Pages

Thursday, November 7, 2013

கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க.............


இன்றைய பெண்கள் கருவுறும்போதே குழந்தையோடு சில கேள்விகளையும் சேர்த்தே சுமக்கிறார்கள். அவற்றுள் முக்கியமானது, ‘அபார்ஷன் அபாயம்’ குறித்த அவர்களின் சந்தேகங்கள். அவற்றைப் போக்கும் விதமாக இங்கே தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் அரசு மகப்பேறு மருத்துவரான திருமதி. சி.பரிமளா, ‘அபார்ஷன் என்பது நன்மை தீமை இரண்டும் சமவிகிதத்தில் சேர்ந்து செய்யப்பட்ட கலவை’ என்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

அபார்ஷன் என்றால் என்ன?
ஒரு பெண் தாயாகும் விஷயம் மிக அற்புதமானது. பலவித கனவுகளுடன் தனது கருவை, தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் விதிவசத்தால் எல்லா பெண்களாலுமே குழந்தையைப் பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல் போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே, அதாவது 28 வாரங்களுக்குள் தானாகவோ அல்லது மருத்துவ முறையிலோ தாயை விட்டுப் பிரியும் நிகழ்வைத்தான் ‘அபார்ஷன்’ என்கிறோம்.

அபார்ஷனை வகைப்படுத்த முடியுமா?
முடியும். அபார்ஷனை மருத்துவ முறையில் மூன்று விதமாக வகைப்படுத்தலாம். அவை...
1. தானாக ஆகும் அபார்ஷன் (Spontaneous)
2. எம்.டி.பி. (Medical Termination Pregnancy)
3. செப்டிக் அபார்ஷன்

தானாக ஆகும் Spontaneous அபார்ஷனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றாய் பார்ப்போம்...

பொய்த்தோற்ற அபார்ஷன் (Therater abortion):
உண்மையில் இது அபார்ஷன் இல்லை. ஆனால் அபார்ஷன் போன்று தோற்றமளிக்கும். திடீரென்று ரத்தப்போக்கு இருக்கும். ஆனால் அபார்ஷன் நடந்திருக்காது. காரணம், கருப்பை வாய் (Cervics) மூடி இருப்பதுதான். இதுபோன்ற சமயங்களில் மகப்பேறு மருத்துவரிடம் காட்டி, தேவையான ஓய்வு எடுக்க வேண்டும். பிறகு சரியாகிவிடும்.

தவிர்க்க இயலாத அபார்ஷன் (Inevitable Abortion):
இந்த வகையில் கருவானது திடீரென்று கருப்பையின் வாய் திறந்து வெளியேறலாம். ரத்தப்போக்கு இருக்கும். இத்தகைய சூழலில் கருவகத்தை முழுவதும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.

அரைகுறை அபார்ஷன் (Incomplete Abortion) :
கருவானது முழுவதுமாக வெளிவராமல் அரைகுறையாக மட்டுமே வெளியேறும். மீதம் கருப்பையிலேயே தங்கிவிடும். இந்நிலையில் கரு முழுவதும் வந்துவிட்டதாக தவறாக நினைத்து அப்படியே விட்டுவிடுவது மிகவும் ஆபத்தானது. மகப்பேறு மருத்துவரிடம் சென்று, கருவகத்தை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் முழுவதுமாக வெளிவராத கருவின் பிசிறுகள் தங்கி, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு நிலைமை சிக்கலடையும்.

முழுமையான அபார்ஷன் (Complete Abortion):
இம்முறையில் கருவானது கருவகத்தை விட்டு முற்றிலுமாக வெளிவந்துவிடும். இப்படி முழுவதும் வந்தால், தனியாக மீண்டும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அப்படி முழுவதும் வெளிவந்துவிட்டதா என்பதை மகப்பேறு மருத்துவரிடம் சென்று சோதனை செய்து பார்த்துக்கொள்வது நல்லது.

அடிக்கடி ஏற்படும் அபார்ஷன் (Habitual Abortion):
இது பெரும்பாலும் கரு உருவான மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதத்துக்குள்தான் ஏற்படும். இதுபோன்று பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. கரு, கருப்பையில் சரியான முறையில் தங்காததால்.
2. கரு, சரியான வளர்ச்சி பெறாததால்.
3. கருப்பையின் வாய் திறந்திருந்தால்.

இதுபோன்று ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகம்.

அடுத்து வி.ஜி.றி. எனப்படும் Medical Termination of Pregnancy பற்றிப் பார்ப்போமா?
ஒரு பெண்ணுக்கு மருத்துவ முறையில் அபார்ஷன் செய்வதைத்தான் வி.ஜி.றி. என்கிறோம். சில_பல காரணங்களால் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் உடலுறுப்புகள் சரியாக வேலை செய்யாமல், சமயத்தில் சரிப்படுத்த முடியாத நிலையில் காணப்படும். இதுபோன்ற சூழலிலும், அம்மா சாப்பிட்ட மருந்துகளால் கருவான குழந்தைக்கு கிட்னி, மூளை, இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட சூழலிலும், வி.ஜி.றி. சிபாரிசு செய்யப்படுகிறது. இன்னும் சில நேரங்களிலும் இந்த முறையில் அபார்ஷன் செய்யப்படுகிறது. அவை...

1. மரபணுக்கள் தொடர்பான நோயால் குழந்தை தாக்கப்பட்டிருக்கும்போது...
2. பிளசண்டாவில் ஏற்படும் பிரச்னைகளால்...
3. பனிக்குடத்தில் தண்ணீர் அதிகப்பட்டு விடும்போது...
4. ஒன்றுக்கு மேற்பட்ட சிக்கலான கருக்கள் வளரும்போது...
5. வைரல் இன்பெக்க்ஷன்களால் தாய் தாக்கப்படும்போது...
6. மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் தாய் பீடிக்கப்படும்போது...
7. மனஅழுத்த நோய்களால் தாய் அவதியுறும்போது...

செப்டிக் அபார்ஷன்
சுகாதாரமின்மையால் ஏற்படுவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். உதாரணமாக திருமணமாகும் முன்பே தவறான பழக்க வழக்கங்களால் கர்ப்பமாகிவிடும் சில பெண்கள், மருத்துவரிடம் செல்ல பயந்து சமயத்தில் எருக்கங்குச்சியை கருக்கலைக்க பயன்படுத்துவார்கள். இதுபோன்ற சுகாதாரமில்லாத கருப்பை சுத்தப்படுத்தும் செயல்களால் உண்டாவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். இப்பழக்கம் கிராமங்களில மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தான ஒன்று. இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகள் நிறைய.

1. கருக்குழாய் அடைப்பால் திருமணத்திற்குப் பின்பு குழந்தையில்லாமை,
2. கருப்பையில் ஓட்டை உண்டாகுதல்,
3. உதிரப்போக்கு ஏற்பட்டு இரத்தம் உறையாத தன்மை உண்டாகுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

அபார்ஷன் ஏற்பட பொதுவான காரணங்கள் என்னென்ன?
1. கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் அபார்ஷன் தானாகவே ஏற்பட்டு விடும்.
2. கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் அபார்ஷன் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
3. இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் அபார்ஷன் அவசியம்ஏற்பட்டு விடுகிறது.
4. கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் அபார்ஷன் வலியுறுத்தப்படுகிறது.
5. தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது அபார்ஷன் கட்டாயமாகிறது.
6. சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட அபார்ஷனை அதிகப்படுத்துகின்றன.
7. மனநலக் கோளாறுகள் அபார்ஷனில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன.
8. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் அபார்ஷனை வலிந்து அழைக்கும் காரணிகள்.

அபார்ஷன் அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி?
1. கர்ப்பம் என்று உறுதியான உடனேயே கணவன்_மனைவி இருவரும் தாம்பத்ய உறவை நிறுத்திவிட வேண்டும். இதன் மூலம் கரு பாதிப்படையாமல் இருக்கும்.
2. அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.
3. கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் கூடாது.
4. குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம்.
5. நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
6. உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
7. முதல் மூன்று மாதங்களில் அபார்ஷன் ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி காணப்பட வேண்டும்.

இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு தாய்மார்கள் ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், அபார்ஷனை முடிந்தவரை தடுத்து விடலாம். முன்னெச்சரிக்கை ஒன்றுதான் எப்போதும் நம்மை இன்னல்களிலிருந்து காப்பாற்றும். கர்ப்பகால மகளிருக்கும் அதுதான் முக்கிய தேவையாக இருக்கிறது

கர்ப்பப்பை பலமாக.... சில உணவுகள்


- ப்ரியா பாலு -

அக்காலத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உழுத்தங்களி கொடுப்பது வழக்கமாக இருந்தது. அது மட்டுமின்றி வயது வந்த உடனேயே முட்டையையும், நல்லெண்ணெயையும் தினமும் வெறும் வயிற்றில் குடிக்கச் செய்வர். இந்தக் களியில் வெல்லம், உளுந்து, நல்லெண்ணெய் சேருவதால் இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து தாதுக்கள் என்று எல்லாம் கிடைத்து கர்ப்பப் பை பலமாக அமையும்.

இதை எப்படி செய்வது? (உழுத்தங்களி)

அரை கப் உழுந்தை வாணலியில் வறுத்து அதோடு அரை கப் அரிசி சேர்த்து மாவாகத் திரித்து சலித்துக்கொள்ளவும். 2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கவும், வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அழுக்கு, மண்நீக்கி, வாணலியைக் கழுவி மறுபடியும் அதிலேயே வெல்லக் கரைசலை ஊற்றவும். அதோடு 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும். கரைசல் கொதிக்கும்போது மாவை மத்தியில் கொட்டிக் கிளறி, ஒரு கரண்டியை அதில் குத்தி மூடி வைக்கவும். குறைந்த தணலில் 7_லிருந்து 10_நிமிடங்கள் வரை வேக விடவும்.

பிறகு அடுப்பிலிருந்து இறக்கி நன்றாகக் கிளறிவிடவும் சிறிது ஆறியதும் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலந்து உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்கவும்.

சூப் குடியுங்கள்

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு கப் சூப் பகலிலும், இரவிலும் குடித்தால் மலச்சிக்கல் இல்லாமல், அஜீரணம் இல்லாமல் உண்ட உணவு நன்கு செரித்து ஆரோக்கியமாக இருக்க இயலும்.

பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு சாலட் அல்லது தயிர்ப் பச்சடி சேர்த்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் 11 மணிக்கு உண்ணலாம்.

காய்கறிகள், பழங்கள் விதவிதமாக உண்ணவும். உதாரணத்திற்கு காலை டிபனுடன் 2 துண்டு கொய்யா, ஓர் ஆரஞ்சு சாத்துக்குடி உண்ணலாம். மதிய உணவுடன் வாழைப்பழம், மாலையில் ஆப்பிள்... காய்கறிகளைப் பொரியலாகச் செய்யும்போது ஒரே வகை காய்க்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று வகை காய்களைச் சேர்த்துச் செய்யலாம். முடிந்தவரை 3 வகை பழங்கள், 4 வகை காய்கறிகள், தினமொரு கீரை என்று கிடைக்குமாறு உணவில் மாற்றங்கள் செய்யவும்.

பால், தயிர் குறிப்பிட்டபடி அளவு தவறாமல் உண்ணவும்.
பாதாம், கிஸ்மிஸ், பேரீச்சை போன்றவை உங்கள் பட்ஜெட்டில் முடியுமானால் சேர்க்கலாம். ஆனால் கீரை சேர்த்துக் கொண்டாலே இரும்புச்சத்து கிடைத்துவிடும்.

அடை சாப்பிடுங்கள்

முழு தானியங்கள், பயறு, பருப்பு வகைகள் கலந்த டிபனாகத் தயாரிக்கலாம். அடை, தோசை, விதவிதமான இட்லியுடன் பலவகை சட்னி, சாம்பார் போன்றவை.

சோயாவில் முழுப் புரதம் உள்ளதால் தங்களுக்குப் பிடித்தமானபடி சிறிதளவு ஏதாவது ஒரு உணவுடன் சேர்க்கவும். (சைவமாக உள்ளவர்கள் முக்கியமாக இதைக் கடைப்பிடிக்கவும்)

உப்பு, ஊறுகாய், காரத்தைக் குறைக்கவும். ஃப்ரஷ் பழங்கள், காய்கறி ஜுஸ் சாப்பிடலாம்.

ஓரளவு நன்றாகக் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யவும். நன்றாக நடக்கவும். இதனால் பலவித பிரச்னைகளைத் தவிர்க்க இயலும்.

வீண் வாக்குவாதங்கள், விவாதங்கள் தவிர்த்து நேரம் கிடக்கும்போது நல்ல பாட்டுக்கள், ஸ்லோகங்கள் கேட்கலாம். மனது நிம்மதியுடன் இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

இனி கர்ப்பிணிகளுக்கான ஒரு சில சத்தான, ருசியான உணவு வகைகள்:

தோடம்பழ சர்பத்
கமலாப்பழம் என்னும் தோடம்பழத்தின் சாறு அரை லிட்டருக்கு சீனி ஒரு கிலோ போட்டு பாகுபதத்தில் காய்ச்சி, இறக்கும்போது சிறிது குங்குமப் பூ சேர்த்து கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு சாப்பிடலாம். உஷ்ணத்தினால் உண்டான பேதி, அதிகமான பித்தம், கிறுகிறுப்பு, சுவையின்மை இவை நீங்கும். அதிலும் கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்கு இது மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்று.

பூசணிக்காய் சர்பத்
வெள்ளைப் பூசணிக்காயைத் தோல், விதை நீக்கி பிசைந்து மெல்லிய துணி அல்லது மாவுச் சல்லடையில் வடிகட்டி எடுத்து ஒரு லிட்டர். 50 கிராம் இஞ்சியைத் தோல் சீவி இடித்துப் பிழிந்து சாறெடுத்துச் சிறிது நேரம் வைத்திருந்து, அடியில் தங்கியுள்ள வெண்மை நிறமான சத்தை நீக்கிவிட்டு மேலாக எடுத்து பூசணி சாறுடன் கலந்து அதை அரை லிட்டராகக் காய்ச்சி மேலாக ஒரு கிலோ சீனி சேர்த்துத் தேன் போல வரும்போது இறக்கி தினமும் இருவேளை 2 டீஸ்பூன், அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, கர்ப்பிணிப் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கருப்பைக் கோளாறுகள், கைகால் எரிச்சல், நீர்ச்சுருக்கு குணமாகும்.

முருங்கைக்காய் சூப்

தேவையான பொருட்கள்: முருங்கைக்காய்_3, வெங்காயம்_1, தக்காளி_1, பயத்தம் பருப்பு_லு டேபிள் ஸ்பூன், பூண்டு_1 பல், மிளகு, சீரகப் பொடி_சிறிதளவு, பால்_அரை கப், மக்காச் சோளமாவு _1 டேபிள் ஸ்பூன், உப்பு_தேவையான அளவு, சர்க்கரை சிறிதளவு.

செய்முறை: முருங்கைக்காய்களைப் பெரிய துண்டங்களாக அரிந்து பிரஷர்குக்கரில் ஆவியில் வேக வைக்கவும். வெந்தபின் அதில் உள்ள சதைப் பற்றை வழித்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இரண்டையும் மிகப் பொடியாக அரியவும், பயத்தம் பருப்பில் தண்ணீர் ஊற்றி, பூண்டு, அரிந்த வெங்காயம், தக்காளி சேர்க்கவும். கரகரப்பாகப் பொடித்த மிளகு, சீரகப் பொடியை ஒரு சிறு துணியில் மூட்டை போல கட்டி பருப்பினுள் போட்டு குக்கரில் வேகவைக்கவும்.

வெந்தபின் துணிமூட்டையை எடுத்து எறிந்துவிட்டு, பருப்பு ஆறியபின் முருங்கைக்காய் விழுதுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்தபின் வடிகட்டி தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும். அரை கப் பாலுடன் 1 டேபிள் ஸ்பூன் மக்காச் சோள மாவைக் கரைத்து அதையும் சூப்புடன் சேர்த்து ருசிக்கேற்ப உப்பு, சிறிது சர்க்கரை சேர்த்து சூடாக்கவும். (கொதிக்கவிடக்கூடாது) கலந்துவிட்டுக் கொண்டே சூப் நன்கு சூடானதும் சூப் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறலாம்)

பாலக் சூப்

(டெல்லி பாலக் கிடைத்தால் அதிக ருசி. இதன் நுனி கூர்மையாக இல்லாமல் அரை வட்ட வடிவில் அமைந்திருக்கும்)

இரண்டு கட்டு பாலக் கீரையை ஆய்ந்து, கழுவிக் கொள்ளவும். ஒரு வெங்காயத்தைப் பொடியாக அரியவும். பிரஷர் பானில் _ ஒரு டீஸ்பூன் வெண்ணெய் விட்டுச் சூடாக்கி, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதங்கியதும் கீரையைச் சேர்க்கவும். (அரிய வேண்டாம்) கீரை சுருங்கியதும் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு முழு பச்சை மிளகாய், கால் அங்குலத் துண்டு இஞ்சி சேர்த்து மூடி, வெயிட் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஆறிய பின் மூடியைத் திறந்து மிளகாய், இஞ்சித் துண்டு இரண்டையும் எடுத்து விடவும். (நெடி அதிகமாக இருந்தால் சூப் நன்றாக இருக்காது) கீரையை வேகவைத்த தண்ணீரோடு அப்படியே மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி தகுந்த உப்பு சேர்க்கவும். ஒருதம்ளர் பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் மக்காச்சோள மாவைக் கரைத்து சூப்பில் ஊற்றி நன்றாகச் சூடாக்கவும். கொதிக்க விடக்கூடாது. சுடச்சுட கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் மேலே சிறிது கடைந்த பாலேடு (ஃப்ரெஷ் க்ரீம்) மற்றும் துருவிய சீஸ் சேர்க்கலாம்.

மார்பு வலியை எவ்வாறு தவிர்க்கலாம்?


ஒவ்வொரு மாதவிடாயின் போதும் அல்லது சில நாள்களுக்கு முன்போ மார்பில் வலி வருவது பெண்களுக்கு காலங்காலமாய் நிகழ்ந்து வந்த ஒன்று. சில பெண்களுக்கு தலைவலி, கால்வலி, முதுகுவலி போல் மார்பில் வலியும் மாதவிடாயின் வரவைக் குறிக்கும் ஒரு சிக்னல்தான் எனலாம். மாதா மாதம் தவறாது அழையாது வந்து போகும் இவ்வலியை பெண்கள் சகித்துக் கொள்வது நடைமுறை விஷயம். இதை பிரெஸ்ட் டென்டர்னஸ் (Breast Tenderness) என்பார்கள். இவ்வலியை ஒன்றும் செய்ய இயலாது என்று கருதியே பெண்கள் சகித்துக் கொள்கிறார்கள். ஆனால் சில எளிய டிப்ஸ் மூலம் பெண்கள் இதை எவ்வாறு தவிர்க்கலாம் எனப் பார்ப்போம்...

மார்பில் வலி தோன்றுவது ஏன் என மருத்துவர்களுக்கே சரியான காரணம் தெரியவில்லை என்றாலும் பெண் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோலேக்டின் அளவில் மாற்றம் இருப்பதால் மார்பு வலி வருவதாக மருத்துவர்கள் சந்தேகிக்கிறார்கள்.

இச்சமயத்தில் மார்புகள் திரவங்களை அதிகமாக கிரகித்து தன் வசம் வைத்து கொள்வதால் மார்பு வீங்குகிறது. மாதவிடாயின்போது மார்பில் உள்ள பால் சுரப்பிகளிடம் புதுப்புது செல்கள் அதிகரிப்பதால் மார்பு வீங்கி மிகவும் மென்மையாகி-விடுகிறது. சிறு ஸ்பரிசம்கூட வேதனையாகி விடுகிறது.

இவ்வலியின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்றாலும் அதன் தாக்கத்தைக் குறைக்க இதோ சில வழிகள்..... முதலில் உள்ளாடையை (ப்ரா) சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். உறுதுணையாக இருக்கும் உள்ளாடையைத் தேர்ந்தெடுத்து அணிந்தால் பாதி வலி குறைந்த மாதிரி. அவை இறுக்கமாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இருக்கக் கூடாது. மார்புக்கு கச்சிதமாக இருந்தால் வயை குறையும்.

மார்பு வலி அதிகரித்தால் ஐஸ் கட்டிகளை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து அதை ஒரு துவாலையில் சுற்றி மார்புக்கு பத்து அல்லது பதினைந்து நிமிடம் வரை லேசான ஒத்தடம் கொடுக்கலாம். இது தண்ணீர் மற்றும் திரவங்கள் மார்புக்கு சென்றடைவதைத் தடுத்து வீக்கத்தைக் குறைக்கும்.

மற்றொரு பரிகாரம் நம் உணவில்தான் உள்ளது. நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்களை உட்கொண்டால் ரத்த ஓட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் ஈஸ்ட்ரோஜன் கட்டுப்பாட்டில் இருக்கும். மார்பு வலியும் குறையும் வாய்ப்புண்டு.

உணவில் உப்பை குறைத்துக் கொண்டால் மார்பு வலி நீங்கும். உப்பு அதிகம் சேர்ப்பதினால் உடலில் திரவ அளவு உயர்கிறது. அதனால் மார்பு வீங்குகிறது. கொழுப்புச் சத்துள்ள உணவையும் நாம் நிராகரித்தால் நெஞ்சுவலி மட்டுமல்ல, மார்பு வலிக்கும் விடை தரலாம். கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்கள் உடல் பருமனை அதிகரிப்பதால் நம் உடலால் ஈஸ்ட்ரோஜனை தன் கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் போகிறது. அதனால் கொழுப்பு இல்லாத உப்புக் குறைவான நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பழக்கத்தை அனுசரித்தால் மார்பு வலி போயே போச்சு!

நிதர்ஷனி

நோய் தீர்க்கும் ஒரு விசேட குளியல்


இந்த வெந்நீர் குளியல் மாதவிலக்கு பிசச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும் எளிமையான முறையில் தீர்க்கிறது.

டீன் ஏஜ் பெண்களாகட்டும்... நடுத்தர வயதுப் பெண்களாகட்டும்.. வயது வித்தியாசமில்லாமல் பல பெண்களையும் தொல்லைபடுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் மாதவிலக்கு பிரச்னை!

அதிலும் சில பெண்களுக்கு அந்த மூன்று நாட்களின் போது இடுப்பும் வயிறும் அப்படியே விட்டுப் போவது போல் வலிக்கும். பல பெண்கள் துடித்துப் போவார்கள். இதற்காக வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்கள்.

இந்த மாத்திரைகள் வலியைக் குறைத்து வேறுபல புதிய நோய்களை நமக்குத் தந்து கொண்டிருக்கும்.

இந்த இடுப்புக் குளியல், மாதவிலக்கு நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்னைகளைச் சரி செய்கிறது. அது மட்டுமல்ல, பெண்கள் வயதுக்கு வரத் தாமதமாவது, வெள்ளைப்படுதல், அல்சர், மற்றும் மலச்சிக்கல், இடுப்பு எலும்புக்கட்டு வலி, ஏன்... உடலுறவு தொடர்பான சில குறைகளை நீக்குவது என்று பல பிரச்னைகளுக்கும் இக்குளியல் மிக உபயோகமாக இருக்கிறது!

இடுப்புக் குளியல் என்றால் என்னவோ ஏதோ என்று நினைத்துவிட வேண்டாம். நமது உடம்பில் இடுப்புப் பகுதி தண்ணீரில் அமிழ்ந்து இருக்கும்படி உட்கார்ந்து இருந்து, குறிப்பிட்ட சில பகுதிகளை அழுத்தம் கொடுத்து, நமக்கு நாமே மசாஜ் செய்து கொள்வதுதான் இடுப்புக் குளியல்!

இயற்கை மருத்துவம் செய்யும் பல டாக்டர்கள் இந்த முறையை சிபாரிசு செய்கிறார்கள்.

இடுப்புக் குளியலை எப்படி வீட்டிலேயே செய்வது என்று வாசகிகளுக்குப் புரியும் விதமாக எடுத்துச் சொல்கிறார் இயற்கை மருத்துவரான டாக்டர். மங்கை.

‘‘இடுப்புக் குளியலை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். வீட்டில் பாத்டப் உள்ளவர்கள் அதை உபயோகித்து இந்த இடுப்புக் குளியலை எடுத்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள், நீள அகலம் அதிகமான, பெரிய பிளாஸ்டிக் டப் ஒன்றைக் கூட இதற்குப் பயன்படுத்தலாம். ‘அதையெல்லாம் வாங்குவதற்கு முந்நூறு நானூறு ரூபாய்க்கும் மேல செலவாகுமே...’ என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் மேலே சொன்ன பிரச்னைகளுக்காக ஊசிகள், மருந்துகள், டெஸ்டுகள் என்று ஒவ்வொரு தரமும் ஆயிரக்கணக்கில் மருத்துவமனைகளில் செலவழிக்கும் போது, இந்தச் செலவு மிகச் சிறிய செலவுதான்.

தவிர, ஒருமுறை வாங்கி வைத்துவிட்டால் அதைப் பல மாதங்கள், ஏன் வருடங்கள்கூட உபயோகிக்க முடியும். வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் கூட உபயோகிக்க முடியும்!

இடுப்புக் குளியலை குளிர்ந்த நீர் சாதாரணத் தண்ணீர், வெந்நீர் என்று மூன்று விதமான நீரைக் கொண்டு செய்யலாம். ஒவ்வொரு வகை நீர் உபயோகித்து குளிக்கும்போதும் ஒவ்வொரு வகை எஃபெக்ட் கிடைக்கும்.

பொதுவாகவே இதை வெறும் வயிற்றுடன், அதிகாலை மற்றும் மாலையில் செய்வதே நல்லது. முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்... இடுப்புக் குளியலில் எந்தவிதமான பின்விளைவுகளும் கிடையாது என்பதுதான்!

குளிர்ந்த நீர் இடுப்புக் குளியல்
உங்களுடைய தலையும் பாதமும் மட்டும் வெளியே இருக்கும்படி, பாத்டப்பில் அல்லது பிளாஸ்டிக் டப்பில் அல்லது தொட்டியில் அமர்ந்து கொள்ளுங்கள். உயரம் அதிகமான தொட்டி அல்லது டப்களில், டப்பின் உட்புறம் ஒரு சிறு ஸ்டூல் போட்டு, அதில் உங்கள் உட்காரும் பாகத்தை (Back) வைத்துக் கொண்டால் குளிப்பதற்கு சுலபமாக இருக்கும். பாதங்களை, டப்புக்கு வெளியே மற்றொரு ஸ்டூலில் வைத்துக் கொள் ளுங்கள். முதலில் உங்களது மார்பகங்களுக்குக் கீழே இருந்து, தொடைகள் வரை வரும்படி குளிர்ந்த நீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர், நீரில் அமிழ்ந்தபடி உங்கள் அடி வயிற்றுப் பகுதியை சின்னச் சின்ன வட்டங்களாக, மென்மையாக தேய்த்துவிட வேண்டும். சிறிது நேரத்தில் வேகத்தை சற்றே அதிகப் படுத்தித் தேயுங்கள். இதனால், அந்தப் பகுதிகளில் இரத்த ஓட்டம் சீராகும்.

இப்படி தேய்க்கும்போது அடிவயிற்றுப் பகுதி மட்டுமல்ல... பிறப்புறுப்பின் பகுதிகளையும், தொடையின் ஆரம்பப் பகுதிகளையும் நன்றாகத் தேய்த்து விடுங்கள்.

இந்தவகை இடுப்புக் குளியல் வெள்ளைப் படுதல், அல்சர், மலச்சிக்கல், போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைக் கொடுக்கும்.

வெந்நீர் இடுப்புக் குளியல்
இந்தக் குளியலில், உடல் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரின் சூடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வகைக் குளியலில் தொப்புளில் இருந்து தொடைகள்வரை நீரை ஊற்றிக் கொள்ளுங்கள். மற்றபடி, அமரும் முறை, தேய்த்து விடுதல் எல்லாமே முன்னர் சொன்னது போலத்தான்.

மாதவிலக்கின் போது அதிகமான இரத்தப்போக்கு உள்ளவர்கள், மாதவிலக்குக் கோளாறு உள்ளவர்கள், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் இந்தக் குளியலை மேற்கொள்ளலாம். பெண்கள் வயதுக்கு வருவது தாமதமாதல், மாதவிலக்கின்போது வலி அதிகம் இருத்தல் போன்ற பிரச்னைகளுக்கும் இந்த வகைக் குளியல் நல்ல பலனைத் தரும்.

சாதாரண நீர் இடுப்புக் குளியலுக்கும் இதே முறைதான்.

ஒரு விஷயத்தை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.. குளிர்ந்த நீர் இடுப்புக் குளியலுக்குப் பின்னர் வெந்நீரில், ஒருமுறை சாதாரணக் குளியல் குளித்து விடுங்கள். அதேபோல, வெந்நீர் அல்லது சாதாரண நீர் இடுப்புக் குளியலுக்குப் பின்னர் குளிர்ந்த நீரில், வெறுமனே சாதாரணக் குளியல் குளிக்க வேண்டும்.

இடுப்புக் குளியலுக்குப் பின், பப்பாளி, மாதுளை மற்றும் பப்பாளி விதைகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

பத்து வயது முதலே பெண்கள் இக்குளியலை மேற்கொள்ளலாம். எந்தெந்த நேரங்களில் இந்த இடுப்புக் குளியல் குளிக்கக் கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மாதவிலக்கின் போதும், கர்ப்பக் காலத்தின் போதும் இடுப்புக் குளியலை மேற்கொள்ளக் கூடாது. அதேபோல இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்களும் இடுப்புக் குளியலைத் தவிர்க்க வேண்டும்.

இக்குளியலுக்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்பதும், வெந்நீரின் வெப்பம் எவ்வளவு இருக்கலாம் என்பதும் தனிப்பட்ட ஒவ்வொருவரின் நிலமையைப் பொறுத்து மாறும். அதனால், முதல்முறை இடுப்புக் குளியல் செய்யும்போது மட்டும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று செய்யுங்கள்!’’

மு. சாமுண்டீஸ்வரி
நன்றி - குமுதம்

பெண்களின் மெனோபாஸ் நாட்கள்


நம்மில் பல பெண்களுக்கு, ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கிறது.... ஏன் மாதவிடாய் நிற்கிறது... அதனால் எந்தெந்த விஜயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்ற விவரங்கள் பெரும்பாலும் தெரிவதில்லை. அதே போல ‘மெனோபாஸ்’ என்றாலே, வியாதிகள் வரும் நேரம் என்றும் சிலர் பயந்து போவதுண்டு. இந்த பயங்களும் தேவையில்லை.

குழந்தை பருவம், டீன்ஏஜ் பருவம், குழந்தை பெற்றுக் கொள்ளும் பருவம் போல இதுவும் ஒரு பருவம். இந்தச் சமயங்களில் எதிலெதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவதே இக்கட்டுரை.

மெனோபாஸ் என்றால் என்ன?

நாற்பத்தைந்து வயதுக்கு மேல், பெண்ணின் ஓவரியின் செயல்பாடு குறைந்து, பீரியட்ஸ் முறையற்றதாகி, கடைசியாக சுமார் ஐம்பது வயதில் பீரியட்ஸ் சுத்தமாக நின்று விடுவதற்குப் பெயர்தான் மெனோபாஸ். அதாவது மாதவிடாய் நின்று விடும் நிலைக்குப் பெயர்தான் மெனோபாஸ்!

மெனோபாஸ் ஏற்பட்டதற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியுமா?மெனோபாஸிற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது. ஏனென்றால் கருத்தரிக்கத் தேவையான கரு முட்டை யின் உற்பத்தி குறைவிடும்.

எந்த வயதில் மெனோபாஸ் வரலாம்?
சாதாரணமாக ஐம்பது வயதைக் கடந்தாலே மெனோபாஸ் வந்துவிடும். சிலருக்கு முப்பத்தைந்து வயதுக்கு முன்னாலும்கூட மெனோபாஸ் வரலாம். அதற்கு ப்ரீமெச்சூர் மெனோபாஸ் (Premature Meno Pause) என்று பெயர்.

என்னென்ன காரணங்களால் ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வருகிறது?

ஓவரியில் ஏதேனும் கட்டி இருந்து, ஓவரியை ரிமூவ் பண்ணியிருந்தாலோ, கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்ற ட்ரீட்மென்ட் எடுத்தாலோ, இல்லையென்றால் வைரஸ் இன்ஃபெக்ஷனாலோ, ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வரலாம்.

ஒரு பெண் மெனோபாஸ் ஸ்டேஜை நோக்கிப் போகும்போது அவளுக்கு என்னென்ன அசௌகர்யங்கள் ஏற்படும்?
1. அதிக வியர்வை (ஹாட் ஃப்ளஷ்) :
ஏ.ஸி.யில் இருக்கும்போதும் நடுத்தர வயதுப் பெண்களுக்கு வேர்த்துக் கொட்டும். இதை ஹாட் ஃப்ளஷ் என்போம்! மெனோபாஸ் அவர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியே இந்த வியர்வை எல்லாம்... நம் பாட்டி காலத்திலேயே நாற்பதைக் கடந்த பெண்களுக்கும் கூட இப்படித்தான் வியர்த்துக் கொட்டியிருக்கும்... இதில் சங்கடப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா!

பாட்டி காலத்தில், பெண்கள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, காற்றோட்டமாகத் திண்ணையில் அமர்வார்கள். அவர்களுக்கு, இது ஒரு பெரிய விஷயமாக இருக்காது! ஆனால் நாற்பதைக் கடந்த இன்றைய பல பெண்கள், அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வியர்த்துக் கொட்டினால் அத்தனை நன்றாக இருக்காது. ஆனால் இது போன்ற அசௌகர்யங்களே, மனதளவில் அவர்களுக்குப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. அதனால் அதிக வியர்வையால் பாதிக்கப்படும் பெண்கள் சிகிச்சைகூட எடுத்துக் கொள்ளலாம்.

2. இரவு நேர படபடப்பு (நைட் ஸ்வெட்ஸ்):

இரவில் திடீரென வியர்த்துக் கொட்டும். மிகவும் படபடப்போடு காணப் படுவார்கள். இதனால் அமைதியான தூக்கம் போய், ஒரு வித சோர்வுக்கு ஆளாவார்கள்.

3. அடிக்கடி மாறும் மூட் (மூட் ஸ்விங்ஸ்) :

அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வரும்.
4. வெஜைனா உலர்ந்து போதல் :
ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால், வெஜைனாவின் பாதையை வழுவழுப்பாக வைத்திருக்கும் சுரப்புகள் குறைய ஆரம்பிக்கும். அதனால் வெஜைனா உலர்ந்து போய், தாம்பத்திய உறவின் போது அசௌகர்யமும், வலியும் உண்டாகலாம். தவிர, வெஜைனா பாதையில் வழுவழுப்பு ஏற்படுத்தும் இந்த திரவம்தான், அந்தப் பகுதியின் மென்மையான திசுக்களில், இன்ஃபெக்ஷன் ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரஜன் குறைவால் இந்த சுரப்பும் குறையும் போது அங்கே இன்ஃபெக்ஷன் ஏற்பட ஏதுவாகிறது.

மெனோபாஸிற்குப் பிறகு வரும் நீண்ட கால விளைவுகள் என்னென்ன?
பல பெண்களுக்கு எலும்புகள் தேய்ந்து போகலாம்.. இதற்கு, ‘போஸ்ட் மெனோபாசுவல் ஆஸ்டியோ போரோஸிஸ்’ என்று பெயர்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? மெனோபாஸிற்குப் பிறகு, பெண்களின் எலும்புகள் தேய்மானமடைந்து விடுவதால், லேசாக அவர்கள் தடுக்கி விழுந்தாலோ அல்லது குண்டுங் குழியுமான இடங்களில் ஆட்டோவில் சென்றாலோ கூட, எலும்புகள் உடைந்து ஃப்ராக்சர் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அதனால் எலும்புத் தேய்மானத்திற்கு அவர்கள் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டால், இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். (எலும்புகள் தேய்மானம் அடைவதற்கு முன்பே, டாக்டரின் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்த்து விட முடியும்!...)

பெண்களின் பிரத்யேக ஹார்மோனான ஈஸ்ட்ரஜன், இருதய பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க ஒரு பாதுகாப்புக் கவசம் போல் செயல்பட்டு வந்தது. மெனோபாசுக்குப் பிறகு ஈஸ்ட்ரஜன் சுரப்பு நின்று விடுவதால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மெனோபாஸ் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் ஏற்படலாம். கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்!

மாதவிடாய் நிற்றல்


- டொக்டர்.எம்.கே.முருகானந்தன் -

அந்தப் பெண் பயந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். மாத விடாய் வர வேண்டிய தினத்துக்கு வரவில்லையாம். 10 நாட்கள் பிந்திவிட்டதாம். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். தங்கினால் வெட்கக் கேடு.

இன்னொரு பெண்ணின் பிரச்சனை மிகவும் அந்தரங்கமானது. கணவனுடன் சேர்ந்திருக்க விருப்பமுள்ள போதும், சேர்ந்திருக்கும் போது அவளுக்கு முடிவதில்லை. சற்று வேதனை. பொறுத்துக் கொண்டாலும், கணவனுக்கு இதமாக இல்லை என அதிருப்திப்படுகிறான்.

மற்றொருத்திக்கு மேலெல்லாம் எரிவு, படபடப்பு, பதற்றம், சினம், காரணம் சொல்ல முடியாத வியர்வை, உடல் உழைவு.

இவர்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை?

இவர்கள் வயது 50க்கு சற்று கூட அல்லது குறைய. மாதவிடாய் முற்றாக நிற்பதோடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.

முதற் பெண்ணுக்கு சிறுநீர்ப் பரிசோதனை செய்தபோது கர்ப்பம் தங்கவில்லை என்பது உறுதியாகிற்று.

மாதவிடாய் முற்றாக நிற்பதற்கு முந்தைய காலங்களில் இவ்வாறு பிந்தி வருவது சகசம். நாற்பது வயதை அண்டிய காலங்களிலேயே மாதவிடாய் குழப்பங்கள் சிலரில் ஆரம்பித்து விடும்.

ஆரம்பத்தில் 8 நாள் 10நாள் என முந்தி முந்தி வரும். ஆயினும் நாட் செல்லச் செல்ல பிந்தத் தொடங்கும். 10, 15 நாட்கள் என ஆரம்பித்து 2,3 மாதத்திற்கு ஒரு தடவையென தாமதமாவதுண்டு.

ஆனால் எல்லோருக்கும் அப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாது. திடீர் என எவ்வித ஆர்ப்பாட்டம் இன்றி நின்று விடுவதும் உண்டு. மோசமான நிலையில் குருதி இறைத்து சத்திரசிகிச்சை வரை போவதும் உண்டு.

எவ்வாறாயினும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 24 மாதங்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 12 மாதங்களுக்கும் தொடர்ந்து வராதிருந்தால் மட்டுமே மாதவிடாய் முற்றாக நின்று விட்டதென நிச்சயமாகக் கூறலாம். சாத்தியங்கள் குறைவாயினும் அதுவரை கரு தங்காது என அறுதியாகக் கூற முடியாது. இவ்வயதில் கருத்தடை முறையாக ஆண் உறை பாவிப்பது பொருத்தமாக இருக்கும்.

இரண்டாவது பெண்ணுக்கு மாதவிடாய் முற்றாக நின்றுவிட்டதால் உறுப்பின் மென்சவ்வுகள் முதிர்ந்து அவளது பிறப்புறுப்பு சற்று இறுகிவிட்டது. அத்துடன் அதற்கு ஈரலிப்பையும் வழவழுப்பையும் தரும் சுரப்பிகளின் செயற்பாடு குறைந்ததால் வரட்சியாகி விட்டது. இதனாலேயே உறவு சுகமாக இருக்கவில்லை.

இதற்காக கணவனும் மனைவியும் கடுகடுப்பாகி சினத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. வரட்சியையும், இறுக்கத்தையும் தணிக்கக் கூடிய கிறீம் வகைகள் இருக்கின்றன. இவற்றை உபயோகிப்பதின் மூலம் குடும்ப வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசவைக்கலாம்.

மூன்றாவது பெண்ணுக்கு ஏற்பட்ட வியர்வை, பதற்றம், படபடப்பு, தூக்கக் குறைவு, முதலானவை மாதவிடாய் நிற்கும்போது நிகழும் ஹோர்மோன் குறைபாடுகளால் ஏற்படுவது. நோயாளிக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுக்கும் இவ்வறிகுறிகள் வீட்டில் உள்ள ஏனையவர்களால் பொதுவாக உணரப்படாதவை.

'என்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் பெரிய Fuss பண்ணுகிறா' என அவர்களை எண்ண வைக்கும்.

தினசரி உடற்பயிற்சி, தியானம், சுவாசப் பயிற்சி, குளிர்ச்சியான சூழல் போன்றவை இவ்வறிகுறிகளைத் தணிக்க உதவும். Evening primrose oil, Soya, மற்றும் சில கிழங்கு வகைகளிலிருந்து பெறப்படும் இயற்கை பொருட்கள் அவ்வறிகுறிகளைத் தணிக்கின்றன என நம்பப்படுகிறது.

இவற்றால் முடியாதபோது ஹோர்மோன் மாத்திரைகளை சில காலம் உட்கொள்ள வேண்டி வரலாம்.

மாதவிடாய் முற்றாக நிற்றல் என்பது ஒரு நோயல்ல. வாழ்க்கைச் சக்கரத்தின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி. ஆயினும் அதன் போது ஏற்படும் உடல் ரீதியானதும், உளரீதியானதுமான பல மாற்றங்கள் சில பெண்களுக்கு மிகுந்த துன்பத்தை அளிக்கின்றன.

மேற்கூறிய மாற்றங்களைத் தவிர சிறுநீர் சம்பந்தமான சில பிரச்சனைகளும் மிகுந்த இடைஞ்சலை ஏற்படுத்துகின்றன.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் இதற்காக அடிக்கடி எழும்புவதால் தனதும், வீட்டில் உள்ளவர்களினதும் தூக்கத்தையும் குழப்பல், சிறுநீரை அடக்க முடியாமல் தன்னிச்சையின்றிச் சிந்துதல், இருமும்போதும், தும்மும்போதும், முக்கும்போதும் தன்னையறியாது சிறுநீர் சிந்துதல் போன்றவை சில்லறைப் பிரச்சனைகள் போல் தோன்றினாலும், நோயாளிக்கும் வீட்டினருக்கும் சிரமங்களையும் மனவிரிசல்களையும் ஏற்றபடுத்தக் கூடியளவு சிக்கலானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எலும்புத் தேய்வு (Osteoporosis), இருதய நோய்கள் போன்ற வேறு சில பாதிப்புகளும் மாதவிடாய் முற்றாக நின்றபின் பெண்களுக்கு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.





தலை முடி உதிர்ந்து மென்மையாகி சோபை இழப்பது மாதவிடாய் நின்ற பின் ஏற்படும் மற்றொரு பிரச்சனையாகும்.


'வயதாகிவிட்டது. என்ன செய்வது? போறமட்டும் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்' என விரக்தியோடு வாழ வேண்டியதில்லை. பெண்ணாய்ப் பிறந்த பாவம் என கழிவிரக்கம் கொள்ள வேண்டியதில்லை.

நீங்களும் மற்றவர்கள் போல மகிழ்வோடு வாழலாம். வசந்தங்கள் மீண்டும் வரும்.

இவற்றைக் குணமாக்க மருத்துவம் இருக்கிறது. ஒரு சிலவற்றை முற்றாகக் குணமாக்க முடியாவிட்டாலும் பிரச்சனைகளின் தாக்கங்களைத் தணித்து நலமாகவும் மகிழ்வாகவும் வாழ வழிகள் இருக்கவே செய்கின்றன.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். தயக்கத்தை விட்டு உங்கள் பிரச்சனைகளை மருத்துவருடன் வெளிப்படையாகக் கலந்துரையாடுங்கள். வெளிப்படையாக என்பதை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

மாதவிடாய் தாமதமாக வருவதற்கான பத்து காரணங்கள்!!!

பெரும்பாலான பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 11 முதல் 13 மாதவிடாய் சுழற்சிகள் இருக்க வேண்டும். அதிகமான மாதவிடாய் சுழற்சியின் கால அளவு 28 நாட்கள் (இது ஒரு மாதவிடாய் சுழற்சியின் சராசரி கால அளவு). ஆனால் சாதாரண மாதவிடாய் சுழற்சி 21 முதல் 35 நாட்கள் வரை இருக்கும். ஒருவேளை மாதவிடாய் சுழற்சியானது தவறினாலோ அல்லது ஒழுங்கற்றதாக இருந்தாலோ, உடனடியாக மருத்துவரிடம் சென்று சோதிப்பது நல்லது.
மாதவிடாய் சுழற்சிகள் மாறுபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு மாதமும் தவறாமல் இருக்கிறது. ஆனால் அது 35 நாட்கள் இடைவெளிக்குள் வந்துவிட்டது என்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்று பொருள். ஆனால் அதுவே 40 நாட்களுக்கு மேல் வரவில்லை அல்லது நின்று விட்டது என்றால் உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.
பொதுவாக பெண்கள் கர்ப்பமாக முயற்சி எடுக்காத வரை, அவர்களுக்கு மாதவிடாய் தவறிப்போவதை விட, மற்ற எந்த விஷயமும் பெண்களின் இதயத்திற்கு அச்சத்தை கொடுப்பதில்லை.
ஏனெனில் மாதவிடாய் தாமதமானால், முதலில் நினைவுக்கு வருவது கர்ப்பம். ஆனால் தாமதமாக மாதவிடாய் வருவதற்கு கர்ப்பம் என்ற ஒரே ஒரு காரணம் மட்டும் தானா இருக்கிறது என்று கேட்டால், அது தான் இல்லை. ஆம், மாதவிடாய் தவறினால், அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இங்கு அவற்றில் 10 காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மன அழுத்தம்
வாழ்க்கையில் பல விஷயங்களை பாதிக்கிறது. அதில் மாதவிடாய் சுழற்சியும் ஒன்று. சில வேளைகளில் அதிக மன அழுத்தம் இருப்பதை வெளிப்படுத்துவதன் விளைவாக உடலின் ஹார்மோனில் சுரப்பு குறைகிறது. இதன் காரணமாக கருப்பையில் இருந்து கருமுட்டை உருவாவது மற்றும் மாதவிடாய் ஏற்படுவது தடைபடுகிறது. ஆகவே இந்நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது அல்லது நர்ஸிடம் கலந்தாலோசித்து நிதானமாக உடலை ரிலாக்ஸ் செய்வதன் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். இதற்கு சில மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்கள் ஓய்வு எடுப்பதன் மூலம் சாத்தியமாகலாம்.
உடல்நலக் குறைவு
திடீரென ஏற்படும் நோய், குறுகிய நோய் அல்லது ஒரு நீண்ட காலமாக இருக்கும் நோயும் மாதவிடாயை தாமதமாக ஏற்படுத்தும். இது பொதுவாக தற்காலிகமானது தான். இது தான் மாதவிடாய் தாமதத்திற்கு காரணம் என்று அறிய வந்தால், உடனே மருத்துவரை சந்தித்து எப்போது மாதவிடாய் ஏற்படும் என்பதில் ஆலோசனை பெறலாம்.
அட்டவணை மாற்றம்
மாறிவரும் கால அட்டவணைகள், உண்மையில் உடல் கடிகாரத்தின் ஓட்டத்தை மாற்றிவிடும். இது குறிப்பாக பகல் ஷிப்ட், இரவு ஷிப்ட் என்று வேலையானது மாறி மாறி அமைந்தால் ஏற்படும். இது போன்று அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படுவதன் விளைவாக, மாதவிடாய் சுழற்சியும் மாறுவதை உணர முடியும். ஆகவே முடிந்தால் வேலையை ஒரே ஷிப்டில் தொடர்வது நல்லது அல்லது நீண்ட இடைவெளிக்கு பின் ஷிப்ட் மாற்றுவது நல்லது.
மருந்துகள் மாற்றம்
தாமதமாக அல்லது மாதவிடாய் வராமல் இருப்பதற்கு மற்றொரு காரணம், புதிய மருந்தை முயற்சி செய்திருப்பதும் ஆகும். ஆகவே புதிய மருந்தின் பக்க விளைவுகளை பற்றி மருத்துவரிடமோ அல்லது நர்ஸிடமோ கட்டாயம் விசாரிக்க வேண்டும். சில சமயங்களில் கர்ப்ப தடை மருந்துகள் இது போன்ற விளைவுகளை சாதாரணமாக ஏற்படுத்துகின்றன. எனவே மருந்துகளை மாற்றினால், அது மாதவிடாய் சுழற்சிக்கு எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முன்னரே அறிந்து கொண்டு, பின் வாங்க வேண்டும். ஒருவேளை மருந்துகளை மாற்றியதால் தான் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கவில்லை என்றாலும் இதுவே உண்மை.
அதிக எடையுடன் இருப்பது
அளவுக்கு அதிகமாக எடை இருந்தால், ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றி சில சமயம் அவற்றை நிறுத்திவிடும். பெரும்பாலான பெண்களுக்கு தங்களின் எடை குறைந்தவுடன், அவர்கள் அதிக எடையுடன் இருப்பதாக நினைத்தாலும், அவர்களுக்கு மீண்டும் சாதாரண மாதவிடாய் சுழற்சிகள் ஏற்படுவதுடன், கருவுறுதலும் ஆரம்பமாகின்றன.
எடை குறைவாக இருப்பது
உடலில் தேவையான கொழுப்பு இல்லை என்றால் வழக்கமான மாதவிடாய் வராது. சில நேரங்களில், இந்த மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்று போகக்கூடிய வாய்ப்பு அதிகம். இதற்கு அம்னோரியா என்று பெயர். ஆகவே இதற்கு எடை அதிகரிப்பது வழக்கமான நிலைக்கு திரும்புவதற்கு வழிவகுக்கும். மேலும் இந்த காரணம் தான் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. முக்கியமாக அதிக வேலை பளு உள்ள பெண்களுக்கும் அல்லது தொழில்முறை தடகள வீராங்கனைகளுக்கும், இந்த தவறுதல் காரணமாகிறது.
தவறான கணித்தல்
மாதவிடாய் சுழற்சி ஒரு பெண்ணில் இருந்து மற்ற பெண்ணிற்கு வேறுபடும். சராசரி மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் என்று நினைத்து கொண்டிருக்கும் போது, அது எல்லோருக்கும் பொருந்தாது. சில வேளைகளில் தவறாக கணக்கிடுவதனால், அது காலதாமதமாக வருவதாக நம்புகிறோம். ஆகவே ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால், எப்போது கரு முட்டை உற்பத்தியாகும் என்று தெரியும் பட்சத்தில், கருமுட்டை வெளியேறிய இரண்டு வாரங்கள் கழித்து, தங்களுடைய மாதவிடாய் சுழற்சியை கவனியுங்கள். அது தங்களுடைய மாதவிடாய் சுழற்சியை சரியாக கணிக்க உதவும்.
பெரி-மாதவிடாய்
பெரி-மாதவிடாய் என்பது இனப்பெருக்க வயதில் இருந்து இனப்பெருக்கம் செய்ய இயலாத வயதுக்கு மாறுவதற்கான காலம் ஆகும்.இந்த கால கட்டத்தில் மாதவிடாய் இலேசாகவும், அதிகமாகவும் காணப்படும். அடிக்கடி அதிகமாகவும் அல்லது அடிக்கடி குறைவாகவும் ஆனால் பெரும்பாலும் சாதாரண மாதவிடாய் சுழற்சி போன்று இருக்காது. ஆகவே கர்ப்பம் ஆக விரும்பவில்லை எனில் கர்ப்பத்தடை காரணிகளை உபயோகப்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும். ஏனெனில் இன்னும் சிறிது காலம் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளது.
இறுதி மாதவிடாய்/மெனோபாஸ்
மெனோபாஸ் என்பது வாழ்க்கையில் இன்மேல் கருத்தரிக்க வாய்ப்பு இல்லாத அல்லது மாதவிடாய் நிற்க கூடிய ஒரு பருவம். மெனோபாஸ் இயற்கையாக நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வு அல்லது கருத்தடை அறுவை சிகிச்சை மூலம் இது சாத்தியமாகலாம் அல்லது ஹீமோதெரபி அதாவது மருந்துகள் எடுத்து கொள்வதன் மூலமாக இதை அடைய முடியும்.
கர்ப்பம் தரித்தல்
இறுதியாக தான்! கர்ப்பமாக இருப்பதால், மாதவிடாய் தவறி இருக்கலாம்! இதற்கு ஒரு எளிய கர்ப்ப பரிசோதனை செய்வதன் மூலம், அறிந்து கொள்ள முடியும். சிறுநீர் கர்ப்ப சோதனை மற்றும் இரத்த கர்ப்ப சோதனைகள் ஹார்மோன் ஹெச்.சி.ஜியை கண்டறிய உதவும். இது கர்ப்பத்தை உறுதிப்படுத்தும். பொதுவாக சிறுநீர் சோதனையை எளிமையாக வீட்டிலேயே செய்து கொள்ளலாம். இதற்கான சோதனை கிட் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது முக்கியமாக செய்யக் கூடாதவை சில……

* மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதுமானதும், மேடு பள்ளங்களுள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும் இருக்கைகளிலும் உட்காரக் கூடாது.
* மலம், சிறுநீர் உந்துதல்களை அடக்கக் கூடாது. கடுமையான அல்லது தனக்கு உகந்ததல்லாத உடற்பயிற்சி செய்யக் கூடாது.
* மல்லாந்து படுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்ளும்.
* அதிக காரம், சூடான வீர்யமுள்ள உணவுகளைப் பயன்படுத்தக் கூடாது. வயிற்றுக்குப் போதாமல் சாப்பிடக் கூடாது. இவற்றால் சில சமயம் குழந்தை இறக்க நேரிடலாம். அல்லது அகாலத்தில் நழுவலாம்.
* உடம்பை மூடிக் கொள்ளாமல் படுத்துக் கொண்டாலும், இரவில் சஞ்சாரம் செய்தாலும் சிசுவுக்குச் சித்த பிரமை உண்டாகும்.
* சண்டை, கலகங்களில் ஈடுபட்டால் சிசுவுக்குக் காக்கை வலிப்பு உண்டாகும்.
* எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் பயப்படும் சுபாவமுள்ள குழந்தை பிறக்கும். இவையனைத்தும் சுகப் பிரசவத்தைக் கெடுக்கும்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை!

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை. ஏனெனில் எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த சிறிய பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.
மேலும் இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக்கூட எளி தில் தீர்த்துவிட முடியும். பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்னவென்றால் உடல் பருமன், தொண்டைப்புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பது தான்.
ஆனால் இதில் இவற்றைத் தவிர, இன்னும் பலருக்கும் தெரியாத நன்மை கள் நிறைந்துள்ளன. எலுமிச்சையானது உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் மிகவும் சிறந்தது. இப்போது எலுமிச்சையை சாப்பிட்டால், எந்த பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதில் எலுமிச்சையைப் பற்றிய விஷயங்களை அறிந்தும், தெரிந்தும் கொள்ளலாம்.
சரியான குடலியக்கத்திற்கு…
தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராக செயல்படுவதோடு, குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக் களும் வெளியேறிவிடும்.
தொண்டை புண்ணை சரிசெய்ய…
எலுமிச்சையில் ஆன்டி பாக்டீரியல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை ஜுஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகிவிடும்.
இளமையை தக்க வைக்க…
எலுமிச்சையில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் டுகள் நிறைந்துள்ளதால், அது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க…
எலுமிச்சையில் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியமும் உள்ளது. எனவே உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அப்போது உண்ணும் உணவுகளில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், ரத்த அழுத்தத்தைக் குறைக் கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…
எலுமிச்சையில் வைட்டமின் `சி’ அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளதால், அதனை சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இதனால் எந்த விதமான நோய் தாக்கு தல்களில் இருந்தும் தப்பிக்கலாம்.
கொழுப்பை குறைக்க…
எலுமிச்சை ஒரு சிட்ரஸ் பழம். அத்தகைய பழத்தின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களானது கரைக்கப்படும். எனவே உடல் எடையை குறைக்க தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.
குமட்டலை போக்க…
சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் போது, வாந்தி வருவது போல் உணர்வார்கள். அவ்வாறு குமட்டல் ஏற்படும் போது, எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால், குமட்டலைப் போக் கலாம்.
வாத நோயை சரிசெய்ய…
எலுமிச்சையில் நீர்ப் பெருக்கப் பொருள் அதிகம் உள்ளது. அதாவது, எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். எனவே வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை ஜுஸ் குடித்து வந்தால் நல்லது.
புற்றுநோயை தடுக்க…
அனைவருக்குமே எலு ச்சையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது என்று தெரியும். அதே போன்று இதில் பல வகையான புற்றுநோயை தடுக்கும் பொருளும் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் எலுமிச்சையை ஜுஸ் போட்டு குடித்து வந்தால், புற்றுநோயின் அபாயத்திலிருந்து விடுபடலாம்.
தலைவலியை போக்க…
உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் இருந்தால் வருவது தான் தலைவலி. இத்தகைய தலைவலியைப் போக்குவதற்கு, எலுமிச்சை டீ மிகவும் சிறந்ததாக இருக்கும்.
நாடாப் புழுக்களை அழிக்க…
குழந்தைகளுக்கு வயிற்றில் நாடாப்புழுக்களானது இருக் கும். இவ்வாறு வயிற்றில் புழுக்கள் இருந்தால், வயிற்று வலி மற்றும் வழக்கத்திற்கு மாறாக மலம் கழிக்க நேரிடும். இத்தகைய பிரச்சினையை போக்குவதற்கு எலுமிச்சை மிகவும் உதவியாக இருக்கும். எப்படியெனில் எலுமிச்சையில் புழுக்களை அழிக்கக்கூடிய அளவில் சக்தியானது உள்ளது.
உணவை செரிப்பதற்கு…
அனைவருக்குமே செரிமானப் பிரச்சனை அவ்வப்போது வரும். இவ்வாறு செரிமானப் பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு டம்ளர் எலுமிச்சை ஜுஸில், உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் குணமாகி விடும்.
உடலை சுத்தப்படுத்த…
தினமும் உடலில் நச்சுக்களானது பலவாறு உள்ளே நுழையும். உதாரணமாக, ஜிங்க் உணவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவற்றின் மூலம் நுழையும். ஆனால் அத்தகைய நச்சுக்களை போக்கும் சக்தி எலுமிச்சைக்கு உள்ளது. எனவே தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜுஸ் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளி யேறிவிடும்.
பற்களை ஆரோக்கியமாக வைக்க…
எலுமிச்சை சாற்றில், உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஊற்றி, அதனை வாயில் ஊற்றி கொப்பளித்தால், பற்களில் உள்ள கறைகள், பாக்டீரியாக்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கி, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
காயங்களை குணப்படுத்த…
உடலில் ஏதேனும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், அப்போது அதனை குணமாக்குவதற்கு, அன்த இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை தடவினால், காயங்களில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, காயங்கள் எளிதில் குணமாகிவிடும்.
முகப்பருவை போக்க…
சருமத்தில் ஏற்படும் பிரச்சி னைகளை போக்குவ தற்கு ஒரு சிறந்த பொருள் என்றால் அது எலுமிச்சை தான். எனவே தான் சரும பராமரிப்பில் எலுமிச்சை அதிகம் சேர்க்கப்படுகிறது.
கல்லீரல் பிரச்சனைக்கு…
எலுமிச்சையை தினமும் உணவில் சேர்த்தால், கல் லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
பிறப்புறுப்பை சுத்தமாக்க…
பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்த பயமாக உள்ளதாப அப்படியெனில், கெமிக்கல் இல்லாத இயற்கைப் பொரு ளான எலுமிச்சையைக் கொண்டு சுத்தம் செய்தால், பிறப்புறுப்பில் எந்த ஒரு பக்க விளைவும் வராமல் இருக்கும்.
கண் பிரச்சனையை போக்க…
எலுமிச்சையில் ரூடின் என்னும் பொருள் உள்ளது. ஆகவே எலுமிச்சை உண வில் சேர்த்தால், கண் பார்வை கூர்மையாவதோடு, ரெட்டினாவில் உள்ள பிரச்சினைகளையும் சரிசெய்யலாம்.
சிறுநீரகக் கற்களை கரைக்க…
எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. எனவே சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்பவர்கள், எலுமிச்சை ஜுஸை அவ்வப் போது குடித்து வந்தால், சிட்ரிக் ஆசிட்டானது சிறுநீரகக் கற்களை கரைத்துவிடும். இதுபோன்ற எண்ணற்ற மருத்துவ குணாதிசயத்தை தன்னகத்தே கொண்டுள்ள எலுமிச்சையை நாமும் பல்வேறு பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிப்பதோடு நோயின்றியும் வாழ்வோம்.

சிறுநீரக‌ கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும் கருஞ்சீரகம்!

 
 
குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.  கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீரக‌ கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும். கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது.  தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது.  கருஞ்சீரகத்தைக் (vinegar)ல் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும். கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.  கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தின் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.

கருத்தரிப்பது கடினம் என்ற நிலைக்கு சில அறிகுறிகள்

பொதுவாக கர்ப்பமாவதற்கு 20-25 தான் சரியான வயது. ஆனால் தற்போது நிறைய பெண்கள், எதிர்காலத்தை மனதில் கொண்டு, வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின், குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பர்.
இதனாலேயே பல பெண்கள் 30 வயதுகளில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்தால், இறுதி மாதவிடாய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டு, பின் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். மேலும் தற்போது நிறைய பெண்களுக்கு சீக்கிரமே இறுதி மாதவிடாயானது ஏற்படுவதால், விரைவில் திருமணம் செய்து, கருத்தரிப்பதே சிறந்தது.
இறுதி மாதவிடாய் நெருங்கி, கருத்தரிப்பது கடினம் என்ற நிலை ஏற்படுவதற்கான சில அறிகுறிகளைப் பார்ப்போம்.
• இறுதி மாதவிடாய் என்பதற்கான முதல் அறிகுறி ஹாட் ஃப்ளாஷ் (Hot Flash) எனப்படும் உடலில் ஏற்படும் ஒருவித வெப்பமாகும். இந்த நிலை வந்தால், வயதாகிவிட்டது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன என்பதற்கான ஒரு அறிகுறியாகும். இந்த நிலை வந்தால், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும்.
• 30-35 வயது வரை இனப்பெருக்க உறுப்பான எந்த ஒரு வேலையும் செய்யாவிட்டால், கருப்பையில் நார்த்திசுக் கட்டிகள் வளர ஆரம்பிக்கும். இதனால் கருப்பையின் உள்ளே விந்தணு செல்வதில் தடை ஏற்பட்டு, கருத்தரிப்பதில் சிரமம் ஏற்படும்.
• ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் இறுதி மாதவிடாய் நெருங்கினால், சில சமயங்களில் அதிக சந்தோஷத்துடனும், சில நேரங்களில் அதிக மன வருத்ததுடன் இருப்பது போன்றும் உணர நேரிடும். இத்தகைய நிலை பொதுவாக மாதவிடாய் ஏற்படும் முன்பு ஏற்படுவது சாதாரணம் தான். இருப்பினும் இறுதி மாதவிடாய் என்றால், இது இன்னும் வேறு மாதிரியாக இருக்கும்.
• முறையற்ற மாதவிடாய் சுழற்சி சில இளம் பெண்கள் முறையற்ற மாதவிடாயினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதிலும் 34 வயது வரை சீரான மாதவிடாய் சுழற்சியையும், அதற்கு பின் முறையற்ற மாதவிடாய் சுழற்சியும் இருந்தால், கவலைப்பட வேண்டிய நேரம் தான்.
• உடலுறவில் ஆர்வமின்மை எப்போது உடலுறவில் ஆர்வம் இல்லாமல் போகிறதோ, அதுவும் இறுதி மாதவிடாய்க்கான நேரம் நெருங்கிவிட்டது என்பதற்கான அறிகுறியே.
• எடை அதிகரித்தல் 20-30 வயதுகளில் உடல் எடை அதிகரிப்பது சாதாரணமானது தான். ஆனால் அதற்கு மேல், எதுவும் செய்யாமல் உடல் எடையானது தானாக அதிகரித்தால், அது இறுதி மாதவிடாய் வரப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும்.
• தைராய்டு தைராய்டு சுரப்பியானது சரியான செயல்படாததால், தற்போது பிரச்சனையின்றி கர்ப்பமாவது என்பது கஷ்டமாகிறது. ஏனெனில் தைராய்டின் போது எப்போது வேண்டுமானாலும் இரத்தப்போக்கு ஏற்படுவதால், எதையும் சரியாக கண்காணிக்க முடியாத நிலை ஏற்படுவதோடு, சில சமயங்களில் தைராய்டு இருந்து கொண்டே கர்ப்பமானால், குழந்தை பிறக்கும் போது மனநிலை பாதிக்கப்பட்டு பிறக்கும்.

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எதைச் சாப்பிடலாம்?

முதல் மூன்று மாதங்களில் மசக்கை காரணமாக உணவை மனம் வெறுக்கும். இந்த நாட்களில்தான் உணவில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். திட உணவு எடுத்துக்கொள்ள முடியாத சூழலில் பழச்சாறு போன்ற திரவ உணவுகளையேனும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இத்தகைய சமயங்களில் பெண்கள் உணவை வெறுத்தால், அதுவே ஊட்டச் சத்துக் குறைவை உருவாக்கி ரத்த சோகைக்கு வழிவகுத்து, குழந்தையின் ஆரோக்கியத்தையும் தாயின் உடல் – மன வலிமையையும் குறைத்துவிடும். ஆகவே, தொடக்கத்தில் இருந்தே நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.
நீர்ச் சத்துக்கு இளநீர், வாந்தியை எதிர்கொள்ள மாதுளை, இரும்புச் சத்துக்குப் பேரீச்சை ஆகியவை இந்த நாட்களில் பேருதவி செய்யும். 4-வது மாதத்தில் இருந்து இரும்புச் சத்து மிக்க கீரை, காய்கள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏனெனில், உடலில் இரும்புச் சத்தின் அளவு குறைந்தால் ஹீமோகுளோபினின் அளவும் குறையும். இந்த ஹீமோகுளோபின்தான் உடலின் பிற பாகங்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்ல உதவுகிறது. இதன் அளவு குறையும்போது குழந்தைக்கும் தேவையான பிராண வாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்படும்.
இதனால் போதிய இரும்புச் சத்து உள்ள உணவுகளையோ, மாத்திரைகளையோ எடுத்துக்கொள்வது தேவையாகிறது. நார்ச் சத்துக்கள் நிரம்பியுள்ள காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், மலச்சிக்கல் பிரச்னையை முறியடிக்க முடியும்.
கீரை, ஓட்ஸ், புதினா, உலர் திராட்சை, கொத்தமல்லி, பேரீச்சை போன்ற உணவுப் பொருட்களில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது. கொண்டைக்கடலை, ராஜ்மா, பயறு வகைகளில் கால்சியம், புரதச் சத்து அதிகம் இருக்கிறது. உருளை, கேரட், வேர்க்கடலை, பாதாம் பருப்பு வகைகளில் புரதம் இருக்கிறது.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நூக்கோல் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறது. அன்றாட உணவில் இவற்றைச் சமச்சீரான விகிதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தது தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடித்தால், தாய்க்கு நல்லது. குறிப்பாக பனிக்குடத்துக்கு நல்லது!

குழந்தை பிறந்த உடனே செக்ஸ் வேண்டாமே! : அட்வைஸ் ரிப்போர்ட்

புதிதாய் திருமணமானவர்களுக்கு பெற்றோர் புரமோஷன் கிடைத்து விட்டால் சந்தோசம்தான். அப்புறம் அவர்களின் கதி அதோ கதிதான் ஜாக்கிரதை ஜாக்கிரதை என்று கூறி பத்து மாதங்கள் பட்டினி கிடக்க வைத்து விடுவார்கள். இதில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் முழித்துக்கொண்டிருப்பவர்கள் ஆண்கள்தான். எப்படா குழந்தை பிறக்கும் என்று காத்திருந்து குழந்தை பிறந்த சில வாரங்களிலேயே உறவுக்காக மனைவியை கட்டாயப்படுத்துவர்களும் உண்டு. அவர்களுக்காகத்தான் இந்த கட்டுரை. குழந்தை பிறந்த சில வாரங்களில் தாம்பத்ய உறவு கொண்டால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
பேறு காலம் முடிந்த உடன் பிறந்த குழந்தையை பாதுகாப்பாக கவனிக்க வேண்டும். குழந்தையை அருகில் படுக்கவைத்துக்கொண்டு தம்பதியர் உறவில் ஈடுபடுவதன் மூலம் குழந்தைக்கு தொற்றுநோய் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
குழந்தை பிறந்த சில வாரங்களில் உறவில் ஈடுபடுபவர்கள் நீண்ட நேரத்தை செலவழிக்க கூடாதாம். இதனால் தேவையற்ற சக்தி வீணாகுமாம்.
குழந்தை பேறினால் மனைவிக்கு உறுப்பில் காயங்கள் ஏற்பட்டிருக்கும். எனவே காயம் ஆறுவதற்கு முன்பாக உறவில் ஈடுபடுவதால் நோய் தொற்று ஏற்படுமாம்.
பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதற்காக மார்புகளில் தாய்ப்பால் சுரக்க ஆரம்பித்திருக்கும். எனவே அவசர உறவு மார்பகங்களில் காயங்களையும், பாதிப்பினையும் ஏற்படுத்தும் என்கின்றனர். இதனால் பிறந்த குழந்தைகளுக்கும் நோய் தொற்று ஏற்படுமாம்.
குழந்தை பிறப்பிற்கு முந்தைய சில மாதங்கள் வரை தம்பதியர் செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் பிறப்புறுப்புக்களின் மூலம் நோய் தொற்று எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான். அதுபோல குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை தம்பதியர்கள் தாம்பத்ய உறவில் ஈடுபடுவதை தள்ளிப்போடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

Tuesday, November 5, 2013

பாலியல் சந்தேகங்களும் அதற்கான பதில்களும் – பாகம் 02

பாலியல் – கேள்விப் பதில்களில் இந்த முறை சுய இன்பம் தொடர்பிலான கேள்வி பதில்களை பார்ப்போம்…. ஏனெனில் பெரும்பாலான வாசகர்கள் சுய இன்பம் தொடர்பில் தான் கேள்விகளை கேட்டு இருந்தார்கள்.
கேள்வி: சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?
மருத்துவரின் பதில்: பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விளம்பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.
உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும்
உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள்.
இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்ன வென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.
கேள்வி: எனக்கு வயது 24. எட்டு வருடமாக சுய இன்பம் அனுபவித்து வருகிறேன். இதனை மாற்றிகொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவரின் பதில்: உங்களுக்கு 24 வயது ஆவதால் நீங்கள் சுய இன்பம் செய்வதை தப்பு என்று கூறமாட்டேன். ஒரு மனிதன் 13, 14 வயதிலேயே வயதுக்கு வந்துவிடுகிறான். சமுதாய கட்டுப்பாடுகாரணமாக அவ்வயதில் உடன் திருமணம் செய்ய முடியாது. திருமண வாய்ப்பு இல்லை என்றால் உடம்பு சும்மா இருக்காது. அந்த வயதில் தேவைப்படும். இயற்கையாகவே நமது உடம்பு இந்த இந்த வடிகாலுக்கு இரண்டு வழி இருக்கிறது.
1. சுயஇன்பம்,
2. பரத்தை தொடர்பு
பரத்தை தொடர்பில் எய்ட்ஸ் பரவல் இருப்பதால் பரத்தையிடம் போவது வம்பை விலை தந்து வாங்குவது போலாகிவிடும். எனவே சுய இன்பம் மட்டுமே ஒரே ஒரு வடிகால். ஓரளவு இதனை நீங்கள் கட்டுபாடுக்குள் வைத்து கொள்ளலாம். மனதை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு போன்றவற்றில் பங்கேற்கலாம். இரவு வெதுவெதுப்பான நீரில் குளித்து, தியானம் செய்து தூங்க போகலாம். அப்போது இப்பழக்கம் குறையக்கூடும்.
சுய இன்பம் செய்தால் மலடாகி விடுவீர்கள் என்கிறார்களே?
மருத்துவரின் பதில்: சுய இன்பத்தால் உடம்புக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. மலடு ஆகிவிடுவீர்கள் என்று சொல்லும் விளம்பரம் எல்லாம் தவறான விளம்பரங்கள். நம்பாதீர்கள். இந்த மாதிரி விளம்பரம் செய்யும் டாக்டர்கள் எல்லாமே சரியாக முறையாக படித்த டாக்டர்கள் கிடையாது. மேலும் நீங்கள் விளக்கம் பெறமுதல் கேள்விக்கான பதிலையும் சேர்த்து படித்துக் கொள்ளுங்கள்.
கேள்வி: விந்தை வீணாக்காதீர்கள். ஒரு சொட்டு விந்து 100 சொட்டு ரத்தத்திற்கு சமம் என்கிறார்களே இது உண்மையா?
மருத்துவரின் பதில்: இந்த கருத்து உண்மை கிடையாது. நாம் சாப்பிடும் சாப்பாடு உடம்பில் சத்து ஆக மாறி ரத்தத்தில் கலந்துவிடும். அதேபோன்று நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜன் ரத்தத்தில் சேர்ந்து, இந்த ரத்தம் விதைபைக்கு போகும்பாது இந்த ரத்தத்தையும் ஆக்ஸிஜனையும் விதை பயன்படுத்தி கொண்டு ரத்தத்திற்கு திரும்பவும் கழிவு பொருட்களை கார்பண்டை ஆக்ஸைடு திருப்பி தரும். இந்த விதையின் ஆரோக்கியத்திற்கு ரத்தம் தேவைப் படுகிறதே தவிர, நேராக ரத்தம் விந்தாக மாறுவது கிடையாது. இதுமட்டுமல்ல, ஒரு ஆண் வயதுக்கு வந்ததிலிருந்து கடைசி மூச்சுவரைக்கும் ஒவ்வொரு வினாடியும் உடம்பில் விந்து உற்பத்தி நடந்து கொண்டே இருக்கும். இது நிறுத்த முடியாத ஊற்று மாதிரி. விதையில் பிறக்கும்போதே இருக்கும் குறைபாடோ அல்லது ஒரு நோயோ அல்லது அடிப்பட்ட காயம் போன்ற சூழ்நிலைதான் விந்து உற்பத்தியை பாதிக்கும். ஆகையினால் விந்து வேஸ்டாகிறது என்று எவரும் கவலைப்பட தேவையில்லை.
கேள்வி – எனக்கு அடிக்கடி கனவில் விந்து வெளியாகிவிடுகிறது. இதை எவ்வாறு நிறுத்துவது?
மருத்துவரின் பதில் – இது இயற்கையானது. கனவில் விந்து வெளியாவது குக்கரில் உள்ள சேஃப்டி வால்வ் போன்றது. உங்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. உங்களுக்கு மாற்று ஏற்பாடு கிடைக்கும்போது, அதாவது சுயஇன்பம் அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது இது குறைந்து விடும்.
கேள்வி – சுயஇன்பம் அனுபவிப்பது ரத்த சோகையை ஏற்படுத்துமா?
பதில் – இல்லை. இழப்பு சீக்கிரமே ஈடு செய்யப்பட்டுவிடும்.
கேள்வி – நான் சுய இன்பம் அனுபவிக்கும்போது விந்தோடு ரத்தம் வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவரின் பதில் – பயப்பட வேண்டாம். இது பொதுவாக ஏற்படுவதுதான். தொற்றுநோய் காரணமாக பொதுவாக ஏற்படுவதுதான் இது. ஆனால் எப்போதும் ஏற்படாது. இது ரத்தக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவும் ஏற்படலாம். நீங்களே தகுதி பெற்ற மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
கேள்வி – நான் வழக்கமாக வலது புறமாக சுய இன்பம் செய்வேன். விறைப்பு ஏற்படும்போது எனது குறி வலதுபுறமாக வளைந்துள்ளது. இந்த வளைவை நான் சரிசெய்ய விரும்புகிறேன். நான் இடது கரத்தால் சுய இன்பம் அனுபவிக்க வேண்டுமா?
மருத்துவரின் பதில் – இல்லை. வளைவு மையப்பகுதியிலிருந்து 30 டிகிரிக்கும் குறைவாக இருந்தால் சாதாரணமாக உடலுறவு கொள்ள முடியும். அப்படி இல்லையென்றால் நீங்கள் கண்டிப்பாக சிறுநீரக மருத்துவரை பார்க்க வேண்டும்.
கேள்வி – எனக்கு வயது 25. நான் நீண்ட இடைவெளிவிட்டு சுயஇன்பம் அனுபவிக்கும்போதெல்லாம் கடினமாக உணருகிறேன். விந்தோடு மஞ்சள் நிற திரவம் வெளிப்படுகிறது. ஏன் இப்படி ஆகிறது?
மருத்துவரின் பதில் – மாதிரியை (பேதாலாஜிஸ்ட்) நோய் குணங்களை ஆராயும் நிபுணரிடம் எடுத்துச் செல்லுங்கள். அது என்னவென்று அவர் சொல்லுவார். அது விந்து திரவமாக இருப்பதால் அது என்னவாக இருந்தாலும் உங்களை பாதிக்காது.
கேள்வி – எனக்கு வயது 28. எனக்கு திருமணமாகப் போகிறது. நான் கடந்த 14 வருடங்களாக எப்போதாவது சுயஇன்பம் அனுபவித்து வருகிறேன். அண்மைக் காலமாக விந்து மிகவும் மென்மையாக தண்ணீர்போல உள்ளது. நான் கைகளை பயன்படுத்தி சுயஇன்பம் காணும்போது அது திடமாகிறது. என் விந்துவின் தரம் நன்றாக உள்ளது என்றாலும் நான் கைகளால் தொடும்போது ஒட்டுவதில்லை. என்னால் தந்தையாக முடியுமா என்று கவலைப்படுகிறேன். தயவுசெய்து விளக்கவும்.
மருத்துவரின் பதில் – உங்கள் வயதில் தானாக விறைப்பது கடினமே. உங்கள் விந்துவை கவனிப்பதை நிறுத்திவிடுங்கள். அது தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும்.
தொடர்ந்தும் உங்களது கேள்விகளை, சந்தேகங்களை அனுப்புங்கள்….
சுய இன்பத்தை விளக்கும் இணையத்தில் வெளிவந்திருந்த வித்தியாசமான போஸ்டர்…
masturbation month

அதிக நேர இன்பம் கிடைக்கனுமா?

நிறைய பேருக்கு இந்தக் கவலை இருக்கும். படுக்கை அறையில் என்னால் நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க முடியவில்லை, மனைவியை நீண்ட நேரம் திருப்திப்படுத்த முடியவில்லை, என்னால் முடியவில்லையே என்று பலரும் வருந்திக் கொள்வார்கள் – உள்ளுக்குள். கவலைய விடுங்க, உங்க கிட்டேயே இதற்கான வைத்தியம் இருக்கு. அதைப் பார்ப்போம் வாருங்கள்…
உச்சகட்டம் எனப்படும் கிளைமேக்ஸை அடைவதற்கு முன்பே சில தந்திரங்களை நாம் பயன்படுத்தினால் நீடித்த இன்பத்தை எளிதில் அடைய முடியும். இதற்காக மருத்துவர்களிடமோ, வயகாரா போன்ற மருந்துகளிடமோ நாம் தஞ்சம் புகத் தேவையில்லை.
நிறுத்துங்கள் – தொடருங்கள் – நிறுத்துங்கள்
இது ஒரு டெக்னிக். அதாவது உறவை ஆரம்பித்து மும்முரமாக போய்க் கொண்டிருக்கும்போது விந்தனு வெளியேறப் போவது போல தோன்றும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். சில விநாடிகள் ஓய்வெடுங்கள். அதாவது 5 முதல் 10 விநாடிகள் வரை. இப்போது சற்று வேகம் குறைந்திருக்கும். பிறகு மீண்டும் உறவைத் தொடருங்கள். இப்படியே சில நிமிடங்கள் வரை செய்து வாருங்கள். இதன் மூலம் உங்களுக்கும் நீண்ட நேரம் உறவில் இருந்தது போல இருக்கும். உங்களது துணைக்கும் தேவையான இன்பம் கிடைக்கும்.
ஆண்களை விட பெண்களுக்கே உச்சகட்டம் வர நேரமாகும். எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும்போது உங்களை விட உங்களது மனைவிக்குத்தான் நிறைய இன்பம் கிடைக்கும்.
பிசைந்து கொடுங்கள்…
அடுத்து இன்னொரு டெக்னிக் இருக்கு. அதாவது உறவின்போது உச்சகட்டம் வரும் போல தெரியும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். பின்னர் ஆண்குறியின் பின்னால் உள்ள டியூப் போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பிசைந்து கொடுங்கள். அப்படிச் செய்யும்போது உணர்வு மட்டுப்படும், விந்தனு வெளியேறுவதை சற்றே தடுத்து நிறுத்தலாம். உணர்வு வெகுவாக குறைந்ததும் மறுபடியும் உறவைத் தொடருங்கள்.
உணர்ச்சிகளைத் தூண்டாத ஆணுறை…
இதேபோல இன்னும் ஒரு எளிமையான விஷயம், ஆணுறை. அதாவது சில ஆணுறைகள் உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் தூண்டுவதில்லை. அப்படிப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடும்போது நீண்ட நேரம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.
இந்த வகை ஆணுறைகளில் பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டாலும் கூட உணர்வுகள் உச்சகட்டத்தை அடைய (இளமை.ப்ளக்போட்ஸ்.கொம்) சற்று அவகாசம் பிடிக்கும். நீண்ட நேர இன்பத்தை விரும்புவோருக்கு இந்த வகை ஆணுறைகள்தான் சரிப்பட்டு வரும்.
அதேசமயம், இப்படிப்பட்ட ஆணுறைகளை அணிவதற்கு முன்பு தலைகீழாக மாற்றி போட்டு விடாதீர்கள். பிறகு தவறாகப் போய், நீடித்த இன்பத்திற்குப் பதில், சுருக்கமாக முடிந்து போய் கசப்பாகி விடக் கூடும்.
இதுபோல நிறைய இருக்கிறது… அனுபவத்தின் மூலம் அறிந்து இன்பத்தை நுகருங்கள்…!

செக்ஸில் பிரச்சினையா ?

செக்ஸில் பிரச்சினை வரலாம், ஆனால் செக்ஸே பிரச்சினையாக மாறினால்… நினைக்கவே பயமாக இருக்கிறதல்லவா… ஆனால் நிதர்சனம் அதுவாகத்தான் இருக்கிறது. நிறையப் பேருக்கு குறி்ப்பாக பெண்களுக்கு செக்ஸே பெரும் பிரச்சினையாக மாறி மனதையும் உடலையும் வாட்டி வதைத்து வருவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.
அதிலும், அதீதமான செக்ஸ் உணர்வுகள் பொங்கிப் பிரவகிக்கும் பெண்களுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்சினைகளை சொல்லில் அடக்க முடியாது. எப்படி தணிப்பது, தவிப்பை எப்படித் தவிர்ப்பது, எதை ஊற்றி காமத்தீயை தணிப்பது என்பதில் அவர்கள் பெரிதும் தடுமாறிப் போய் விடுகிறார்கள், பல நேரங்களில் தடம் மாறியும் போய் விடுகிறார்கள். ஆனால் பல பெண்களுக்கு செக்ஸ் மீது பெரும் விரக்தி ஏற்பட்டு விடுகிறது.
நாட்டம் குறைந்து போய் விடுகிறது. விருப்பம் இல்லாமல் கடனுக்கு கணவரிடம் படுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையைத் தவிர்த்து, அதை சரி செய்து எப்படி தொடர்ந்து உறவில் ஈடுபடுவது என்பது குறித்த பார்வை இது…
விருப்பமின்மை
எந்தப் பெண்ணுக்குமே செக்ஸ் மீது ஆர்வம் இல்லாமல் போகவே போகாது. நிச்சயம் இருக்கத்தான் செய்யும், ஆனால் ஆண்களைப் போல வெளியில் காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். உள்ளுக்குள்ளேயே வைத்திருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நாம்தான் அடையாளம் கண்டு அனுசரணையுடன் அணுக வேண்டும்.இரவு விளையாட்டுக்கு பகலிலிருந்தே இவர்களைத் தயார்படுத்த வேண்டும். சின்னச் சின்ன செக்ஸ் விளையாட்டுக்கள், முத்தம், முன் விளையாட்டுக்கள் என பகலிலிலிருந்தே ரொமான்ஸைத் தொடங்கினால் இரவில் இவர்கள் சிறப்பான முறையில் தயராகி விடுவார்களாம்.
அழகா இல்லையே
சில பெண்களுக்கு தாங்கள் அழகாக இல்லை, உடல் அழகு சரியில்லை என்ற விரக்தி இருக்கலாம். இவர்களுக்கும் கூட செக்ஸில் ஆர்வம் குறைவாக இருக்குமாம். ஆனால் இப்படிப்பட்ட பெண்கள் மீது அவர்களின் ஆண் துணைகள் அதீத ஆர்வத்தையும், அன்பையும் பொழிந்தால் நிச்சயம் இவர்களுக்கும் செக்ஸ் ஆர்வம் சிறப்பாக தூண்டப்படுமாம். உன்னாலும் என்னை ஆள முடியும், நீயும் செக்ஸியாகத்தான் இருக்கிறாய் என்று அவர்களுக்கு தைரியம் சொல்லி ஊக்கப்படுத்தினாலே போதும் அவர்கள் நிச்சயம் செக்ஸில் சிறந்து விளங்குவார்கள் என்கிறார்கள் டாக்டர்கள்.
ஆர்கஸத்தில் ஆர்வமின்மை
ஆண்களுக்குத்தான் இந்த எழுச்சி, உச்சம், கிளைமேக்ஸ் எல்லாம் கவலை தரும் விஷயம். பெண்களைப் பொறுத்தவரை வெறும் முன் விளையாட்டுடன் நிறுத்தினால் கூட திருப்திப்பட்டுக் கொள்வார்கள். பெரும்பாலான பெண்கள் படுக்கையில் பொய்யான ஆர்கஸத்தைத்தான் வெளிப்படுத்துகிறார்கள் என்று கூறுகிறது ஒரு ஆய்வு. இப்படிப்பட்ட நிலையில் ஆண்கள் மிகவும் பொறுமையாக, நேர்த்தியாக பெண்களைக் கையாண்டால் நிச்சயம் அவர்கள் உரிய நேரத்தில் ஆர்கஸத்தை எட்டுவது நிச்சயம்.
நான் என்ன செக்ஸ் மெஷினா
சில ஆண்கள் எப்போது பார்த்தாலும் செக்ஸ் நினைப்பிலேயே இருப்பார்கள். தங்களது துணையை தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். இது பெண்களுக்கு அலுத்துப் போய் விடும். நான் என்ன செக்ஸ் மெஷினா என்று விரக்திக்குப் போய் செக்ஸையே வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்களிடம் மனித நேயத்துடன் பொறுப்புடன், பொறுமையாக நடந்து கொண்டு மனதைக் காயப்படுத்தாமல் மனதையும், காமத்தையும் வெல்ல முயற்சிக்க வேண்டும்.
ரொம்ப வலிக்குதே
இது பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைதான். உறுப்பு வறட்சி, இறுக்கம் காரணமாக உறவின்போது வலி ஏற்படுவது சகஜம்தான். இதனாலும் பலருக்கு செக்ஸ் பிடிக்காமல் போய் விடுகிறதாம். இதுபோன்ற நேரங்களில் உரிய உபாயங்களைக் கையாள வேண்டும். மேலும் முரட்டுத்தனமான உறவை தவிர்க்க வேண்டும். பூவைப் போல பெண்களின் உறுப்பை பாவித்து அதை அணுகி இன்பத்திற்குள் நுழைய வேண்டும்.
இப்படி பெண்கள் சந்திக்கும் செக்ஸ் பிரச்சினைகள் நிறையவே உள்ளன. ஆனால் பிரச்சினை என்று வந்தால் கூடவே தீர்வும் இருக்கத்தானே செய்யும். அதை நாம் சரியாக உணர்ந்து, புரிந்து தெளிந்து அணுகினால் எல்லாம் சரியாகி, இன்பமும் கைகூடி வரும்.

தாம்பத்திய 17 வழிகள்

1. கலவிக்கு ஏற்ற சிறந்த நிலை, பெண் மல்லாந்து படுத்துக் கொண்டு, தனது புட்டத்தின் கீழ் சற்று உயரமான தலைய ணையை வைத்துக் கொள்வது தான். இந்நிலையில், ஆண் – பெண் இருவருக்கும் எந்த வித மான சிரமமும் இருப்பதில்லை .
மேலும், இருவரும் எளிதல் முழு இன்பம் பெற முடியும். ஆண் உறுப்பு நிலையைப் பொறுத்து, பெண் தன் தொடையை அகல விரித்துக்கொள்வது அல்லது நெரு க்கி வைத்துக்கொள்வது இந் நிலையில் சாத்தியமாகிறது.
மேலும் குறுகிய யோனி உடைய பெண்ணாக இருந்தாலும், தொ டையை அகல விரிக்கும் பொது ஆணுக்கு போதுமான வழி கிடைத்து விடு கிறது.
2. அடுத்ததாக, ஆணும் பெண்ணும் நெருங்கி அருகில் படுத்துக் கொண்டு சேர்வது சிறந்த முறையாகச் சொல்லப்படுகிறது. ஆண் வலதுபுறமு ம், பெண் இடது புறமும் நெருக்கமாகக் கட்டி அணைத்துக்கொண்டு இயங்க வேண்டு ம்.
3. ஆணும் பெண்ணும் கால்களை விறைப்பாக நீட்டிக் கொண்டு தொடைகளை நெருக்கி கொள்வதன் மூலம் ஆண்- பெண் உறுப்புகள் வெளியே வராமல் சிறந்த முறை யில் உறவு நீடிக்க முடியும்.
4.பெண் தன் கால்களை ஒன்றின் மீது ஒன்று போடு கலவிக்க கொள்வதுபோல் நெரு ங்கிக்கொள்ளும்போது, பெண் உறுப்பு நெரு க்கமாகி, ஆண் உறுப்பை கெட்டியாக பிடித் துக்கொண்டு கூடுதல் இன்பம் அளிக் கும்.
5. பெண் தன உறுப்பை முடிந்த வரை சுருக் கிக்கொண்டு, ஆண் உறுப்பை வெளியே வந்துவிடாமல் தன கையால் அழுத்திப் பிடித்து க்கொள்வது ஒருவகையில் இன்பம் அளிக் கக்கூடியதாகும்.
6. பெண் தனது இரு கால்களையும் உயர்த்தி, ஆணின் தோள் மீது வைத்துக்கொள்வது ஒரு நிலை. பெண், தன் தொடைகளை மடித்துக் கொண்டு, அவை தன வயிற்றில் படியும் படி யாக வைத்துக்கொ ண்டு பதத்தை ஆணின் மார்பின் மீது படியும் படியாக வைப்பது ஒரு நிலை.
7. பெண் ஒரு காலை நீட்டிக்கொண்டு, மற்றொரு காலை ஆணின் தோள் மீது வைத்துக்கொள்வதும் ஒரு வழிமுறையாகும். கலவியி ன் போது தன கால்களை மாற்றி மாற்றிச் செய்யமுடியும்.
8.பெண் தன் இருதொடைகளையும் உயர்த் திக் கொண்டு, அவற்றை ஒன்றின்மீது மற் றொன்றை போட்டுக்கொண்டும் உறவு கொ ள்ள முடியும்.
9. கீழே படுத்திருக்கும் பெண் தன் தொடைகளை மேலே உயர்த்தி, முழங்கால்களை மடித்துக்கொண்டு ஒரு காலை மற்றொரு கால் மீது பக்க வாட்டில் வைத்துக்கொள்வதும் ஒரு கலையாகும்.
10. குப்புறப் படுத்திருக்கும் பெண்ணின் முதுகின்மீது ஆண் படுத்து க்கொண்டு, பின்புறமாக பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பைச் செலுத்துவது ஒரு நிலை யாகும்.
11. பெண் கீழே படுத்துக்கொள்வதும், ஆண் அவள் மீது இயங்குவது சாதாரண நிலை என்றாலும், அனை த்து சந்தர்பங்களிலும் இது முடியாமல் போகலாம். அதாவது, ஆண் அதிக எடை உள்ளவனாக இருந்தால் பெம்ம ல் அந்த எடையைத் தங்க முடியாமல் போகலா ம்.
அதுபோல், பெண் உடல் பெண் உடல் பலவீனமாக இருந்தாலு ம், அவளால் ஆணின் உடல் எடையை தாங்க முடி யாது. அப்போது பக்கவாட் டில் புணரும் நிலையே ஏற்றுக் கொள்ள கூடியது ஆகும்.
12.தொப்பை உள்ள ஆண்களால் ஆசைப்பட்ட நிலைகளில் எல்லா ம் உறவுகொள்ளமுடியாது அதனால் பெண் தன கையை தரையில் ஊன் றிக்கொண்டு குனிந்து நாலுக்கால் பிராணியைப் போல் நின்று கொள்ள வேண்டும். பின்புறம் இருந்து ஆண் , அவள்மீது கவிழ்ந்து கொண்டு மிரு கத்தை போல் உறவு கொள்ளவது எளிதான வழி யாக இருக்கும்.
13.பெண்ணை தூண் அல்லது சுவற்றின் மீது சாய்ந்து நிறுத்திக் கொண்டு புணர்வதும் ஒரு வகையாகும்.
14. நின்று கொண்டிருக்கும் பெண்ணின் ஒரு காலை மட்டும் ஆண் தன் கையால் தூக்கிப் பிடித துக்கொண்டு புணர முடியும்.
15. பெண்ணின் மடிந்த முழங்கால்களை தன முழங்கைகளில் தூக்கிக்கொண்டு புணரமுடியும்
16. ஆண் சுவரில் சாய்ந்து நிற்கும்போது கோக்கப் பட்ட அவனது கைகளில் பெண் உட்கார்ந்துக்கொண்டு, தன் கால் களை அவன் இடுப்பை சுற்றிக்கட்டிக் கொள் ள வேண்டும்.
அவளுடைய கைகள் அவனு டைய கழுத்தை கட்டிக் கொண்டு, சுவற்றின் மீது தன கா லை அழுத்தி, பெண் தன்னுடைய ஆட்டி உறவு கொள்ள முடியும்.
17. தன மேல்படுத்து உறவுகொள்ளும் ஆண் களைப்படையும் பட்சத்தில் அவனை புரட்டிப் போட்டு அவன்மீது பெண் படுத்துக்கொண்டு உறவு கொள்ளவது மிகவும் இன்பம் தரக் கூடியதாகும்.

செக்ஸ் போஷிசன்கள் பலவிதம்

செக்சில், ஆண் கீழும், பெண் மேலுமாக ஈடுபடும் மாறுபட்ட கலவி நிலைகளில் ஈடுபடுவதால் சில பெண்களுக்கு கூச்சமின்றி ஈடுபடத் தோன்றலாம். இப்படி மாறுபட்ட நிலைகளில் ஈடுபடக்கூடாத சில சூழ்நிலைகளும் உண்டு. அவை என்னென்னவென்று தெரியுமா?
மாதவிடாய் வெளிப்படும் காலம்
சமீபத்தில் குழந்தை பெற்றவள்
பிறப்புறுப்பு மிக இறுக்கமாக அமைந்த பெண்
பருத்த உடல் கொண்டவள்
கலவியில் ஈடுபடும் ஆணும், பெண்ணும் புதுப்புது விதங்களில் இன்பம் அனுபவிக்க விழைவார்கள். அத்தகைய அத்தகைய நிலைகளை சித்ரரத அசாதாரணமான நிலைகள் என்பார்கள். ஆனால் தீவிர காம இச்சை கொண்ட ஆணும், பெண்ணும் பயிற்சிக்கு பிறகே இது போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.
இந்த நிலைகள் பல வகைப்படும்… அவை….
ஸ்திர ரத (நின்ற நிலை) பெண், சுவர் மீதோ, தூண் மீதோ சாய்ந்த படி நின்றிருக்க ஆண் அவளை நின்ற நிலையிலேயே இறுகத் தழுவி அணைத்துக் கலவியில் ஈடுபடுவது இந்த நிலை
நின்ற கலவி நிலை மேலும் 3 வகைப்படும்…
முன் நீட்டிய நிலை…
நின்று கொண்டிருக்கும் பெண்ணின் ஒரு காலை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஆண் கலவியில் ஈடுபடுவது இந்த நிலை
இரண்டு அடுக்கு நிலை…
நின்றிருக்கும் பெண்ணின் கால்கள் துவளும் படி பிடித்துக்கொண்டு கலவியில் ஈடுபடுவது இரண்டு அடுக்கு நிலை
முழங்கால், முழங்கை நிலை….
ஆண் நின்ற நிலையில் பெண்ணைத் தூக்கி அவன் தன் இடுப்பில் இரண்டு கால்களையும் இடுப்பைக் பின்னிக்கொள்ளும் வகையில் போட்டுக் கலவியில் ஈடுபடுவது இந்த நிலை
தொங்குநிலை….
ஆண், சுவர் அல்லது தூணில் சாய்ந்து நிற்க, பெண் அவன் மீது ஏறி, கால்களைப் பின்னிக் கொண்டு கலவியில் ஈடுபடுவது இந்த நிலை. இதில் ஆண், பெண்ணின் கழுத்தைக் கட்டிக் கொள்வான்.
மிருகங்களின் நிலை…..
இந்த நிலையில், பெண் படுக்கையில் முழங்கால் போட்டு மண்டியிட்டுக் கொள்ள ஆண், பின்புறமாகப் புணர்ச்சியில் ஈடுபடுவான்.
நீர் விளையாட்டுக் கலவி….
ஆணும், பெண்ணும் ஏதாவது நீர் நிலைகளில் கலவியில் ஈடுபடுவது இந்த முறை.

‘அதில்’ அதிக நேரம் ஈடுபட என்ன செய்யவேண்டும்?

உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு, அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமி்டங்களாவது ஆக வேண்டும் என்பதைப் பார்த்தோம். அதற்கு முன்னதாகவே, பெண்ணின் பிறப்புறுப்புக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது செக்ஸ் குறைபாடுதான். இந்தவகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது.
விந்து விரைவில் வெளிப்படுதலை, தம்பதியர் நினைத்தாலே ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல் அவசியமாகும்.
முதலில், தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக மது போன்ற போதைப் பொருள்களைப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆணுறுப்பில் தடவும் ஒரு சில மருந்துகள், உறுப்பில் இருக்கும் உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்துவிடும். ஆரம்ப நாள்களில் இதனால் பயன் இருக்குமே தவிர, தொடர்ந்து பயன்படுத்தும் போது பல்வேறு சிக்கல்கள் தோன்றலாம். அதனால் இது போன்ற குறுக்குவழிகளைக் கைவிட வேண்டும்.
செக்ஸ் என்பது நான்கு நிலை என்பதைப் பார்த்தோம். உணர்வடைதல், செயல்படுத்தல், விந்து வெளியேற்றம், ரிலாக்ஸ் எனப்படும் நான்கு நிலைகளில், விந்து வெளியேற்றம் எனப்படும் மூன்றாம் நிலை செயல்படும் முன்னொரு வகையில் சொல்வதென்றால்,ஆண்-பெண் இருவரது ஆசைகளும் தீரும் முன் செக்ஸ் செயல்பாடுகள் நின்றுவிடுவதாகும் அதனால், இறுதிச் செயல்பாடான ரிலாக்ஸ் எனப்படுவதை இரண்டாவதான செக்ஸ் செயல்பாடுகளிலும் புகுத்தும் போது உறுப்பு எழுச்சி நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.
மனத்தை மிகவும் ரிலாக்ஸ்டாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப்போனால், மனத்தை செக்ஸில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுத்தினால் கூட நல்லது. அதாவது, தியானம் செய்வதுபோல் அல்லது மலை ஏறுவது, கிரிக்கெட் மேட்ச் ரசிப்பது போல் ஏதாவது ஒரு நிகழ்வை மனத்தில் நினைத்துக் கொண்டு செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகுந்த பயன் அளிக்கும்.
அடுத்ததாக, செக்ஸ் செயல்பாடுகளை ஆவேசமாக, ஆக்ரோஷமாக செயல்படுத்தாமல் மிக இயல்பாகவும், அவசரமில்லாமலும் மெதுவாக இயங்க வேண்டும். உடலைவிட மனசே செக்ஸ் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆவேச உணர்வைக் குறைக்கும்போதே, மனம் லேசாகிவிடுகிறது. இருவரும் நிதானமாக செக்ஸ் செயல்பாடுகளைத் தொடரும் போது நேரத்தை வேண்டும் அளவுக்கு நீட்டிக்க முடியும்.
ஆண்கள் விந்து முந்துதலைத் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிகைகளில் இறங்க முடியும். அதாவது, சுயஇன்பம் காணும் செயல் இதற்கு நல்ல முறையில் பலன் அளிக்கிறது. சுய இன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல், நிறுத்தி இடைவெளிவிட்டு நேரத்தை நீட்டிக்க வேண்டும்.
சாதாரணமாகவே ஆண்கள் சுய இன்பம் காணும்போது, அவசர அவசரமாகவே செயல்படுவார்கள். யாராவது பார்த்துவபிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது மனத்தில் உள்ள ஆசை தீர்ந்துபோவதற்குள் ஆசையைத் தீர்த்துவிடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள். இதுவே கலவியின் போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது. அதனால் முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்கப் பழக வேண்டும். உறுப்பு எழுந்து நிற்பதில் தொடங்கி, அது விந்து கக்கி வீழ்வதுவரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்துச் செயல்பட வேண்டும்.
விந்து வெளியாகும் நேரத்தில், செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்துபார்பது அவசியம். என்றாவது ஒருநாள் கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்ச்சிப்பது பயன் தராது. தினமும் அல்லது தினமும் இருமுறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தைக் கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும் போதுதான் நல்ல பலன் தரும்.
முதலில், வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு, எண்ணெய் அல்லது ஜெல்லி போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுய இன்பத்தில் ஈடுபட்டு, செயல்படும் நேரரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி, நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாகக் கண்டுகொண்ட பிறகு, பெண்களுடன் உறவு மேற்கொள்ளும் போதும் இதைப் பயன்படுத்தலாம். இடைவெளி விட்டு செயல்படுதல், விந்து வெளிப்படுதலைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வசிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
உடல் முழுவதும் இன்பம் இருக்கிறது என்பதை, ஆணும் பெண்ணும் அறிந்துக்கொள்ள வேண்டும். அதாவது, ஆண் உறுப்பில் மட்டும்தான் இன்பம் இருக்கிறது என்று அதை மட்டுமே உபயோகிப்பதைப் பெண் குறைத்துக்கொண்டு, உடலின் மற்ற பாகங்கள் மீது கவனம் செலுத்துவதும் மிகுந்த பலன் அளிப்பதாக இருக்கக்கூடும்.
மூச்சை நன்றாக உள் இழுத்தல் மிக முக்கியமான எளிதான வழியாகக் கருதப்படுகிறது. மிகவும் ஆழமாக மூச்சை இழுத்துவிடுவது ஒரு நல்ல பயிற்சியாகும். ஏனெனில் இறுதி நிலையான ரிலாக்ஸிக்கு சமமாக மூச்சுப் பயிற்சியைப் பயன்படுத்த முடியும்.
வெறுமனே செயல்பாடுகளில் ஈடுபடுவதைவிட, பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதும் செக்ஸ் நேரத்தைக் கூடுதலாக்குகிறது. ஏதாவது விஷயங்களைப் பேசுவது, கத்துவதன் மூலம் உடல் டென்ஷனைக் குறைத்துப்கொள்வது என்று உடலை எவ்வளவு தூரம் எளிமையாக வைத்துக் கொள்கிறோமோ, அவ்வளவு தூரம் நேரத்தைத் தள்ளிப் போட முடியம்.
ஆண் மேலே பெண் கீழே என்ற நிலையில் உறவுக்கொள்வது எளிதாகவும் இன்பமாகவும் இருக்கலாம். ஆனால், இது ஆண்களுக்கு ஏற்ற நிலை என்று சொல்ல முடியாது. இந்த நிலையில் எளிதாக விந்து வெளியேற வாய்ப்பு உண்டு. அதனால், பெண்ணை இயங்கச்செய்வது அதிகப் பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும். எவ்வகையான செயலையும் ஆண்கள் மேற்கொள்ளாமல் பெண்களை மட்டுமே இயங்குபொருளாக வைத்துக்கொண்டால், கூடுதல் நேரம் விறைப்பும்தன்மையுடன் ஆண்கள் இருக்க முடியும்.
ஆண்கள் தங்கள் உறுப்புகளை மட்டுமே செக்ஸ் செயல் பாடுகளுக்குப் பயன்படுவதை பிடுத்து, கை, நாக்கு, கால் போன்ற உறுப்புகளையும் பயன்படுத்த வேண்டும். இதனால், ஆண் ஊறுப்புக்குக் கலவி நேரத்தில் ஓய்வ கிடைக்கும். இந்த ஓய்வின் காரணமாக நேரத்தை நீட்டிக்க முடியும்.
விந்து வெளிவருவதுபோல் இருக்கும் நேரத்தில் உடல் உறுப்புக்கள் அமைத்தையும் சேர்த்து இறுக்கி வைத்துக் கொள்வது நல்ல முறையில் பயன்தருவதாக இருக்கும். அதாவது ஆசனவாய், அடிவயிறு என அனைத்தையும் மூச்சைப் பிடித்துக்கொண்டு இழுத்து வைத்தால் விந்து வெளிவருமு: நேரத்தைத் தாமதப்படுத்த முடியும்.
ஆணுக்கு விந்து வரப்போவதை அறியும் பெண், முதுகு அல்லது பின்புறத்தில் பலமாகத் தட்டுவது, வேறுசெயலுக்கு மாற்றுவது, வளிக்கும்படி கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போது விந்து வெளியேற்றம் தாமதமாகிறது.
ஆணின் விதைக் கொட்டைகளை விந்து வெளியேற இருக்கும் முன் கீழ்நோக்கி இழுக்கும்பட்சத்தில் நல்ல பலன் அளிப்பதாக இருக்கும்.
விந்து வெளிவர இருக்கும்போது ஆணுறுப்பை பெண் உறுப்பில் இருந்து வெளியே எடுத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் உள்செலுத்தி செயல்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது ரிலாக்ஸ் செய்து இந்தச் செயலில் ஈடுபடும்போது நீண்ட நேரம் செலாற்ற முடியும்.
பெண் உறுப்புக்குள் முழுமையாக உள்செலுத்தாமல், முதல் இரண்டு அங்குலம் அளவுக்கு மட்டும் ஆண் உறுப்பைச் செலுத்தி செயல்புரிவது போதுமான காலதாமதத்தை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்கள். ஆண்-பெண் இருவருக்கும் உறுப்புகளில் முதல் இரண்டு அங்குலம் அளவுகளில்தான் இன்பம் தரும் நரம்புகள் இருக்கின்றன என்பதால் அந்த அளவு மட்டுமே செயல்புரிவது போதுமானதாகும். போதுமான நேரம் இன்பம் அனுபவித்த பிறகு வேண்டுமானால் முழுமையாக உள்செலுத்தி இன்பம் காணலாம்.
இவை அனைத்தையும் விட, தன்னால் செக்ஸில் சிறந்த முறையில் ஈடுபட இயலும் என்ற தன்னம்பிக்கை ஆணுக்கு ஏற்பட வேண்டும். இன்று கூடுதலாக கொஞ்சநேரம் விந்து வருவதைத் தவிர்க்க முடியும் என்று உறுதியுடன் செயலில் இறங்க வேண்டும். ஆணின் செயலுக்குப் பெண் ஒத்துழைக்க வேண்டியது மிகவும் அவசியம். எந்தக் காரணம் கொண்டும் விந்து முந்துதலைக் கேலி செய்வது அல்லது திருப்தியின்மையை வெளிப்படையாகக் காட்டி அவமானப்படுத்துவது கூடாது. இது எளிதில் சரி செய்து இன்பம் தரக்கூடிய சாதாரண பிரச்சனை என்பதை இருவருமே அறிந்திருக்க வேண்டும்.

செக்ஸ் தூண்டலுக்கு உதவும் உணவுகள்..!!

பெண்களுக்கு பல பொறுப்புகள் உள்ளன. குடும்ப பராமரிப்பு, மகப்பேறு, குழந்தைகளை வளர்த்தல் முதலியன. ஆனால் ஆண்களுக்கு உள்ள பெரும் பொறுப்பு பாலியல் உறவில் மனைவியை மகிழ்விப்பது! அதில் சிறிய குறைபாடு இருந்தால் கூட ஆண்கள் மனமுடைந்து போகின்றனர். எனவே தான் ஆதி காலத்திலிருந்து பாலுணர்வை தூண்டி உடலுறவை மேம்படுத்தும் உணவு, மருந்துகளை ஆண்கள் அதிகமாக நாடுகின்றனர். தங்கபஸ்பம், சிட்டுக்குருவி லேஹியம் முதலியன ஆணுக்கான “ரகசிய” மருந்துகளாக இருந்தன.
கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி ஜனங்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ்கின்றனர். புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண்டும் உணவுக் கலவையாக கருமிளகு, தேன், மிளகாய் முதலியன கூறப்படுகின்றன.
உணவுகள் காதல் செயல்பாடுகளை தூண்டுமா என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! அந்தந்த ஊருக்கு ஏற்றபடி காதல் உணவுகள் மாறுகின்றன. ஒட்டகத்தின் திமில் அரேபியர்களுக்கும் குங்குமப்பூ ஸ்பெயின் நாட்டவர்களுக்கும், கோகோ அஸ்டெக் இனத்தவருக்கும், பறவைக்கூடு சூப் சீனர்களுக்கும் முறையே ஆண்மைக்குறைவுக்கு மருத்துவ உணவாக கருதப்படுகின்றன.
சில பிரசித்தி பெற்ற உணவுகள்
ஆயுர்வேதத்தின் படி கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும்.
சோம்பு சமையலிலும் பயன்படுகிறது. மையலிலும் பயனாகிறது! இதன் விதைகளை உறிஞ்சி உண்டால் ஆசை அதிகமாகும்.
அஸ்பாரகஸ் சுவைவயுள்ள தோட்டக் கீரை.
பாதாம் பருப்பு – தொன்று தொட்டு ஆண்மையையும், மக்களைப் பெற சக்தி அளிக்கும் உணவாக கருதப்படுகிறது.
வாழைப்பழம் – வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் ‘பி’ விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோனை தயாரிக்கத் தேவை. எனவே வாழைப்பழம் ஒரு ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழம்.
துளசி – உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது துளசி. ஆண்களின் உடலுறவு ஆர்வத்தை தூண்டுகிறது.
சாக்லேட் – சாக்லேட்டில் தியோப்ரோமைன் இந்தப் பொருள் வேட்கையை பெருக்கும். தவிர சாக்லேட் ஒரு ஆன்டி – ஆக்சிடான்ட்.
காய்கறிகள் – பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கவல்லவை. தக்காளியும் சிறந்த பாலுணர்வு ஊக்கி. ஃப்ரான்ஸில் இதை ‘காதல் ஆப்பிள்’ என்பார்கள். வெங்காயமும் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபியாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறியாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். “ஆனியன் சூப்” புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும். பிரசித்தி பெற்ற ‘அரேபிய இரவுகள்’ கதையில் ஒரு வியாபாரி 40 வருடங்களாக குழந்தையில்லாமல் இருந்து கொத்தமல்லி இலைகள் அடங்கிய மருந்தை உண்டு குழந்தை பெற்றுக் கொண்டதாக வருகிறது.
பழங்கள் – பப்பாளி, வாழைப்பழம், மாம்பழம், கொய்யாபழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் ஜனனேந்திரிய உறுப்புக்களின் தசைகளை வலுப்படுத்தும். வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும்.
பால் சார்ந்த உணவுகள் – பால் அதுவும் எருமைப்பால், தயிர்(பகலில்) மோர், வெண்ணை, நெய் இவை இல்லாமல் இந்திய உணவுகள் இல்லை. இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்.
மாமிசங்கள், மீன் – மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது. கடல் மீன்களை விட நதிமீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவை. கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெருக்கியாக கருதப்படுகிறது.
வெற்றிலை – உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையை தூண்டும். ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால் இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.
தேன் – எகிப்தியர்கள் காலத்திலிருந்தே பல பழங்கால மருந்துகள் தேன் அடங்கியவை. மீட் என்ற பானம் தேனிலிருந்து தயாரிக்கப்பட்டது. இது காதல் உணவை அதிகப்படுத்தும் மருந்தாக கருதப்படுகிறது.
வாசனை திரவியங்கள் – ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் “விந்து முந்துதலை” தடுக்கும். இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். ஞாபக மிருக்கட்டும் – இலவங்கப்பட்டை தான் ஆசைய ஊக்குவிக்கும். அதன் இலைகள், எதிர்மாறாக ஆண்மை ஆசையை குறைத்து விடும்.
தற்கால உணவு நிபுணர்களின் கருத்து
ஆண்மை வீரியத்தை அதிகரிக்க துத்தநாகம் இன்றியமையாதது. சர்க்கரை, மைதா மாவு, பாலிஷ் செய்யப்பட்ட பச்சரிசிகளில் துத்தநாகம் குறைவு. இந்த தாதுப்பொருளின் குறைவு பெண்களின் மாதவிடாய் சுழற்சியையும் பாதிக்கும். முழுத்தானியங்களில் துத்தநாகம் இருந்தாலும் அவற்றில் உள்ள பைடாடஸ் என்ற பொருள், உடல் துத்தநாகத்தை உட்கிரகிப்பதை தடை செய்யும். துத்தநாகம் உள்ள இதர பொருட்கள் – சிவப்பு மாமிசம், முத்துச்சிப்பிகள், பரங்கி விதைகள், அங்கக மாமிசங்கள், முட்டைகள்.
எல்லா பழங்களிலும் காய்கறிகளில் இருக்கும் பொட்டாசியம் ஆண்மை வீரியத்தை அதிகரிக்கும்.
செலினியம் உள்ள வெண்ணெய், மீன்கள், முழுக்கோதுமை, எள் முதலியவைகளும் காதல் உணவுகள்
மங்கனீஸ் அடங்கிய கொட்டைகள், விதைகள், முழுத்தானியங்கள் முதலியவைகளும் பாலியல் ஆற்றலுக்கு உதவும்.
பாஸ்பரஸ் (பரங்கிக்காய், முழுத்தானியங்கள், சூர்யகாந்தி விதைகள்) தாதுப்பொருளும் ‘தாது விருத்திக்கு’ உதவும்.
ஆண்மை வீரியத்திற்கு தேவையான விட்டமின்கள்
விட்டமின்கள்
விட்டமின் ‘இ’
விட்டமின் ‘சி’
விட்டமின் ‘ஏ’
விட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ்
ஃபோலிக் அமிலம்
விட்டமின் பி 6
விட்டமின் பி 12
இருக்கும் உணவுகள்
முழுத்தானியங்கள், முட்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பாதாம், கீரைகள்
எல்லா காய்கறிகளும், பழங்களும் குறிப்பாக சிட்ரஸ் பழங்கள், தக்காளி, நெல்லி முதலியன
லிவர், முட்டைகள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கேரட், மீன் எண்ணெய்
முழுத்தானியங்கள், லிவர்
அஸ்பாரகஸ், இதர கீரைகள், முளைகட்டிய உணவுகள், முழுக்கோதுமை, சீஸ், பருப்புகள்
முழுக்கோதுமை, தவிடு, பால், வாழைப்பழம், வேர்க்கடலை, உலர் திராட்சை, லிவர், கிட்னி, மாமிசங்கள், மீன், இறைச்சி
பால், பால் சார்ந்த உணவுகள், முட்டை, லிவர்
பாலியல் இச்சையை குறைக்கும் உணவுகள்
ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, விட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலியல் திறனும் சிதைந்து விடும். சர்க்கரை, மதுபானங்கள், காப்பியில் உள்ள காஃபின் முதலியவை, ஊட்டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக்க விடாது. இதனால் ஆரோக்கியம் குன்றினால் ஆண்மையும் குறையும். எனவே அதீத காதல் உணர்வுகளால் கஷ்டப்படுபவர்கள் இனிப்பு, சோயா நிறைந்த உணவுகளால் இச்சையை ஒரளவாவது கட்டுப்படுத்திக் கொள்ளலாம். பாலியல் ஆசையை கட்டுப்படுத்த உதவும் உணவுகளில் ஒன்று சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் “டோஃபு”. சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. இந்த உணவுகள் தைராய்டு செயல்பாடுகளை குறைக்கும். தைராய்டு தான் பாலியல் உணவுகளை கன்ட்ரோல் செய்கிறது.

பாலியல் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்

இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்சமா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையும் கேள்விகள் ஏதேனும் இருக்கின்றனவா? இதோ சில பொதுவான சந்தேகங்களும், அவற்றுக்கான விளக்கங்களும்….
ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?
பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால் ஒவ் வொரு முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு மருத்துவரைக் கலந்தாலோசிப்பது பாதுகாப்பானது.
தாம்பத்திய உறவின் போது சிலருக்குப் பிறப்புறுப்புக் கசிவே இருப்பதில்லை. வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை. என்ன செய்யலாம்?
உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறுப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில பெண்களுக்கு உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு தேவைப்படலாம். ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கணவரிடம் தெரியப்படுத்தி, அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத் திரவங்களை உபயோகிக்கலாம்.
குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத்தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச் சினைகள் வருமா?
பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும். ஆனால் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே அவை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
மன உளைச்சலுக்கும், மாதவிலக்கு தள்ளிப் போவதற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா?
நிச்சயமாக உண்டு. மன உளைச்சல் காரணமாக ஹார்மோன் மாறுதல்கள் ஏற்பட்டு, மாத விலக்கு இரண்டொரு நாட்களுக்கோ அல்லது அதற்கு மேலுமோ தள்ளிப் போகலாம்.
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் மார்பகங்கள் அளவில் பெருத்துப் போகுமா?
கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் சில பெண்களுக்கு உடலிலுள்ள தண்ணீரின் சேமிப்பு காரணமாக மார்பகங்களில் வலியும், வீக்கமும், மென்மையான உணர்வும் ஏற்படலாம். ஆனால் மார்பக அளவு கூட வாய்ப்பில்லை. இன்னும் சில பெண்களுக்குக் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடு வதன் விளைவால் உடல் பெருக்க வாய்ப்புகள் உண்டு. அதனாலும் மார்பகங்கள் பெருத்து விட்ட மாதிரித் தோன்றும்.
பிறப்புறுப்பு நாற்றம் ஏன் ஏற்படுகிறது? அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்?
ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின் தாக்குதலால் இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாதவிலக்கிற்கு முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ அப்படி நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில் ஏற்படுகிற வேதி மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால் பிறப்புறுப்பை அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும்.
திருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கலாம்?
ஒரு வருடம் வரைக் காத்திருக்கலாம். கருத்தடை முறைகள் எதையும் பின்பற்றாமல் தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்களில் 80 சதவிகிதத்தினர் ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் தரிக்கின்றனர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது.
பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?
பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது தானாக வந்து தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும் அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று போன்றவையும் இதற் கான பிற காரணங்கள். தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின் விளைவாக பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு ஏற்படலாம்.
பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரித் தெரிவன என்ன? அவற்றை அறுவை மூலம் நீக்கலாமா?
சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. பிரசவத்திற்குப் பிறகு பிறப்புறுப்பு விரிவடைவதால் இவை தானாக மறைந்து விடும். என்றாலும் மருத்துவரிடம் ஒருமுறை நேரில் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்வது நலம்.
ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது நிஜமா?
சரியாகவும், தரமானதாகவும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம் இது பாதுகாப்பானதே. 14 சதவிகிதப் பெண்கள் ஆணுறை உபயோகித்த போதும் கர்ப்பமடைகிறார்கள்.

ஒரு பெண்ணுக்கு முழு மகிழ்ச்சியை எவ்வாறு கொடுப்பது

ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம் சிலர் மென்மையான உறவை விரும்புவார்கள்.சிலர் அழுத்தமான செக்ஸ் உறவை விரும்புவார்கள் .சிலர் நெருக்கமான மன உறவை ஏற்படுத்திய பின்னரே பாலுறவை விரும்புவர் .சிலருக்கு அது தேவையில்லை ..
உண்மையில் உங்கள் துணையிடமிருந்தே அவள் என்ன விரும்புகிறாள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.பெண்ணிடம் எவ்வாறு இதைப் பற்றி பேசுவது என உங்களுக்கு தயக்கம் இருக்கலாம். ஆனால் முதலில் பேசத் தொடங்கியவுடன் உங்கள் துணைவி சொல்லக்கூடிய பதில்கள் தெளிவாக இல்லாமல் இருக்கலாம்.அதைப் பற்றி கவலை வேண்டாம். போகப் போக சரியாகிவிடும்.
நீங்கள் முதலில் கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்கலாம் .
1. எவ்வாறு உறவுகொள்வதில் உனக்கு அதிக நாட்டம் (முத்தமிடுதல் ,வாய்வழி ,உடலுறவு போன்றவைகளில்)
2. எதுபோன்று முத்தமிடுதலை பெரிதும் விருபுகிறாய்?
(எச்சிலுடன் கலந்த ஆழமான முத்தம்,எச்சில் படாமல் கொடுப்பது,நீண்ட முத்தம் போன்றவற்றில்).
3. உடலுறவில் நீ அதிகம் விரும்புவது எது? அதிகம் வெறுப்பது எது ?
4. எதை நான் புதிதாக,நன்றாக செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறாய்?
இதைத்தவிர,ஒன்றிரண்டு விளையாட்டு விளையாடலாம். இந்த விளையாட்டில் ஒரு செயலை இரண்டு விதமாகச் செய்வது.பின் மனைவியிடம் எது பிடித்திருக்கிறது என கேட்கவேண்டும்.சான்றாக,கிளிட்டோரிசை தூண்டுவதில் ஒன்று நாக்கினால் நன்றாகத் தூண்டுங்கள். இரண்டாவதாக, கை விரல் மூலம் அதன் மீது தேய்க்கலாம். பின் மனைவியிடம் எதில் அதிகம் இன்பம் அடைகிறாள்,விரும்புகிறாள் எனக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த விளையாட்டின் மூலம் மனைவி என்ன விரும்புகிறாள்,எதிர்பார்க்கிறாள் என்பதை நன்கு அறிந்துகொள்ள முடியும்.இதையும் உங்களால் சரிவர செய்ய முடியாவிடில் மற்றொரு விளையாட்டு இருக்கிறது.
உங்கள் கையை மனைவியைப் பிடித்துக்கொள்ளச் சொல்லி,ஒவ்வோர் உறுப்பையும் எவ்வாறு தூண்டவேண்டும் என அவர் எதிர் பார்க்கிறாரோ அதேபோல் செய்யச் சொல்லுங்கள்.இதை சிறிதும் கூச்சமில்லாமல் செய்யும் முடியும்.

ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸ்!

ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸில் ஈடுபடலாம் என்கிற பெருத்த கேள்வி பல தம்பதிகளுக்கு இடையே உள்ளது. இத்தனை முறை தான் என்று திட்டவட்டமாக கூற முடியாது. தாம்பத்யம் இனிக்க எத்தனை முறை வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்.
திருமணமான புதிதில் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை உடல் உறவில் ஈடுபடுபவர்கள் கூட நாளடைவில் குறைத்துக் கொள்ளக்கூடும்.  வீட்டுச் சூழல், லைஃப் ஸ்டைல், தனிமையின்மை, நேரம் கிடைக்காமை போன்ற காரணங்களால் செக்ஸில் ஈடுபடுவது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரலாம்.
புதிதாக திருமணமானவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், வேகமும் அதிகமாக இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டுக்கும் மேற்பட்ட முறை கூட உறவு வைத்துக் கொள்ள விரும்புவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதிக அளவிலான உறவால் உண்மையில் நியூராட்டிசம் போன்றவை மட்டுப் பட உதவுகிறது. எனவே அதிக அளவில் உறவு வைத்துக் கொள்வதிலும் தவறில்லை என்பது மருத்துவர்கள் தரும் ஆலோசனை.  நியூராட்டிசம் பிரச்சினை இருப்பவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், எரிச்சல் படுவார்கள். யாராவது ஏதாவது சொன்னால் சட்டமென்று மூக்கு நுனியில் கோபம் வந்து விடும்.
இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு திருமணமும், தாம்பத்ய உறவும் மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது என்கிறது ஒரு ஆய்வு. அதுதான் அவர்களது மண வாழ்க்கை பெரும் மகிழ்ச்சிக்குரியதாக மாற நல்ல அடித்தளமாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இனிய மண வாழ்க்கை
இதுகுறித்து நடத்தப்பட்ட ஒருஆய்வில், புதிதாக மணமான ஜோடியை சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களிடம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முதல் நான்கு ஆண்டுகளுக்கு சோதனை நடத்தப்பட்டது.
இதில் ஆரம்பத்தில் அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை அவர்களுக்கு (ஆண் மற்றும் பெண்களுக்கு) எந்தவிதமான டென்ஷனும் வரவே இல்லையாம். பதட்டம் குறைந்து, மிகுந்த மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருந்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணம், இந்த கால கட்டத்தில் அவர்கள் அதிக அளவில் தாம்பத்ய உறவில் ஈடுபட்டதே இதற்கு காரணம்.
ஒரு ஆண்டு கழித்து தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளும் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இதனால் அவ்வப்போது எரிச்சல் வந்து எட்டிப் பார்த்துள்ளது அவர்களிடம். அதேசமயம், பெரிய அளவி்ல் டென்ஷனுக்குள்ளாகவில்லை. காரணம், வாரத்திற்கு குறைந்தது 3 முறையாவது அவர்கள் உறவில் ஈடுபட்டனர்.
நரம்பியல் கோளாறுகள் தீரும்
4வது ஆண்டுவாக்கில் அவர்களுக்குள் உறவுகள் குறைந்து வந்திருப்பதை ஆய்வின் மூலம் மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதாவது மாதத்திற்கு 3 அல்லது 4 முறை மட்டுமே உறவு கொள்ள ஆரம்பித்துள்ளனர் ஜோடிகள். இதனால் நியூராட்டிசம் அவர்களிடையே எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தாம்பத்ய உறவு நரம்பியல் கோளாறுகளுக்கு நல்ல மருந்து என்பது டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பக்குவமடையும் மனம்
எனவே புதிதாக திருமணமானவர்கள் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு உறவு கொள்வதில் ஆர்வம் காட்டலாம். உடல் நலம் பாதிக்காத அளவுக்கு பார்த்துக் கொண்டு, தாம்பத்ய உறவில் அதிக அளவில் ஈடுபடுவது அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பக்குவப்படுத்த உதவும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்கள்.
எனவே எதற்கெடுத்தாலும் வெக்ஸ் ஆகும் பழக்கம் உடையவர்கள், டென்சன் ஆகும் குணமுடையவர்கள், காலாகாலத்தில் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையில் செட்டில் ஆக விடலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள வேண்டிய காலம்..!!

கேள்வி
டாக்டர் ! எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம் . நாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்க சந்தர்ப்பம் அதிகம்?
திருமதி கணேசன் .
பதில்

நல்லது !
இது நிறையத் தம்பதியர்களுக்கு இருக்கின்ற சந்தேகமாகும். இது குழப்பிக் கொள்ள வேண்டிய விடயமே இல்லை. மிகவும் இலகுவாக நீங்களே உங்களுக்கு கருத்தரிக்கக் கூடிய காலத்தை அறிந்து கொள்ள முடியும்.
இதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய் ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளிலே ஏற்படும்.
ஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து அண்ணளவாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில் முட்டை வெளியேறும்.
இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும்.
ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் உட்செளுத்தப்பட்டு 72 மணித்தியாலங்கள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்).
ஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும் பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.
அதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.
இயற்கையான கருத்தடை முறைகள்
உடலுறவின் போது கருத்தரிப்பதைத் தடுப்பதற்காக கருத்தடை முறைகள் பயன் படுத்தப்படுகின்றது .இதிலே பல முறைகள் உள்ளது. அதிலே ஒன்றுதான் இயற்கையான கருத்தடை முறையாகும்.இயற்கையான முறை எனப்படுவது எந்தவிதமான உபகரணங்களையோ அல்லது மருந்துகளையோ பயன்படுத் -தாமல் மேற்கொள்ளப்படும் முறையாகும்.
இது இரண்டு விதமாக மேற்கொள்ளப்படலாம்.
முதலாவதாக கருத்தரிக்கும் சந்தர்ப்பம் குறைவாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதுடன் ,கருத்தரிக்கும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதைத் தவீர்க்கும் முறையாகும்.
இந்த நாட்கள் ஒவ்வொருபெண்ணுக்கும் வேறுபாடும் .
அந்த நாட்களை கணித்துக் கொள்ளும் முறையை இந்த இடுகையில் வாசித்தறியவும்.இந்த முறை ஒழுங்காக மாதமொருதடவை மாதவிடாய் ஏற்படுகின்ற பெண்களுக்கே உகந்தது.
அடுத்த முறையானது உடலுறவின் போது ஆண் விந்தணுக்களை பெண் உறுப்பினுள்ளே செலுத்தாமல் ஆண்குறியை வெளியில் எடுத்தல்.
இது உச்சக்கட்டத்திற்கு(climax) முன் கட்டுப்பாட்டுடன் ஆண் குறியை வெளியெடுக்கக் கூடிய ஆண்களுக்கே சிறந்தது.
இந்த இயற்கை முறைகள் பக்க விளைவுகள் குறைந்தது என்றாலும் அவற்றின் நம்பகத் தன்மையானது மிகவும் குறைவாகும்.

அதனால் குழந்தைகளை எதிர்பார்த்திருக்காத தம்பதிகள் இந்த இயற்கையான முறைகளை நம்பாமல் நம்பகமான வேறு ஒரு முறையினை
பாவிப்பது கட்டாயமாகும்.

பெண்ணின் சரியான மார்பகங்கள் எப்படி இருக்க வேண்டும்? மருத்துவர்கள் தகவல்

 
பெண்களின் மார்பகங்கள் சரியாக எப்படி இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர். 100 பெண்களை வைத்து குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணரான Patrick Mallucci இன் மூன்று மாத ஆய்வின் போது நான்கு முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டன. முதலாவதாக மார்பகத்திலிருந்து முலைக்காம்பு பத்து வீதம் கீழ் நோக்கி இருக்க வேண்டும்.
முலைக்காம்புகள் 20 டிகிரி மேல் நோக்கி இருக்க வேண்டும். குறித்த விடயங்கள் படம் மூலம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இவரது குறித்த ஆய்வு முடிவுகள் International Journal of Plastic என்ற சர்வதேச பத்திரிகையிலும்
images (1)


Saturday, November 2, 2013

நம்மை அறியாமல் கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் செயல்கள்…

Pregnant woman doing cardiovascular exercise
கர்ப்பமாக இருக்கும் போது, மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். குறிப்பாக கருத்தரித்து விட்டால், வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்கள் ஏற்படும். ஆனால் அவையே அளவுக்கு அதிகமாக போனால், அதுவே கருச்சிதைவிற்கு வழிவகுக்கும். யாரும் இந்த உலகில் கருச்சிதைவு ஏற்பட வேண்டுமென்று ஆசைப்படமாட்டார்கள். இருப்பினும் சிறு கவனக்குறைவினால், இத்தகைய கருச்சிதைவு ஏற்படுகிறது. அதிலும் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் தான், இத்தகைய கருச்சிதைவு ஏற்படும். இப்போது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் சில செயல்கள் என்னவென்று பார்ப்போம்.
தவறான உடற்பயிற்சி
கர்ப்பமாக இருக்கும் போது செய்யும் உடற்பயிற்சியில் மிகவும் கவனம் தேவை. ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது அனைத்து உடற்பயிற்சிகளுமே பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் சில உடற்பயிற்சிகள், வயிற்றை இறுக்கமடையச் செய்யும். எனவே எந்த ஒரு உடற்பயிற்சி மேற்கொள்ளும் முன்பும், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று செய்வது நல்லது.
மருந்து மாத்திரைகள்
மருந்து பொருட்களான ஆஸ்பிரின் போன்றவற்றை கர்ப்பத்தின் போது எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் எந்த வகையான ஸ்டெராய்டுகளையும் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. அதிலும் இதனை தேவையில்லாமல் அடிக்கடி எடுத்தால், அவை கருச்சிதைவை ஏற்படுத்தும்.
புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால்
தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவராகவோ அல்லது ஆல்கஹால் பருகினாலோ, அந்த பழக்கத்தில் இருந்து மீள்வது என்பது மிகவும் கடினம். ஆனால் அதில் உள்ள நிக்கோட்டின் மற்றும் ஆல்கஹாலில் உள்ள பொருள் இரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்தி, நஞ்சுக்கொடிக்கு ஆபத்தை ஏற்படுத்தி, கருச்சிதைவை எளிதாக்கிவிடும்.
மன அழுத்தம்
மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்கள் கருப்பையில் இறுக்கத்தை உருவாக்கி கருச்சிதைவை ஏற்படுத்தும். எனவே கர்ப்பமாக இருக்கும் போது மனதை அமைதியாக வைத்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபட வேண்டும்.
ஆபத்தான விளையாட்டுக்கள்
கர்ப்பமாக இருக்கும் போது வேகமாக சைக்கிள் ஓட்டுவது, குதிரை பந்தயம், ஸ்கேட்டிங், தண்ணீர் பூங்காக்களில் உள்ள விளையாட்டுக்கள் போன்ற விளையாட்டுக்களை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தைக்கு மட்டுமின்றி தாய்க்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
போதிய ஓய்வு இல்லாமை
அனைத்து கர்ப்பிணிகளுக்கும் குறைந்தது 8 மணிநேர தூக்கமும், 2 மணிநேர ஓய்வும் மிகவும் இன்றியமையாதது. ஒருவேளை உடலுக்கு போதிய ஓய்வு இல்லாவிட்டால், அவை உடலுக்கு தேவையான பலத்தைக் கொடுக்காமல், தடுமாற்றத்தை உண்டாக்கிவிடும்.
பயணம்
கர்ப்பமாக இருக்கும் போது இரண்டு அல்லது மூன்று சக்கர வாகனங்களில் பயணம் செய்ய வேண்டாம். ஏனெனில் சிறிது தடுமாறினாலும், கீழே வழுக்கி விட நேர்ந்து, இறுதியில் கருச்சிதைவை ஏற்படுத்தும்.
உணவுப்பழக்கம்
உணவுகளை சாப்பிடும் போது பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களை அறவே தவிர்க்க வேண்டும். மேலும் நல்ல ஆரோக்கியமான மற்றும் சுத்தமான பழங்களை சாப்பிட வேண்டும். ஏனெனில் அழுகிய பழங்களையோ அல்லது அசுத்தமான பழங்களையோ சாப்பிட்டாலும், அவை கருச்சிதைவிற்கு வழிவகுக்கும்.