Pages

Tuesday, January 28, 2014

டைபாய்டு

இந்தியாவில் மிகச்சாதாரணமாக ஏற்படும் தொற்றாக, டைபாய்டு உள்ளது. மூன்று அல்லது அதற்கு மேலான நாட்களில் காய்ச்சல் தொடர்ந்தால், அது டைபாய்டாக இருக்கும் என முடிவு செய்யப்படுகிறது. “சல்மோநெலா’ என்ற வகை பாக்டீரியாவால் இந்நோய் ஏற்படுகிறது. கழிவுநீர் மூலமும், இந்நோய் தாக்கியுள்ள ஒருவர் அளிக்கும் உணவை சாப்பிடுவதன் மூலமும் இந்நோய் ஏற்படுகிறது.நம்மூர் அனைத்திலும் கழிவுநீர் மற்றும் கழிவுப் பொருட்களை அகற்ற சிறந்த முறை பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் டைபாய்டு தொற்று ஏற்படுவது இயற்கையே. அதிர்ஷ்டவசமாக, டைபாய்டை தவிர்க்க தடுப்பு மருந்துகள் உள்ளன. 2 வயது நிறைந்தவுடன், ஒரு ஊசி போடலாம்.
பின், ஒவ்வொரு 3 வயது கூடும்போதும், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்து உட்கொள்ள வேண்டும். வாய் வழியே சாப்பிடும், நோய் தடுப்பு மருந்தும் உள்ளது. மூன்று நாட்களுக்கு தொடர்ந்து இதை சாப்பிட வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு நோய் வராமல் தடுக்கலாம்.நோய் தடுப்பு மருந்தை, அரசு இலவசமாக வழங்குவதில்லை. எனவே, பெரும்பாலான மக்களுக்கு, இம்மருந்தின் அவசியமும், முக்கியத்துவமும் புரிய வில்லை. தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இந்த மருந்து கிடைக்கிறது.ஒரு டோஸ் மருந்தின் விலை 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இம்மருந்தை உட்கொண்டால், லேசான காய்ச்சலும், உடல் வலியும் ஏற்படும். பின் தானாகவே சரியாகி விடும்.டைபாய்டை ஏற்படுத்தும் பாக்டீரியா, உடலில் நுழைந்தவுடன், கடுமையான காய்ச்சலும், இரண்டு வாரங்களில், உடல் முழுவதும் சிவந்த கீறல்களும் ஏற்படும். நாக்கில் மேல்படலம் படிந்து, வெண்மையாகி விடும். அடிவயிறு வலி, வயிற்றுப்போக்கு ஏற்படும். நாளமில்லா சுரப்பிகள், கல்லீரல் வீங்கி விடும்.ரத்தப்பரிசோதனை செய்தால், வெள்ளை அணுக்களின் அளவு குறைந்திருக்கும். கிருமி, ரத்தம், மலம், சிறுநீர் ஆகியவற்றிலும் காணப்படும்.முன்பு, டைபாய்டுக் கென தனியான பரிசோதனை முறை கிடையாது.”விடால்’ என்றழைக்கப்படும் இந்த பரிசோதனை, பல நோய்களுக்கும் பொதுவானபரிசோதனை யாக மட்டு மே அமைந் தது.இரண்டு வாரங்கள் வரை காத் திருந்து, பிறகு மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வளவு நாள் எப்படி காத்திருக்க முடியும்?இப்போது, அட்டை முறை உட்பட பல பரிசோதனை முறைகள் வந்து விட்டன. டைபாய்டை கண்டறியாவிட்டால், மூன்றாவது வாரத்தில், மூளை, நுரையீரல், எலும்புகளில் தொற்று பரவி, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்.இத்தகைய நோயாளி களில் 10 சதவீதம் பேருக்கு, நோய் திரும்ப ஏற்படவும் வாய்ப்பு உண்டு. 1 முதல் 4 சதவீதத்தினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கிருமிகள் மலம் வழியே தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கும். இதனால், பலருக்கும் நோய் தொற்றும் ஆபத்து ஏற்படும். எனினும், பரிசோதனை செய்யாமல், சந்தேகத்தின் அடிப்படையிலேயே டைபாய்டுக்கு மருந்து கொடுப்பது நல்லதல்ல.இதற்கு பல ஆன்டிபயாடிக் மருந்துகள் உள்ளன. 7 முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும். சிகிச்சை காலம், சிகிச்சை முறை, மருந்து சாப்பிட வேண்டிய அளவு, இடைவெளி ஆகியவை சரியான முறையில் அமைதல் வேண்டும்.இல்லையெனில், மருந்துகளுக்கு, கிருமிகள் கட்டுப்படாத நிலை ஏற்படும்; நிலைமை சிக்கலாகும். கிருமி உடலில் தங்கும் நிலை ஏற்படும்.

No comments:

Post a Comment