Pages

Wednesday, January 29, 2014

கருக்கலைப்பும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்

இந்தியாவில் ஆயிரம் கர்ப்பிணிகளில் பதின்மூன்று பெண்களுக்கு அபோர்ஷன் ஆகிவிடுகிறது. இந்த பதின்மூன்றில் ஐந்து பெண்களுக்கு தானாகவே அபோர்ஷன் ஆகிறது. ஆனால், மீதி எட்டுப் பெண்கள் தாங்களாகவே முன் வந்து அபோர்ஷன் செய்கிறார்கள். இப்படி அபோர்ஷன் செய்ய முன் வரும் பெண்களில் அதிக மானோர் 25 வயதுக்குக் குறைவானவர்கள் என்பதும் பலர் கல்லூரிகளில் படிக்கும் இளம் பெண்கள் என்பதையும் யு.கே.விலுள்ள University of Aberdeen நடத்திய ஆய்வு தெரிவிக்கின்றது.

இதுபோன்ற பல ஆய்வுகளில் திருமணமான பெண்களை விட திருமணமாகாத பெண்களே அதிகமாக அபோர்ஷன் செய்ய முன் வருகிறார்கள் என்ற ஆய்வுத் தகவல்கள் அதிர்ச்சி யூட்டுகின்றன. அப்படி அடிக் கடி அபோஷன்கள் செய்வதால் இளம் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மகப்பேறு மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:
“இன்றைய வாழ்க்கைச் சூழலில் அபோர்ஷன் என்று சொல்லக்கூடிய கருக்கலைப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒரு பெண்ணுக்கு தானாகவே கர்ப்பம் கலைந்து விடுவதை மருத்துவ சிகிச்சைகளின் மூலம் தீர்த்து விடலாம். ஆனால், தானாகவே முன் வந்து கருவை கலைக்கச் செய்வது கொலை செய்வதற்குச் சமம். மருத்துவ உலகில் பலவிதமான தடுப்பு முறைகள் வந்துவிட்டாலும் கூட திருமணமான பெண்களைவிட திருமணமாகாத இளம்பெண்கள் செய்யும் அபோர்ஷன்கள் மிக மிக வேதனைக்குரியது; வெட்கக் கேடானதும் கூட”
பெண்களுக்குத் தானாகவே கர்ப்பம் கலைந்து விடுவதற்கு என்ன காரணம்?
“சில காரணங்களைக் கூறலாம். குறிப்பாக, மரபணு பிரச்சனைகளால் தாயின் கருவில் ஏற்படும் குறைபாடு, தாயின் கர்ப்பப்பையில் ஏற்படும் சில குறைபாடுகள், தாயின் உடம்பில் நோய்த் தாக்குதல், தாயின் உடம்பில் திடீர் கிருமித் தாக்குதல் ஆகிய காரணங்களால் அபோர்ஷன் ஆகிவிடுவதோடு அளவுக்கு அதிகமான ட்ராவல், அதிக எடை, பலம் குறைந்திருப்பது, அளவுக்கு அதிகமான டென்ஷன், மன அழுத்தம் ஆகிய காரணங்களால் கூட கர்ப்பம் தானாகவே கலையக் கூடிய வாய்ப்பு உள்ளது.”

இந்தப் பிரச்சினைக்கு என்ன செய்யவேண்டும்?
“மரபணு பிரச்சினைகளால் தாயின் கருவில் ஏற்படும் குறைபாட்டை மரபணுச் சோதனையின் மூலம் கண்டு பிடித்து அதற்கேற்ற சிகிச்சையுடன் குழந்தைப் பேற்றை கவனமாக எதிர் நோக்க வேண்டும். அதனால்தான் இரத்த சொந்தத்தில் (அக்காவின் மகள், மாமனின் மகள், இரத்தம் சார் ந்த உறவினர்) திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. அதே போல் கணவனுக்கு RH பாஸிட்டிவ் மனைவிக்கு RH நெகடிவ் என்ற இரத்த குரூப் இருந்தால் கருவில் இருக்கும் குழந்தை பாதிக்க வாய்ப்புள்ளது. இதை முன் கூட்டியே அறிந்து ஆன்டி-D போன்ற மருந்துகள், ஊசிகள் கொடுத்து பாதுகாத்துக் கொள்ளலாம். 35 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் கர்ப்பமாகும்போது கூட கரு கலைந்து விடும் வாய்ப்புகள் அதிகம். அதனால் மிகக் குறைந்த வயதும் இல்லாமல் அதிக வயதும் ஆகாமல் திருமணம் செய்துகொள்வது சிறந்தது.

கர்ப்பப்பை பிரச்சினைகள் என்று எடுத்துக் கொண்டால்… கர்ப்பப்பை வளர்ச்சி அடையாமல் சிறியதாக காணப்படுவது, கர்ப் பப்பை பிளவுபட்டு அல்லது நாக்கு மாதிரி சவ்வு வளர்ச்சி அடைந்து தொ ங்கிக் கொண்டிருப்பது, ஃபைப்ராய்டு கட்டிகள், கர்ப்பப்பை தளர்ந்து காணப்படுவது, காது போன்று இரு பக்கமும் இறக்கை விரித்தாற்போல் காணப்படுவது என எந்த மாதிரி குறைபாடு என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றாற் போல சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல்நிலை பாதிப்புகள் என்பது பெண்களுக்கு ஏற்படும் சர்க்கரை வியாதி, கர்ப்பகால சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இரத்தசோகை, தைராய்டு மற்றும் சிறுநீரக வியாதிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள். கர்ப்பகாலத்தில் சரியான உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருத்துவரின் ஆலோசனைப்படி சர்க்கரை வியாதியையும், இரத்த அழுத்தத்தையும் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல சத்தான உணவு மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு கொடிய பின்விளைவுகளைக் கொண்டுவரும் இரத்த சோகையை விரட்ட வேண்டும். சிறுநீரக வியாதிகளுக்கு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தயங்கக் கூடாது.
“அக்யூட் இன்ஃபெக்ஷன்ஸ்” எனப்படும் திடீர் தொற்று வியாதிகளில் ஏற்படும் தாக்குதல். அதாவது… வைரஸ், பாக்டீரியாவில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் அம்மைத் தொற்று. இதற்கும் மருத்துவரின் உதவியுடன் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவை எல்லாவற்றையும் மீறி தானாகவே அபோர்ஷன் ஆகிவிடுவதை நினைத்து கவலைப்படவேண்டாம். கடவுளே நன்மை செய்வதற்காக அந்தக் கருவை கலைத்து விட்டார் என்று மன திருப்தி அடைந்து கொள்ள வேண்டும். ஏனெனில், மேற்கண்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட தாயின் கருவை எடுத்து பரிசோ தனை செய்து பார்த்த போது, அது ஏதோ ஒரு குறைபாடு கொண்ட கருவாக இருந்திருக்கிறது. ஒருவேளை அந்தக் கரு குழந்தையாக பிறந்தாலும் ஏதோ ஒரு குறைபாட்டுடன் பிறக்கும் வாய்ப்புகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் சில நல்ல குழந்தைகளும் ஆகிவிடுவதும் உண்டு. எனவே, அபோர்ஷன் ஆகாத அளவுக்கு முன் கூட்டியே பரிசோதனைகள் செய்து மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி வாழ்வது உத்தமம்.”
சரி, தானாகவே முன் வந்து கருவை கலைத்துக் கொள்ளும் முறை பற்றி கூறுங்களேன்?
“நாம் இருவர் நமக்கு இருவர்… நாம் இருவர் நமக்கொருவர் என்ற நிலைகள்கூட மாறி நாம் இருவரும் குழந்தை நமக்கு ஏன்? என்கிற அளவுக்கு மாறி விட்ட காலம். இதற்கு அதிநவீன வாழ்க்கை, பொருளாதாரச் சூழல், விலைவாசி உயர்வு எனக் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தக் காரண மெல்லாம் திருமணமான தம்பதிகள் சம்பந் தப்பட்ட காரணங்கள். நாகரீக உலகத்துக்குள் புகுந்து பண்பாட்டைச் சீரழிக்கும் வகையில் திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறையற்ற வாழ்விலும் பல கொலைப் பிரசவங்கள் (அபோஷன்) அரங்கேறிக் கொண்டிருப்பது மற்றொரு காரணம்.

அபோஷன் என்கிற அபாய கட்டத்திற்கு செல்லாமல் இருக்க தற்காப்பு முறை கள் என்னென்ன?
“ஆணாக இருந்தால் ஆணுறை அணிந்து கொண்டோ, பெண் பெண்ணுறை அணிந்தோ செக்ஸில் ஈடுபடலாம். கணவன் மனைவியாக இருந்தால் முதல் குழந்தை பிறந்தவுடன் காப்பர்-டி அணிந்து தாம்பத்ய உறவில் ஈடுபடலாம். அதுவும், நார்மல் டெலிவரி என்றால் பத்து நாட்கள் கழித்தும், சிசேரியன் டெலிவரி என்றால் மூன்று மாதம் கழித்தும் காப்பர்-டி அணிவது நல்லது. திரும்பவும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டு மெனில் காப்பர்-டியை எடுத்துவிட்டு குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். காப்பர்-டி அணிந்து கொள்ளாத பெண்கள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

பீரியட்ஸ்க்கு (மாதவிடாய்) பிறகு முதல் ஏழுநாட்களும் கடைசி ஏழு நாட்களும் கரு உருவாகும் வாய்ப்புக் குறைவு. எனவேதான் கரு உருவாகும் வாய்ப்பு அதிக முள்ள அந்த இடைப்பட்ட (21 நாட்களில்) காலத்தில் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அதுவே கிராமப்புற பெண்களாக இருந்தால் பீரியட் ஸீக்குப் பிறகு முப்பது நாட்களுக்கும் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். அதற்கும் கார ணம் உண்டு. கணக்கு வைத் துக்கொண்டு சரியான நாளில் சாப்பிடமாட்டார்கள் என்பதால் முதல் ஏழு மாத்திரை களிலும் கடைசி ஏழு மாத்திரைகளிலும் கருத்தடை மருந்துள்ள மாத்திரைக்குப் பதிலாக சாதாரண சத்துமாத்திரைகள் இருக்கும்.
இந்தக் கருத்தடை மாத்திரைகள் சாப்பிட முடியாதவர்கள் “அவசரநிலை கருத்தடை மாத்திரை” (Emergency Contrace- ptive)களை செக்ஸ் வைத்துக் கொண்ட 24 மணிநேரத்துக்குள் போட்டுக் கொண்டால் கரு உருவாவதைத் தடுத்துவிடலாம். இல்லையெனில், இன்ஜெக்ஷன் மூலம் செலுத்தப்படும் இன்ஜக் டபுள் கருத்தடை மருந்து வந்து விட்டது. அதை உடம்பினுள் செலுத்திக் கொண்டால் அதிலுள்ள கருத்தடை மருந்துகள் இரத்தத்தில் கலந்து கருத்தரிப்பை தடுக்கும்.
நிரந்தரமாக கருத்தரிப்பு ஏற்படாமல் இருக்க… ஆண்களுக்கு “வேஜக்டமி”. பெண்க ளுக்கு “ட்யூபக்டமி” என குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனை செய்து கொள்வது சிறந்த வழி.
இதில் பெண்களைவிட ஆண்களுக்குச் செய்யும் வேஜக்டமி ஆபரேஷன் மிகமிக சுலபமானது. ஆனாலும், இன்றைய காலகட்டத்தில் அந்த ஆபரேஷனை செய்து கொள்வதால் “ஆண்” என்ற அந்தஸ்தே போய்விடும் என்று ஆண்கள் அலறுகிறார்கள். அதற்கு திரைப்படங்களில் இதுபற்றி சித்திரிக்கப்படும் நகைச்சுவைக் கா ட்சிகளும் அடங்கும். ஆண் கள் இந்த ஆபரேஷன் செய்து கொள்வதால் எந்த விதமான பிரச்னையும் இல்லை. வழக்கம்போல் மனைவியோடு இல்லற வாழ்க்கையை இன்பமாக ஆக்கிக் கொள்ளலாம். இப்படி பல வழிகள் இருந்தும் இதையெல்லாம் முறையாக கடைப் பிடிக்காமல் அபோஷன் என்ற நிலைக்கு திருமணமான பெண்களைவிட திருமணமாகாத இளம் பெண்கள் அபோஷன் அபாயத்துக்குத் தள்ளப்படுவதுதான் வேத னையிலும் வேதனை.”

இப்படி அடிக்கடி அபோஷன் செய்வதால் பெண்கள் பாதிப் புகளை சந்திக்க வேண்டி வருமா?
“அடிக்கடி அபோஷன் செய்துகொள்ளும் பெண்கள் தொற்று நோய்க்கிருமிகளின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். சில நேரங்களில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும். சிறுநீரகப்பாதையில் அழற்சி ஏற்படுவதோடு வலியும் அதிகரிக்கும். சில நேரங்களில் ஃபெலோஃபியின் ட்யூப்களில் அடைப்பு ஏற்பட்டு வருங்காலத்தில் குழந்தை பிறக்கும் வாய்ப்பே இல்லாமல் போகலாம். அதனால்தான் முதல் குழந்தையை அபோஷன் செய்ய வேண்டாம் என்று மருத் துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். முதல் குழந்தை பிறந்த பிறகு அபோஷன் என்கிற நிலைக்குப் போகலாம்.

தற்காப்பு முறைகள் என்று சொல்லக்கூடிய கருத்தடை மாத்திரைகள், ஊசிகள், கருத்தடைசாதனங்களால் பாதிப்புகள் இல் லையா?
“நிச்சயமாக பாதிப்புகள் உண்டு. இன்றைய அதிநவீன மருத்துவ உலகத்தில், உருவான கருவைக் கரைக்கும் மாத்திரைகள் கூட வந்துவிட்டன. இவையெல்லாம் பாதிப்புகளிலி ருந்து மீள்வதற்குத்தான். நல்லவற்றிற்காக பயன்படுத்தப்படும் இவை பள்ளிக் கல்லூரி மாணவிகளும் திருமணமாகாத இளம்பெண்களும் தவறாக பயன்படுத்திக் கொள்வது அதிகரித்து வருவதுதான் அதிர்ச் சிக்குரிய விஷயம். இயற்கைக்கு மாறாக செய்யக் கூடிய எந்த ஒரு விஷயமும் ஆபத்துதான். அதுவும் அளவுக்கு மீறினால் அதிகப்படியான ஆபத்துகள்.

கருத்தடை மாத்திரைகளில் அதிகமான ஹார்மோன்கள் இருப்பதால் அதை அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு பல விதமான பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக உடல் பருமன் அதிகரிக்கும். உடலில் நீர் கோத்துக் கொள்ளும். அதிக படபடப்பு, மனநிலை பாதிப்புகள், இடைப்பட்ட உதிரப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதோடு கேன்சர் வரும் அபாயமும் அதிகம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
காப்பர்-டியை பயன்படுத்துவதால் அதிகப்படியான உதிரப் போக்கு, வலி, கிருமித் தொற்றுகள் ஆகியவை ஏற்பட்டு அவதிப்பட வேண்டி யிருக்கும். இன்ஜக்டபுள் ஊசி போட்டுக் கொள்வதால் சிலருக்கு எடை அதிகரித்து விடும். பயம், படபடப்பு, டென்ஷன், எப்போதும் பதட்ட நிலையிலேயே காணப்படுவார்கள். அதுவும் திருமண மாகாத பெண்ணாக இருந்தால் இந்த பாதிப்புகளோடு சேர்ந்து சமூக ரீதியாகவும் மனரீதியாகவும் பிரச்சினைகள் உண் டாகும்.”
அபோஷன் செய்வதிலும் பாதிப்பு, தற்காப்பு முறைகளிலும் ஆபத்து என்றால் வேறு என்ன தான் செய்வது?
“ஒன்றும் செய்யாமல் இருந்தாலே எந்த பாதிப்பும் இல்லை. அந்தக் காலத்தில் இருந்தது போல திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் கருத்தரிப்பு நல்லது. இது பண்பாடு மட்டுமல்ல; இளைய சமுதாயங்களின் உடல் நலத்தில் கொண்டுள்ள அக்கறையும் கூட. சிற்றின்பம் முக்கியம்தான். அதை திருமணத்துக்குப் பிறகு முறையாக வைத்துக் கொள்ளும் தாம்பத்ய உறவின்மூலம் பேரின்பமாக்கிக் கொள்ளலாம். ஆணாதிக்கத்தை எதிர்க்க வரம்பு மீறுவது நாகரிகம் அல்ல. கற்போடு இருப்பது நல்லது. கருவை அழித்து கலாச்சாரத்தை அபோஷன் செய்யவேண்டாம். இதைத் தான் “பெண் சக்தி” இயக்கத்தின் மூலம் ஒவ்வொரு கல்லூரியிலும் சென்று ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்” என்று கூறினார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

நன்றி

No comments:

Post a Comment