடும்.

நியுயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியில் உடலுறவால் தலைவலி, கீல்வாதம் போன்ற பல வலிகள் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது. உடலுறவு கொள்ளும் பொழுது மூளையில் ஏற்படும் இயற்கையான சில இரசாயன சுரப்புகளால் சந்தோஷம் பெருகுவதால் இந்த இரசாயனப் பொருட்கள் வலி நிவாரணத்திற்கும் பயன்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இவ்வகைச் சுரப்புகள் மன அழுத்தத்தை போக்கி உடல் முழுவதும் ஒரு வித புத்துணர்ச்சியை பரவிடவும் செய்கின்றதாம்.
உடலுறவின் போது மூக்கும் அதிக சுறுசுறுப்பாகி தனது பணியை செவ்வனே செய்து அதிக சுரப்புகளை சுரந்தும் அதிக உமிழ்நீரைச் சுரக்கவும் செய்கின்றது. இதனால் தனது பணியை முறையாக மூக்குகள் செய்து மூக்கில் உள்ள நரம்புகள் வலுவடைவதும் கண்டறியப்பட்டுள்ளது.
திருப்தியான உடலுறவிற்குப் பின், உடல் களைத்துப் போய் சோர்வடைவது இயல்பே. இதற்கு அடிப்படைக் காரணமாக விளங்குவது உடலுறவின் போது, உச்சநிலையை அடைந்த பின்னர் உடல் ‘ஆக்கிடோஸிஸ்’ என்ற இரசாயனப் பொருளை சுரக்கின்றது.

இப்பொருள் ஓய்வையும் உடல் வெப்பத்தையும் மாற்றமடையச் செய்கின்றது. இப்பொருளே வாழ்க்கை துணைவருடன் அன்பை பெருக்கி இனிய மனநிலையை உண்டாக்குகின்றது.

பெண்களுக்கு உடலுறவு மாதவிலக்கு ஏற்படுத்தும் பலதரப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கின்றது. குறிப்பாக, மாதவிலக்கின் சமயம் “எஸ்ட்ரோஜனின்” அளவு சீர் செய்யப்படும் பொழுது, மாதவிலக்கிற்கு முன்பாக உடலுறவு கொண்டால் எஸ்ட்ரோஜனின் அளவு எளிமையாக சீரமைக்கப்படுகின்றது. அதனால் மாதவிலக்கின் போது ஏற்படும் பலவிதமான வலிகள் சோர்வு போன்ற உபாதைகள் பெரிதும் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு உடல் உறவு களைப்பை, இறுக்கத்தை, மனச்சோர்வை போக்கிடும் ஒர் மாமருந்தாகும். மனம் அமைதி பெறவும் உடல் புத்துணர்ச்சி பெற பெரிதும் பயன்படும் அற்புத செயலாகும்.

உளவியல் மற்றும் மனஇயல் நிபுணர்களும் கூட பிரமச்சரியத்தை விட, உடலுறவால் தான் அதிக உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் தர இயலும் என ஒப்புக்கொள்ள ஆரம்பித்து, பரிந்துரையும் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

நமது கலாச்சாரத்தில் உடலுறவிற்கு கடைசியிடம் ஒதுக்கப்படலாம். ஆனால், ஆரோக்கியமாக வாழ்ந்திட உடல் உறவு ஒர் ஒப்பற்ற உன்னத வடிகாலாகும். எனவே, அவரவர்கள் வயதிற்கு ஏற்ப உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப வாரம் இருமுறையாவது உறவு கொள்வது, உடல் ஆரோக்கியத்தைக் காத்திட பெரிதும் உதவிடும். உடலுறவு அவசியமே!

Sunday, December 29, 2013

ஆண்களே… பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும் அரிப்தை தடுக்க இதோ சில டிப்ஸ்…


பிறப்புறுப்பில் பெண்களுக்கு மட்டும் தான் தொற்றுகள் ஏற்படும் என்பதில்லை, ஆண்களுக்கும் தொற்றுகள் ஏற்படும். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்திவிடும்.
சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும் போது, தலையில் கை வைத்தாலே அசிங்கமாக இருக்கும் போது, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும் போது பொது இடங்களில் அங்கு கை வைத்துக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா என்ன? ஆகவே பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட ஆரம்பிக்கும் போது, அதனை சரிசெய்வதற்கான முயற்சியில் உடனே ஈடுபட வேண்டும். குறிப்பாக இப்படி அரிப்புகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:
* சுத்தம் இல்லாமை
* இறுக்கமான உள்ளாடை அணிவது
* சிறுநீர்
* அந்தரங்க பேன்
பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்புக்களை தடுப்பதற்கான வழிகள்:
* தினமும் குளிக்கும் போது, பிறப்புறுப்பை நன்கு கழுவ வேண்டும். அதிலும் நுனித்தோலை நீக்கிவிட்டு, மைல்டு சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஏனெனில் அந்த இடத்தில் தான் ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்களானது இருந்து அரிப்புக்களை ஏற்படுத்தும்.
* குறிப்பாக பிறப்புறுப்பை கழுவும் போது, கெமிக்கல் அதிகம் உள்ள பொருட்களைப் எப்போதும் பயன்படுத்தக்கூடாது. அதுவே கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்தும்.
* எப்போதும் நல்ல மென்மையான, லூசாக இருக்கும் காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டும். இதனால் காட்டனானது பிறப்புறுப்பில் ஈரம் தங்குவதை தடுக்கும். ஏனெனில் ஈரமுள்ள இடத்தில் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடைந்து அரிப்புக்களை ஏற்படுத்தும்.
* பிறப்புறுப்பில் அரிப்புகள் அதிகம் இருந்தால், தினமும் இரண்டு முறை உள்ளாடைகளை மாற்ற வேண்டும். மேலும் அப்படி மாற்றும் போது, பிறப்புறுப்பை நன்கு கழுவி பின் போட வேண்டும்.
* தவறாமல் பிறப்புறுப்பில் வளரும் முடிகளை அவ்வப்போது ஷேவிங் அல்லது ட்ரிம் செய்துவிட வேண்டும். ஏனெனில் அந்த முடிகளில் பேன் வருவதால் தான் அரிப்புக்கள் ஏற்படுகின்றன.
* ஆண்குறிகளில் சிறு புண்களுடன் சிவப்பு நிறத்தில் இருந்தால், அது தோல் அழற்சி மற்றும் சொரியாசிஸ் வந்துள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் மருத்துவரை உடனே அணுக வேண்டும்.
* முக்கியமாக பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், பிறப்புறுப்பை ஈரம் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறுநீர் கழித்தப் பின்னர், நன்கு சுத்தமாக கழுவி, அவ்விடத்தில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேற்கூறியவற்றை பின்பற்றினால், நிச்சயம் பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்புக்களையும், இதர தொற்றுக்களையும் தடுக்கலாம்.

ஆண்மை குறைவை போக்கும் அருகம்புல்



இந்தியாவில் பன்னெடுங்காலமாக இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறைகளை சித்தர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல் சர்வரோக நிவாரணியாக உள்ளது. இதன் தாவரவியல் பெயர் cynodon dactylon என்பதாகும். நீர்க்கசிவு உள்ள இடங்கள், வயல் வரப்புகள் போன்ற இடங்களில் தானாக வளரும். அருகு, பதம், தூர்வை, மோகாரி ஆகிய தமிழ் பெயர்களும் அருகம்புல்லுக்கு உண்டு. பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள் கொண்டவை . தண்டு குட்டையானது. நேரானது, முழுத்தாவரமும் இனிப்பு சுவையுடையது. இந்த தாவரம் ஏராளமான நோய்களை போக்கும் அருமருந்தாக உள்ளது என்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட உளவியல் நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர நடராஜன்.
அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரியை அழிக்க வல்லது.
சிறுநீர்ப்பை கல், நீர்க்கோவை என்ற உடல் வீக்கம், மூக்கில் ரத்தக்கசிவு, குழந்தைகளுக்கான நாட்பட்ட சளித்தொல்லை, ஜலதோஷம், வயிற்று போக்கு, கண்பார்வை கோளாறுகள் மூளையில் ஏற்படும் ரத்த கசிவு போன்ற நோய்களுக்கு இது சால சிறந்தது.
உடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, ரத்த புற்றுநோய் குணமடைய, இருமல், வயிற்று வலி, ரத்த சோகை, மூட்டுவலி, இருதய கோளாறு, தோல் வியாதிகள் போன்ற எல்லா நோய்களுக்கும் சிறந்த மருந்து.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றுவதிலும் திறமையானது. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு அருகம்புல் ஒரு உலக புகழ்வாய்ந்த டானிக்.
சுத்தம் செய்த அருகம் புல்லை இடித்து பிழிந்து சாற்றை ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்து வர சிறுநீர் நன்றாக கழியும். உடல் வீக்கம் குறையும். வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீங்குகிறது. ரத்தம் சுத்தமடைகிறது.
அருகம் புல் சாறு தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு சேர்த்து தைலமாக காய்ச்சி ஆறாத ரணங்கள், படை ரிங்கு, வறட்டுத்தோல் போன்ற தோல் நோய்களுக்கு தொட்டு போட அவை விரைவில் குணமாகும்.
வேரை நசுக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டி குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் சூதக கசிவு நீங்குகிறது. மனச்சோர்வு, தூக்கமின்மை, வலிப்பு ஆகியவற்றுக்கும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகிறது.
தேவையான அளவு அருகம்புல் சேகரித்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். உடல் அரிப்பு குணமாக இதனை தொடர்ந்து செய்து வரலாம்.
அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு அரைத்து 200 மில்லி லிட்டர் காய்க்காத ஆட்டுப்பாலில் கலந்து காலை வேளையில் மட்டும் குடித்து வரவேண்டும். இரண்டு மூன்று வாரங்கள் இவ்வாறு செய்தால் ரத்த மூலம் கட்டுப்படும்.
தொடர்ந்து ஓரிரு மாதங்கள் குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாவதுடன், ஆண்மை உணர்வும் எழுச்சி பெறும். ஆண்மை குறைவிற்கு நிரந்தர தீர்வாக அருகம்புல் உள்ளது. ஹோமியோபதியில் இதில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து அமீபியாஸிஸ் மற்றும் சீத பேதிக்கு தலைசிறந்த மருந்தாக பயன்படுகிறது.
எலுமிச்சம் பழ அளவு அருகம்புல் பசையை 1 டம்ளர் பசுந்தயிரில் கலந்து காலை வேளையில் குடிக்க வேண்டும். ஒரு மாதம் வரை இவ்வாறு குடித்தால் வெட்டை நோய் குணமாகும்.
அருகம்புல் சாறு 20 மி.லி., தண்ணீர் 20 மி.லி., அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.
இதன் சாறை கண்ணில் ஊற்றினால் கண்நோய் மற்றும் கண் புகைச்சல் மாறும். இப்புல்லை வெட்டி தலையில் வைத்து கட்டிக்கொண்டால் கபாலச்சூடு தணியும். அருகம்புல், கடுக்காய் தோல், இந்துப்பூ, கிராந்தி தகரம், கஞ்சாங்கோரை போன்றவற்றை சம அளவில் எடுத்து இவற்றோடு மோர் விட்டு அரைத்து பாதித்த இடங்களில் பூசி வர படர்தாமரை மறையும். உடலின் சூட்டை குறைத்து குளிர்ச்சி உண்டாக்கும்.
அருகம்புல், கணுபோக்கி இரண்டையும் பத்து கிராம் அளவு எடுத்து அதோடு வெண்மிளகு இரண்டு கிராம் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி வடிக்க வேண்டும். அந்த நீரோடு 2 கிராம் வெண்ணெய் சேர்த்து உட்கொண்டு வர மருந்துகளின் காரணமாக உண்டாகும் விஷம் முறிந்து விடும். நீரடைப்பு, வெட்டை, நீர்த்தாரை எரிச்சல் இருந்தால் அவை நீங்கும்.
இரவில் ஒரு இளசி இலையுடன் அருகம்புல்லையும் கொதிநீரில் போட்டுவிட வேண்டும். பின்னர் மூடி வைத்து அந்த நீரை குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வர சளித்தொல்லை மெதுவாக குறையும். மேலும் சீதள தொல்லையும் நீங்கும். சமீபத்தில் சென்னை கடற்கரையில் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்பவர்கள் அருகம்புல் சாற்றை அருந்த தொடங்கியதில் இருந்து அதன் மகத்துவம் மக்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.
காலை உணவாக
அருகம்புல்லை சாற்றை காலையில் 9 மணிக்கு பசி ஆரம்பித்த உடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின் ஒரு பழம் சாப்பிட்டால் போதும். உடலுக்கு தேவையான அனைத்து சத்தும் அதில் கிடைத்துவிடும்.அடுத்து மதிய சாப்பாடு தான்.
புல்லின் தனிமங்கள்
அருகம்புல் ஈரப்பதம் நிறைந்த சாதாரண மண்ணில் தானாக வளருகிறது. இதற்கென எந்த தனி வளர்ப்பு முறைகளும் இல்லை. அருகம்புல்லை பறித்த உடனேயே பயன்படுத்துவதால் அதன் முழு மருத்துவ குணத்தையும் பெறமுடியும். காய்ந்த புல்லில் சத்துகள் குறைந்துவிடுகிறது. இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம் போன்ற தனிமங்களின் ஆக்சைடுகள் மற்றும் சத்துகள் அடங்கியுள்ளன.

Saturday, December 28, 2013

பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்

ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே (VAGINA) இருந்து திரவம் (நீர் போன்ற ) வெளிப்படுதல் எல்லாப் பெண்க ளாலும் உணரப்படும் ஒரு நிகழ்வு. பிறப்பு உறுப்பிலே உள்ள சுரப்பிகள்(GLANDS) இந்த திரவத் தன்மையான பதார்த்தங்களை வெளியிட்டு பிறப்பு உறுப்பிலே ஈரத்தன்மையை பேணும்.
இவ்வாறு ஈரத்தன்மை பேணப் படுவது அந்த பெண்ணின் உறுப்பு சுகாதாரமாக‌ (HEALTHY AND CLEAN) இருப்பதற்கு அத்தியாவசிய மாகும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்த சுரப்பிக ளின் தொழிற்பாடு குறைவதால் அவர்களின் பிறப்பு உறுப்பு உலர் ந்த நிலையை அடைந்து காணப்படும். இதனாலேயே அவர்க ளுக்கு பாலியல் தொடர்பிலும் நாட்டம் குறையும். மேலும் பல அசொகரியங் களை இது கொடுக்கலாம்.
இவ்வாறு சாதாரணமாக வெளிப்படும் திரவமானது, சில பெண்களுக்கு மன ரீதியான உளைச்சலைக்கொடுக்கலாம். தங்களுக்கு ஏதோ நோய் இருக்கிறது அதனாலேதான் இந்நிலை ஏற்படுகின்ற து அவர்கள் கூச்சப்பட்டு வெளியில் சொல்ல முடியாமல் மனதி ற்குள்ளே வருந்திக் கொண்டிருக்கலாம்.
உண்மையில் பிறப்பு உறுப்பிலே இருந்து வெளிவருகின்ற திரவ ங்கள் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெளிவாக அறிந்து வைத்தி ருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெ றால் சில நோய்களில் கூட இவ் வாறு திரவங்கள் வெளிவரலாம்.
சாதாரணமாக வெளிவருகிற திரவமானது தெளிவானதாக (CLEAR) எந்த விதமான கெட்ட மனமும் இல்லாததாக இருக்கும். இது அவர்களின் உள்ளாடையில் பட்டு உலரும் போது பால் (MILKY) போன்ற அல்லது தெளிவானதாக இருக்கும். இதுவே வெள்ளை படுதல் என்று நம் பெண்களால் அழைக்கப் படுகிறது.

சாதாரணமாக வெளிவரும் திரவம்
மேலும் இந்த திற வெளிப்பாடானது மாதவிடாயின் போது, உடலு றவின் போது, கர்பம் தரித்திருக்கும் போது போன்ற சந்தர்ப்பங் களில் அதிகரிக்கலாம்.
ஆனால் இவ்வாறு இல்லாமல் திரவமானது பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்குமானால், கெட்ட மனமுடைய தாக இருக்குமானால், அல்லது தயிர் போன்று தடித்த கட்டி(THICK) போன்ற திரவமாக இருக்குமானால் இது குறிப்பிட்ட சில நோய்களின் அறி குறியாக இருக்கலாம். இவ்வாறான சந்தர்பத்தில் வைத்தியரை நாடி தகுந்த மறுத்ததை எடுத்து சில நாட்களுக்கு உட்கொண்டா லே போதும் இந்தப் பிரச்சினை சுகமா கி விடும். இது பொதுவாக கிருமி களின் தொற்றுகளால் ஏற்படும்.
மேலும் இந்தத் திரவமானது மிகவும் சகிக்கமுடியாத மனமுடையதாக, அல்லது இடையிடையே ரத்தம் போகு ம்போது இது புற்றுநோயின் அறிகுறி யாக கூட இருக்கலாம்.
பெண்னுருப்பிலே இருந்து திரவம் வெளிப்படுகின்றது என்று அஞ்சினால், முதலில் அதன் தன்மையை அவதானியுங்கள்.
கீழே வரும் மாறன்கள் உங்கள் பிறப்பு வழித் திரவத்தில் இருந் தால் உடனேயே வைத்தியரை நாடுங்கள்.
  • தயிர் தன்மையான வெள்ளை கட்டிகள் வெளிவருதல்
  • பச்சை அல்லது மங்க்ச்சல் நிறத் திரவம் வெளிவருதல்
  • சகிக்க முடியாத மனம் கொண்ட திரவம் வெளிவருதல்
  • அதிக ரத்தம் போகுதல் அல்லது மாதவிடாய் அல்லாத நேரத்தில் ரத்தம் போகுதல்
இவை எதுவும் இல்லாமல் சாதரணமான பால் போன்ற அல்லது தெளிவான திரவங் கள் வெளிவந்தால் இது உங்களில் மட்டு மல்ல எல்லாப் பெண்களிலும் உங்கள் பிறப் புறுப்பை சுத்தமாக வைத்தி ருக்க ஏற்படுகி ன்ற சாதாரணமான நிகழ்வே! இதற்காக அச்சப் படத்தேவை இல்லை.

இளம் வயதில் காம உணர்வை கட்டுப்படுத்த அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டியது

எப்போதும் உங்களை பிஸியாகவே உங்களை வைத்திருங்கள். சுய இன்பம் என்பது ஒரு சாதாரண சமாதான நடவடிக்கையே ஆகும். அதனால் இப்பழக்கத்தில் ஈடுபடுவது தவறல்ல. ஆனால் காம உணர்வை கட்டுப்படுத்த பெண்களும் ஆண்களும் தெரிந்து கொள்வது நல்லது
இளம் வயதுகாரர்களுக்கு எச்.ஐ.வி தொற்றி எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் வருவதை பார்க்கும் போது தான் பாலுணர்வு கட்டுப்பாட்டு யுக்திகளின் முக்கியத்துவத்தை நாம் உணருவது கட்டாயமாகிறது.
யுக்தி ஒன்று:
இளம் வயதில் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதால் அதற்கு சதா தீனி தேவைப்படுகிறது. நீங்கள் சரியான தீனி போடாவிட்டால் மனம் தன் விருப்பத்திற்கு ஏதாவது முருங்கை மரத்தில் ஏறி ஆடு ஆரம்பித்து விடும். அதனால் கதை, கவிதை, அறிவியல் ஆராய்ச்சி என்று அறிவுக்கு உணவு போட்டுக் கொண்டே இருந்தால் மனதில் வெறுமை தோன்றாது.
யுக்தி இரண்டு:
தனிமையை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். செய்வதற்கு எதுவுமே இல்லாத போது, தனியாக இருப்பது கண்டதையும் பரீட்சித்து பார்க்க தூண்டி விடும். எனவே எப்போதும் பலர்சூழ இருக்க முயற்சி செய்யுங்கள்.
யுக்தி மூன்று;
விளையாட்டில் ஈடுபடுங்கள்-&அது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஹார்மோன்களைச் செலவழிக்க ஒரு நல்ல வடிகாலாகவும் அமைகிறது.
யுக்தி நான்கு:
ஏதாவது சுவவாரசியமான பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த பொழுது போக்கில் ஈடுபடும் போது பிற தேவையில்லாத எண்ணங்களை மறந்து சுவாரஸ்யத்தில் மனம் லயிக்குமாறு செய்யுங்கள்.
யுக்தி ஐந்து:
பெற்றோருக்கு உதவி செய்யும் வகையில் வீட்டு வேலைகளில் உடலை வருத்தி உழைத்தால் கூட சில தேவையில்லாத காம எண்ணங்கள் வருவதை அறவே தவிரிக்க இயலும்.
யுக்தி ஆறு:
காம உணர்வு தலைதூக்கினால் சுய இன்பமா, வெறும் கற்பனையா, சைட் அடிப்பதா ஏதாவது ஒரு சமாதான நடவடிக்கை தானாக தலைதூக்கும். கொஞ்ச நேரத்தில் மனம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். உடனே அடுத்தடுத்த வேலையை பாக்க நகருங்கள். இன்னும் கொஞ்ச நேரம் என்று இதிலேயே மூழ்கி வேதாளத்தை உயர உயர முருங்கை மரத்தில் ஏற்றி விடாதீர்கள்.

Saturday, December 21, 2013

நமது தாம்பத்ய வாழ்க்கைக்கு ஆலோசனை

இப்பல்லாம் முன்ன மாதிரி இல்லை. ஏதோ கடமைக்கு செயல்படுற மாதிரி தெரியுது என்று உங்கள் துணையிடம் இருந்து ஏக்கப் பெருமூச்சு எழுகிறதா?. கவலை வேண்டாம் இது தீர்க்கக் கூடிய பிரச்சினைதான் என்று கூறியுள்ள நிபுணர்கள், சில பயனுள்ள ஆலோசனைகளை பட்டியலிட்டுள்ளனர். இவற்றை பின்பற்றினால் நீண்ட நேர உறவில் தடங்கலின்றி ஈடுபடலாம் என்பது நிபுணர்களின் அறிவுரை.
மன அழுத்தம் இருக்கிறதா?
உடல் உறவிற்கு முக்கிய எதிரி மன அழுத்தம். என்னன்னு தெரியலை இப்பல்லாம் மூடு வரமாட்டேங்குது என்று உங்களவர் கூறுகிறாரா? என்ன
காரணத்தினால் இவ்வாறு கூறுகிறார் என்று பாருங்கள். மனரீதியான சிக்கல்கள், மனச்சோர்வு, உடல்சோர்வு எதனாலாவது பாதிக்கப்பட்டிருக்கிறாரா? என்பதை கண்டறிந்து அதனை தீர்க்க முயலுங்களேன்.
சுய இன்பம் வேண்டாம்
திருமணத்திற்குப் பின்னரும் சில ஆண்கள் சுய இன்பப்பழக்கத்தில் ஈடுபடுவார்கள். இதனால் இயற்கையான தாம்பத்ய உறவில் சிக்கல் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். அடிக்கடி சுய இன்பம் அனுபவிப்பதால் ஆண்குறியில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். அதன் நீச்சித்தன்மை குறைந்து மனைவியின் ஆசையை சரியான அளவிற்கு நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.
தம், தண்ணி நிறுத்துங்க
புகைப் பழக்கமும், மதுப்பழக்கமும் உறவின் முக்கிய எதிரி. அது இருந்தால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். சிறிது நேரத்திலேயே மூச்சுவாங்கி துணையிடம் திட்டு வாங்கவேண்டியிருக்கும். எனவே தாம்பத்ய உறவின் மிக முக்கிய எதிரியாக உள்ள புகை, மது பழக்கங்களை உடனடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாக நிறுத்துங்கள்.


சரியான பொசிஷன்
நமக்கு எது சரிப்பட்டு வருமோ அதனை கையாளுவது நல்லது. கடினமான பொசிஷனை முயற்சித்து பாதியிலேயே நிறுத்திவிடுவதை விட எளிதான, அதிகம் சுகம் கிடைக்கும் பொசிஷனை கண்டறிந்து அதனை பின்பற்றுங்கள். நீண்ட நேர உறவுக்கு இதுவும் ஒரு வழி.


இறுக்கமான உள்ளாடை
ஆணோ, பெண்ணோ இருக்கமான உள்ளாடைகளை தவிர்த்துவிடுங்கள். அடிக்கடி டைட்டான ஜீன்ஸ், டைட்டான உள்ளாடைகள் அணிவதும் தாம்பத்ய உறவிற்கு வேட்டுவைக்கும் சமாச்சாரம் என்கின்றனர். நிபுணர்கள்.
இது தொடர்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இளைய தலைமுறையினர் இன்றைக்கு இருக்கமான உள்ளாடைகளையும், ஜீன்ஸ் போன்ற ஆடைகளையும் அணிவதில் ஆர்வம் காட்டுகின்றனர். எதிர்பாலினரை கவரவேண்டும் என்று நினைத்து அணியும் ஆடையே அவர்களின் பாலியல் உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
அதேபோல் இரவு நேரத்தில் தளர்வான ஆடைகள் அணிவது நல்லது அந்தரங்க உறுப்புகளுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் இரவில் கூடுமானவரை உள்ளாடைகளை அணிவதை தவிர்த்துவிடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
சத்தான உணவு
நாம் உண்ணும் உணவும் நமது தாம்பத்ய வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. அதனால்தான் பண்டைக் காலம் முதலே தாம்பத்ய வாழ்க்கைக்கு ஏற்ற உணவுகளை இனம் கண்டறிந்து சரியான நேரத்தில் அவற்றை உட்கொண்டு வந்துள்ளனர். துத்தநாகச்சத்துள்ள உணவுகள். பாதாம், பிஸ்தா, பூண்டு, முருங்கை, சின்ன வெங்காயம், நிலக்கடலை உள்ளிட்ட கிளார்ச்சியைத் தூண்டும் உணவுகளை உட்கொள்ளுங்கள். அப்புறம் என்ன உங்களுக்கான தாம்பத்ய வாழ்க்கையை தடங்கல் ஏதும் இன்றி அனுபவிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

விரைவில் கர்ப்பமடைய வழிகள்!!

கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன ?: கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு. இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும்.
சில புள்ளி விவரங்கள்: 30 வயதில், 75% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 91% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள். 35 வயதில், 66% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,84% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.
40 வயதில், 44% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 64% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள். ஆண்களின் வயது கர்ப்பத்துக்கு ஓரளவுக்கு முக்கியமே, ஆனால் பெண்ணின் வயது அளவுக்கு முக்கியமானது அல்ல.
இதற்குக் காரணம், பெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும், ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக, எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய் விடும்.
ஆனால் ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு விந்துக்கள் தினம் உருவாகும். ஆண்களுக்கும் விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக, ஆக, குறையும்.
ஆண்கள் பற்றிய புள்ளி விவரம்: 20–39 வயதில், 90% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும். 40–69 வயதில், 50% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும். 80 வயதிற்கு மேல், 10% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.
கருமுட்டை உற்பத்தியாகும் காலம்: பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் (Fallopian tube) வழியாய் கீழிறங்கும். இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார்கள், ஆங்கிலத்தில் இதற்கு ஓவுலஷன் (ovulation) என்று பெயர்.
கர்ப்பம் தரிக்க ஏதுவான நாட்கள் எவை: எந்த நாட்களில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பது தான் இதற்கு முக்கியம். கரு முட்டை, கருப்பையில் இருந்து வெளிவந்து, 18- 24 மணி நேரத்துக்குள் ஆணின் விந்துவை சேர வேண்டும்.
அதனால் இந்த கால கட்டத்தில் உங்கள் பால்லோபியன் குழாய்களில் (Fallopian tube) விந்து இருக்க வேண்டும். ஆணின் விந்து (sperm) சராசரியாக 3 – 5 நாட்கள் வரை பெண்ணின் பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும். உங்கள் முட்டை வெளி வரும்போது, அதாவது ஒவுலஷன் (Ovulation) நடக்கும்போது, அதற்கு இரண்டு நாட்கள் முன்னாலும், இரண்டு நாட்கள் பின்னாலும், உடலுறவு கொள்வது மிகுந்த பயனளிக்கும்.
முட்டை வெளியீடு (Ovulation) காலம் நடக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது? இந்த நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அவற்றை கவனித்து உங்களுக்கு இந்த நிகழ்வு நடக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
1. உங்கள் பெண்ணுருப்பிலிருந்து வரும் திரவம் (Cervical mucus) மிகவும் வழவழப்பாகவும், ஈரமானதாகவும் ஆகி விடும்.
2. மேலும், உங்கள் மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு பிடிக்கும் (belly cramps), காம வேட்கை அதிகரித்தல், ரத்தச் சொட்டுக்கறை (spotting), உங்கள் கணவருக்கு அருகிலேயே இருக்கத் தோன்றும்.
3. முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் உங்கள் உடல் வெப்பம் 0.4°F – 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் (Digital Thermometer) ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல் போட்டு, இந்த காலத்தை கண்டு பிடிக்கலாம். இதற்கான பட்டியல் மாதிரிகளை இப்போது இணையங்களிலேயே தருகிறார்கள். இதன் மாதிரியை நீங்கள் இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
4. உங்களுக்கு மாத விலக்கு ரொம்ப சீராகவும், சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையும் நடந்தால், உங்கள் முட்டை வெளியீடு (Ovulation) நாள் சரியாக 14 ஆம் நாள் நடக்கும். உங்களுக்கு மாதவிலக்கு சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளியீடு நாள் என்பது, உங்கள் மாத விலக்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும்.
உதாரணமாக, உங்கள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட்கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31- 14 = 17. 17ஆம் நாள் தான் உங்கள் முட்டை வெளியீட்டு நாள். இது தவிர ovulation testing kits போன்ற பொருட்கள் இப்போதெல்லாம் புழக்கத்தில் உள்ளன.
அவை உங்கள் சிறு நீரில் உள்ள ஹார்மோன் அளவைக் கொண்டு உங்கள் முட்டை வெளியீட்டு நேரத்தை சரியாக சொல்லி விடும். கர்ப்பமடைய முயற்சி செய்யும் போது, நீங்கள், எண்ணெய், எச்சில், ஜெல் போன்றவை பயன்படுதினால், அவற்றை நிறுத்தி விடுங்கள். ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும்.
குழந்தைகளுக்கான எண்ணெய் (baby oil) தான் ஓரளவு ஆபத்து இல்லாதது. முடிந்த வரை எந்த விதமான லூப்ரிகன்ட் (Lubricant) பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது. பல பெண்கள் உடலுறவு முடிந்ததும் தங்கள் பெண்குறியை சுத்தம் செய்ய பல திரவங்களையும், தண்ணீரையும் உள்ளே பீய்ச்சி அடிக்கிறார்கள்.
இதை Vaginal Douche என்று ஆங்கிலத்தில் என்று சொல்லுவார்கள். நீங்கள் கருப்பிடிக்க நினஈகும் கட்டத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத் திரவங்கள் விந்துவைக் கொல்வதுடன், பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.

இயற்கையாகவே கருச்சிதைவை ஏற்படுத்தும் உணவுகள் பற்றிய குறிப்பு!

 

இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னர் கருத்தரிக்கலாம் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ, உணர்ச்சி வேகத்தில் கருத்தரித்துவிட்டால் அது பெரிய ஆச்சரியத்தையும் தரும். அதிலும் வாழ்வில் நல்ல நிலையில் இல்லாமல், எதிர்பார்க்காத வேளையில் கருத்தரித்துவிட்டால், அது சந்தோஷத்தை விட கஷ்டத்தை தான் அதிகம் கொடுக்கும்.
ஆகவே அந்த நிலையில் செயற்கை முறையில் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு கருவை கலைப்பதற்கு பதிலாக, இயற்கை முறையில் கருவைக் கலைத்தால் நல்லது. மேலும் பல்வேறு நாடுகளில் செயற்கை முறையில் கருவைக் கலைப்பது ஒரு சட்டவிரோதமான செயலாக இருந்தாலும், இயற்கை முறையில் கருவைக் கலைப்பது சட்டப்பூர்வமாக உள்ளது. ஆகவே இப்போதைக்கு கருத்தரிக்க வேண்டாம் என்பவர்கள் இயற்கை முறையை நாடினால், எவ்வித பக்கவிளைவு இல்லாமல் கருவைக் கலைக்கலாம்.
அதிலும் உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா, நீரிழிவு, சிறுநீரக பிரச்சனை இல்லாதவர்களுக்கு மிகவும் நல்லது. மேலும் பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களை சாப்பிட்டாலும், கருச்சிதைவு ஏற்படும். ஆகவே கருத்தரிக்க வேண்டாம் என்பவர்கள் கீழே உள்ள உணவுகளை கருத்தரித்த முதல் மூன்று மாதத்தில் அதிகம் சாப்பிட்டால், கருவை கலைத்துவிடலாம். ஆனால் குழந்தை வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள், இந்த உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
அந்த உணவுகள்
வைட்டமின் சி உணவுகள்…
வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உணவுகளை மாதவிடாய் நெருங்கும் காலத்தில் அதிகம் சாப்பிட்டால், கரு உருவாகி இருந்தாலும் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். ஏனெனில் அதிகப்படியான வைட்டமின் சி உணவுகளை கர்ப்பத்தின் ஆரம்பத்தில் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படுவது உறுதி.
பப்பாளி..
பப்பாளியில் அளவுக்கு அதிகமாக வைட்டமின் சி நிறைந்திருப்பதால் தான், அதனை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, இதில் உள்ள பாப்பைன் என்னும் பொருளும் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அன்னாசி…
முன்னோர்கள் சொல்வது போல், அன்னாசியும் நிச்சயம் கருச்சிதைவை ஏற்படுத்தும். எப்படியெனில், பப்பாளியில் பாப்பைன் உள்ளது போது, அன்னாசியில் ப்ரோமிலைன் என்றும் நொதி உள்ளது. இது கருப்பை வாயை மென்மையடையச் செய்து, கருச்சிதைவிற்கு வழிவகுக்கிறது.
எள்…
தினமும் ஒரு டீஸ்பூன் எள்ளை தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், கருச்சிதைவு ஏற்படும்.
க்ரீன் டீ…
க்ரீன் டீயை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
டப்பாவில் அடைக்கப்பட்ட மீன்…
டப்பாவில் அடைக்கப்பட்ட மீனில், அது கெட்டுப் போகாமல் இருப்பதற்கு கெமிக்கல்கள் பயன்படுத்துவதால், அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, உடலில் நீர் தக்க வைத்தலை அதிகரித்துவிடும். அதுமட்டுமல்லாமல் அதில் உள்ள மெர்குரி, கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்.
காய்ச்சாத பால்…
காய்ச்சாத பச்சை பாலில் உள்ள பாக்டீரியாக்கள், கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆகவே கர்ப்பம் வேண்டாம் என்பவர்கள், காய்ச்சாத பாலை அருந்தலாம்.
ப்ளாக் கோஹோஷ்…
இது ஒரு இயற்கையான கருச்சிதைவை ஏற்படுத்தும் மூலிகை. இந்த சைனீஸ் மூலிகையை அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டால், அது வயிற்றில் வளரும் கருவை கலைத்துவிடும்.
படிக்கட்டு ஏறுவது…
கர்ப்பமாக இருக்கும் போது அதிக கனமான பொருட்களை தூக்குவது, உடலை வருத்தும் வகையில் வேலை செய்வது, படிக்கட்டுகள் ஏறுவது போன்றவையும் கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்.

‘நோ’ டயட்… உடல் எடை குறைக்கலாம்


நவீன உலகத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்னை. அதனை கட்டுப்படுத்த கடுமையான பல டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் உள்ளது. அவ்வாறு கடுமையான டயட்டை மேற்கொள்ளும் போது, பசியுடன் பல உணவுகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் என்ன பயன்? காலப்போக்கில் மெதுவாக உடல் எடை மறுபடியும் கூடி விடும்.
வல்லுனர்களும் கடுமையான டயட் முறையை கையாளாமல், எளிய முறைகளின் மூலம் உடல் எடையை குறைக்க முயலுமாறு கூறுகின்றனர். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான். பொதுவாக அரை கிலோ கொழுப்பு என்பது 3500 கலோரிகளுக்கு சமமாகும். தினமும் டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் 500 கலோரிகளை எரித்தால் ஒரு வாரத்தில் அரை கிலோ அளவிலான எடையை குறைக்கலாம்.
தற்போது இருக்கும் எடை நீடிக்க வேண்டுமானால், தினமும் 100 கலோரிகளை எரிக்க வேண்டும். டயட்டை விட வலியில்லா வழி முறைகளை பின்பற்றுங்கள். காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு தவிர்க்கும் போது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை சாப்பிடுகிறவர்களுக்கு பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
ஒரு கிண்ணம் நிறைய ஓட்சை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் சாப்பிட்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும். சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி மெதுவாக சாப்பிடுங்கள். இது டயட் மூலம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முதன்மையான வழியாகும். ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக மென்று சாப்பிட வேண்டும்.
தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். இவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேலையிலும் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம். ஒவ்வொரு நாள் இரவும் ஒரே ஒரு காய்கறியை மட்டும் சாப்பிடுவதற்கு பதில் மூன்று காய்கறிகளை கலந்து சாப்பிடுங்கள். அதிக வகை இருந்தால் அதிகமாக சாப்பிட தூண்டும். அதனால் அதிகமான பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம்.
ஒவ்வொரு உணவிற்கு முன்பும் சூப் குடியுங்கள். இது பசியை ஆற்றி குறைவாக உண்ண வைக்கும். கெட்டியான சூப்பை தவிர்க்கவும். ஏனெனில் அதில் அதிக கொழுப்பும், கலோரிகளும் அடங்கியிருக்கும். பிட்சா சாப்பிடும் போது மாமிசத்திற்கு பதில் காய்கறி களை தேர்வு செய்யுங்கள். இதனாலும் கூட 100 கலோரிகளை எரிக்க முடியும். சோடா போன்ற சர்க்கரை கலந்த பானங்களை பருகுவதற்கு பதிலாக, தண்ணீர் அல்லது கலோரிகள் அற்ற பழச்சாறுகளை பருகுங்கள். இதனால் ஒரு 10 டீஸ்பூன் அளவிலான சர்க்கரையை தவிர்க்கலாம்.
மதுபானத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட, கலோரிகள் தான் அதிகமாக உள்ளது. அது ஒருவரது சுய கட்டுப்பாட்டை இழக்க வைப்பதால் சிப்ஸ், நட்ஸ் மற்றும் இதர நொறுக்குத் தீனியை அதிக அளவில் உட்கொள்ள வைக்கும். தினமும் 12 டம்ளர் க்ரீன் டீ பருகுவதால் கூட உடல் எடை குறையும். சீரான முறையில் யோகா செய்பவர்களுக்கு சாப்பிடுவதில் ஒரு மன கட்டுப்பாடு ஏற்படும்.
இயற்கையாகவே சிலர், ஒரு வாய் உணவிற்கும் அடுத்த வாய் உணவிற்கும் சிறிய இடைவேளை விடாமல் சாப்பிடுவார்கள். இந்த இடைவேளையில் பொறுமையாக இருங்கள், வேகமாக அடுத்த வாய் உணவை திணிக்காதீர்கள். பேசி கொண்டே பொறுமையாக தட்டை காலி செய்யுங்கள். இது வயிற்றை அடைக்காமல் பசியை போக்கும். நொறுக்குத் தீனி உண்ண தூண்டும் போது, சர்க்கரை இல்லாத வீரியம் அதிகமுள்ள சூயிங் கம்மை மெல்லுங்கள்.
உணவை நீண்ட நேரம் சமைத்தால், அதிலுள்ள ஊட்டச்சத்து அனைத்தும் வெளியேறிவிடும். போதுமான ஊட்டச்சத்து இல்லாத போது, சாப்பிட்ட திருப்தி உங்களுக்கு ஏற்படாது. ஆகவே முடிந்த வரை பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை சாப்பிட வேண்டும். அவித்த வேக வைத்த காய்கறிகள் மற்றும் மாமிசங்களை உட்கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரோ ஓவனில் சமைப்பதை தவிர்க்கவும். சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்கள் சாப்பிட வேண்டும்.
இதனால் பழங்கள் வேகமாக செரிமானம் ஆகும். வெறும் வயிற்றில் பழங்களை உண்டால், உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும். அதிக அளவில் சைவ உணவை உட்கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியும். அசைவ உணவை விட, சைவ உணவை சாப்பிடுகிறவர்கள் தான் வேகமாக ஒல்லியாவார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள நார்ச்சத்து.
இதில் முக்கியமானவை என்னவென்றால் 20 நிமிடங்களுக்கு 1 மைல் தூர நடை, 20 நிமிடங்களுக்கு தோட்டத்தில் களை எடுத்தல் அல்லது செடிகள் நடுதல், 20 நிமிடங்களுக்கு புல் தரையை ஒழுங்குபடுத்துதல், 20 நிமிடங்களுக்கு வீட்டை சுத்தப்படுத்துதல் அல்லது 10 நிமிடங்களுக்கு ஓடுதல். இரவு உணவை 8 மணிக்கு முன்பே சாப்பிட வேண்டும். இரவு உணவை முடித்ததும் மூலிகை தேநீர் பருகுங்கள் அல்லது பற்களை துலக்குங்கள். இதனால் உடல் எடையை குறைக்கும் பணியில் வெற்றிப் பெற போவது உறுதி.
 
 

Monday, December 16, 2013

மழைக் காலத்தில் மிளகு பொடி சேர்ப்பது நல்லது!



 'மழை காலங்களில் சிறந்த உணவு எது?'னு பலருக்கு சந்தேகம் இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாதுனு குழப்பமா இருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும்; சிலருக்கு ஒவ்வாமை ஏற்ப்படுத்தும். இதை தீர்...க்க சில உணவு குறிப்புகள் இதோ...


* மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீ­ர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.

* மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

* பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது. ஆனால், மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.

* நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

* மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.

* இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.

* நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழை சீசனில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.

* கண்டிப்பாக மழைக் காலத்தில், நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.

* மழை சீசனில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரைத் துகள்களை போட்டு வைக்கவும்.

* மழைக் காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும், பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம். எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.

* சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும், விட்டமின் 'சி' சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது. ஆனால், ஒத்துக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.

* சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.

* மழை சீசனில், கீரைகள் அதிகம் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால், கீரைகளை நன்றாக தண்ணீ­ரில் கழுவி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

* மழை சீசனில், எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு, தண்­ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. அத்தகையவர்கள் அவர்களுக்கு ஏற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.

* அசைவ உணவாக, மீன், முட்டை, கறி, சிக்கன் என்று சாப்பிடலாம் ஆனால், அவை பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மழைக் காலங்களில் கடைகளுக்குப் போய் வாங்குபவர்கள் குறைவு. அதனால், மீன் போன்றவை பழைய ஸ்டாக் இருக்க வாய்ப்பு உண்டு.

* மழை சீசனில், எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது, பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல், அதற்கு பதிலாக உப்புமா உருண்டை, இட்லி சாம்பார், பிரட் டோஸ்ட் என சாப்பிடலாம். நாம் தினமும் சாப்பிடும் உணவையே, சற்று சூடாகச் சாப்பிட்டால் போதும்.
See More

சுகப் பிரசவம் நடந்திட உதவும் அதிமதுரம்..!



• அதிமதுரம், சீரகம் சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட...்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நிவர்த்தியாகும்.

• அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

• போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

• அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 அல்லது 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2 முதல் 3 மாதங்கள் வரை சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
Photo: சுகப் பிரசவம் நடந்திட உதவும் அதிமதுரம்..!

• அதிமதுரம், சீரகம் சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நிவர்த்தியாகும். 

• அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும். 

• போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். 

• அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 அல்லது 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2 முதல் 3 மாதங்கள் வரை சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
ore
 

Monday, December 2, 2013

கரு முதல் குழந்தை வரை...

   


கர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாதமும் 7 நாட்களும் என்று கணக்கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என்று கணக்கிடப்படுகிறது. முதல் ட்ரைமாஸ்டர் (முதல் 12 வாரங்கள்) மிக முக்கியமான கர்ப்பகாலம்   1. ஏனென்றால் 35லிருந்து 40வது நாளுக்குள் இவர்களுக்குச் சிறுநீரைப் பரிசோதித்து முதலில் கருவுற்றிருக்கிறார்களா? என்பது உறுதிசெய்யப்படுகிறது.  2. அடுத்தபடியாக ‘முத்துப் பிள்ளை’ போன்ற அபாயகரமான, தாயின் உயிருக்குப் பலத்த சேதத்தை விளைவிக்கக் கூடிய கர்ப்பகால நோய்கள், இந்தச் சிறுநீர் பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டு ஸ்கேன் மூலம் உறுதி செய்து காலி செய்ய ஏதுவாகிறது.  3. கர்ப்பம் உறுதி செய்யப்பட்டுப் பதிவு செய்யப்படும் போதே அவருடைய இரத்தக் கொதிப்பு, எடை ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்க ஏதுவாகிறது.  4. சோகையான பெண்களுக்கும், இந்த ஆரம்ப காலப் பரிசோதனையிலே வார ஊசிகளாகச் சத்து ஊசிகளும் போட்டு அவர்களை, இரத்த சோகையின் காரணமாக ஏற்படும் இடர்ப்பாடுகளில் இருந்து ‘வருமுன் காப்போம்’ முறைகளை கடைப்பிடித்துக் காப்பாற்ற முடிகிறது.  5. அதிக வாந்தி, மயக்கம், ருசியில் மாறுதல் போன்ற ‘மசக்கை’ என்று கூறக்கூடியதானது, சில பெண்களுக்கு இந்த கால கட்டத்தில் அளவுக்கதிகமாகவே இருப்பதுண்டு. அதற்கான மருந்துகள் இருப்பதால் அவர்கள் சோர்வடையாமலும் அதனால் கருவின் வளர்ச்சி பாதிக்கப்படாமலும் பாதுகாக்க முடிகிறது.  6. முதல் 12 வாரங்களில் தான், கருவானது குழந்தையாக முழுவளர்ச்சி பெறுகிறது. அதன்பின் அதன் அளவுதான் பெரிதாகிறது. அதனால் வளர்ச்சிப் பரிமாணமானது இந்த 12 வாரங்களுக்குள் நடைபெறுவதால் 1. போதிய கவனிப்பு, 2. தரமான உணவு, 3. சுகாதாரமான தண்ணீர், 4. நல்ல ஓய்வு, 5. மருத்துவரின் கண்காணிப்பு இந்த சமயத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிறது. கர்ப்ப காலத்தில் பொதுவாக 3 முறை ஸ்கேன் அவசியமாகின்றது.  90வது நாள் (முதல் ட்ரைமாஸ்டர்) முடியும் பொழுது  1. குழந்தையாக கரு உருப் பெற்றுவிட்டதை உறுதி செய்ய 2. ‘முத்துப்பிள்ளை’ போன்ற உயிருக்கு ஆபத்தான கரு வளர்ச்சியைக் கண்டறிய 3. கர்ப்பப்பையிலும், கருவிலும் உள்ள மற்ற குறைபாடுகளைக் கண்டறிந்து குணப்படுத்த   150வது நாள் (20வது வாரத்தில்)  1. குழந்தை வளர்ச்சியைக் கண்காணிக்க 2.பிறப்பிலேயே ஏற்படக்கூடிய குறைபாடுகளைக் கண்டறிந்து மிகவும் ஆபத்தான குறைகள் என்றால் மருத்துவ முறைப்படி வளர விடாமல் வெளியேற்ற 3. குழந்தை வளரும் கர்ப்பப்பை சூழ்நிலைகளை, தன்மைகளைக் கண்டறிய  9வது மாதத்தில்   1. குழந்தையின் இருப்பிடம்,  2. தண்ணீர்ச்சத்து,  3. நஞ்சின் இருப்பிடம்,  4.தலை இறங்கியிருக்கும் அளவு,  5.பிரசவம் ஆகக் கூடிய தேதி  6.குழந்தையின் எடை போன்றவற்றைக் கண்டறிவதின் மூலம் குழந்தை பிறக்கும் வழியையும் (Nature of Delivery) தேதியையும் ஓரளவு கணிக்க முடிகிறது.  நவீன மருத்துவக் கருவிகளிலேயே இந்த “ஸ்கேன்”, மகளிர் மகப்பேறு மருத்துவத்தில் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.  பிரசவ சமயத்தில் பிரசவம் 12 மணி நேரங்களுக்கு மேல் நீடித்தாலோ, குழந்தையின் துடிப்பு உணரப்படவில்லை என்று பெண்மணிகள் கர்ப்பக் காலத்தில் மருத்துவரைச் சந்திக்க வந்தாலோ, குழந்தைக்கு இருதயத் துடிப்பு இருக்கிறதா என்று இந்த ஸ்கேனர் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.  இருதயத் துடிப்பை ஈ.ஸி.ஜி. போன்று ஸ்கேனர் அழகாகப் பதிவு செய்து கொடுக்கும்.  இருதயத் துடிப்பு அதிகரித்தாலோ, மாறுதல்கள் இருந்தாலோ அது குழந்தையின் மூச்சுத் திணறுதலைச் சுட்டிக் காட்டுவதால், உடனடியாக அதற்கான வைத்தியமுறைகளைக் கையாண்டு அறுவை சிகிச்சை செய்தாவது குழந்தையைக் காப்பாற்ற ஏதுவாகிறது.  முந்தைய காலம் போல் அல்லாது ஒன்றிரண்டு குழந்தைகளே இன்றைய குடும்பம் என்று ஆகிவிட்ட சூழ்நிலையில் அவற்றை நன்முறையில் கர்ப்பக் காலத்தில் தாய் சேய் நலத்தைப் பேணி, மிகவும் சாதாரண அறுவை சிகிச்சை இல்லாத முறையில் பெற்றெடுப்பதற்கு இந்த கர்ப்பக் கால பராமரிப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிறது.  தொகுப்பாக, இந்த 12 வாரங்களில் கரு குழந்தையாக உருப்பெறுவது நடைபெறுவதால் நல்ல ஊட்டச்சத்தும், ஓய்வும் மருத்துவக் கண்காணிப்பும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிறது.  இரண்டாவது ட்ரை மாஸ்டர் (இரண்டாவது 12 வாரங்கள்)  கரு குழந்தையான பின் ஏற்படும் வளர்ச்சிதான் இந்த இரண்டாவது 12 வாரங்களில் நடைபெறுகிறது. இதில், பொதுவாக முதல் ட்ரைமாஸ்டரைப் போன்ற மிகவும் ஆபத்தான இடர்ப்பாடுகள் ஏற்படுவதில்லை.  இந்த இரண்டாவது ட்ரை மாஸ்டரில்  1. இரண்டு தடுப்பூசிகளும் போடப்படுகிறது.  18 வது வாரம்  26 வது வாரம் 2. சத்து மாத்திரைகள் இரும்புச்சத்து, கால்சியம் சத்து (சுண்ணாம்புச் சத்து) போலிக் ஆசிட். 3. மார்பகத்தைச் சோதனை செய்து, உள்ளடங்கிய காம்பு உள்ளவர்களுக்கு எளிய பயிற்சி கொடுத்து அதை வெளியில் திருப்பினால்தான் பிரசவத்திற்கு பின் தாய்ப்பால் கொடுக்கும்பொழுது சிரமம் இல்லாமல் இருக்கிறது. 4. மிகவும் இரத்தசோகையுடன் இருப்பவர்களுக்கு  1.இரும்புச் சத்து ஊசிகளும் 2. இரத்தமும் கூட ஏற்றப்பட்டு, அவர்கள் ஆபத்தில்லா பிரசவத்திற்கு தயார் செய்யப்படுகிறார்கள்.  மூன்றாவது ட்ரைமாஸ்டர் (24வது வாரம் முதல் 40வது வாரம் வரை)  அதாவது அந்த மூன்றாவது ட்ரைமாஸ்டர் என்பது பிரசவத்தின் தன்மையை நிர்ணயிக்கக் கூடிய முக்கியமான காலகட்டமாகும். இந்தக் கட்டத்தில்  1. மூளை வளர்ச்சி அதிகம் ஏற்படுகிறது. இது 1 வயது வரை தொடர்கிறது.  2. குழந்தையின் எடை அதிகரிக்கிறது.  3. நரம்பு மண்டலங்கள் பலப்படுகின்றன.  4. அசைவுகள் அதிகம் ஏற்படுகின்றன.  5. இருதயத் துடிப்பு சீராகிறது.  6.கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் போன்ற முக்கியமான உறுப்புகள் முழுவளர்ச்சி அடைகின்றன.  7. பிறப்பு உறுப்புகள் தெளிவாக ஸ்கேனிங்கில் தெரிய ஆரம்பிக்கின்றன.  8. எலும்பு வளர்ச்சி அடைகிறது செறிவடைகிறது.  9. இரத்த ஓட்டம் சீராகிறது.  10. குழந்தை கருப்பையினுள் சுற்றி வருகின்றது.  40வது வாரம் நெருங்கும் பொழுது  1. குழந்தையின் தலை கீழே, திரும்பி, இடுப்பு எலும்புக் கூட்டுக்குள் இறங்கி விடுகிறது. அவ்வாறு இறங்கினால் தான், இயற்கையான முறையில் பிரசவமாவதற்கு ஏதுவாகிறது. 2. தகுந்த தண்ணீர்ச் சத்து குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. அது குறையும் பொழுது குழந்தையின் உயிர்த் துடிப்பிற்கே ஆபத்தாகிறது. 3. தாயின் இரத்த அழுத்தம் இந்தச் சமயத்தில் சீராக 120/80ல் இருக்க வேண்டும்.    சிலருக்கு 40வது வாரம் நெருங்கும் பொழுதுதான்...   1. அதிகமான வீக்கம், கை, கால், முகங்களில் ஏற்படுகிறது.  2. உப்புச் சத்து அதிகரிக்கிறது.  3. இரத்தக் கொதிப்பு அதிகரிக்கிறது.  4. மூச்சுத் திணறல் உண்டாகிறது.  5. அளவுக்கதிகமான வியர்வை  6. இருதய படபடப்பு.  7. தூக்கமின்மை உண்டாகிறது.  இதைத்தான் (“TOXAEMIA OF PREGNANCY”) கர்ப்ப காலத்தில் உடலில் விஷமாக மாறிவிடக்கூடிய கர்ப்பம் என்று கூறுகிறோம்.  ஆகவே,கர்ப்பகால பராமரிப்பு ஒவ்வொரு கருவுற்ற தாய்க்கும் மிகவும் இன்றியமையாததாகும்.

தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!

திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் 100க்கு 80 பேருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்து விடுகிறது. 20 சதவிகிதத்தினருக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

உலகில் ஆண்களால் 40 சதவிகிதமும், பெண்களால் 40 சதவிகிதமும், மற்ற காரணங்களால் 20 சதவிகிதமும் குழந்தைப் பேறு இல்லாமை ஏற்படுகிறது. காரணங்கள் எதுவாக இருந்தாலும், குழந்தை இல்லாமையைப் போக்கும் அளவுக்கு நவீன சிகிச்சைகள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.
சாபம் அல்ல!

குழந்தை இல்லாமைக்கு முற்பிறவியில் செய்த பாவம் அல்லது சாபம் என்று நினைப்பது மிகவும் தவறானது. இத்தகைய தவறான மனப்போக்குகள் மாறி வருகின்றன. இது கணவன் & மனைவி இருவரையும் சார்ந்த பிரச்சனை எனப் புரிந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது ஆரோக்கியமான விஷயம். இதனால் கணவன் & மனைவி இருவரும் சேர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

எப்போது டாக்டரிடம் செல்ல வேண்டும்?

புதிதாகத் திருமணம் செய்து கொள்வோர் எந்தவிதக் கருத்தடைச் சாதனங்களையும் பயன்படுத்தாமல், ஒரு வருடம் தாம்பத்ய உறவை மேற்கொண்டும் கூட கருத்தரிக்கவில்லை என்றால், குழந்தைப்பேறு இல்லாமைக்கான காரணம் இருப்பதாகக் கொள்ளலாம். இத்தகையோர் குழந்தையின்மை சிகிச்சை நிபுணரிடம் உடனடியாகச் செல்வது அவசியம். 

இயல்பாக கரு உருவாதல் குழந்தைப்பேறு கிடைப்பதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் மருத்துவ ரீதியாகச் சம பங்கு உள்ளது. அதாவது போதுமான அளவுக்கு நல்ல விந்து அணுக்களை ஆண் உற்பத்தி செய்து, பெண்ணின் கர்ப்பப் பைக்குள் கொண்டு சேர்க்கும் தன்மை உடையவராக இருக்க வேண்டும். அந்த விந்தணுக்கள் பெண்ணின் கருமுட்டைக்குள் சென்று கருத்தரிக்கச் செய்யும் ஆற்றல் உள்ளவையாக இருக்க வேண்டும்.

இதே போன்று, ஒரு பெண்ணுக்கு கருமுட்டையின் உற்பத்தி சரியாக இருக்க வேண்டும். அது கர்ப்பப் பைக்கு வரும் வழி அடைப்பு இல்லாமல் இருக்க வேண்டும். கருமுட்டையையும், விந்தணுவையும் ஏற்ற கருவை வளர்க்கக் கூடிய வலுவான நிலையில் கர்ப்பப்பை இருக்க வேண்டும்.
மேலே சொன்னவை ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான அடிப்படை விஷயங்களில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அது குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.

ஆண்களே, புகை வேண்டாம். விந்து அணுக்கள் குறைவாக இருத்தல், உயிர் அணுக்கள் இல்லாமல் இருத்தல் ஆகியவை ஆண்களைப் பொறுத்தவரை, பொதுவாக குழந்தை இல்லாமைக்குக் காரணமாக அமைகிறது. இது தவிர சிகரெட்டும் முக்கிய காரணம். சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் உயிர் அணுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், அதன் ஊர்ந்து செல்லும் தன்மையையும் வடிவத்தையும் பாதிக்கிறது. சர்க்கரை நோயும் ஆண்மைக் குறைவுக்குக் காரணமாக அமைந்துவிடும்.
இவை தவிர, உணவில் புரதச் சத்துக் குறைவு, வைட்டமின் இ, பி. காம்ப்ளக்ஸ் குறைவு போன்றவை, விந்தணு குறைவுக்குக் காரணங்களாக இருக்கின்றன.

பெண்களைப் பொறுத்தவரை பொதுவாக ஹார்மோன் குறைபாடுகளே குழந்தை இல்லாமைக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. ஹார்மோன் குறைபாடு காரணமாக, கருமுட்டைகள் உற்பத்தியாகாத நிலை, கர்ப்பப்பை வளர்ச்சி இன்மை ஆகியவை ஏற்படுகின்றன. ரத்தசோகை, புரதச்சத்துக் குறைவு ஆகியவையும் பெண்களுக்கான குறைபாட்டுக்கான காரணங்கள்.
நவீன சிகிச்சைகள் என்றால் என்ன?

குழந்தை இல்லாமைக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து, நவீன முறையில் சிகிச்சை அளித்து குழந்தைப் பேறை உருவாக்கும் அளவுக்கு மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 1973&ம் ஆண்டில் ‘டெஸ்ட்டியூப் பேபி’ எனப்படும் சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறை கண்டுபிடிக்கப்பட்டது. லண்டனில் உள்ள ‘பான்ஹால்’ மருத்துவமனையில் 1978 ஜூலை 25&ம் தேதியன்று முதல் சோதனைக்குழாய் குழந்தை பிறந்தது. முதல் அதிசயக் குழந்தைக்கு ‘லூயிஸ் பிரவுன்’ எனப் பெயரிட்டனர். இச்சாதனையைத் தொடர்ந்து உலகம் முழுவதும் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கும் வசதி படைத்த மருத்துவமனைகளின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் 3 லட்சத்தைத் தொட்டுவிட்டது.

ஐ.வி. எஃப் முறை (I.V.F.)
பெண்ணின் கருக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுவிட்டால், விந்தணுக்கள் அதன் வழியே சென்று கருமுட்டையை அடைய முடியாது. இதற்குத் தீர்வு காண்பதற்காகவே ‘ஐ.வி.எஃப்’ முறை என்ற சோதனைக்குழாய் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இம்முறையில் பெண்ணின் முட்டைப்பை ஊக்குவிக்கப்படும். பின்னர், சேகரித்த முட்டைகளை தரமான உயிர் அணுக்களுடன் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கரு உருவாக்கப்படும்.
நன்கு வளர்ந்த தரமான கரு, பின்னர், ஊசி மூலம் கருப்பையினுள் நேரடியாகச் செலுத்தப்படும். கருக்குழாய் அடைப்பு உள்ளவர்கள் பிள்ளை பெறமுடியாது என்ற நிலையை ஐ.வி.எஃப். முறை தகர்த்தது.

இக்ஸி சிகிச்சை முறை (I.C.S.I.)

சோதனைக் குழாய் முறையில் பெண்ணின் கருமுட்டையையும் ஆணின் விந்து அணுக்களையும் ஒன்றாக இணைத்து, கருவை உருவாக்குவதற்கு சில 100 நல்ல விந்தணுக்கள் தேவைப்பட்டன. ஆனால் ‘இக்ஸி’ முறையில், கருவை உருவாக்க ஒரே ஒரு நல்ல விந்தணுவே போதுமானது. விந்துப் பையிலிருந்து இந்த விந்து அணுவை எடுக்கவும் சாத்தியம் உள்ளது. மேலும் ‘ஐ.வி.எஃப்’ சிகிச்சை முறையினால் குழந்தை பெறுவதற்கான வெற்றி வாய்ப்பு 30 சதவீதம்தான் கிடைத்தது. ஆனால் இக்ஸி முறையில் வெற்றி வாய்ப்பு 60 முதல் 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த முறை 1992 முதல் பிரபலமாகத் தொடங்கியது. இந்த நவீன சிகிச்சை முறைகள் மூலம் ஆண், பெண் இருவரின் குறைபாட்டை 100 சதவீதம் போக்கி சிகிச்சை அளிக்க முடியும்.

மாதவிலக்கு பிரச்சினைக்கு இய‌ற்கை வைத்தியம்

menstrual
* எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்சினை தீரும்.
* கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
* கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் எடுத்து பொடித்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் பொடியை போட்டு கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக ரத்தப் போக்கும் நிற்கும்.
* கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
* கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.
* கல்யாண முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.
* கீழாநெல்லி வேரை இடித்து சாறு பிழிந்து, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.
* கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்.

ஆண்களின் கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும் சத்துக்கள் !!

sperm health

இன்றைய நவீன காலத்தில் ஆண்களின் கருவுறும் திறனை மிகவும் பாதிப்பிற்கு உள்ளாக்கிடும் முக்கியமான விஷயமாக ஆண்களின் மன அழுத்தம் உள்ளது. குறைந்த அளவு வைட்டமின உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் விந்துகளின் வீரியம் மற்றும் எண்ணிக்கை ஆகியவை குறைகின்றன. அது மட்டுமல்லாமல் 90% ஆண்களின் கருத்தரிப்பு தன்மை குறையக் காரணம்,

அவர்களிடம் குறைந்த எண்ணிக்கையிலான விந்து உற்பத்தி அல்லது ஆரோக்கியமற்ற விந்துதன்மை அல்லது இரண்டு பிரச்னைகளாலுமே ஏற்படுகின்றன. மீதம் உள்ள ஆண்கள் குறைபாடுகள், உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஹார்மோன் சமநிலையின்மை மற்றும மரபணு கோளாறுகள் போன்றவை உள்ளன.
சில சமயங்களில் வைட்டமின் குறைபாட்டு போன்ற சாதாரண பிரச்னையாகவும் கூட இருக்கலாம். ஆண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பேணுவதன் மூலமாக கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க முடியும். ஆண்களின் விந்துக்களின் தன்மை மற்றும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வைட்டமின்கள் குறைவாக இருந்தால், கருவுறும் வாய்ப்புகள் வெகுவாக குறைந்துவிடும்.
சில வைட்டமின் குறைபாடுகள் ஆண்களின் ஆசையையும் மற்றும் செயல்பாட்டையும் குறைத்து விடுவதால் கருத்தரிக்கும் முறையில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன. ஆகையால் ஆண்களின் கருவுறும் திறனை அதிகரிக்க வைட்டமின்கள் அதிக அளவில் தேவைபடுகின்றன. ஆண்களின் கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும் வைட்டமின்கள் பற்றி இப்போது காண்போம்…..

வைட்டமின்கள்

வைட்டமின் பி12, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற பல வைட்டமின்கள் ஆண்களின் விந்துகளை அதிகப்படுத்துகின்றன. குறிப்பாக ஃபோலிக் அமிலத்தின் குறைபாடு குறைந்த விந்துகளையும் அல்லது ஆரோக்கியமற்ற விந்துக்கள் உற்பத்தியாகவும் காரணமாக உள்ளது. நீங்கள் ஃபோலிக் அமிலத்தை உட்கொண்டால் விந்துகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். எனவே ப்ராக்கோலி, பசலைக்கீரை, பட்டாணி, அஸ்பாரகஸ் ஆகியவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

ஜிங்க்

செலினியம் மற்றும் துத்தநாகம் (Zinc) போன்ற கனிமங்கள் விந்துக்களை அதிகமாக உற்பத்தி செய்ய உதவுகின்றன. கடல் சிப்பி, பிரேசில் நட்ஸ், பட்டாணி, டூனா மீன்கள் ஆகியவற்றில் இத்தகைய கனிமங்கள் அத்கம் இருப்பதால் இவை நிச்சயமாக விந்துகளை அதிகரித்து கருவுறும் வாய்ப்பையும் அதிகரிக்கின்றன.

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ குறிப்பாக விந்தணுக்களை அதிக அளவில் உருவாக்க வகை செய்கின்றது. இதனால் ஆண்களின் கருத்தரிக்கும் தன்மை அதிகரிக்கப்படுகிறது. சில சமயங்களில், விந்துக்கள் அதிக அளவில் உருவானாலும் அதன் வீரியம் குறைவாக உள்ளது. வைட்டமின் ஈ ஏறத்தாழ 10 சதவிகிதம் விந்தின் தன்மையை சரி செய்து, அதை வீரியமான நிலைக்கு கொண்டு வருகிறது. இத்தகைய வைட்டமின் ஈ நட்ஸ், ஆலிவ் ஆயில், சோயா போன்றவற்றில் அதிகம் உள்ளது.

கார்னைட்டின்

கார்னைட்டின் ஆண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது. விந்துக்கள் பெண் முட்டையை தேடி வெகு தூரம் சென்றடைய அதிக அளவு சக்தி தேவைப்படுகின்றது. கார்னைட்டின் விந்திற்கு தேவையான சக்தியை தந்து அது பயணம் செய்யும் போது எரிந்து சக்தியை செயல்படுத்துகிறது. இத்தகைய கார்னைட்டின் மாட்டிறைச்சி, சிக்கன், பால் பொருட்கள் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் விந்தின் தன்மையை அதிகரிக்க உதவுகின்றன. வைட்டமின் சி மற்றும் இ, கோ-என்சைம் Q10 (CoQ10), செலினியம், N-அசிடைல்சிஸ்டைன் (NAC) ஆகியவை விந்துக்களின் வீரியத்தை அதிகரிக்க உதவுவதை உறுதிப்படுத்தியுள்ளன. நல்ல செல்களின் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளில் விந்துக்களின் எண்ணிக்கை அதிகளவிலும் மற்றும் நகரும் தன்மையுடனும் உள்ளன. இதன் மூலம் விந்தணுவின் வீரியம் அதிகரிக்கின்றன. ஆகவே பெர்ரிப் பழங்கள், பூண்டு, ப்ராக்கோலி ஆகியவற்றை உணவில் சேர்த்தக் கொள்ள வேண்டும்.

லைக்கோபீன்

தக்காளி, தர்பூசணி மற்றும் பல பழங்களுக்கு சிவப்பு நிறத்தை தரும் லைக்கோபீன் என்ற கரோடினாய்டு நிறமி இயற்கையாகவே கிடைத்து வருகிறது. குறைந்த அளவு லைக்கோபீனை உணவில் சேர்த்துக் கொண்டால், அது குறைந்த அளவு வீரியமுள்ள விந்துக்களை உற்பத்தி செய்து ஆண்களிடம் மலட்டு தன்மையை உண்டாக்குகிறது. இத்தகைய குறைகளுடன் ஆண்கள் இருந்தால் லைக்கோபீன் உட்கொள்வதன் மூலம் விந்துக்களை அதிகப்படுத்தவும், நல்ல ஆரோக்கியத்துடன் பெருக்கவும் முடியும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலம்

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் விந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல் விந்தின் குறிப்பிட்ட மெல்லிய தோலை பலப்படுத்தி முட்டையுடன் சேர்ந்து உயிருள்ள கருவை உருவாக்க உதவுகிறது. ஒமேகா-3 குறைபாடின் காரணமாக விந்துக்களின் எண்ணிக்கை குறைவு மற்றும் விந்துக்களின் செயல் திறன் குறைவு ஆகிய குறைபாடுகள் ஏற்படுகின்றன என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. எனவே கடல் உணவுகளான மீன்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

வைட்டமின் டி

வைட்டமின் டி குறைவாக இருந்தாலும் ஆண்களிடம் மலட்டுத்தன்மை ஏற்படும். வைட்டமின் டி-யை ஆய்வு கூடங்களில் வைத்து பரிசோதிக்கும் பொருட்டாக விந்தணுக்களில் சேர்த்த போது, அவை அதிக அளவு விந்தியக்கத்தை ஏற்படுத்துவதை தெளிவாக காண முடிந்தது. அதோடு மட்டுமல்லாமல் விந்தணு முட்டையை வேகமாக வந்தடைய உதவும் ‘அக்ரோசம் ரியாக்ஷன்’ புரியவும் உதவுகிறது….!

சுகர் (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - நீங்களே அறிந்து கொள்ள!



இரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்து கொண்டிருப்பதைத்தவிர, நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பதுண்டு.  அதற்கு இதோ கீழே உள்ளதை பிரிண்ட் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.  அந்த ரிசல்ட்டைப் பார்த்த உடன் உங்களின் சுகர் (Sugar), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - எல்லாம் நீங்களே அறிய கொள்ள முடியும்:


சுகர் (Diabetes):

Venous Plasma Glucose (mg/100ml) வெறும் வயிற்றில்:

80 லிருந்து 110  ---நன்றாகவே இருக்கிறது

111 லிருந்து  125   ---சுமார் ரகம்தான்

125 க்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

Post Prandial (PP) உணவுக்கு 2 மணி நேரத்திற்குப் பின்:

120 லிருந்து 140  ---நன்றாகவே இருக்கிறது

141 லிருந்து  200   ---சுமார் ரகம்தான்

200  க்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

இரத்த அழுத்தம் (Blood Pressure):

BP (mm/Hg):

130/80 ---நன்றாகவே இருக்கிறது

140/90 ---சுமார் ரகம்தான்

அதற்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

கொலஸ்ட்ரால் (Cholesterol):

Cholesterol mg/100ml:

200க்குகீழே ---நன்றாகவே இருக்கிறது

200லிருந்து  240   ---சுமார் ரகம்தான்

240க்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

நல்ல கொலஸ்ட்ரால்:

(HDL) mg/100ml):

45க்குமேல் ---நன்றாகவே இருக்கிறது

35லிருந்து  45   ---சுமார் ரகம்தான்

35க்குகுறைவு  ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

கெட்ட கொலஸ்ட்ரால்:

(LDL) mg/100ml):

100க்குகீழ் ---நன்றாகவே இருக்கிறது

100லிருந்து  129   ---சுமார் ரகம்தான்

130க்குமேல்  ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

சர்க்கரை நோய் (Diabetes) வராமலிருக்க....

 
இன்று, சர்க்கரை நோய் ரொம்ப `பொதுவான' வியாதியாகிவிட்டது. `40'-ஐ தாண்டிவிட்டாலே சர்க்கரை நோய் சாதாரணம் என்ற நிலை உருவாகிவிட்டது. உலகிலேயே அதிக செலவு வைக்கக்கூடிய வியாதியாக `டைப் 2' சர்க்கரை நோய் கருதப்படுகிறது. சர்க்கரை நோயுள்ள வயது வந்தோருக்கு, சர்க்கரை நோயில்லாதவர்களை விட இதய நோயால் உயிரிழப்பு அபாயம் நான்கு மடங்கு அதிகம் என்று அச்சுறுத்துகிறார்கள்.




சர்க்கரை நோய்க்கு முந்திய `பிரி டயபடீஸ்' நிலையும் அதிகரித்து வருகிறது. விடலைப் பருவத்தினர் மற்றும் வயது வந்தோரில் 13 சதவீதம் பேருக்கு `பிரி டயபடீஸ்' இருக்கிறது. இவர்கள் போதுமான தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், 10 ஆண்டுகளில் `டைப் 2' சர்க்கரை நோய் ஏற்படக் கூடும். `டைப் 2' சர்க்கரை நோய் ஏற்பட்டபின் அதைக் குணப்படுத்துவது கடினம்.
 
 
 
 
 
எனவே, `வருமுன் காப்போம்' அடிப்படையில் ஜாக்கிரதையாக நடந்துகொள்வது நம் கையில்தான் இருக்கிறது. `பிரி டயபடீஸ்' அல்லது சர்க்கரை நோயை ஏற்படுத்தக்கூடிய சில அபாய காரணிகள் இருக்கின்றன. பின்வரும் அவற்றை அறிந்து, தகுந்த தற்காப்பு நடவடிக்கைகளை எடுங்கள்:




1. உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது.



2.சர்க்கரை நோயுள்ள பெற்றோர் அல்லது சகோதர, சகோதரிகளைப் பெற்றிருப்பது.




3. வெளிநாடு வாழ் இந்தியராயிருப்பது. (வளர்ந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் சர்க்கரை நோய் அபாயம் எட்டு மடங்கு அதிகம்.)




4. நான்கு கிலோவுக்கு மேல் எடையுள்ள குழந்தையைப் பெற்றெடுப்பது.




5. அதிக ரத்த அழுத்தம் (120/எம்.எம்.எச்.சி.) இருப்பது அல்லது அதற்காகச் சிகிச்சை பெறுவது.




6. எச்.டி.எல். அல்லது நல்ல கொலஸ்ட்ராலை 35 எம்.ஜி./டி.எல்.-க்குக் கீழே கொண்டிருப்பது.




7. `பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம்' (பி.சி.ஓ.எஸ்.) இருப்பது.





8. முந்திய ரத்தப் பரிசோதனைகளில், `பாஸ்டிங் குளுக்கோஸ்' மற்றும் `குளுக்கோஸ் டாலரன்ஸ்' பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வருவது.




9. இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடைய அதிக எடை, `அகன்தோசிஸ் நிக்ரிகன்ஸ்' (கழுத்தைச் சுற்றி அல்லது அக்குளில் அடர்நிற, பஞ்சு போல் மென்மையான தடிப்புகள்) போன்ற அறிகுறிகள்.
 
 
 
 
 
 
10. `கார்டியோவாஸ்குலார்' பாதிப்புக்கு உட்பட்டவராக இருப்பது. உங்களுக்குத் தற்போதைய சோதனையில் சர்க்கரை நோய் இல்லை என்று தெரியவந்தாலும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சோதனை செய்துகொள்வது அவசியம். சோதனை முடிவுகள், அபாயக் காரணிகள் அடிப்படையில் மேலும் குறுகிய இடைவெளியில் சோதனைகளைச் செய்யும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கூடும்.

பெண்களே! தாய்மை அடைய 6 விஷயங்கள் அவசியம்!

ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கான 6 விஷயங்கள்...

1. ஆரோக்கியமாக இருங்கள்
முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.
2. சரியான விதத்தில் சாப்பிடுங்கள்
மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.
3. தீய பழக்கங்கள் கூடாது
புகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது. அதேநேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும்உடம்பைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
4. சரியான நேரம்
ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டை வெள்ளை நிறத்தில் இருக்கும்.
5. பாலியல் அறிவு அவசியம்
படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.
6. உணர்வு ரீதியாகத் தயாராகுங்கள்
கர்ப்பம் தரிக்கும் பெண் உடல்ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.

முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!


முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!



முக‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் தாடைகளு‌க்கு ப‌யி‌ற்‌சி வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், ஏ, இ, யு, ஓ (A, E, U, O) போ‌ன்ற எழு‌த்து‌க்களை அழு‌த்தமாக ச‌த்தமாக சொ‌ல்லவு‌ம்.



க‌ண்களு‌க்கு ந‌ல்ல ப‌யி‌ற்‌சியாக இரு‌க்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், க‌ண்களை வ‌ட்ட வடி‌வி‌ல் சு‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள். அதாவது ஒரு பெ‌‌ரிய வ‌ட்ட‌த்தை க‌ண்களா‌ல் சுழ‌ற்‌றி பா‌ர்‌ப்பது போ‌ல் பா‌ர்‌க்க வே‌ண்டு‌ம்.



‌விர‌ல்களை நெ‌‌ற்‌றி‌யி‌ல் வை‌த்து வ‌ட்ட வடி‌வி‌ல் சு‌ற்‌றி சு‌ற்‌றி மசா‌ஜ் செ‌ய்யலா‌ம். இதனா‌ல் முக‌த்‌தி‌ல் ர‌த்த ஓ‌ட்ட‌ம் அ‌திக‌ரி‌க்கு‌ம். அதே சமய‌ம் நெ‌ற்‌றி‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் சுரு‌க்க‌ங்க‌ள் மறையு‌ம்.


க‌ண்ண‌‌ங்க‌ள் உ‌ப்‌பி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விரு‌ம்புபவ‌ர்க‌ள், வா‌யி‌ல் கா‌ற்றை ‌நிறை‌த்து க‌ண்ண‌ங்களை உ‌ப்ப வை‌த்து 10 நொடிக‌ள் இரு‌க்கலா‌ம். இ‌வ்வாறு 10 முறை செ‌ய்தா‌ல் க‌ண்ண‌ங்க‌ள் புசுபுசுவெ‌ன்று மாறு‌ம்.



இர‌ண்டு காதுகளையு‌ம் உ‌ள்ள‌ங்கைகளா‌ல் ‌அழு‌த்‌தி‌ப் ‌பிடி‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். உ‌ங்களா‌ல் எ‌வ்வளவு அழு‌த்தமாக ‌பிடி‌க்க முடியுமோ அ‌வ்வளவு அழு‌த்தமாக ‌பிடி‌த்தபடி 25 வரை எ‌ண்ணுவு‌ம். இ‌வ்வாறு செ‌ய்தா‌ல் காது கே‌ட்கு‌ம் ‌திற‌ன் அ‌திக‌ரி‌க்கு‌ம்.

முக‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் தாடைகளு‌க்கு ப‌யி‌ற்‌சி வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், , , யு,  (A, E, U, O)  போ‌ன்ற எழு‌த்து‌க்களை அழு‌த்தமாக ச‌த்தமாக சொ‌ல்லவு‌ம்.



க‌ண்களு‌க்கு ந‌ல்ல ப‌யி‌ற்‌சியாக இரு‌க்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல்
,
க‌ண்களை வ‌ட்ட வடி‌வி‌ல் சு‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள். அதாவது ஒரு பெ‌‌ரிய வ‌ட்ட‌த்தை க‌ண்களா‌ல் சுழ‌ற்‌றி பா‌ர்‌ப்பது போ‌ல் பா‌ர்‌க்க வே‌ண்டு‌ம்.



‌விர‌ல்களை நெ‌‌ற்‌றி‌யி‌ல் வை‌த்து வ‌ட்ட வடி‌வி‌ல் சு‌ற்‌றி சு‌ற்‌றி மசா‌ஜ் செ‌ய்யலா‌ம். இதனா‌ல் முக‌த்‌தி‌ல் ர‌த்த ஓ‌ட்ட‌ம் அ‌திக‌ரி‌க்கு‌ம். அதே சமய‌ம் நெ‌ற்‌றி‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் சுரு‌க்க‌ங்க‌ள் மறையு‌ம்.


க‌ண்ண‌‌ங்க‌ள் உ‌ப்‌பி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விரு‌ம்புபவ‌ர்க‌ள்,
வா‌யி‌ல் கா‌ற்றை ‌நிறை‌த்து க‌ண்ண‌ங்களை உ‌ப்ப வை‌த்து 10 நொடிக‌ள் இரு‌க்கலா‌ம். இ‌வ்வாறு 10 முறை செ‌ய்தா‌ல் க‌ண்ண‌ங்க‌ள் புசுபுசுவெ‌ன்று மாறு‌ம்.



இர‌ண்டு காதுகளையு‌ம் உ‌ள்ள‌ங்கைகளா‌ல் ‌அழு‌த்‌தி‌ப் ‌பிடி‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். உ‌ங்களா‌ல் எ‌வ்வளவு அழு‌த்தமாக ‌பிடி‌க்க முடியுமோ அ‌வ்வளவு அழு‌த்தமாக ‌பிடி‌த்தபடி 25 வரை எ‌ண்ணுவு‌ம். இ‌வ்வாறு செ‌ய்தா‌ல் காது கே‌ட்கு‌ம் ‌திற‌ன் அ‌திக‌ரி‌க்கு‌ம்.



முக‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் தாடைகளு‌க்கு ப‌யி‌ற்‌சி வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், , , யு,  (A, E, U, O)  போ‌ன்ற எழு‌த்து‌க்களை அழு‌த்தமாக ச‌த்தமாக சொ‌ல்லவு‌ம்.



க‌ண்களு‌க்கு ந‌ல்ல ப‌யி‌ற்‌சியாக இரு‌க்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல்
,
க‌ண்களை வ‌ட்ட வடி‌வி‌ல் சு‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள். அதாவது ஒரு பெ‌‌ரிய வ‌ட்ட‌த்தை க‌ண்களா‌ல் சுழ‌ற்‌றி பா‌ர்‌ப்பது போ‌ல் பா‌ர்‌க்க வே‌ண்டு‌ம்.



‌விர‌ல்களை நெ‌‌ற்‌றி‌யி‌ல் வை‌த்து வ‌ட்ட வடி‌வி‌ல் சு‌ற்‌றி சு‌ற்‌றி மசா‌ஜ் செ‌ய்யலா‌ம். இதனா‌ல் முக‌த்‌தி‌ல் ர‌த்த ஓ‌ட்ட‌ம் அ‌திக‌ரி‌க்கு‌ம். அதே சமய‌ம் நெ‌ற்‌றி‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் சுரு‌க்க‌ங்க‌ள் மறையு‌ம்.


க‌ண்ண‌‌ங்க‌ள் உ‌ப்‌பி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விரு‌ம்புபவ‌ர்க‌ள்,
வா‌யி‌ல் கா‌ற்றை ‌நிறை‌த்து க‌ண்ண‌ங்களை உ‌ப்ப வை‌த்து 10 நொடிக‌ள் இரு‌க்கலா‌ம். இ‌வ்வாறு 10 முறை செ‌ய்தா‌ல் க‌ண்ண‌ங்க‌ள் புசுபுசுவெ‌ன்று மாறு‌ம்.



இர‌ண்டு காதுகளையு‌ம் உ‌ள்ள‌ங்கைகளா‌ல் ‌அழு‌த்‌தி‌ப் ‌பிடி‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். உ‌ங்களா‌ல் எ‌வ்வளவு அழு‌த்தமாக ‌பிடி‌க்க முடியுமோ அ‌வ்வளவு அழு‌த்தமாக ‌பிடி‌த்தபடி 25 வரை எ‌ண்ணுவு‌ம். இ‌வ்வாறு செ‌ய்தா‌ல் காது கே‌ட்கு‌ம் ‌திற‌ன் அ‌திக‌ரி‌க்கு‌ம்.

Sunday, December 1, 2013

How to Increase Sperm Volume

When it's time to get down to business and make babies, you want to do everything you can to make that happen. Fortunately, there have been many studies about this in recent years, and increasing your sperm volume has been well researched and there are answers that might help. We'll show you a few ways to do this.

Changes in Diet

  1. 1
    Modify your diet. The right changes in the things you eat can lead to more, as well as healthier, sperm. Don't underestimate this step.

    • Reduce or eliminate processed foods and switch to a diet low in fats, and high in protein. Eat many vegetables and whole grains, and buy organic foods when possible. Drink plenty of water. Anything that is beneficial to your overall health is also beneficial to your little mini-me's.
  2. 2
    Increase your intake of foods rich in vitamin C and antioxidants. These nutrients can lower sperm defects and increase sperm motility. It is as easy as including an orange for dessert! A single 8-ounce (230 ml) glass of fresh orange juice contains about 124 milligrams of vitamin C — a full day's supply.

  3. 3
    Take in plenty of mineral zinc. It's associated with increased semen volume, sperm count, and testosterone levels. Take in about 11mg daily, which you can get by eating oysters, beef, beans, and chicken.

  4. 4
    Take in amino acids, as supplements or in food. Amino acids, traces of which can be found in meats, fruits, and vegetables, are believed to increase sperm count and keep the sperm from clumping. Amino acids that you can incorporate into your diet include:

    • L-Carnitine, which can be found in red meat and milk
    • L-Arginine, which can be found in nuts, sesame seeds, and eggs
    • L-Lysine, which can be found in dairy and cheeses
  5. 5
    Try supplementing your diet with folic acid. Folic acid (Vitamin B9) may contribute to an increase for semen. The 400 micrograms daily are found in cereals, green leafy vegetables, legumes, and orange juice.

  6. 6
    Increase your daily amounts of calcium and vitamin D. You can take supplements of both, or spend significant time in the sun so your body can synthesize vitamin D, and eat plenty of yogurt, skim milk, and salmon to boost your calcium intake. If you do spend more time in the sun, be sure to lather up with some sunscreen to prevent damage from harmful rays and possible melanoma.

  7. 7
    Consume allicin, which comes from garlic. Allicin, an organosulfur compound, increases sperm volume by optimizing blood flow to your sexual organs, creating millions of happier sperm. Find new and interesting dishes to add to your garlic repertoire, or beast it and act like a real man by adding a clove or two of raw garlic to your vegetable smoothie in the morning.

  8. 8
    Eat more of the following sperm-healthy foods. If you want your sperm to be brimming with healthy little apples of your eye, consider incorporating more of the following foods[1] into your diet:

    • Goji berries (antioxidants)
    • Ginseng
    • Pumpkin seeds (omega-3 fatty acids)
    • Walnuts (omega-3 fatty acids)
    • Asparagus (vitamin C)
    • Bananas (vitamin B)

Changes in Lifestyle

  1. 1
    Clean up your lifestyle. Certain lifestyle habits, which stress your body and immune system, will lead to a lower sperm count. If you are trying to make a baby, it's best to refrain from smoking, drugs (except prescription drugs — check with your doctor on this one), and alcohol in moderation.

  2. 2
    Drop your drawers. Not literally, but make sure your testicles are not jammed up against your body. Heat will kill the little guys, so switch to boxers and give them some breathing room. If there's a reason that men are born with testicles on the outside of their body, it's for them to stay nice and cool.

  3. 3
    Get off the bicycle. Bicycle seats are notorious for reducing sperm count, and if you think about it for a moment, you will realize why. The pressure, the jostling, the bouncing — none of these are what sperm enjoy. Switch to the car or the bus while you're in sperm production mode, and your workers will respond with higher production.

  4. 4
    Get out of the hot tub. Yes, it's conducive to the right mood, but while you're making moony eyes, they're succumbing to heatstroke. Leave the tubbing for relaxation afterwards.

  5. 5
    Lighten up. Stress kills, and while you may be able to handle it for a while, your sperm is not nearly so rugged. Stress can interfere with the hormones needed to assist in sperm production. Given any kind of emotional (or physical) abuse, and they'll wriggle off to that great scrotum in the sky, never to return.

  6. 6
    Keep your weight in check. Being too large — or too small — can affect hormonal balance. Too much estrogen or too little testosterone will have a negative impact on your sperm count. So hit the gym before you hit the sack, and find new and interesting ways to keep yourself motivated, so you don't give up on your weight loss mission before it starts.

  7. 7
    Knock off the steroids. While they may help you bulk up your muscles, your un-muscular testicles will shrink. Regardless of sperm count issues, who wants that? Anabolic steroids are harmful to your overall health.

  8. 8
    Get your rest. Your body does most of the good production work while you sleep — and that includes sperm production. Get a full 8 hours of sleep every night when you're working on upping your sperm count.

  9. 9
    Try PC muscle exercises. PC muscle exercises are used by men not only to last longer, but also to increase the volume of their sperm. There are many PC muscle exercises that you can do to both satisfy your partner and give your progeny the best shot at success.

  10. 10
    Stay away from lubricants during sex. Lubricants, while helpful for the process, may be harmful for the results. That's because lubricants, including saliva, lotions, and jellies, can interfere with sperm movement. If you need to, try using vegetable oil, peanut oil, or a lubricant such as PreSeed, which may not harm your sperm.

  11. 11
    Limit your exposure to toxic chemicals and radiation. Toxic chemicals and radiation can cause permanent damage to sperm. If you regularly work with toxic chemicals, be sure to wear protective covering (gloves, masks, etc.) so you limit exposure to your skin. Avoid areas that you know produce too much of radiation, and only opt for medical procedures involving radiation if necessary.

  12. 12
    Take note. All the above advice will not only help you increase the quantity of sperm, it will also improve the quality. Keep them healthy, active, and ready for the journey to come, and with any luck, one of them will reward you by becoming a baby!