Pages

Thursday, October 31, 2013

வெந்தயம் -வெந்தய களி:- வெந்தய சாலட்- வெந்தய பொங்கல்

உணவே மருந்து - வெந்தயம் மூலிகைகள் நோய்களை களைவதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் உதவுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருளில் ஒன்றான வெந்தயம் பல சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் அடக்கி வைத்துள்ளது. வெந்தயம் என்ற வார்த்தையின் பிற்பகுதி ``அயம்'' என்று உள்ளதற்கேற்ப வெந்தயத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. வெந்தயத்தில் 13-7 கிராம் ஈரப்பதம், 26 கிராம் புரதம், 5.8 கிராம் கொழுப்பு, 3.0 கிராம் தாதுக்கள் 7.2 கிராம் நார்சத்து, 1.60 மில்லி கிராம் கால்சியம், இரும்பு 65 மில்லி கிராம் உள்ளது. இதை தவிர வெந்தயத்தில் ``பைட்டோ ஈஸ்ட்ரால்'' என்ற சத்து உள்ளது. ஈஸ்ட்ரோஜன் என்பது பெண்களில் காணப்படும் இனப்பெருக்கத்திற்கு உதவும் ஹார்மோன். இது சில வகை தாவரங்களிலும் காணப்படும் இதைத் தான் ``பைட்டோ ஈஸ்ட்ரால்'' என்போம். மேலும் இதில் டயோஸ்கெனின் என்ற ஸ்டீராய்ட் காணப்படுகிறது. அரிய வகைசத்துக்கள் அடங்கிய வெந்தயம் பல நோய்களுக்கு மருந்தாகிறது. குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்பால் பெருகுவதற்கு வெந்தயம் சிறந்த மருந்து. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கநாடுகளில் குழந்தை பெற்ற பெண்கள் தங்கள் தினசரி உணவில் வெந்தயம் சேர்த்து கொள்கிறார்கள். வெந்தயத்தில் உள்ள ஸ்டீராய்டு பெண்களின் மார்பகங்களின் வளர்ச்சிக்கு பெரும் துணை புரிகிறது. ஆண்களுக்கும் மிகுந்த சக்தி யளிக்கக் கூடியதாக உள்ளது, வெந்தயம் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகள் மற்றும் ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இது நன்மை செய்யும் கொழுப்பு அளவை குறைப்பதில்லை. இதில் உள்ள ``லெசிட்டின்'', கோலைன் என்ற சத்துக்கள் மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தெளிவாக சிந்திக்க உதவுகிறது, வயதை தடுக்க உதவுகிறது. முக்கியமாக புரதச்சத்தும் நிறைந்துள்ளது அதனால் தோல், மற்றும் தலைமுடியை பாதுகாக்கின்றது. வெந்தயம் கசப்பு சுவையுள்ளது. உடலுக்கு குளிர்ச்சியளிக்கக் கூடியது. பெண்களுக்கு உடல் சூட்டால் தோன்றக் கூடிய நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு, மற்றும் வெள்ளைப்படுதலுக்கு சிறந்த மருந்து. பெண்கள் பருவம் எய்தியது முதல் மாதவிடாய் நிற்கும் காலம் வரை வெந்தயம் அவர்களுக்கு எல்லா காலகட்டங்களிலும், மருந்தாக பயன் அளிக்கின்றது. வயிற்று சூட்டினால் உண்டாகும் வயிற்றுப்போக்குக்கு இது மிக நல்ல மருந்து. இது கிழுகிழுப்பு தன்மை வாய்ந்ததால், உடல் சூட்டையும், வறட்சியையும் நீக்கும். மாதவிடாய் காலங்களில் பெண்கள் அவதிப்படும் வலிக்கு 2 தேக்கரண்டி வெந்தயத்தை நன்கு வறுத்து நீர் கலந்து கொதிக்க வைத்து, பின் வடிகட்டி தேன் கலந்து சாப்பிட, வலி உடன் குறையும், குழம்பு தாளிக்கவும் இட்லி, தோசைகளில் நாம் வெந்தயம் பயன்படுத்துகிறோம். வெந்தயக் குழம்பும் பலர் வீடுகளில் செய்யும் பழக்கம் உள்ளது. கிராமங்களில் பிரசவித்த பெண்களுக்கும், பருவம் அடைந்த இளம் பெண்களுக்கும். வெந்தயக்களி செய்து கொடுக்கும் பழக்கம் உள்ளது. வெந்தய களி: வெந்தயம் - 100 கிராம் அரிசி மாவு - 100 கிராம் கருப்பட்டி - 100 கிராம் நல்லெண்ணை - தேவையான அளவு நெய் - சிறிதளவு. செய்முறை: 1. வெந்தயத்தை நன்கு வறுத்து பொடியாக செய்து கொள்ள வேண்டும். 2. அரிசி மாவை நன்கு வறுத்து கொள்ள வேண்டும். 3. ஒரு அடி கனமான பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி கருப்பட்டியை கரைய விட வேண்டும். 4. கரைந்ததும், நீரை வடிகட்டி நன்கு கொதிக்கவிட வேண்டும். 5. பின் வெந்தயம், அரிசி மாவை கலந்து நன்கு கிளற வேண்டும், மாவு நன்கு வேகும் வரை நன்கு கிளறவும், சிறிது, சிறிதாக நல்லெண்ணையை ஊற்றவும். 6. பக்குவம் வந்த பின் நெய் ஊற்றவும். இந்த வெந்தய களியை தினமும் காலை பிரசவித்த பெண்கள் சாப்பிட்டு வர, பால் பெருகும். இளம் பெண்களின் மார்பக வளர்ச்சி மற்றும் வெள்ளைப்படுதலுக்கும் சிறந்த உணவாகிறது. வெந்தய சாலட் வெந்தயம் - 100 கிராம் எலுமிச்சம் பழம் - 1 மிளகுத் தூள் - 1/4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. வெந்தயத்தை ஒரு நாள் இரவு ஊற வைத்து, பின் வடிகட்டி சிறிது நேரம் ஒரு உலர்ந்த துணியில் பரப்பி வைக்கவும். பின்பு ஒரு ஈர துணியில் கட்டி தண்ணீர் தெளித்து முளைக்க வைக்க வேண்டும். முளைக்க வைக்கும் பொழுது கசப்பு குறைகிறது. முளைக்கும் பொழுது வைட்டமின் `சி' சத்து அதிகரிக்கிறது 2 நாள் முளைக்க வைப்பது சிறந்தது. இந்த முளையுடன் எலுமிச்சபழசாறு, மிளகு தூள் உப்பு கலந்து சாலட் ஆக சாப்பிடலாம். தயிர் பச்சடி முளை விட்ட வெந்தயத்துடன், கடைந்த தயிர் கலந்து, சிறிது உப்பு சேர்த்து தயிர் பச்சடியாகவும் சாப்பிடலாம், கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொள்ளவும். வெந்தய பொங்கல்: வெந்தயம் - சிறிதளவு (ஊற வைத்துக் கொள்ளவும்) பச்சரிசி - 100 கிராம் இஞ்சி - சிறு துண்டு மிளகு - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் நெய் - தாளிக்க கறிவேப்பிலை - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு. பச்சரிசியை வறுத்துக் கொள்ளவும், ஊற வைத்த வெந்தயத்தை சேர்த்து 3 மடங்கு நீர் விட்டு வேகவைக்கவும், வெந்தயத்துடன் மிளகு, சீரகம், இஞ்சி, தாளித்து கொள்ள வேண்டும். இதை கொத்தமல்லி, புதினா சட்னியுடன் சூடாக சாப்பிடலாம். சூடு தணிக்கும் வெந்தயக் கீரை நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக் கீரை. இதில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உண்டு. பல விதமாக இதனைச் சமையலில் சேர்க்கலாம். துவரம் பருப்புடன் வேக வைத்து கூட்டு செய்யலாம். புளிசேர்த்து வேக வைத்து கூட்டு தயாரிக்கலாம். காரக் குழம்பு செய்யவும் வெந்தயக் கீரையைப் பயன்படுத்தலாம். இக்கீரையுடன் புளி, மிளகாய் சேர்த்து கடைந்தும் உணவுடன் சேர்த்தும் கொள்ளலாம். வெந்தயக் கீரை ஜீரண சக்தியை சீராக்குகிறது. சொறி சிரங்கை நீக்குகிறது. பார்வைக் கோளாறுகளைச் சரி செய்கிறது. இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோயும் குணமடையும் என்று மூலிகை மருத்துவத்தில் கூறப்படுகிறது. இந்தக் கீரையை வேக வைத்து, அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டு வந்தால் மலச் சிக்கல் தொடர்பான அத்தனை பிரச்சினை களும் நீங்குகின்றன. வெந்தயக் கீரையை வெண்ணை யிட்டு வதக்கி உண்டு வந்தால் பித்தக் கிறுகிறுப்பு, தலைச் சுற்றல், வயிற்று உப்புசம், பசியின்மை, ருசி யின்மை முதலியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட் டுப் படும். வெந்தயக் கீரை நல்லதொரு பத்திய உணவு. இதை அரைத்து நெய் சேர்த்துச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும். நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு இடுப்பு வலி தவிர்க்க முடியாத ஒன்று. இவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய் பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கி விடும். மூல நோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. வெந்தயக் கீரையுடன் அத்திப்பழம், திராட்சை, சீமைப் புளி மூன்றையும் சேர்த்து கசாயம் செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மார்பு வலி, மூக்கடைப்பு நீங்கும். ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையை குறைக்கும் ஆற்றல் வெந்தயக் கீரைக்கு உண்டு. இக்கீரையை தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரித்து பசியைத் தூண்டிவிடும். சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளையும் பலப்படுத்தும். வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி போன்ற நோய்களைக் குணப்படுத்துகிறது. வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெருத்த உடல் இளைக்கும்.

உளுந்தின் பயன்



உளுந்தின் பயன்களைப்பற்றிய தகவல் !!! (Black Gram)

இந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும்.

இந்திய உணவில் இரண்டு வகை உண்டு.

தென்னிந்திய உணவு வகை,

வட இந்திய உணவு வகை.

தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது.

இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த உணவுகளுள் உளுந்தும் ஒன்று. இதன் வெளித் தோல் கருப்பாகவும், உட்புறம்நன்கு வெண்மையாகவும் காணப்படும்.

இந்தியாவில் அனைத்து பகுதியிலும் பயிராகும் ஒருவகை செடியாகும். பணப்பயிர்களில் இதுவும் ஒன்று.கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

உளுந்தின் பயன்களைப் பற்றி தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு மருத்துவப் பயன் உள்ளது.உளுந்தை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை.



சாப்பிடக் கூடாது:

1. சர்க்கரை.
2. கரும்பு.
3. சாக்லெட்.
4. குளுக்கோஸ்.
5. காம்பளான்.
6. குளிர் பானங்கள்.
7. சாம் வகைகள்.
8. பால் கட்டி.
9. திரட்டுப்பால்.
10. பனிக்கூழ்.
11. வாழைப்பழம்.
12. பலாப்பழம்.
13. மாம்பழம்.
14. நுங்கு.
15. சப்போட்டா.
16. சீதாப்பழம்.
17. உலர்ந்த திராட்சை.
18. சேப்பங்கிழங்கு.
19. உருளைக்கிழங்கு.
20. சர்க்கரைவள்ளிக்கிழங்கு.



அளவோடு சாப்பிடலாம்:

1. கம்பு.
2. ஓட்ஸ்.
3. அரிசி.
4. அவல்.
5. இரவை.
6. பார்லி அரிசி
7. சோளம்.
8. மக்காச் சோளம்.
9. கேழ்வரகு.
10. கோதுமை.
11. பாதாம் பருப்பு.
12. முந்திரிப் பருப்பு.
13. வேர்க்கடலை.
14. பிஸ்தா பருப்பு.
15. வால் நட்.


அளவில்லாமல் சாப்பிடலாம்:

1. பாகற்காய்
2. சுரைக்காய்.
3. வாழைத்தண்டு.
4. வெள்ளை முள்ளங்கி.
5. தக்காளி.
6. கொத்தவரங்காய்.
7. காராமணி.
8. வெள்ளரிக்காய்
9. அவரைக்காய்.
10. முருங்கைக்காய்.
11. கீரை.
12. கண்டங்கத்திரி.
13. கோவைக்காய்.
14. வெங்காயம்.
15. பூசணிக்காய்.
16. கத்திரிக்காய்.
17. வாழைப்பூ.
18. பீர்க்கங்காய்.
19. பப்பாளிக்காய்.
20. வெண்டைக்காய்.
21. முட்டைக்கோஸ்.
22. நூல்கோல்.
23. கோவிப்பூ.
24. சீமை கத்திரிக்காய்.

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்

இன்றைய வாழ்க்கை முறையில் நாம் பார்க்கும் முக்கிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோய் இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தி வருகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும்.

ஆனால் இதனை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

சர்க்கரை நோய் இல்லையென்றாலும் சரி அல்லது சர்க்கரையின் அளவு எல்லையில் இருந்தாலும் சரி அல்லது பரம்பரை வியாதி என்றாலும் சரி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதோடு தவிர்க்கவும் செய்யலாம்.

இந்தியர்களுக்கு அதற்கான உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் 60:20:20 விகிதம் இருக்க வேண்டும். இப்போது சர்க்கரை நோய்க்கான மருத்துவர் மற்றும் உணவியல் வல்லுநர்கள், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பரிந்துரைக்கும் முதன்மையான 15 வகை உணவுகளை பற்றி பார்ப்போம்.

1.வெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

2.தக்காளி: நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்

3.பாதாம்: தினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

4.தானிய வகைகள்: தானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங் கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட தோன்றினால், அதனு டன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள் ளவும்.

5.பால்: பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது.

6.காய்கறிகள்: அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

7.பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் ரத்த குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது.

8.ஒமேகா3: ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பினி போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது. கனோலா எண்ணெய், சணல் எண்ணெய், கொழுப்பு மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் இயற்கையாகவே இந்த கொழுப்புகள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கொழுப்பு அளவு குறைவாகவே இருக்கும்.

9.பழங்கள்: அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் இதை அதிகமாக உண்ணக் கூடாது.

10.உணவு முறை: அதிகமாக உண்ணுவதால் ஒருவரின் உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சிறிய அளவு உணவை போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சர்க்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்துள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

11.முக்கியமான உணவுகள்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட், அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம், வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவை உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள பண்டங்களை உண்ணக் கூடாது. போதிய இடைவேளையில் (5 வேளை) சிறிய அளவில் உணவை உட்கொள்ள வேண்டும்.

12.இயற்கை இனிப்பு: சர்க்கரை நோயாளிகள், கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனை கலந்து கொள்ளலாம்.

13.தண்ணீர் மற்றும் மதுபானம்: நிறைய தண்ணீர், காய்கறி மற்றும் பழச்சாறுகளை பருகவும். மேலும் மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

14.அசைவ உணவு: அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆனால் ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும்.

15.உணவு பழக்கம்: இந்தியர்களுக்கான சர்க்கரை நோய் கட்டுப்பாடு உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக நிற்கும்.

மேற்காணும் உணவுப் பழக்கத்தை தொடர்ந்து கையாண்டு வந்தாலே சர்க்கரை நோயின் பிடியில் இருந்து 100 சதவீதம் தப்பலாம். சர்க்கரை நோய் கண்டவர்கள் தாங்களாகவே மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை தவிர்த்து முறையான சிகிச்சையினை டாக்டரிடம் மட்டுமே எடுத்துக்கொள்வது சாலச் சிறந்தது. சர்க்கரை நோயற்ற வாழ்வை பெற முயன்ற அளவு முயற்சிப்போம்.

சர்க்கரை நோய் தீர்க்கும் உணவு முறை



பொதுவாக 35 வயது வரை உணவில் எந்தக் கட்டுப்பாடும் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவரவர் வாழும் சூழ்நிலை, உத்தியோகம், பணி இவற்றைப் பொறுத்து தங்களுக்கு ஒத்து வரக் கூடிய, தங்களுக்குப் பிடித்த எந்த உணவையும் சாப்பிட்டு வரலாம். ஹோட்டல், விடுதிகள் போன்ற வெளியிடங்களைத் தவிர்த்து தாமே சமைத்து உண்ணுதல் நலம். அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்றுக்காக காலியாக வைத்திருத்தல் என்னும் உணவுப் பழக்கம் எக்காலத்திற்கும், யாவர்க்கும் பொருந்தி வரக் கூடிய ஓர் ஆரோக்யமான உணவுப் பழக்கமாகும்.

35 வயதிற்குப் பின் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொள்ளுதல் அவசியம்.
அரிசியில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச் சத்து சர்க்கரை நோய் உள்ளவர்களை மிகவும் பாதிப்பதால் ஸ்டார்ச் குறைவாக உள்ள கோதுமையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இரவு உணவு கோதுமை சப்பாத்தியாக, கோதுமை தோசையாக இருத்தல் நலம். சர்க்கரையின் அளவைப் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். 50 வயதிற்குப் பின் சர்க்கரையை அறவே தவிர்த்து விட வேண்டும். 40 வயது முதல் நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இதனால் மூட்டு வலி, ஈரல் வீக்கம் போன்ற நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் முற்றிய நிலையிலிருந்தால் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் அரிசி சாதத்தைத் தவிர்த்து கோதுமை உணவை மட்டுமே ஏற்க வேண்டும்.

ஆரம்ப நிலையிலுள்ள சர்க்கரை நோயை சரியான உணவுப் பழக்கத்தால் எளிதில் குணமாக்கி விடலாம் என்பது உண்மையே. இவர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு அருகம்புல் உருண்டையை வாயில் போட்டு ஒரு டம்ளர் நீர் அருந்தவும்.

அருகம்புல் உருண்டை எப்படி செய்வது?

வேர், தண்டு நீக்கிய அருகம்புல்லைச் சேகரித்து அம்மியில் வைத்து நன்றாக அரைக்கவும். அத்துடன் நீர் சேர்க்காமல் தேவையான அளவு வடிகஞ்சியை ஊற்றி நைசாக அரைக்கவும். அருகம்புல்லை கல் அம்மி, ஆட்டுக்கல்லில்தான் அரைக்க வேண்டும். மின்சார மிக்சிகளைப் பயன்படுத்தக் கூடாது. அருகம்புல் விழுதான பதத்திற்கு வந்தவுடன் அதை வழித்தெடுத்து, உருண்டையாக உருட்டி ஒரு வெள்ளை வேட்டியில் அந்த உருண்டைகளை வைத்து நன்றாக வெயியில் காய வைக்கவும்.

சர்க்கரை நோய் தீர்க்கும் ஆராக் கீரை

அருகம்புல் உருண்டையில் உள்ள ஈரப் பதம் நன்றாகக் காயும் வரை தேவையான நாட்கள் தொடர்ந்து வெயிலில் காய வைக்கவும். நன்றாகக் காய்ந்தவுடன் ஒரு கண்ணாடி பாட்டிலில் அல்லது பீங்கான் பாத்திரத்தில் அருகம்புல் உருண்டைகளைப் போட்டு பத்திரப்படுத்தி வைக்கவும். இப்படி தயார் செய்யப்பட்ட அருகம்புல் உருண்டைகளை தினமும் ஒரு உருண்டை வெறும் வயிற்றில் உண்டு ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் ஆரம்பி நிலையிலுள்ள சர்க்கரை வியாதி குணமாகும். முற்றிய நிலையிலுள்ள நோயின் கடுமை தணியும்.

இரண்டாவதாக, இரவில் அரிசி சாதத்தில் நீர் ஊற்றி வைத்திருந்து காலையில் (பழைய) சாதத்தில் உள்ள நீரை வடித்து விட்டு உண்பதால் சாதத்தில் உள்ள பெரும்பான்மையான ஸ்டார்ச் சத்து நீர் மூலம் வெளியேறி விடும். இந்த சாதத்தை நாள் முழுவதும் சாம்பார், ரசம், மோர் இவற்றை சேர்த்து உண்ணலாம். இதனால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகாது.

மூன்றாவதாக, நீர் ஆரை என்ற ஒரு கீரை உண்டு. வயல் வரப்புகளில், வாய்க்கால்களில் நீர் தொடர்ந்து இடங்களில் முளைத்திருக்கும். நாலு இதழ்கள் கொண்டது. இந்த ஆராக்கீரையைச் சமைத்து தினந்தோறும் உண்ண வேண்டும். பசுவிற்கும் ஒரு கைப்பிடி ஆராக் கீரையை சிறிதளவு வெல்லத்துடன் சேர்த்துக் கொடுத்தில் மிகவும் துரிதமான பலன்களைக் கொடுக்கும். ஆராக் கீரையைப் பெற இயலாதவர்கள் தினமும் ஒரு கட்டு அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு அளித்து வரவும். இந்த உணவு முறையையும், தான முறையையும் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால் மிக எளிதில் சர்க்கரை வியாதியின் துன்பத்திலிருந்து மீளலாம். இதய நோய்கள் அகற்றும் உணவு முறை.

சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்

வணக்கம், நான் தமிழ் சித்த மருத்துவர் அருண் சின்னையா. உங்களோடு சிறகு  இணைய இதழில் அளவளாவுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தமிழர்களுடைய உணவுமுறை, மருத்துவம் எப்படி இருக்கிறது? எந்த வகையில் எல்லாம் முன்பு  நல்ல நிலையில் இருந்தது, இன்றைய கால கட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் உணவுகள் எப்படி எல்லாம் இன்று மாறிப் போய் விட்டது? தமிழர்கள் இன்று எப்படியெல்லாம் நோய்க்கு அடிமையாகிவிட்டார்கள்? நோய்க்கு அடிமையான காரணத்தினால் எப்படி எல்லாம் நம் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு ஒரு நடைப்பிணமாய் நாம் மாற்றப்பட்டிருக்கிறோம்? இதையெல்லாம் சென்ற கட்டுரையில் பார்த்தோம்.
இப்போது நாம் எதைப்பற்றி பேசப் போகிறோம், என்றால் சர்க்கரை வியாதி நோயைப்பற்றியே. சர்க்கரை வியாதியில் உலகத்திலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய நாடு எது? என்றால் அது இந்தியா. இந்தியாவிலேயே சர்க்கரை வியாதியில் முன்னோடியாக இருக்கக் கூடிய மாநிலம் எது? என்றால் நம்புங்கள் அது நம் தமிழ்நாடு தான்.
தமிழ் நாட்டிலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய ஒரு நகரம் எது என்றால் சென்னை. சக்கரை வியாதிக்கான மிகப் பெரிய வணிகச் சந்தையை தனக்குள்ளே உள்ளடக்கிக் கொண்டு, நடைப்பிணமாய் திரியக் கூடிய தமிழ் சமூகம் இன்று உருவாகி உள்ளது. அதற்கான காரணங்கள் என்ன? அது எப்படியெல்லாம் வருகிறது? அதை எப்படி தடுக்கலாம்? அதற்கான உணவு முறை கட்டுப்பாடுகள் என்ன? இதையெல்லாம் முழுமையாக அலசி ஆராயப்போகிறோம். முதலில் நீரிழிவு என்பது அன்றே சித்தர்களால் மது மேகம் என்ற பெயரில் சொல்லப்பட்டது. இந்த மது மேகம் எப்படியெல்லாம் வரும் என்பதை விளக்கும் சித்தர் பாடலானது  . . . .
“கோதையார் களவின் போதை
கொழுத்த மீனிறைச்சி போதை
பாலுடன் நெய்யும்
பரிவுடன் உண்பீராகில்
வருமே பிணி”
என்று மது மேகத்தைப் பற்றி சொல்கிறார்கள் சித்தர்கள். அதாவது கோதையார் களவின் போதை என்று சித்தர்கள் சொல்லக் கூடிய ஒரு பெரிய காரணி என்ன என்றால் உடலுறவில் ஈடுபடும் பொழுது முழுமையாக செயல்படக் கூடியது நாளமில்லாச் சுரப்பி மண்டலம் ஆகும். ஆதலால்  மதுமேக நோய் என்பது ஒரு ஹார்மோனல் கிருமி என்கிறார்கள்.  உடலில் இன்சுலின் என்கிற ஹார்மோன் குறைவதால் வரக் கூடிய நோய் இதுவாகும்.
சித்தர்கள் அன்றே தெளிவாக கூறியிருக்கிறார்கள் “கோதையார் களவின் போதை, கொழுத்த மீனிறைச்சி போதை” என்றால் நிறைய அசைவ உணவுகள், மந்த உணவுகள் எடுத்துக் கொண்டால் இந்த  உணவின் மூலம்  பாலியல் சார்ந்த உணர்வுகள் தூண்டப்பட்டு அதன் அடிப்படையில் அடிக்கடி பாலியல் சார்ந்த உறவுகளில் ஈடுபடும் பொழுது மது மேகம் என்ற நோய்க்கு மனிதர்கள்  ஆட்படுகிறார்கள்       என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
அதே போல் “பாலுடன் நெய்யும், பரிவுடன் உண்பீராகில்” என்பது பாலாக இருந்தாலும் சரி, நெய்யாக இருந்தாலும் சரி அதை அரிசியோடு சேர்த்து எடுக்கும் கால கட்டத்தில் நீரிழிவு கண்டிப்பாக வரும் என்பது சித்தர்களின் கூற்று.  இந்த மதுமேகந்தான் இன்று உலகையே அச்சுறுத்தக் கூடிய நீரிழிவு என்னும் நோயாகும்.. இந்த நீரிழிவு நோய் என்பது இன்று அனைவருக்கும்  பொதுவாகிவிட்டது. நீரிழிவில் மூன்று வகையான நீரிழிவுகளைப் பார்க்கிறோம். குழந்தைகளுக்கு வரக்கூடியது (Juvenile) நீரிழிவு என்று சொல்கிறார்கள் இது முதல் விதம். இரண்டாவது  மருந்துகளால் கட்டுப்படக் கூடிய நீரிழிவாகும்.
மருந்தே இல்லாமல் இன்சுலினுக்கு கட்டுப்படக்கூடிய நீரிழிவு. இது மூன்றாவது விதம். என்று மூன்று விதமான நீரிழிவு இருக்கிறது. சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்து விட்டது என்றால் அவருடைய முழுமையான செயல்பாடுகள் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்து விடும். உடல் மெலிந்து விடும், அடிக்கடி சிறுநீர் கழிக்கக் கூடிய தன்மை இந்த மாதிரி அதன் அறிகுறிகளை கொடுமையாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு கால கட்டம் உண்டு.
இன்று தமிழ் நாட்டில் தமிழ்ச் சமூகம் சந்திக்கக் கூடிய ஒரு பெரிய பிரச்சினை என்ன என்றால் நீரிழிவு நோய், இது ஒரு குறைபாடு தான். இக்குறைபாட்டிலிருந்து நாம் மீள முடியும் என்கிற தன்னம்பிக்கையை இழந்து விட்டு எப்பொழுதும் மருந்துகளையும், மருத்துவர்களையும் தேடி அவர்கள் பின்னாலேயே ஓடக் கூடிய ஒரு நிலையில் தான் தமிழ் மக்கள் இன்று இருக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன என்று பார்த்தால், எவ்வளவோ உணவுப் பொருட்கள் சொல்லப்பட்டிருந்தாலும் நமக்கு அந்த பாரம்பரியமான உணவுப் பொருட்கள்  இந்நோயை கட்டுப்படுத்தக் கூடிய தன்மையில் இருந்தாலும் கூட அந்த உணவுகளை நாம் எடுக்கத் தயாராக இன்று இல்லை.
ஏன் என்றால் நாம் அந்த அளவுக்கு அரிசியை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம். அரிசியிலிருந்து கிடைக்கக் கூடிய Carbohydrates  என்ற மாவுச்சத்து மிகவும் அதிகமாக இருகிறது. இந்த  அரிசியையே  தொடர்ந்து 2 வேளை அல்லது 3 வேளையாகச் சாப்பிடக் கூடிய மக்களுக்கு என்ன ஆகும்? நீரிழிவு தொடர்ந்து உடலிலேயே இருக்க ஆரம்பிக்கிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக அது உணவுகளால் தான் சாத்தியமாகும். இந்த அவசர கால யுகத்தில், உணவுப் பொருட்களில் நிறைய உடனடி உணவுகளைப் (Instant food) பயன்படுத்துகிறோம்.
என்னுடைய நீரிழிவுக்கான மருத்துவ சிகிச்சையின் போது நான் பலரையும் பார்த்திருக்கிறேன், காலை வேளையில் 2 பிரட்டையும், ஒரு கோக், பெப்சி, மிராண்டா போன்ற குளிர் பானத்தை குடிப்பவர்களுக்கு, ஒரு மாதமோ, இரண்டு மாதமோ அல்லது ஆறு மாதமோ இதையே பழக்கப்படுத்திவர்களுக்கெல்லாம் நீரிழிவு வந்திருக்கிறது. எனவே உணவில் நிறைய துரித உணவுகள், ரசாயன உணவுகள் எடுக்கக் கூடியவர்களுக்கு கண்டிப்பாக நீரிழிவு வருகிறது.
 இதை எப்படி தடுக்கலாம், என்றால் மருந்து ஓரளவிற்கு கட்டுப்படுத்தத்தான் செய்யும், ஆனால் முழுமையாக குணப்படுத்திவிடாது. ஆனால் உணவுகளை அடையாளப்படுத்தி, தேர்ந்தெடுத்து சாப்பிடும் பொழுது சர்க்கரை நோயை முழுமையாக நாம் குணப்படுத்த முடியும். அன்றைய சித்தர்கள் சொன்ன மதுமேகந்தான் இன்று உலகையே ஆட்டிப் படைக்கக் கூடிய சர்க்கரை வியாதி.
இந்த சர்க்கரை நோய்க்கான காரணம் என்ன என்றால் அடித்துச் சொல்லலாம் உணவு முறைகளின் முரண்பாடுதான். இது பாரம்பரிய நோய், இது அம்மா அப்பாவுக்கு இருந்தால் நமக்கும் வரும் என்பது உண்மையாக இருந்தாலும் கூட அதைக் கண்டிப்பாகத் தடுக்க முடியும். எனவே அதற்கான உணவுகள் என்னென்ன? அதை எப்படியெல்லாம் நாம் பயன்படுத்தலாம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த . . .
வெந்தயம்:
சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தைப் பிரித்தால் வெந்த + அயம். வெந்த என்றால் பஸ்பமாகி விட்டது என்று அர்த்தம். அயம் என்றால் இரும்பு என்று பொருள். இரும்பை பஸ்பமாக்கக்கூடிய ஒரு பொருள் எது என்றால், அது வெந்தயம் தான். தொடர்ந்து வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் கூட நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
பாகற்காய்:
அடுத்து பாகற்காய். பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும். சர்க்கரை நோய் என்பது தனி நோய் கிடையாது. இது பல நோய்களுடைய சார்பு நோய் ஆகும்.
அதாவது முதலில் நீ செல் பின்னாடியே நான் வருகிறேன் என்று சொல்வது மாதிரி ஒருவருக்கு சர்க்கரை நோய் வர ஆரம்பித்தது என்றால் தொடர்ந்து ரத்த அழுத்தம் வரலாம், கொழுப்பு நோய் ,கொழுப்பு சீரற்ற நிலையில் மாறலாம். ரத்தத்தில் Try Glyceride என்கின்ற கொழுப்பு இருக்கிறது.
அதே மாதிரி LDL என்று சொல்லக் கூடிய கெட்ட கொழுப்பும் இருக்கிறது. இந்த இரண்டும் அதிகமாக மாறும் பொழுது இதயம் சார்ந்த நோயும் வரலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதயம் சார்ந்த நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. சர்க்கரை அதிகமாகி கட்டுப்படாத சூழலினால் சிறுநீரகப் பாதிப்பு சார்ந்த நோயும் வரலாம். இதனால் சிறுநீரக செயலிழப்பு கூட உண்டாகலாம்.
நினைவுத்திறன் குறைந்து போவது, மூளைத்திறன் குறைந்து போவது இப்படி பல நோய்களைக் கொண்டுவரக் கூடிய நோயாக சர்க்கரை நோய் உள்ளது.  நீரிழிவு என்றால் உடலை நீராய் இழக்கச் செய்யக் கூடிய ஒரு வியாதி நீரிழிவாகும். நம் உடம்பில் இருக்கக் கூடிய அனைத்து ஆதாரங்களையும் சிறிது சிறிதாக வெளியே கொண்டு வந்து விடும். அதாவது எலும்பு நம் உடம்பிற்கு வன்மை தரக்கூடியதாக இருந்தால் கூட, அந்த எலும்பையே கரைக்கக் கூடிய தன்மை இந்த நீரிழிவுக்கு உண்டு.
ஆதலால் நீரிழிவை நாம் உண்ணும் உணவின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நம் உடம்பை மென்மையாக்குகிறது. அப்பொழுது நன்றாக உண்ணக்கூடிய உணவுப் பொருட்களைச் சாப்பிட வேண்டும். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், எந்த உணவுப் பொருட்களில் துவர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறதோ அவைகள் நீரிழிவை கட்டுப்படுத்தும்.
வாழைப்பூ:
நீரிழிவு நோயாளி ஒருவர் வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட்டார் என்றால் கண்டிப்பாக நீரிழிவு கட்டுப்படும். ஆனால் வாழைப்பூவில் கடலைப்பருப்பைச் சேர்த்து இன்று நாம் பருப்பு வடையாகத்தான் சாப்பிடுகிறோம். இதே வாழைப்பூவுடன், சிறிது காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து துவையல் மாதிரி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படும்.
தென்னைமரப் பூ:
அதே மாதிரி தென்னம்பாலைக்குள் இருக்கும் தென்னை மரத்துப் பூவை நன்றாகக் காயவைத்து, அதைப் பொடி செய்து காலையிலும், இரவிலும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் சர்க்கரை நோய் கட்டுப்படுவதுடன் சர்க்கரை நோயால் தளர்ந்து போன நரம்புகள் அனைத்தும் சரியாகிவிடும். இதனால் நம் கண் பார்வையும் தெளிவாக இருக்கும்.
நீரிழிவால் நரம்பு பாதிக்கப்படுவதால் கண்ணில் வரக்கூடிய நோய்கள் நிறைய வரும். அதே போல் நம் பாதங்களிலும் பல நோய் வரும். இவை அனைத்தையும் சரி செய்யக் கூடிய தன்மை தென்னம்பாலைக்குள் உள்ள தென்னைமரத்துப் பூவுக்கு உண்டு.
நெல்லி, கடுக்காய், தான்றிக்காய் :
அது போல் நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இதையும் சம அளவில் கலந்து வைத்துத் தொடர்ந்து திரிபலா என்கிற சூரணத்தையும் சாப்பிடும் பொழுது நீரிழிவு முழுமையாகக் கட்டுப்படக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. அதே போல் இந்த சர்க்கரை நோய்க்கு என்ன செய்யலாம் என்றால், சமையலில் சீரகத்திற்குப் பதிலாக அல்லது சீரகத்துடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து சமையலில் ஈடுபடுத்தும் பொழுது சர்க்கரைக்கு அற்புதமான ஒரு மருந்தாக இருக்கும்.
அதே போல் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு ( Try Glyceride) அதாவது இதயத்திற்கு செல்லக் கூடிய ரத்த நாளங்களில் அடிக்கக் கூடிய ஒரு கொழுப்பு ட்ரை க்லீசரைடு. உலகம் முழுக்க அதற்கான மருந்துகள் குறைவு. அந்த மருந்துகளை உபயோகப்படுத்தினால் அதற்கான பக்கவிளைவுகள் அதிகம். இதை முழுமையாக சரி செய்ய நம் நாட்டு கருவேப்பிலை, லவங்கப் பட்டை, வெந்தயம் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக அற்புதமான பலன் கிடைக்கும்.
அன்றைய மது மேகத்தில் சித்தர்கள் சொன்ன உணவுகள் எல்லாம் இதுதான். சித்தர்களுடைய விஞ்ஞான பார்வைக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்லாம். அதாவது அன்றைய காலத்தில் மதுமேகம் வந்த நோயாளிகளுக்கு சித்தர்கள் கொடுத்த மருந்து பருத்தி கொட்டை, எள்ளுப் புண்ணாக்கு, கோரைக் கிழங்கு, ஆவாரம்பூ போன்றவைகளையே மருந்தாகக் கொடுத்தனர். என்ன இது எருமை மாடு சாப்பிடுவதை மருந்து எனச்சொல்கிறாரே என்று நினைத்தால் அது தவறு.
இந்த உலகத்தில் நீரிழிவு என்ற நோய் பரவத்தொடங்கிய போது இன்சுலின் குறைபாடு உள்ளவர்களுக்கு  மாத்திரையால் ஒரு சிலருக்கு சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இன்னும் ஒரு சிலருக்கு மாத்திரை பலன் கொடுக்க வில்லை. அப்போது என்ன செய்தார்கள் என்றால் பன்றிகளுடைய கணையம், எருமை மாட்டுடைய கணையம்  இந்த இரண்டு கணையத்திலிருந்து இன்சுலின் நுண்ணுயிர் எடுக்கப்பட்டு அது மனிதருக்கு ஏற்புடைய வகையில் இன்சுலினாக மாற்றப்பட்டு அதன் பிறகு, அதை மனிதர்களுக்கு மருந்தாகச் செலுத்தினார்கள்.
இப்பொழுது DNA கூட்டமைப்பு உள்ள human Insulin இன்று உலகம் முழுக்க வந்துவிட்டது. ஆனால் அதற்கு முன்பு கோரைக் கிழங்கையே பிரதானமாகச் சாப்பிடக் கூடிய பன்றிகளின் கணையத்திலிருந்து இன்சுலின் எடுக்கப்பட்டது, பருத்திக் கொட்டையையும், எள்ளுப் புண்ணாக்கையும் சாப்பிட்ட எருமை மாட்டுக் கணையத்திலிருந்து இன்சுலின் எடுக்கப்பட்டது. இதில் ஒரு ஆச்சர்யம் என்றால் சித்தர்களுக்கு எவ்வாறு இது தெரிந்தது என்று தெரியவில்லை. ஏன் என்றால் பிரதானமாக பருத்திக் கொட்டையிலேயும், கோரைக் கிழங்கிலேயும், எள்ளுப் புண்ணாக்கிலேயும் இன்சுலின் அளவு அப்படியே இருக்கிறது. அதில் உள்ள கந்தகச் சத்து அப்படியே வரும். நம் உடம்பில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்- ஐ முழுமையாகக் கரைக்கக் கூடிய தன்மை இதற்கு உண்டு.
அதனால் தான் இன்றும்  எனது கிராமத்தில் சர்க்கரை நோய் என்று கூறினால் யாரும் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுபவர்களை பார்க்கவே முடியாது. மிக எளிமையாக அரைக் கிலோ எள்ளு புண்ணாக்கு, அரை கிலோ பருத்திக் கொட்டை, அரை கிலோ ஆவாரம்பூ , 100 கிராம் கருஞ்சீரகம் இவற்றை உரலில் இட்டு இடித்து வைத்துக் கொள்கிறார்கள். இதில் ஒரு கையளவு எடுத்து சிறிது கருப்பட்டி, பனைவெல்லம் சேர்த்து இக்கலவையை நன்கு கொதிக்க வைத்து, அதை நன்றாக வடிகட்டி காலையிலேயும், இரவிலேயும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் தானாகவே சரியாகிவிடும்.
சர்க்கரை நோய் வந்தவர்கள் எந்த மருந்தை எடுத்தும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். அதற்குத் தகுந்த மாதிரி உடலில் வியர்வை உண்டாக்க வேண்டும். அதுதான் பிரதானமானது. நாம் சிறிது நடைப்பயிற்சி கூட செய்யாமல் இருப்பதனால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு இலகுவான நடைப்பயிற்சி, உடலை வருத்திச் செய்யக் கூடிய சில வேலை இவற்றையெல்லாம் செய்து வியர்வையை உண்டாக்கிக் கொள்ளவேண்டும். குறைந்தது 50 மில்லி அளவாவது சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்வை வர வேண்டும்.
இதில் இன்னும் பெரிய விசயம் என்னவென்றால் நீரிழிவால் வரக்கூடிய  கால் புண்ணானது குழிப் புண்ணாக மாறிவிடும். அந்தப் புண்ணுக்கு ஆங்கில மருத்துவத்தில் டின்ஜர், டெட்டால், மற்றும் சில மருந்துகளையும் சேர்த்து குணப்படுத்துகிறோம் பேர்வழி என்று சொல்லி, பிறகு காலையே வெட்டக் கூடிய ஒரு நிலை வருகிறது. கிராமங்களில் வெறும் ஆவார இலையை அவித்து அந்த புண்ணில் வைத்து கட்டுகிறார்கள். அதன் பின் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் அப்புண் குணமாகி விடுகிறது அவ்வளவு அதிசயமான விசயம் எல்லாம் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.
சர்க்கரை நோயில் ஆவாரம்பூவிற்கு ஒரு பிரதானமான இடம் இருக்கிறது. அதில் தங்கத்தின் சத்து இருப்பதாக சித்தர்கள் கூறுகிறார்கள். ஆனால் இன்றைய விஞ்ஞானம் இப்பூவை ஆராய்ச்சி செய்து பார்க்கும் பொழுது அதில் தங்கத்தின் கூறுகள் இருப்பதை ஒத்துக் கொள்கிறது. ஆவாரம்பூ இந்நோய்க்கு அவ்வளவு அற்புதமானது. அதனால்  சித்தர்கள் கூறுவார்கள் “ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ” என்று. இந்த ஆவாரையைத் தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு சாவே இல்லை என்று கூறுகிறார்கள். சர்க்கரை நோயில் அது முழுக்க முழுக்க உண்மை.
இன்று சர்க்கரை நோய்க்கு இனிப்புத் துளசி சாப்பிடுபவர்கள் நிறைய நபர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் ஆவாரம் பூவை தேநீராகச் சாப்பிடும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படுவதை  நாங்கள் கண் கூடாக காண்கிறோம். சத்தாகச் சாப்பிடுங்கள் சர்க்கரையைக் கட்டுபடுத்துங்கள்  என்று நாங்கள் கூறுகிறோம். உணவை கட்டுப்படுத்தும் பொழுது அந்த உணவின் ஊட்டமேல்லாம் குறைய ஆரம்பிக்கிறது. ஆக தேர்ந்தெடுத்த உணவை நாம் எடுக்கும் பொழுது நல்ல முழுமையான பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் இவற்றை தொடர்ந்து கொதிக்கவைத்து கசாயமாகச் சாப்பிடும்பொழுது சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும்.இது  மிக எளிமையான வழிமுறைஆகும். தேநீர் சாப்பிடக் கூடிய அதே சுவை இதிலேயும் இருக்கும். ஆவாரம்பூ தேநீர் சாப்பிட்டுப் பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். இன்னும் சர்க்கரை நோய்க்கு  சிறுகுருஞ்சான், நாவல் கொட்டை, மருதம்பட்டை, வேப்பம்பட்டை, கடலலஞ்சில் இவை ஐந்தையும் சம அளவு கலந்து, பொடி செய்து வைத்துகொண்டு காலை, இரவு நேரம் தொடர்ந்து சாப்ப்பிட்டுக் கொண்டு வந்தால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலன் இருக்கும்.
நீரிழிவு என்றால் உடம்பை  மென்மைப் படுத்தக் கூடிய ஒரு வியாதி ஆகும், அந்த நீரிழிவைக் கட்டுப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் உடம்பு நல்ல சக்தி பெரும். நீரிழிவு நோயாளிகள் உடம்பில் அதிகம் நீர்ச்சத்து இழக்காமல், தண்ணீர் தாகம் அதிகம் இல்லாமல், நாவு வறட்சி இல்லாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும். நாம் மேலே கூறிய உணவுகளை எல்லாம் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
நாம் உணவில் நிறைய பிஞ்சுக் காய்கறிகளான முருங்கைப் பிஞ்சு, பீர்க்காய்ப் பிஞ்சு , புடலங்காய்ப் பிஞ்சு, பீன்ஸ், அவரை இவை அனைத்தையும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வாருங்கள். இன்று இருக்கும் அலோபதி மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளிடம் கேரட் சாப்பிடாதீர்கள், அது சர்க்கரை நோய்க்கு நல்லதில்லை என்று கூறி வருகிறார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதனால் 10 வருடமோ அல்லது 15 வருடமோ கேரட்டையே சாப்பிடாத சக்கரை நோயாளிகள் எனக்கு தெரிந்து நிறைய பேர் இருக்கிறார்கள். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது.
இதில் பீட்டா கரோடினாய்ஸ் எனும் ஊட்டச் சத்து இருப்பதனால் நம் தோல் பகுதிக்கு கீழ் இருக்கக் கூடிய தசை பகுதியில் சக்தியை சேர்த்து வைக்கக் கூடிய தன்மை கேரட்டிற்கு உண்டு. அதனால் தாராளமாக நீரிழிவு நோயாளிகள் கேரட்டைச் சாப்பிடலாம் தவறில்லை.
 அது போல் தமிழ் நாட்டில் இருக்கக் கூடிய ஆங்கில மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை பார்த்து இளநீர் சாப்பிடாதீர்கள் என்று கூறி திசை திருப்புகிறார்கள். இளநீர் சாப்பிட்டால் கண்டிப்பாக நீரிழிவு அதிகமாகிவிடும் என்று கூறி நோயாளிகளைப் பயமுறுத்துகிறார்கள். இது தவறான செயலாகும். நான் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன், கரும்புச் சாற்றிலிருந்து சர்க்கரை தயார் செய்யலாம், இளநீரிலிருந்து சர்க்கரை தயார் பண்ண முடியுமா? இதை யோசித்து பாருங்கள். இளநீரில் அத்தனை கால்சியமும் இருக்கிறது. அச்சத்தில் புண்களை ஆற்றக் கூடிய தன்மை இருக்கிறது. ஒரு தட்டுச் சாப்பாட்டில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்ஸ் இளநீரில்கிடையாது.
அதனால் என்னைப் பார்க்க வரும் நோயாளிகளுக்கு நான் கூறுவது, இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிடுங்கள் என்கிறேன். அப்படிச் சாப்பிட்டால் சர்க்கரை முழுமையாகக் கட்டுப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. அதே மாதிரி மருதம்பட்டையைக் கசாயம் செய்து தொடர்ந்து சாப்பிடும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
நாம் உண்ணும் உணவில் பல்வேறு உணவுகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் திணிக்கத் தயாராகி கிட்டத்தட்ட 17 வகையான நூடுல்ஸ்சில் அதிக பொட்டாசியம் சத்து ,  அதிக சோடியம் சத்து ஆகியவை   அதிகமாக இருக்கிறது கூவிக் கூவி விற்பனை செய்து நம்மை வாங்க வைக்கிறது.  இதை இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, இந்த பன்னாட்டு உணவுகள் உண்பதற்கு ஏற்ற உணவுகள் அல்ல, இவைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஆதாலால்  இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னால் கூட, இவைகளை  நிறுத்துவதற்கு எந்த அரசும் தயாராக இல்லை. ஏன் என்றால் பன்னாட்டு நிறுவனங்கள் கொடுக்கக் கூடிய மிகைமிஞ்சிய  வரியே இதற்குக் காரணம் ஆகும்.
 இந்தத் தொகை பெரிய தொகையாக ஆளுகின்றவர்களுக்கு தெரிவதால் மக்களுடைய அடிப்படை ஆரோக்கியத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாத ஒரு சூழல் இருக்கிறது. ஆக ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கான விழிப்புணர்வை அவன்தான் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கு உணவுக் கட்டுப்பாடு என்பது கண்டிப்பாக வேண்டும். உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டிய விசயமும் நம் கையில் தான் இருக்கிறது.
சித்தர்கள் சொன்ன சிறு தானியங்கள் வரகரிசி, திணை அரிசி, குதுரவாலி, சாமை எல்லாமே நார்ச்சத்து உள்ள அற்புதமான உணவுகள். இந்த உணவுகளை ஒரு வேளையோ, இரு வேளையோ சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடும் பொழுது நோய் கட்டுப்படக் கூடிய ஒரு தன்மை உண்டு. சர்க்கரை நோய் வந்து விட்டாலே உடலில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணச்சத்து இவைகள் குறைந்து விடும். இவற்றை ஈடுகட்ட துவர்ப்பான உணவுகளை எடுத்துக் கொண்டால் சர்க்கரையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.
இந்தியாவானது இன்று உலகத் தாயாரிப்புகளை விற்கும் பெரும் வணிகச் சந்தையாக, வளர்ந்த நாடுகளுக்கென மாறிவிட்டது. அதனால் தான் இங்கு நோய் மறைமுகமாக விதைக்கப்படுகிறது. அந்த நோய்களை இங்கு விதைத்து, மறைமுகமாக இங்குள்ள நிதி ஆதாரங்கள் கொள்ளயடிக்கப்படுகிறது. எனவே நாம் தான் நுகர்ர்வுப் பொருட்களை வாங்கும் பொது மிகக்கவனமாக இருக்க வேண்டும்.
2007 கணக்குப்படி இந்தியாவில் சர்க்கரை வியாதிக்கான வணிக மதிப்பு 700 கோடி. அமெரிக்காவின் எலிலில்லி என்ற நிறுவனம் தயாரிக்கின்ற மருந்துகள் இங்கு மட்டும் 700 கோடி ரூபாய்க்கு விற்பனையாகக் கூடிய வணிகச் சந்தையாக நம் நாடு இருக்கிறது.. இது இன்று கிட்டத்தட்ட 1000 கோடியைத் தாண்டி சென்றிருக்கும். அதனால் நம்முடைய நிதி ஆதாரங்கள் கொள்ளயடிக்கப்படாமல், நம்முடைய நாடு வளமையான நாடாக மாற வேண்டும் என்றால்,நாம் நல்ல உடல் நலத்தோடு, உடல் வளத்தோடு  இருக்க வேண்டும்.
அவ்வாறு மாறும் பொழுதுதான் ஒரு முழுமையான, ஒரு ஆரோக்கியமான இந்தியாவை, ஒரு ஆரோக்கியமான தமிழ்ச் சமூகத்தை நாம் படைக்க முடியும். எப்பவுமே நோய்வாய்ப்பட்டவனிடம் படைப்பாற்றல் குறைந்து விடும். ஒரு நல்ல ஆற்றல் உள்ள, படைப்புத்திறன் உள்ள தமிழ் சமூகம் மறுபடியும் வரவேண்டும், வளரவேண்டும் என்றால் சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டும்.
அவ்வாறு கட்டுப்படுத்துவதற்கு உணவே மருந்து மருந்தே உணவு என்ற சித்தர்கள் கோட்பாட்டின் படி அனைவரும் முயற்சி செய்யவேண்டும். நான் கூறிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உணவே அடிப்படையாகக் கொண்ட மருந்துப் பொருட்கள் எல்லாவற்றையுமே தொடர்ந்து சாப்பிடுங்கள். அடுத்த முறை சிறகு இணைய இதழில் சர்க்கரை நோயினால் வரக் கூடிய சார்பு நோய்கள் பற்றி விரிவாக எடுத்தியம்ப இருக்கிறேன்.
சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு ஆஸ்துமா, இதய நோய், சிறுநீரக நோய் ஆகிய நோய்களும் துணை நோய்களாக இருக்கிறது. அதனால் இந்த  சார்பு நோயைப் பற்றி இன்னும் விளாவரியாக அடுத்த கட்டுரையில் பார்ப்போம். நான் மறுபடியும் உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். நன்றி, வணக்கம்.

சர்க்கரை நோய் உடன்வரும் சார்பு நோய்கள் விளக்கம் – சித்த மருத்துவர் அருண் சின்னையா

சிறகு இணைய இதழ் வாசகர்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. சென்ற இதழில் சர்க்கரை நோய் எந்த அளவு நம் மக்களைப் பாதிக்கிறது? அதனால் எவ்வளவு உடல் நலப் பிரச்சனைகள் வருகிறது? என்று அதைப்பற்றிப் பொதுவாகப் பார்த்தோம். இந்த நீரிழிவு வியாதி வருவதற்கான காரணம் உணவுகள் தான் என்று முன்பு பார்த்தோம். இது முழுக்க முழுக்க உண்மை ஆகும்.
அந்தக்காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய உணவு என்பது மிக ஊட்டச்சத்துள்ள உணவுகளாக இருந்தன. அது போல் உணவுகளுக்குத் தகுந்த உழைப்பு அன்று இருந்தது. இன்று பற்பல இயந்திர வருகைக்குப் பின் உடல் உழைப்பு என்பது வெகுவாகக் குறைந்து போய், இன்று மூளைக்கு வேலை கொடுக்கும் அளவில் பணிகள் மாறிப்போனதால் உணவின் மூலம் பெறப்பட்ட கலோரித் திறனை எரிக்கக்க்கூடிய தன்மை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்து போய் விட்டது.
அதுபோல் ருசியை அடிப்படையாகக் கொண்டு உணவுகள் தயாரிக்கப்படுவதும், ருசியின் அடிப்படையிலேயே இன்று உணவுகளை உண்பதுமான சீரழிவு நம்மிடையே புகுத்தப்பட்டதின் விளைவால் நம்மால் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து உண்ண முடியாத சூழல் உருவாகிவிட்டது. அதில்லாமல் இன்று எதுவெல்லாம் சுவையாக இருக்கிறதோ அதை மட்டும் சாப்பிடுவதால் இன்று நீரிழிவு என்பது இந்தியாவிலேயே தமிழகத்தில் முதலிடம் எனக் கூறக்கூடிய அளவிற்கு அபாரமாக வளர்ந்து இன்று ஒவ்வொரு மனிதனையுமே நடைப்பிணமாக மாற்றக் கூடிய அளவிற்கு மாறிவிட்டது.
ஒரு காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது கிராமங்களில் பார்ப்பது மிக அரிதாக இருக்கும். இன்று அந்தக் கிராமங்களுக்கு அருகில் இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகிலேயே மாதக்கணக்கில் மருந்து வாங்கக் கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகரித்து விட்டது. இதற்கான காரணம் என்னவென்று பார்க்கும்போது நகர்ப்புறத்தில் எடுக்கக் கூடிய உணவுகளையே இன்று கிராமத்து மக்களும் எடுத்துக்கொள்வதால், நகர்ப்புறத்திற்கு இணையான நோயும் நொடியும் பல்கிப்பெருகி விட்டது. அதன் விளைவாக இன்று தமிழ்நாட்டில் உடல் நலம் பெற்ற, வீரம் செறிந்த இளைஞர்களைப் பார்ப்பது மிக அரிதாகி விட்டது.
என்னென்றால், சமீபத்தில் சர்க்கரை நோய் ஒரு பக்கம் பாதிப்பை ஏற்படுத்தியது என்றாலும் இன்று இதயநோயின் பாதிப்பு தமிழகத்தில் அதிகம் இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று பார்க்கும் போது பெரும்பாலும் இதயநோய் தனியாக வருவதில்லை. உடல் நலம் என்பது ஒழுங்காக இருக்கும் பட்சத்தில், ரத்தம் கெட்டுப்போகாத நிலையில் இருக்கும் போதும், கல்லீரல் ஒழுங்காக வேலை செய்யும் போதும், சிறுநீரகம் சரியாக வேலை செய்யும் போது இதயம் சார்ந்த பிரச்சனைகள் எதுவும் வருவது கிடையாது.
அதுபோல் இதயநோய் என்பது ஒரே நாளில் உருவாகி விடுவதும் கிடையாது. பெரும்பாலும் பார்த்தோம் என்றால் சர்க்கரை நோய் இருக்கக் கூடிய நோயாளிகளுக்கு, இந்த நோயினால் பாதிப்பு அதிகமானால் இதன் சார்பு நோயாக இதய நோய் வரும். சர்க்கரை நோய் வந்தால் உணவுக்கட்டுப்பாடு வேண்டும். ஆனால் ஒரு நோய் வந்த பின்புதான் எதுவெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறோமோ அதை எல்லாம் சாப்பிடக்கூடிய எண்ணம் இங்கு அனைவருக்கும் இருக்கிறது.
சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு நிச்சயமாக இதய நோய் வருவதற்கான கூறுகள் அதிகம் உள்ளது. இதற்கான காரணம் என்னவென்றால் சர்க்கரை நோய் வந்துவிட்டது என்றால் ஒரு சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது நம் உணவில் மாவுச்சத்து, கார்போஹைட்ரேட் அளவை முழுமையாகக் குறைக்கும் போதுதான் இது மற்ற பரிமாணமாக மாறாது.
அதிகபட்ச மாவுச்சத்தை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடும் போது நம் உடல் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்து விடும். இதை ”லிபிட் புரோபைல்“ என்று கூறுவார்கள். அந்த லிபிட் புரோபைலில் டிரை கிளிசரைட்ஸ் என்ற சத்து அதிகமாகி விடும். ஒரு மனிதனுக்குச் சராசரியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டிய டிரை கிளிசரைட்ஸ் அளவு 150 –க்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த 150 அளவை விட அதிகமாக மாறும் போதுதான் இதயத்திற்குச் செல்லக் கூடிய ரத்தக்குழாய்களில் இந்தக் கொழுப்புப் பரிமாணம் அதிகமாகி இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
ஆக சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு ஒரு கட்டத்தில் கண்டிப்பாக இதயநோய் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதனால் எச்சரிக்கையாக உணவு விசயத்தில் இருக்க வேண்டிய காலம் இது. சர்க்கரை நோய் வந்தது என்றால் இந்த நோயை மட்டுமே கட்டுப்படுத்துவது பிரச்சனை இல்லாமல் இருக்கும். சர்க்கரை நோயின் சார்பு நோய்கள் என்று பார்க்கும் போது இதயநோய்க்குத்தான் முதலிடம்.
அடுத்து சிறுநீரக நோய், கல்லீரல் நோய், கண்பார்வைக் கோளாறு, பாத நரம்புகள் மரத்துப்போவது, அதாவது கேங்கரின் என்று சொல்லக்கூடிய புண் காலில் வரும். அதன் பின் கண்ணில் ஹைப்போ கிளேசீமியா என்ற நோய் வரும். ஆக இந்தப் பிரச்சனை எல்லாம் சர்க்கரை நோயினால் வரக்கூடியது. சிலருக்கு இந்த சர்க்கரை நோயினால் மேலும் பக்கவாதம் வரலாம், ரத்த அழுத்தம் வரலாம். இவ்வளவு நோய் வரும் எனக் கூறுவது உங்களை பயமுறுத்துவதற்காக அல்ல. நம்மை முன்னெச்சரிக்கையாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தே இதைக்கூறுகிறேன். ஆக உணவுகளை ஒழுங்கு செய்தால் இந்தப் பிரச்சனைகளை நாம் சரி செய்யலாம்.
ஒரு வேளை சர்க்கரை நோய் வந்தவருக்கு இதயநோய் வந்துவிட்டது என்றால் அப்போது சர்க்கரை நோயாளி எப்படி எல்லாம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்? என்பதைப் பார்ப்போம். இன்று தமிழகத்தில் எதையும் தாங்கும் இதயத்தோடு இருந்த தமிழர்களுக்கு இதயநோய் வந்துவிட்டது என்றால் கூனிக்குறுகி வீட்டிலேயே முடங்கக்கூடிய சூழலை இன்றைய மருத்துவ உலகம் உருவாக்கி வைத்திருக்கிறது என்றே கூற வேண்டும்.
ஏன் அப்படி என்றால், இதய நோய் வந்தவர்களுக்கு ரத்தத்தில் அதன் அடர்த்தி சீராக இருக்க வேண்டும் என்பதற்காக சில ஆங்கில மருந்துகளை, வாய்வழி மருந்துகளை கொடுத்துப் பழக்கப்படுத்திவிடுகிறார்கள். இன்றைய கால நவீன மருத்துவர்கள் இதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது உணவின் அவசியத்தை எடுத்துக் கூற வேண்டும். உணவின் அவசியத்தை எடுத்துக்கூறாமல் இட்லி, பொங்கல், பூரி, எண்ணெயில் வறுத்ததைச் சாப்பிடலாம். ஆனால் நாங்கள் கொடுத்த மருந்தை எல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று கூறிவருகிறார்கள்.
ஒரு நோய் ஒரு மனிதனுக்கு வருகிறது என்றால் கண்டிப்பாக உணவு ஒவ்வாமையால் மட்டும் வருமே தவிர வேறு எதனாலும் வரக்கூடிய வாய்ப்புகள் மிகக் குறைவு. அதற்கடுத்து மருந்துகளினாலும் சில நோய்கள் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அது என்னவென்றால் உணவுக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இதயநோயாளிக்கு சிகிச்சை அளிப்பது கூடாது. உணவைப் பிரதானப்படுத்தி மருந்தின் அளவைக் குறைக்கும் போது இதய நோய்களைச் சரி செய்ய முடியும். அதனால் சர்க்கரை நோய் வந்து  இதயநோய்க்கு ஆட்பட்ட அன்பர்கள் கண்டிப்பாகத் தங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
இதற்கு என்ன மாதிரியான உணவுகள் எடுக்கலாம் என்று பார்க்கும் போது தினசரி ஒரு கீரையை இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். கீரைகளில் நல்ல நார்ச்சத்து இருக்கிறது. இது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். அது போல் இந்தக் கீரைகளில் “குளோரோபில்” என்று சொல்லக்கூடிய ஒரு சத்து உண்டு. இச்சத்து இதயநோயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. அதற்காக இதய நோய் வந்துவிட்டது என்றால் நிறைய மருந்துகள் எடுக்க வேண்டும். இந்த மருந்துகள் எடுத்துக்கொண்டு மருந்து கூடவே அடிமைத்தனமாய் வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நம் உடலுக்கு நோய் என்று வந்த பின்பு பகுத்துப் பார்க்கக் கூடிய தன்மை நமக்கு வரவேண்டும். நமக்கு நாமே இதைச் சுய பகுப்பாய்வு செய்து பார்த்தோமானால் மருந்துகளிலிருந்தும், மருத்துவர்களிடமிருந்தும் நிச்சயமாக விடுதலை பெறலாம். அதற்காகத்தான் நாம் நிறைய உணவுகளைப் பற்றியே பேசுகிறோம். அதனால் இதய நோயாளிகளுக்கு நாம் பட்டியலிடக் கூடிய தமிழர் உணவுகள், தமிழர்கள் பயன்படுத்திய சித்தர், உணவியல் மருந்துகள் என்னென்ன? என்பதைப்பற்றி இனி பார்ப்போம்.
நம் இதயம் எப்போதுமே உணர்ச்சிகரமானது, மிகவும் மென்மையானது, எந்த அதிர்ச்சியையும் தாங்க முடியாத நிலை கொண்டதே இதயம். அதனால்தான் மன உளைச்சல், மன அழுத்தம், இருந்தால் முழுமையாக பாதிக்கப்படுவது இதயமே. நல்ல நண்பன் நமக்குத் துரோகம் செய்தாலோ, குடும்பச்சிக்கலினாலோ, எதிர்பாராத தோல்விகளினாலோ, முழுமையாகப் பாதிக்கப்படக்கூடிய உறுப்பு எதுவென்றால் இதயம் தான். அவ்வளவு உணர்ச்சிமிக்க இதயத்திற்கு, சித்தர்கள் உணர்ச்சிவசமான மருந்துகளை அந்தந்தக் காலத்திலேயே கூறியிருக்கிறார்கள்.
அந்த மருந்துகள் என்னவென்றால் ‘மான்கொம்பு பஸ்பம்’ என்ற ஒன்று உண்டு. தவிர “சிறுங்கி பஸ்பம்” என்றும் உண்டு. இந்த சிறுங்கி பஸ்பமானது  மானின் கொம்புகளில் இருந்து எடுக்கக்கூடிய மருந்தாகும். அதாவது மானின் கொம்பை நறுக்கி இதனுடன் அகத்திக்கீரைச்சாற்றைப் போட்டு நன்கு அரைத்து துவையல் மாதிரி செய்து, இதை ஒரு மண்பானையில் வைத்து, இந்த மண்பானை மேல் ஒரு மண் பானையை கவிழ்த்து, இதைத் துணியால் நன்கு சுற்றி, சாண எருவை அடுக்கிய பின் இதில் அப்பானையைப் புடம் போடுவர். இதன் பின் உள்ளிருக்கும் மான்கொம்பு பஸ்பமாக மாறிவிடும். இது சித்த மருத்துவத்தில் உள்ள மிக அருமையான ஒரு மருந்து சிறுங்கிப் பஸ்பமாகும்.
மான்கொம்பில் இருக்கக்கூடிய சுண்ணாம்புச்சத்தை (கால்சியம்) மருந்தாக மாற்றி உடலில் இருக்கும் சூட்டைத் தணிக்கும் அகத்திக்கீரையால் அரைத்து இதை மருந்தாக மாற்றி தினசரி இரண்டு வேளை சிட்டிகை அளவு காலை, இரவு வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, ஒரு முழுமையான பலன் கிடைப்பதோடு இதயம் பலம் பெரும் என்று சித்தர்கள் கூறிச்சென்றுள்ளனர்.
ஏன் மாட்டுக்கொம்பில் சித்தர்கள் பஸ்பம் செய்திருக்கலாம் அல்லது பிற மிருகங்களின் கொம்புகளில் இருந்து சித்தர்கள் இதைச் செய்திருக்கலாமே! ஏன் மான்கொம்பில் செய்தார்கள்? என்று நீங்கள் நினைக்கலாம். இந்த மானை ஏன் சித்தர்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் மான் ஒரு உணர்ச்சிப் பூர்வமான விலங்கு. ஆபத்து நேரத்தில் மிக வேகமாய் ஓடக்கூடிய தன்மை உண்டு. ஆனால் இந்த மானை ஒரு இடி இடித்தால் கூட சில வேளைகளில் இறந்துபோகும் வாய்ப்பு உண்டு. அதனால் இந்த உணர்ச்சியுள்ள மானின் கொம்பில் உள்ள சுண்ணாம்புச்சத்தை எடுத்து இதயத்தை வலுவாக்குவதற்காக சித்தர்கள் பஸ்பமாக மாற்றிக் கொடுத்தார்கள்.
இன்று நவீன ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட ஒரு முறை என்னவென்றால் இதயத்தைத் தாங்கியிருக்கக்கூடிய, அதாவது இதயத்திற்கு வெளிப்புறமாக இருக்கக்கூடிய, பெரிக்கார்டியம் என்று சொல்லக்கூடிய இதய உறையானது பழுதுபடாதவரை இதயத்திற்கு எந்தப்பாதிப்பும் கிடையாது. இந்தப் பெரிக்கார்டியம் என்பது முழுக்க முழுக்க சுண்ணாம்புச்சத்தால் நிறைந்த ஒரு உறுப்பு. அதனால் இந்தப் பெரிக்கார்டியத்தைப் பாதுகாக்கக்கூடிய தன்மை எதற்கென்றால் மானின் கொம்புகளுக்கு உண்டு. அதனால் சிறுங்கிப் பஸ்பம் என்பது இன்றைக்கும் உலகளாவிய அளவில் சித்தமருத்துவத்தை, சித்தஉணவியல் மருத்துவத்தை முழுமையாக நம்பக்கூடிய நம் தமிழர்கள் நிச்சயமாக அருந்தி வருகிறார்கள்.
இது கூடவே சித்த மருத்துவத்தில் ‘ஏலாதி சூரணம்’ என்பர். ஏலாதி என்றால் ஏலக்காயைப் பிரதானப்படுத்திப் பண்ணக்கூடிய ஒரு சூரணமாகும். இந்த ஏலாதி சூரணத்தையும், சிறுங்கிப் பஸ்பத்தையும் வைத்துச் சாப்பிடும் போது எப்படிப்பட்ட இதய நோயாக இருந்தாலும் முழுமையாகக் குணமாகிறது. தற்போது எடுத்ததெற்கெல்லாம் ஆஞ்சியோ பண்ணுவது, பைபாஸ் சர்ஜரி பண்ணுவது இதெல்லாம்விட, சுயமாக நம்மை நாமே பரிசோதித்துக் கொண்டால் பல மருந்துகளை நாம் தவிர்க்க முடியும்.
ஆகையால் தான் நம் இதயம் மிக உணர்ச்சிப்பூர்வமான உறுப்பாகும். அப்போது அறிவானது எது என்று பார்த்தோமானால் உலகத்தில் மலர்ந்து கிடக்கின்ற அத்தனை மலர்களும் உணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடியது. ஒரு அழகான மலர் பூத்துக்குலுங்கினால் “வா என்னைப் பார்” எனச் சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கும். ஒரு நந்தவனத்தில் நாம் நடந்து செல்லும் போது பல மலர்களைக்கண்டு நாம் இதமாகிப் போகிறோம். அதனால் இந்த பூக்களே மருந்தாகும் பொழுது இதயம் வலுவடையும் எனச் சித்தர்கள் அறிந்தனர்.
இதனால் சித்தர்கள் கமலம் என்று அழைக்கக்கூடிய தாமரைப் பூவை இதய நோய்க்குத் தேர்ந்தெடுத்தனர். இந்தத் தாமரைப்பூவிலிருந்து செய்யக்கூடிய கசாயமானது இதயத்தை வலுப்படுத்தும். தவிர ஆவாரம் பூ, ரோஜாப்பூ தாமரைப் பூ, செம்பருத்திப் பூ இந்த நான்கு பூக்களையும் சம அளவு எடுத்து அதாவது 50 கிராம் அளவு எடுத்து இதனுடன் 10 கிராம சுக்கு, 10 கிராம் ஏலக்காய் சேர்த்து தினசரி டீத்தூள் போல செய்து சாப்பிட்டோம் என்றால் இதயம் வலுவாகும்.
இந்தப் பூக்களிலும் சுண்ணாம்புச்சத்து  எனச் சொல்லப்படும்  கால்சியம் உண்டு. எப்போதுமே ஒரு மனிதனுக்குப் போதுமான அளவு கால்சியம் இருந்தால்தான் அவர்கள் முகத்தில் ஒரு சிரிப்பைப் பார்க்க முடியும். இந்தச்சத்து குறைவானால் சிரிப்பு சுருங்கிவிடும் என கிராமங்களில் கூறுவர். உடலில் உள்ள எலும்பு தனது வன்மையை இழந்துவிட்டது என்றால் நிச்சயமாக மனிதனின் மகிழ்ச்சி குறைந்து விடும். அதனால் மனிதர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் இருக்க வேண்டும். அதே நேரம் இதயம் நன்றாக இருக்க வேண்டும். இதயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இதயத்தைச் சுற்றி உள்ள சுண்ணச்சுவர் நன்றாக இருக்க வேண்டும். இந்தச் சுண்ணச் சுவரை ஒழுங்குபடுத்தக்கூடிய தன்மை பூக்களுக்கு உண்டு. அதனால் இந்தக் கசாயத்தைத் தொடர்ந்து சாப்பிடும்பொழுது அற்புதமான பலன் கிடைக்கும்.
அதனால் பூக்களிலிருந்து கிடைக்கக் கூடிய சுண்ணாம்புச் சத்தால் இதய உறை பாதுகாக்கப்படுவதால் இதயம் வலுவடையும். எந்த ஒரு மனிதனுக்கு இதயவலு இருக்கிறதோ அவனால் தான் தீர்க்கமான சிந்தனையைப் பெற முடியும். இந்த தீர்க்கமான சிந்தனையைச் செயல்முறைப்படுத்தினால் அதற்கு இதயவலு கண்டிப்பாக வேண்டும். அதற்காக இதயத்திற்கு வலு சேர்க்கும் உணவுகளில் பூக்களுக்கு முக்கியப்பங்கு உண்டு. பண்டைய தமிழர்கள் உணவில் பார்த்தோமென்றால் செம்பருத்திப்பூ பருப்புக்கஞ்சி உண்டு.  செம்பருத்திப்பூ  இதயத்திற்கு நல்லது என்று இன்றைய நவீன விஞ்ஞானம் ஒத்துக்கொண்டுள்ளது. அதனால் இந்த செம்பருத்திப் பூவையும், சிறு பருப்பையும், அரிசியையும் போட்டு பருப்புக்கஞ்சி போல செய்து சாப்பிட்ட தமிழ்ச் சமூகம் இருந்தது.
அது போல உணவுகளை உண்ணும்போது உணர்ச்சிப்பூர்வமான வாழ்க்கை வாழ்ந்தனர். அன்று பார்த்தோமானால் ஒரு காலகட்டத்தில் ஒரே வீட்டில் 15 பேர் உட்கார்ந்து உண்ட கூட்டுக்குடும்ப அமைப்பு இருந்தது. இன்றைக்கு ஒரு நான்கு பேர் ஒரு குடும்பத்தில் இருந்தால் கூட ஒற்றுமையாக இருக்க முடியாத ஒரு சூழல் உருவாகிவிட்டது. அந்தக்காலத்தில் கூட்டமைப்பு முறையில் குடும்பங்கள் இருந்ததால் நிறைய திருவிழாக்கள் நடந்தது. இந்தத் திருவிழாக்கள் அவர்களின் மழுங்கிப்போன உணர்ச்சிகளை கூர்மைப் படுத்துவதற்கான ஒரு ஆயுதமாகவே இருந்தது. இன்றைக்குப் பார்த்தோமானால் தமிழ்நாட்டில் திருவிழாக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்து மனிதர்களின் உணர்ச்சிகள் மழுங்க ஆரம்பித்துவிட்டது.
அன்று திருவிழாவின் போது வீடுகளில் பலகாரம் சுடுவார்கள். எங்க வீட்டில் பனியாரம், அதிரசம் போட்டாங்க, உங்க வீட்டில என்ன பலகாரம்? என்று பகிர்ந்துகொண்டு உண்பார்கள். அதுபோல் கிராமத்தில் கூட்டஞ்சோறு ஆக்கி கூடிச்சாப்பிடுவர். இது போல் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் முறையின் போது உணர்ச்சிகள் பரிமாறப்பட்டது. இன்று இந்த உணர்ச்சிகள் பரிமாற்றம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்துபோன காரணத்தினால் அவனது வாழ்க்கைப் பாதை மாறி இதயநோய் வரக்கூடிய வாய்ப்பும் அதிகமாகிப்போனது. அதனால் உணர்வுரீதியான பகிர்வு இங்கே வேண்டும்.
இந்தப் பூக்களை மருந்தாக எடுத்துக்கொள்ளக்கூடிய மக்கள் கண்டிப்பாக உணர்ச்சியோடு இருப்பார்கள். இவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்களும் வராது. அதுபோல் உணவுகளில் உளுந்தங்களி, வெந்தயக்களி இதில் உள்ள சுண்ணாம்புச்சத்தை எவனொருவன் மருந்தாக மாற்றுகிறானோ நிச்சயம் இதயவலுவோடு இருக்கலாம். நம் உடலுக்கு உளுந்தானது திடகாத்திரமான உணவாகும். இந்த உளுந்தை பலர் இன்று இட்லிக்கும், தோசைக்கும் பயன்படுத்தி வருகின்றனர். தவிர உளுந்தை இன்று கடுகோடு சேர்த்து தாளிக்கின்ற ஒரு பொருளாக  மாற்றிவிட்டோம். இந்த உளுந்தை என்று நாம் பிரதான உணவாக மாற்ற ஆரம்பிக்கிறோமோ அன்று தேகக்கட்டு வரும். எலும்பு முறிந்தால் கூட நாட்டுக்கோழி முட்டையையும், இந்த உளுந்தையும் வைத்து உடலில் பத்துப்போடும் போதுதான், உடைந்த எலும்பு கூட, கூடும் தன்மை வருகிறது.
அப்போது ஏன் நாம் உளுந்தை உணவாகச் சாப்பிடக் கூடாது? அதனால் இதய நோய்க்கு மற்றொரு மருந்தே உளுந்து. சித்தர்கள் உளுந்துச் சோற்றை உளுந்தோதனம் என்று கூறுவர். நான்கு பங்கு அரிசியும், ஒரு பங்கு உளுந்தும், கொஞ்சம் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு உளுந்துச் சோறாக  வாரத்தில் ஒரு நாள் தொடர்ந்து இதயநோயாளிகள் சாப்பிட்டு வந்தால் நிச்சயம் இதய நோய் முற்றிலும் குணமடையும்.
தவிர ஒரு மரத்தின் அபரிமிதமான சத்துக்கள் எல்லாம் மரப்பட்டையில் தேக்கி வைக்கப்படும். இந்தப் பட்டைகள் எல்லாமே துவர்ப்பானது. அதனால் மருதம்பட்டை, ஆவாரம் பட்டை இந்த இரண்டு பட்டையையும் கொதிக்க வைத்துத் தொடர்ந்து சாப்பிடும் போது சர்க்கரை நோயும் கட்டுப்படும். அதே நேரம் இதய நோயும் குணப்படும்.
சர்க்கரை நோயோடு இதயநோயும் சேர்ந்தது என்றால் மனிதனின் முழுச்செயல்பாடும் தடைபடும். வெளியூருக்குத் தானாக போக முடியாது. ஒரு பயம் தானாகவே கவ்விக்கொள்ளும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இதயநோய் வந்தது என்றால் அவரின் நரம்புகள் பலகீனப்படும். ஆகையால் நரம்பு பலகீனப்படும்போது நேர்மறை சக்தி முழுமையாகக் குறையும். அதனால் அவரால் கூட ஒரு காரியம் ஆற்ற முடியாது. அடுத்தவர் உழைப்பில் எப்படி முன்னேறலாம் என்ற குறுக்குப் புத்தியும் வரும்.
ஆரோக்கியமாக இருக்கும் மனிதரால்தான் ஆரோக்கியமாகச் சிந்திக்க முடியும். ஆரோக்கியமான சிந்தனையால்தான் ஆரோக்கியமான சமூகத்தை நாம் உருவாக்க முடியும். அதனால் இதயநோய் வந்துவிட்டது என்றால் பயப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள், இன்று இருக்கும் நவீன மருத்துவர்களிடம் சென்று அடிமையாகாதீர்கள். உங்கள் உணவை சீர்படுத்துங்கள். ஏனென்றால் இந்தியாவிலேயே (கிரானிக் டிசீசஸ்) எனப்படும்  தீராத நோய் விதைக்கப்படுகிறது. இதைத்தான் நான் செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறேன்.
நவீன மருத்துவம் என்ற போர்வை நம் மக்கள் மீது போர்த்தப்படுகிறது. அங்கே நம் சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது. இதயநோயாளிகளுக்கு விற்பனையாகக்கூடிய மருந்துகளைப் பார்த்தீர்கள் என்றால் வெளிநாடுகளில் இருந்து இங்கே முதலீடு செய்து பண்ணக்கூடிய மருந்துகளாக இருக்கும். இந்த மருந்துகளை எல்லாம் நாம் கூட்டம் கூட்டமாகச் சென்று வாங்கும் பொழுது நிச்சயம் நம் நிதி ஆதாரம் நவீன மருந்துகளால் கொள்ளையடிக்கப்படும்.
இச்சூழலில் பழைய பாட்டி வைத்தியம் ஏன் வரக்கூடாது. ஒரு அஞ்சறைப் பெட்டியிலேயே முழுமையான மருத்துவத்தைப் பார்த்த சமூகத்திலே நாம் பிறந்து வளர்ந்தவர்கள்.  சித்தர்கள் சொன்ன சித்த மருந்துகளை மீண்டும் நாம் உயிர்ப்பித்து பயன்படுத்த வேண்டும். நான் கூறிய ஏலாதி சூரணம், தாலிசாதி சூரணம், பஞ்ச தீபாக்னி சூரணம், சிறுங்கி பஸ்பம் இந்த நான்கு விதமான மருந்துகளை உண்டாலே இதயநோய் சரியாகிவிடும்.
அதுபோல் நெல்லிக்காய் லேகியம், தேத்தாங்கொட்டை லேகியம், வெள்ளைப்பூசணி லேகியம் இந்த மருந்துகள் அபரிமிதமான பலன் தரக்கூடியது. இதயநோய் வந்தது என்றால் இதயத்திற்கு நாம் அழுத்தம் கொடுக்கக் கூடாது. இந்நோய் வந்தால் ஒரு வேளை உணவு கீரை கஞ்சியாக இருக்க வேண்டும். ஒரு வேளை உணவு கீரையோடு சேர்ந்த அரிசி உணவாக இருக்க வேண்டும். இதுபோல் உண்ணும் போது நல்ல பலன் கிடைக்கும்.
சர்க்கரை நோயால் இதய நோய் வந்தது என்றால் சர்க்கரையையும் குறைக்க வேண்டும், முழுமையான உணவுக்கட்டுப்பாடும் வேண்டும். உணவில் நிறைய நார்ச்சத்துகள் உணவை எடுக்க வேண்டும். நார்ச்சத்து உணவு எதுவென்று பார்த்தோமானால் பண்டைய தமிழர் பயன்படுத்திய வரகு, திணை, குதிரைவாலி, சாமை, கம்பு, சோளம், வெள்ளைச்சோளம், கேழ்வரகு இவை எல்லாம் அற்புதமான பலன் உள்ள சிறு தானியங்களாகும். இந்த மாதிரியான உணவுகளை தொடர்ந்து எடுங்கள். நான் கூறிய மருந்துகளையும் விடாமல் எடுங்கள். கண்ட நவீன மருந்துகளை உண்பதை நீக்கிவிட்டு சுயசிந்தனையோடு யோசித்து செயல்படுங்கள். எளிமையான வேலைகளைச் செய்யுங்கள், இலகுவாக இருங்கள், இதன்படி இருந்தால் இதயநோயோடு சர்க்கரை நோயையும் வெல்லலாம். மறுபடியும் தமிழர்கள் நோயின்றி நல்ல வாழ்க்கை வாழலாம் நன்றி.

சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை


- Dr. S சுகன்யா B.S.M.S


            ன்று உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த மக்கள் தொகையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நோய்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இவ்வாறு இந்திய மக்களை குறிப்பாக தென்னிந்திய மக்களை அவதியுறவைக்கும் நோய்களில் சர்க்கரை நோயும், இரத்த அழுத்த நோயும் தான் முதலிடம் வகிக்கிறது. இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக இந்திய மக்களை ஆட்டிப் படைக்கின்றன.

இன்று 63 சதவிகிதமாக உள்ள நீரிழிவு நோயாளியின் எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் நம் உணவு முறையே. மேலும் நகர வாழ்க்கையின் தாக்கமும் ஒரு காரணம். போதிய உடற் பயிற்சியின்மை என பல பாதிப்புகளின் வெளிப்பாடே நீரிழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது.

ஒரு குழந்தை இளம் வயதிலிருந்து வாலிப பருவத்திற்கு மாறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாளமில்லா சுரப்பி மண்டலம்தான். இதை ஆங்கிலத்தில் எண்டோகிரைன் சிஸ்டம் என அழைப்பõர்கள். இந்த நாளமில்லாச் சுரப்பிகள் தான் மனித உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. இந்த ஹார்மோன்களின் சுரப்பானது வாத, பித்த கபத்தை பொறுத்தே அமைகின்றன. இந்த மூன்றில் எதனுடைய நிலையில் மாறுபாடு ஏற்பட்டாலும் முதலில் பாதிக்கப்படுவது ஹார்மோன்களே. வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கிய பங்கு வகிப்பது ஹார்மோன்கள் ஆகும். உடலுக்கு தேவையான சர்க்கரை அதாவது இன்சுலினை சுரக்கும் கணையம் பாதிக்கப்படுவதால் உடல் பருமன் ஏற்பட்டு நீரிழிவு நோய் உருவாக காரணமாகிறது.

இந்த நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே.

முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

கீழ்கண்ட உணவு முறைகளை தவறாமல் கடைப்பிடித்து வருவது நல்லது.

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்

கத்தரி பிஞ்சு, சுரைக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய், கோவைக்காய், பீன்ஸ், சாம்பல் பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, காளி பிளவர், வெண்பூசணி, பாகற்காய், வாழைப்பூ, காராமணி, கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வாழை பிஞ்சு, நூல்கோல், முருங்கைக் காய், வெள்ளரிக்காய், சௌசௌ இவைகளுடன் கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்து பச்சடியாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம்.

நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள்

சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு.

கறிவேப்பிலை, தூதுவளைக் கீரை, ஆரைக்கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக் கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரைக் கீரை, கொத்தமல்லிக் கீரை

இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் 1 டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

சர்க்கரை நோய்க் காரர்களுக்கு உகந்த பழங்கள்

சாத்துக்குடி                      1

ஆரஞ்சு                                2

ஆப்பிள் (தோலுடன்)     1

கொய்யா (சிறியது)         2

பேரிக்காய் (சிறியது)       2

வெள்ளரிக்காய்                  2

அன்னாசிப்பழம்                4 வளையங்கள்

தர்பூசணி                            1 துண்டு

மேல் சொன்ன பழங்களில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுள்ள அளவுகளில் தினமும் உண்ணலாம்.

உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பசி அல்லது தாகம் எடுத்தால்.

வெள்ளரி, அரிசிப்பொரி, மோர் (கறிவேப்பிலை, கொத்தமல்லி சீரகம் கலந்தது), கோதுமை உப்புமா, அவித்த சுண்டல், சிறுபயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, தட்டைப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.

எலுமிச்சை சாறு                  200 மி.லி.

வாழைத்தண்டு சூப்           200 மி.லி.

அருகம்புல் சூப்                     200 மி.லி.

நெல்லிக்காய் சாறு                 100 மி.லி

கொத்தமல்லி சூப்                  100 மி.லி.

கறிவேப்பிலை சூப்                100 மி.லி.

இவற்றில் ஏதாவது ஒன்றை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.

எண்ணெயில் வறுக்கப்பட்ட அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

முட்டை                                       1 (வெள்ளைக் கரு மட்டும்)

மீன்                                                 2 துண்டுகள்

கோழிக்கறி                                 100 கிராம் (அவித்தது)

மேற்கண்ட உணவுகளை முறையாக சாப்பிட்டும் தினமும் உடற்பயிற்சியும், நடைபயிற்சியும், ஆசனமும் செய்து வந்தால் சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

சர்க்கரை வியாதிக்கு ஒரு சவால்

சர்க்கரை வியாதி இருக்கிறது என்று சொல்லிக்கொள்வதே இப்போது ஒரு பெரிய கவுரவமாக கருதுகிறார்கள்...அந்த வியாதி பற்றி தெரிந்தும் அதிலிருந்து மீண்டு வரமால் மேலும் மேலும் மருந்து , மாத்திரைகள் என்று மட்டுமில்லாமல் மாவு சத்துக்கள் அதிகமாக உள்ள உணவை உட்கொண்டு எண்ணெய்சட்டிக்கு பயந்து அடுப்பிலேயே விழுவது போல... ஒரு வியாதியைக் குறைக்கிறேன் என்று பல வியாதிகளை அவர்களே உருவாக்கி கொள்கிறார்கள்....
நம் சமையல் அறையே ஒரு மூலிகைப்பண்ணை....ஆனால் அதை நாம் ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை...நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சர்க்கரை வியாதியை எப்படி விரட்டி அடிப்பது என்பதை பார்க்காலம்...
கீழ் உள்ள முறைப்படி உணவை மேற்கொண்டால் எத்தனை வருஷம், எவ்வளவு அதிக அளவில் சர்க்கரை நோய் இருந்தாலும் இருபது நாட்களில் இருந்து ஒரு மாதத்திற்குள் நோயின் தாக்கத்திலிருந்து வெளி வருவது உறுதி...அதோடு உணவு முறையை மாற்றாமல் பின்பற்றி வந்தால் திரும்ப நம்மிடம் அந்த நோய் வரவே வராது என அறுதியிட்டும் கூறலாம்....
1. காலையில் எழுந்ததும் ஆயில் புல்லிங் (நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்) 15 நிமிடங்கள் செய்து விட்டு, ஒரு நெல்லிக்காய், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து ஜூஸ் எடுத்து குடிக்க வேண்டும்...
2. ஒரு டீ ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து அதை காலையில் மென்று சாப்பிட்டு அந்த நீரை குடிக்க வேண்டும். (வயதானவர்கள் வெந்தயம் முளை கட்டி காய வைத்து பவுடராக்கி வைத்து கொண்டு 1 ஸ்பூன் சாப்பிட்டும் வரலாம்.)
3. சிறுகுறிஞ்சான் பொடி, சீந்தில்கொடி பொடி, நாவல் பொடி, நெல்லி பொடி, ஆவாரம்பூ பொடி இதை முறையே 5௦ கிராம் அளவு வாங்கி கலந்து வைத்துக்கொண்டு மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு 15 நிமிடங்கள் முன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும்.
4. காலை உணவாக ஓட்ஸ், சிவப்பு அவல், கோதுமை ரவை, மக்காச்சோள ரவை, கம்பு இட்லி (கம்பு, வரகரிசி, கைக்குத்தல் அரிசி, கருப்பு உளுந்து ஆகியவற்றை 4 மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும்) அரிசி மாவால் ஆன இட்லி, தோசையை தவிர்த்து மேற்சொன்னவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
5. காலை 11 மணி, மாலை 3 மணி இந்த நேரங்களில் (பசித்தால் மட்டுமே) மா, பலா, வாழை தவிர்த்து கொய்யா, மாதுளை, அன்னாசி, பப்பாளி, வெள்ளரி, சாத்துக்குடி, நாவல் என பழங்களையும், முளை கட்டிய தானியங்களான சோளம், காராமணி, நிலக்கடலை, கொள்ளு, கருப்பு சுண்டல், பச்சைப்பயறு என பழங்களையும், முளை கட்டிய தானிய வகைகளையும் அளவோடு உண்ணலாம். பால் கலந்த காபி, டீக்கு பதில் சுக்கு காபி, கிரீன் டீ குடிக்கலாம்.
6. மதிய உணவாக ஒரு கப் சாதம், பிஞ்சு அவரை, பீர்க்கங்காய், வாழைக்காய், பீன்ஸ், வெண்டைக்காய், நூல்கோல், வாழைப்பூ, கீரைவைகைகள் இதில் செய்யப்பட குழம்பு, பொரியல், ரசம், மோர் என்று இருக்க வேண்டும்.
7. இரவு உணவாக கோதுமை கலவை மாவில் (கோதுமை, கொள்ளு, பச்சைபயறு, கருப்புச்சுண்டல் சேர்த்து 8 மணி நேரம் ஊறவைத்து காய வைத்து அரைத்த மாவு) செய்த தோசை (அ) சப்பாத்தி இரண்டு சாப்பிடலாம்..
8. தாகம் எடுக்கும் போது எல்லாம் சீரகம் (அ) வெந்தய நீர் அருந்தலாம்..
9. எந்த காரணத்தைக் கொண்டும் கடைகளில் விற்கப்படும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட சத்துணவு மாவோ (அ) குந்தைகளுக்கு என வீட்டில் அரைக்கும் சத்து மாவிலோ பால் கலந்து கஞ்சியாக குடிக்கவே கூடாது. பால், சர்க்கரை, மைதா உணவு அறவே கூடாது. இதனால் நோயின் தன்மை அதிகமாகுமே தவிர குறையாது....
வாழும் காலம் ஆரோக்கியம் எத்தனை முக்கியம் என்பதை வியாதியில் வாழ்ந்தவர்களுக்குத் தான் புரியும். நம் வாழ்க்கை முறையை சிறிது மாற்றி அமைத்தால் சர்க்கரை என்னும் இந்த நோய் நம்மை விட்டு இருபது நாட்களில் அறவே ஒழியும் என்பதில் துளியும் ஐயம் வேண்டாம்.

நீரிழிவு வராமல் தடுக்கும் முறை உணவு பழக்கவழக்கத்திலேயே உள்ளது

தொற்றா நோய் களோடு தொடர் புடைய ஒவ்வொரு நோயைப் பற்றியும் கடந்த வாரங்களில் வெளியான கட்டுரைகளில் பார்த்தோம்.
குறிப்பாக நீரிழிவு நோய், அல்லது சர்க்கரை வியாதி, சீனி வருத்தம், ‘ஷ¤கர்’ என்று அழைக் கப்படும் நோயைப் பற்றி கடந்த வாரம் சில தகவல்களை யும் பார்த்தோம்.
உண்மையிலேயே நீரிழிவு நோய் தானா? இல்லை என்கிறார்கள் சிலர் ஆனால் இது நோயல்ல. எமது உடலில் சேரும் சர்க்கரையை சமப்படுத்துவதற்கு போதுமான இன்சுலின் சதையிலிருந்து சுரக்காத காரணத்தினால் அல்லது, சுரக்கும் இன்சுலின் போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால் மிகுதி சர்க்கரை குளுக்கோஸ், குருதியில் கலக்கிறது.
இதனால் சகல நோய்களும் உடலினுள் நுழைவதற்கு பிரதான கதவு திறக்கப்படுவதாகவே அமைகிறது.
நீரிழிவு தொடர்பாக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அசங்க ரத்னாயக்காவை சந்தித்து சில தகவல்களை கேட்டறிந்து கொண்டோம். கொழும்பு களுபோவிலை ஆஸ்பத்திரியில் கடமையாற்றும் அவர் நீரிழிவு நோய் தொடர்பாகவும், அதனை தடுப்பது தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
குருதியில் அளவுக்கு அதிகமான குளுக்கோஸ் காணப்படுகின்ற மாற்ற முடியாத நிலை நீரிழிவு எனப்படும். உடலுக்குத் தேவையான சக்திக்காக நாம் உண்ணும் உணவின் அதிகமான பகுதி குளுக்கோஸாக மாற்றமடைகிறது.
எமது வயிற்றுக்கு அருகில் காணப்படும் சதையி (பங்கிறியஸ்) என்னும் உறுப்பு இன்சுலின் என்னும் சுரப்பை சுரந்து குளுக்கோஸ் எமது உடற்கலங்களில் கலப்பதற்கு உதவுகின்றது. உங்களுக்கு நீரிழிவு காணப்படும் போது, உங்கள் உடல் போதுமான அளவு இன்சுலினை சுரப்பது இல்லை. அல்லது அது சுரக்கின்ற இன்சுலினை பயன்படுத்த வேண்டிய அளவுக்கு பயன்படுத்த முடியாத நிலையை அடைகின்றது. இந் நிலை உங்கள் குருதியில் வெல்லத்தின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது. இந்த வெல்லம் குருதியில் மட்டும் காணப்படுவதோடு மட்டுமல்லாது, சிறுநீரிலும் பிரதிபலிக்கக் கூடும். இருதயக் கோளாறு, குருடு, சிறுநீரகம் செயலிழத்தல போன்ற பாரிய நோய்களுக்கு கூட நீரிழிவு வழிவகுக்கக் கூடும்.
எப்படி அது ஏனைய உறுப்புகளை பாதிக்கிறது?
உடலில் சேராத அதாவது இரத்தத்தில் கலக்கும் மேலதிக வெல்லம் அல்லது சர்க்கரை நுரையீரல், சிறுநீரகம், இதயம், கண்கள் போன்றவற்றை பாதிக்கிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவரின் கண்கள் பார்வையை இழக்க வேண்டிய நிலையும் ஏற்படும். சாதாரண கண்களை விட விழியினுள் பாதிப்புகள் அதிகம் காணப்படும்.
நீரிழிவு இரண்டு வகைகள் உண்டு. இவற்றில் இரண்டாவது வகை நீரிழிவு உள்ளவர்கள் 95 வீதமும், முதலாவது வகையினர் 5% வீதமும் உள்ளனர்.
முதலாவது வகை
முதலாவது வகை நீரிழிவானது ஹிypலீ யி ளிiabலீtலீs-யிளிளிணி-யிnsulin ளிலீpலீnனீலீnt ளிiabலீtலீs ணிலீllitus குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. 5% வீதமான நீரிழிவு நோயாளிகள் வகை ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களா வார்கள்.
இரண்டாவது வகை
இரண்டாவது வகை நீரிழிவு ஹிypலீ யியி -னியிளிளிணி-னிon யிnsulin ளிலீpலீnனீலீnt ளிiabலீtலீs ணிலீllitus இன்சுலின் சுரப்பிகள் போதியளவு இன்சுலின் சுரக்காததாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 95 வீதமான நோயாளிகளில் காணப்படுகிறது. இந்தவகை நீரிழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக உடற்பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரிழிவை நிறைகுறைவதாகவும் சாப்பாட்டுக் கட்டுப்பாட்டாலும் குழந்தைபேறு காலத்தில் பெண்களுக்கு நீரிழிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு தொடர்ந்தும் பாதிப்பை ஏற்படுத்துமா?
கர்ப்பகால நீரிழிவானது 2 சதவீதம் முதல் 4 சதவீதமான பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. இருந்தபோதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும். நமது இரைப்பையும், குடலும் உணவிலிருந்து குளுக்கோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.
குருதியிலுள்ள சர்க்கரை அல்லது குளுக்கோஸ் கலங்களுக்கு நுழைய முயாததன் காரணம் என்ன?
பல காரணங்களால் இது நிகழலாம்.
தேவையான அளவு இன்சுலின் கணையத்திலிருந்து உற்பத்தியாகாமல் போகலாம்.
இன்சுலின் தேவையான அளவு இருந்தும் சரியாக செயல்படாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படலாம். உடல் பருமனும் ஒரு காரணம்.
நீரிழிவு நோய் யாருக்கு ஏற்படும்?
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், பரம்பரையில் நீரிழிவு நோய் இருப்பவர்கள், எடை அதிகமாக இருப்பவர்கள், ஆகியவர்களுக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
மேலதிகமாக முதலாம் பிரிவு நீரிழிவு ஏற்படின் வாந்தி, மலச்சிக்கல், பார்வைமங்கல், சரும வியாதிகள், வயிற்று நோ என்பன ஏற்படும்.
நீரிழிவு நோயைக் கண்டுபிடித்தல், சிறுநீர் பரிசோதனையின் போது மேலதிக வெல்லம் இருப்பது நீரிழிவு நோய் தோன்றியிருப்பதன் அறிகுறியாகும்.
வேறு பரிசோதனை செய்வதன் மூலம் நீரிழிவு நோயை உறுதிப்படுத்தலாம். (தொடரும்)
முதல் வகை நீரிழிவில் அறிகுறிகள் விரைவாக ஆரம்பித்து கடுமையாகும். இரண்டாவது பிரிவில் அறிகுறிகள் மெதுவாக ஆரம்பிப்பதோடு கடுமையாகவும் இருக்காது.
நீரிழிவை கட்டுப்படுத்த நம்மால் தான் முடியும். எந்த மருந்துகளும் செய்யாத வேலையை நம் அன்றாட உணவுகள் செய்யும் வல்லமை கொண்டது. உணவின் தன்மையறிந்து, வகையறிந்து, அளவோடு உண்ண, உணவே அற்புத மருந்தாய் வேலை செய்யும்.
நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய சில காய்கறிகள்
வாழைப்பூ, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், கத்திரிப்பிஞ்சு, வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், பீர்க்கம் பிஞ்சு, அரைப்பிஞ்சு, இந்த காய்கறிகள் அனைத்தும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இவற்றை பச்சடியாகவோ, கூட்டாகவோ செய்து சாப்பிடலாம். பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை, நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கீரையேனும் சாப்பிட வேண்டும்.
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கீரைகள் அனைத்தும் சூப்பாகவும் செய்து அருந்தலாம். காம்பு நீக்கி, சுத்தம் செய்து அரிந்த கீரையுடன் சிறிது சீரகம், மிளகு, பூண்டு, சாம்பார் வெங்காயம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து 1 டம்ளர் அளவு வந்தவுடன் அருந்லாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க வேண்டியவை:
சர்க்கரை, குளுக்கோஸ், இனிப்பு பலாகாரங்கள், கேக், சாக்லேட், ஐஸ்கிரீம், வெல்லம், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, குளிர்பானங்கள், கேரட், பீட்ரூட், குறைந்த அளவு மாதம் இரு முறை சாப்பிடலாம்.
உடற் பயிற்சி
நீரிழிவு நோயுள்ள ஒருவர் மட்டுமல்ல, ஒருவர் உட்கொள்ள வேண்டிய உணவில் அதிகளவு காய்கறிவகைகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிaர்கள். அத்துடன் ஆரோக்கியம் தரக் கூடிய எண்ணெய் என்கிaர்கள்.
உடலுக்கு கேடு விளைவிக்காத எண்ணெய் எது?
காலத்துக்க காலம் வர்த்தக நோக்கத்திற்காக இந்த எண்ணெய்யை பாவியுங்கள்.
இதில் (ஷிaturatலீனீ ஜீat) நிறைவுற்ற கொழுப்பு இல்லை. அதை பாவியுங்கள் என சிபாரிசு செய்கிறார்கள். உண்மையில் எதைப் பாவிப்பது?
உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய (ஷிaturatலீனீ ஜீat)
நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ள எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது?
விanola oil எனப்படும் காட்டுக் கடுகு எண்ணெய்யில் 7 வீதம் நிறைவுற்ற கொழுப்பும் ஆலிவ் மற்றும் சோளம் எண்ணெய்யில் 13 வீதமும், சூரிய காந்தி எண்ணெய்யில் 10.3 வீதமும், நல்லெண்ணெய்யில் 14.2 வீதமும், சோயா எண்ணெய்யில் 15 வீதமும் தேங்காய் எண்ணெய்யில் 92 வீதமும் இருக்கிறது. இப்போது எதனை பாவிப்பது என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.
நிறைவுற்ற ஒற்றை நிறைவுறா பல்நிறைவுறா உணவு
உணவு கொழுப்பு கொழுப்பு கொழுப்பு
மொத்தக் கொழுப்பில் எடை சதவிகிதம் (%)
சமையல் எண்ணெய்கள்
காட்டுக்கடுகு
எண்ணெய் 7 59 29
நல்லெண்ணெய் 14.200 39.700 41.700
சோள எண்ணெய் 13 24 59
ஆலிவ் எண்ணெய் 13 74 8
சூரிய காந்தி எண்ணெய் 10.3 19.5 65.7
சோய் அவரை எண்ணெய் 15 24 58
தேங்காய் எண்ணெய் 92 6 2
டொக்டர், நீரிழிவு உள்ளவர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டால் ஆறுவதில்லை. அதேபோல் உயிரோடு இருக்கும் போதே கால் விரலிலிருந்து தொடை வரை வெட்டி அகற்றப்படும் கொடுமையையும் பார்த்திருக்கிறோம். இது எதனால் ஏற்படுகிறது?
கால் மட்டுமல்ல கண் உள்ளிட்ட உடலில் எந்த பாகத்துக்கும் இந்த நிலை ஏற்படலாம்.
நீரிழிவு
முதலில் கூறியது போல குருதியில் கலக்கும் மேலதிக குழுக்கோஸ் உடலிலுள்ள ஏனைய உறுப்புக்களுக்கும் சென்று செயலிழக்கச் செய்கிறது.
குறிப்பாக ஒன்றை மட்டும் நாங்கள் மறந்துவிடக் கூடாது. கால்களின் விரல்களில், அடிப்பாதத்தில் விரல்களுக்கு இடையில் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு அடிப்பாதம் மரத்துப் போவது போல தோன்றும் விரல்கள் மரத்துப் போகும் அங்கே சிறுகாயம் ஏற்பட்டு அது பெரிய காயமாகி நாற்றமெடுக்கும் வரை உணர்வுகள் இருக்காது.
எனவே வாரத்துக்கு ஒருமுறை பாதத்தை நன்கு கழுவி ஒரு கண்ணாடியை வைத்து பாதத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
முகத்துக்கு எந்தளவுக்கு ‘மேக் அப்’ செய்கிறோமோ அதேபோல பாதத்தையும் பாதுகாக்க வேண்டும். சிலர் முகத்தை மட்டும் மினுக்கிக்கொண்டு செல்வார்கள். பாதத்தை பார்த்தால் வெடிப்புகளும், சீரில்லாமலும், ஏனோ தானோ என்றும் இருக்கும்.
வாரத்தில் ஒருமுறை வெதுவெழுப்பான சுடு நீரில் கால்களை ஊற வைத்து தண்ணீரில் கொஞ்சம் உப்பை கலந்துகொள்ள வேண்டும். விரல் இடுக்குகளை பிரஷ்கொண்டு தேய்த்து கழுவி, நகக் கண்கள் சுத்தம் செய்யப்படுதல் மிக மிக அவசியம்.
கால்களில் காயங்கள் ஏற்படாதவாறு சப்பாத்துக்கள் அணிவது சிறந்தது.
நீரிழிவு நோய் என்றதும் இது கிட்டத்தட்ட அதிக வருமானம் பெறுபவர்களுக்கே ஏற்படும் என்று ஒரு அபிப்பிராயம் நம்மத்தியில் இருக்கிறது. ஆனால் இலங்கையை பொறுத்தவரையில் அப்படி இல்லையே?
ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல வெளிநாடுகளில் அப்படித்தான். ஆனால் இலங்கையில் எல்லோரும் எல்லாவித உணவுக்கும் பழக்கப்பட்டுவிட்டார்கள். இலங்கையில் உணவு முறை எல்லோர் மத்தியிலும் சமமாக உள்ளது.
இலங்கையில் நீரிழிவு நோய் பெண்களுக்கா ஆண்களுக்கா அதிகமாகவுள்ளது?
இரண்டுமே சம அளவுதான் ஆனால் பெண்கள் சற்று அதிகமாகத்தான் இருக்கிறார்கள்.
உடல் பருமன் நீரிழிவுக்கு ஒரு காரணமாக அமையுமா?
உடல் பருமன் என்பது நீரிழிவு இதய நோய் என்று எல்லா நோய்களையும் இழுத்து வந்துவிடும்.
‘பி. எம். ஐ. (பாடி மாஸ் இன்டக்ஸ்)னு சொல்ற கணக்கை ஒவ்வொருத்தரும் சுயமா செய்து பார்க்கலாம். கிணியி – wலீight (kg) / ரீhலீight (சீ)மீ 2 இது 24க்குக் கீழ் இருந்தால் நோர்மல். 24 – 28 அதிக எடை, 28 – 32 ஆரம்பக்கட்ட பருமன். 32 – 35 நடுத்தர பருமன். 35 – 38 தீவிர பருமன் 38க்கும் மேல் ஆபத்தான பருமன்.
24 வரை மட்டுமே இருக்க வேண்டிய பி. எம். ஐ. அதிகமானால், உடலில் கொழும்புச் சத்து கூடும். அதன் விளைவாக கணையத்தில் சுரக்கும் இன்சுலின் வேலை செய்கிற தன்மை பாதிக்கப்படும். மெல்ல மெல்ல நீரிழிவை நோக்கி நம்மை இட்டுச் செல்லும். குண்டாக இருக்கிற எல்லோருக்கும் நீரிழிவு இருக்கிறதா எனக் கேட்கலாம். ஆனால் காலப்போக்கில் அவர்களுக்கு கட்டாயம் நீரிழிவு தாக்கும்.
ஏற்கனவே நீரிழிவு பாதிக்கப்பட்டு, அதற்காக மருத்துவம் எடுத்துக்கொள்கிறவர்களுக்கும், சர்க்கரையின் அளவு மட்டும் கட்டுக்குள் வராமலே இருக்கும். காரணம், பருமன்தான். அதிகப்படி எடையை சில கிலோ குறைத்தாலே, சர்க்கரையின் அளவு தானாக கட்டுக்குள் வருவதை உணர்வார்கள்.
பருமனை அலட்சியம் செய்கிறவர்களுக்கு இன்சுலின் சுரப்புக்கு எதிரான சில சுரப்பிகள் வேலை செய்யத் தொடங்கும்.
நீரிழிவுக்கான சோதனையை மேற்கொண்டு பாருங்கள். உணவுக்கு முன்பான சோதனையில் குருதியில் சர்க்கரை அளவு 100 க்கும் கீழ் இருந்தால் மட்டுமே அது நோர்மல். 101 முதல் 125 இருந்தால், அது நீரிழிவுக்கான முந்தைய கட்டம். 126 என்றால் நிச்சய நீரிழிவு. சாப்பாட்டுக்கு 2 மணி நேரத்துக்குப் பிறகான சோதனையில், 140 க்கும் கீழ் என்றால் நோர்மல், 141 – 200 இருந்தால் நீரிழிவுக்கு முந்தைய கட்டம். 200 க்கும் மேல் என்றால் நிச்சய நீரிழிவு.
நீரிழிவிலிருந்து விலகி வாழ விரும்புவோர், முதல் கட்டமாக உடல் பருமனைக் கண்காணித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

நீரிழிவுக்கு நிரந்தர தீர்வு இல்லை என்பதை உணர வேண்டும். சரியான மருத்துவரிடம் முறையான சிகிச்சைப் பெற வேண்டும். மருத்துவர் ஆலோசனைப்படி இரத்த பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை செய்தல், மருந்துக்களை உட்கொள்தல் வேண்டும்.
கண் மருத்துவரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்ய வேண்டும். சரியான உணவை தினம் தோறும் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல், உடலில் அதிகப்படியான எடையை குறைத்தல் போன்றவற்றை ‘சுய கட்டுப்பாட்டுடன்’ கடைப்பிடித்தால் நீரிழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை நடத்தலாம்

எட்டு நடை பயிற்சி

வீட்டிலேயே காற்றோட்டமும் , வெளிச்சமும் இருக்கும் இடமாக தேர்வு செய்து ஐந்து அல்லது ஆறு அடி விட்டமுள்ள இரு வட்டங்களை ஒன்றை ஒன்று தொட்டிருக்கும் படியாக எட்டு வடிவில் (8) தரையில் வரைந்து கொள்ள வேண்டும் .... வாய்ப்பு இருந்தால் அந்த பாதையில் கூழங்கற்களை பதிக்கலாம்...
பாதையில் செய்யும் நடைப்பயிற்சியில் கவன சிதறல் இருக்கும் ...மற்றவர்கள் மீதும் ..வாகனங்கள் மீதும் கவனம் போகும் ...நம்மோடு பாதையில் நடைப்பயிற்சி செய்பவர்கள் இருந்தால் அவர்களோடு பேசுவது ..டீ காபி குடிப்பது என்று பல இடையூறுகள் வரும் .... ஆனால் இந்த எட்டு வடிவ நடை பயிற்சியில் அவ்வாறான கவன சிதறல்கள் இடையூறுகள் இருக்காது...

எட்டு நடைப்பயிற்சி தொடர்ந்து முப்பது நிமிடங்கள் செய்வதால் முதலில் நல்ல தூக்கம் கிடைக்கும் ... ...ஒவ்வொரு முறையும் காலடி எடுத்து வைக்கும் போதும் உடல் கொஞ்சம் திருப்பம் அடைகிறது.. உடலின் எல்லாப் பகுதிகளும் சமமான அசைவுக்கு உட்படுகின்றன....

சுவாசம் தொடர்பான கோளாறுகள் உடலில் இருந்து வெளியேறும் ....மனமும், சுவாசமும் சீரடைவதால் ரத்த ஓட்டமும் சீராக நடைபெறும்... பாதங்களும், கால்களும் பலம் பெறும்....சர்க்கரை நோயாளிக்கு இது சிறந்த நிவாரணி ... தினசரி இந்த பயிற்சி செய்வதால் அதிக தொல்லை தரும் வியாதிகள் நம் உடலை விட்டு வெளியேறும்.

தொப்புள்க்கொடி வெளியேற்றம் -ஒவ்வொரு பெண்ணும் அறிந்து வைத்திருக்க வேண்டியது


தொப்புள் கோடி தாயின் இரத்தத்தில் இருந்து குழந்தைக்கு உயிவாழத் தேவையான பதார்த்தங்களை பரிமாறுவதற்கும்,குழந்தையின் இரத்தத்தில் இருந்து கழிவுகளை தாயின் இரத்தத்திற்கு அனுப்புவதற்கும் உதவுகிறது. இது வழமையாக குழந்தை பிறக்கும் போதே குழந்தியோடு சேர்ந்து வெளிவரும். ஆனால் சில வேளைகளில் இது குழாந்தை பிறப்பதற்கு முன்னமே வெளிவரலாம் இது cord prolapse  எனப்படுகிறது.
இது மிகவும் குழந்தைக்கு மிகவும் ஆபத்தான நிலையாகும்.
                         கருப்பைக்கு வெளியே தொப்புள் கொடி கீழிறங்குதல்             
இது ஏற்படும் பெண்களில் சிலவேளைகளில் தொப்புள் கொடி வெளியே வெளிப்படலாம் அல்லது கருப்பையை விட்டு வெளியேறிய தொப்புள் கொடி உங்கள் பிறப்பு உறுப்பினுல்லேயே இருக்கலாம்.அப்போது உங்கள் பிறப்பு உறுப்பினுல்லேயே 
எதோ ஒன்று இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். 
அவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் தொப்புள் கொடியை கையால் தொடுவதைத் தவீர்த்து கீழே உள்ள படத்தில் உள்ளது போன்ற நிலையில் இருந்தவாறே விரைவாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும். 
               வைத்தியசாலைக்கு செல்லும்போது நீங்கள் இருக்கவேண்டிய நிலை 
குழந்தை உயிரோடு இருக்கும் பட்சத்தில் மிகவும் விரைவாக சீசர் செய வேண்டி வரலாம்.சிலவேளைகளில் பிரசவத்தில் இருக்கும் போது கூட இது ஏற்படலாம். அப்போதும் பிரசவ நிலையைப் பொறுத்து உடனடியாக சீசர் செய்யவேண்டி வரலாம்.
உடனடியாக சீசர் செய்ய வேண்டி வரலாம் என்பதால் இவ்வாறன நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பவர்கள் எந்தவிதமான சாப்போடோ நீராகரமோ உட்கொள்ளாமல் வைத்திய சாலைக்கு செல்லுதல் வேண்டும்.
இது ஏற்படாமல் தடுப்பதற்கோ ,யாருக்கு ஏற்படலாம் என்று எதிர்வு கூறுவதற்கோ முடியாது.
ஆனாலும் குழந்தை பிறப்பிற்கான பிரசவம் ஆரம்பிப்பதற்கு முன்பே நீர்க் குடம் உடைபவர்களுக்கு இது ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதால் , உங்கள் பிறப்புறுப்பில் இருந்து திடீரென நீர் வெளியேறினால் வலி ஏற்பட விட்டாலும் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்.