Pages

Friday, January 31, 2014

சினைப்பை நீர்க்கட்டியால் பாதிப்பு

Pregnant affect cyst
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் சினைப்பை நீர்க்கட்டி நோய் மூலம் பெண்கள் பாதிக்கப்படுவது  வாடிக்கையாகிவிட்டது. இந்த நோய் உருவாவதற்கான காரணங்கள் பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் விளக்கமளிக்கிறார் கோவை சுந்தராபுரம்  ஸ்ரீரேஷ்மிகா மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.சகுந்தலா.

ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரத்தல், இன்சுலின் ஹார்மோன் இரத்தத்தில் அதிக அளவில் இருப்பது, அதிக உடல் எடை, சினைப்பையில்  அதிக அளவில் கருமுட்டை உண்டாவது (10-12) ஆகியவைகளால் சினைப்பை நீர்க்கட்டி உருவாகிறது. சினைப்பை கட்டிகள் இருப்பது தெரிந்தால்  அதை முடிந்தவரை அறுவை சிகிச்சையால் அகற்றாமல் சினைப்பையை தொந்தரவு செய்யாமல் குணப்படுத்துவது தான் பாதுகாப்பானது. அடிக்கடி  எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கும் பெண்களுக்கு ரேடியேஷனால் சினைப்பையில் முட்டைகள் அழிய வாய்ப்புகள் அதிகம்.

இதனால், மாதவிடாய் நீண்ட நாள் ஆகாமல் இருப்பது மற்றும் அதிக அளவில் உதிரப்போக்கு ஏற்படுவது, குழந்தையின்மை, முகம் மற்றும் உடலில்  அதிகமாக முடி வளரும். குழந்தை பெற்று கொள்ளும் வயதை தள்ளி போடுவது, சினைப்பையில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை குறைவு  ஆகியவை குழந்தையின்மைக்கு முக்கிய காரணம். இதற்கு, ரத்த பரிசோதனைகள் (ஹார்மோன் டெஸ்ட்), அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், லேப்ராஸ்கோபி  செய்து பார்க்கலாம்.

சினைக்குழாய்களின் செயல்பாடு நன்றாக உள்ளதா என்பதை சலைன் சோனோகிராபி சோதனை மூலம் சலைன் வாட்டரை கர்ப்பப் பையினுள்  செலுத்தி அது சினைக் குழாய்களில் சரியாகப் போகிறதா என்பதை ஸ்கேன் மூலம் கண்டறியலாம். எக்ஸ்ரே முறையில் கர்ப்பப்பையினுள் 8 முதல்  10 மி.லி அளவுள்ள டை போன்ற திரவத்தை செலுத்தி கர்ப்பப்பையின் உள் சுவர், கருக்குழாய் சுவர்கள் போன்றவற்றை ஆராயலாம். மாதவிலக்கு  வந்த 8 முதல் 10ம் நாள் இதை செய்யலாம். மயக்கமோ, மருத்துவமனையில் இருக்க வேண்டிய தேவையோ இல்லை.

முதல் இரண்டு முறையை விட லேப்ராஸ்கோபி முறையில் குழாய்களின் அமைப்பு, செயல்பாடு, சினைக்குழாய்களை ஒட்டியுள்ள சுவர்களின்  அமைப்பு, குழாய்களில் உள்ள முடிச்சுகள் அனைத்தையும் இதன் மூலம் அறியலாம். அதிக எடை உள்ளவர்களுக்கு எடை குறைப்பு பயிற்சிகள், எடை  குறைப்பு உணவு முறைகள், மருத்துவ சிகிச்சைகள்-மருந்துகள் மூலம் குணப்படுத்துவது, அறுவை சிகிச்சைகள்-லேப்ராஸ்கோபி மூலம் நீரை எடுப்பது.  கருக்குழாய்களுக்குள் சீலியா என்கிற ரோமம் போன்ற மெலிதான கற்றைகள் இருக்கும்.

கருமுட்டையானது இந்த சீலியா மூலம் தான் நகரும். எனவே சோதனையால் அதை கண்டுபிடித்து பழுதடைந்த சீலியா மற்றும் கருக்குழாய்களை  கழுவி சுத்தப்படுத்தினால் அடுத்தடுத்த மாதவிலக்கு சுழற்சிகளில் பிரச்னை சரியாகி விரைவில் கருத்தரிப்பார்கள்.

No comments:

Post a Comment