Pages

Thursday, October 31, 2013

நீரிழிவு வராமல் தடுக்கும் முறை உணவு பழக்கவழக்கத்திலேயே உள்ளது

தொற்றா நோய் களோடு தொடர் புடைய ஒவ்வொரு நோயைப் பற்றியும் கடந்த வாரங்களில் வெளியான கட்டுரைகளில் பார்த்தோம்.
குறிப்பாக நீரிழிவு நோய், அல்லது சர்க்கரை வியாதி, சீனி வருத்தம், ‘ஷ¤கர்’ என்று அழைக் கப்படும் நோயைப் பற்றி கடந்த வாரம் சில தகவல்களை யும் பார்த்தோம்.
உண்மையிலேயே நீரிழிவு நோய் தானா? இல்லை என்கிறார்கள் சிலர் ஆனால் இது நோயல்ல. எமது உடலில் சேரும் சர்க்கரையை சமப்படுத்துவதற்கு போதுமான இன்சுலின் சதையிலிருந்து சுரக்காத காரணத்தினால் அல்லது, சுரக்கும் இன்சுலின் போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால் மிகுதி சர்க்கரை குளுக்கோஸ், குருதியில் கலக்கிறது.
இதனால் சகல நோய்களும் உடலினுள் நுழைவதற்கு பிரதான கதவு திறக்கப்படுவதாகவே அமைகிறது.
நீரிழிவு தொடர்பாக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அசங்க ரத்னாயக்காவை சந்தித்து சில தகவல்களை கேட்டறிந்து கொண்டோம். கொழும்பு களுபோவிலை ஆஸ்பத்திரியில் கடமையாற்றும் அவர் நீரிழிவு நோய் தொடர்பாகவும், அதனை தடுப்பது தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
குருதியில் அளவுக்கு அதிகமான குளுக்கோஸ் காணப்படுகின்ற மாற்ற முடியாத நிலை நீரிழிவு எனப்படும். உடலுக்குத் தேவையான சக்திக்காக நாம் உண்ணும் உணவின் அதிகமான பகுதி குளுக்கோஸாக மாற்றமடைகிறது.
எமது வயிற்றுக்கு அருகில் காணப்படும் சதையி (பங்கிறியஸ்) என்னும் உறுப்பு இன்சுலின் என்னும் சுரப்பை சுரந்து குளுக்கோஸ் எமது உடற்கலங்களில் கலப்பதற்கு உதவுகின்றது. உங்களுக்கு நீரிழிவு காணப்படும் போது, உங்கள் உடல் போதுமான அளவு இன்சுலினை சுரப்பது இல்லை. அல்லது அது சுரக்கின்ற இன்சுலினை பயன்படுத்த வேண்டிய அளவுக்கு பயன்படுத்த முடியாத நிலையை அடைகின்றது. இந் நிலை உங்கள் குருதியில் வெல்லத்தின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது. இந்த வெல்லம் குருதியில் மட்டும் காணப்படுவதோடு மட்டுமல்லாது, சிறுநீரிலும் பிரதிபலிக்கக் கூடும். இருதயக் கோளாறு, குருடு, சிறுநீரகம் செயலிழத்தல போன்ற பாரிய நோய்களுக்கு கூட நீரிழிவு வழிவகுக்கக் கூடும்.
எப்படி அது ஏனைய உறுப்புகளை பாதிக்கிறது?
உடலில் சேராத அதாவது இரத்தத்தில் கலக்கும் மேலதிக வெல்லம் அல்லது சர்க்கரை நுரையீரல், சிறுநீரகம், இதயம், கண்கள் போன்றவற்றை பாதிக்கிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவரின் கண்கள் பார்வையை இழக்க வேண்டிய நிலையும் ஏற்படும். சாதாரண கண்களை விட விழியினுள் பாதிப்புகள் அதிகம் காணப்படும்.
நீரிழிவு இரண்டு வகைகள் உண்டு. இவற்றில் இரண்டாவது வகை நீரிழிவு உள்ளவர்கள் 95 வீதமும், முதலாவது வகையினர் 5% வீதமும் உள்ளனர்.
முதலாவது வகை
முதலாவது வகை நீரிழிவானது ஹிypலீ யி ளிiabலீtலீs-யிளிளிணி-யிnsulin ளிலீpலீnனீலீnt ளிiabலீtலீs ணிலீllitus குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. 5% வீதமான நீரிழிவு நோயாளிகள் வகை ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களா வார்கள்.
இரண்டாவது வகை
இரண்டாவது வகை நீரிழிவு ஹிypலீ யியி -னியிளிளிணி-னிon யிnsulin ளிலீpலீnனீலீnt ளிiabலீtலீs ணிலீllitus இன்சுலின் சுரப்பிகள் போதியளவு இன்சுலின் சுரக்காததாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 95 வீதமான நோயாளிகளில் காணப்படுகிறது. இந்தவகை நீரிழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக உடற்பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரிழிவை நிறைகுறைவதாகவும் சாப்பாட்டுக் கட்டுப்பாட்டாலும் குழந்தைபேறு காலத்தில் பெண்களுக்கு நீரிழிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு தொடர்ந்தும் பாதிப்பை ஏற்படுத்துமா?
கர்ப்பகால நீரிழிவானது 2 சதவீதம் முதல் 4 சதவீதமான பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. இருந்தபோதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும். நமது இரைப்பையும், குடலும் உணவிலிருந்து குளுக்கோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.
குருதியிலுள்ள சர்க்கரை அல்லது குளுக்கோஸ் கலங்களுக்கு நுழைய முயாததன் காரணம் என்ன?
பல காரணங்களால் இது நிகழலாம்.
தேவையான அளவு இன்சுலின் கணையத்திலிருந்து உற்பத்தியாகாமல் போகலாம்.
இன்சுலின் தேவையான அளவு இருந்தும் சரியாக செயல்படாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படலாம். உடல் பருமனும் ஒரு காரணம்.
நீரிழிவு நோய் யாருக்கு ஏற்படும்?
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், பரம்பரையில் நீரிழிவு நோய் இருப்பவர்கள், எடை அதிகமாக இருப்பவர்கள், ஆகியவர்களுக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
மேலதிகமாக முதலாம் பிரிவு நீரிழிவு ஏற்படின் வாந்தி, மலச்சிக்கல், பார்வைமங்கல், சரும வியாதிகள், வயிற்று நோ என்பன ஏற்படும்.
நீரிழிவு நோயைக் கண்டுபிடித்தல், சிறுநீர் பரிசோதனையின் போது மேலதிக வெல்லம் இருப்பது நீரிழிவு நோய் தோன்றியிருப்பதன் அறிகுறியாகும்.
வேறு பரிசோதனை செய்வதன் மூலம் நீரிழிவு நோயை உறுதிப்படுத்தலாம். (தொடரும்)
முதல் வகை நீரிழிவில் அறிகுறிகள் விரைவாக ஆரம்பித்து கடுமையாகும். இரண்டாவது பிரிவில் அறிகுறிகள் மெதுவாக ஆரம்பிப்பதோடு கடுமையாகவும் இருக்காது.
நீரிழிவை கட்டுப்படுத்த நம்மால் தான் முடியும். எந்த மருந்துகளும் செய்யாத வேலையை நம் அன்றாட உணவுகள் செய்யும் வல்லமை கொண்டது. உணவின் தன்மையறிந்து, வகையறிந்து, அளவோடு உண்ண, உணவே அற்புத மருந்தாய் வேலை செய்யும்.
நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய சில காய்கறிகள்
வாழைப்பூ, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், கத்திரிப்பிஞ்சு, வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், பீர்க்கம் பிஞ்சு, அரைப்பிஞ்சு, இந்த காய்கறிகள் அனைத்தும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இவற்றை பச்சடியாகவோ, கூட்டாகவோ செய்து சாப்பிடலாம். பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை, நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கீரையேனும் சாப்பிட வேண்டும்.
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கீரைகள் அனைத்தும் சூப்பாகவும் செய்து அருந்தலாம். காம்பு நீக்கி, சுத்தம் செய்து அரிந்த கீரையுடன் சிறிது சீரகம், மிளகு, பூண்டு, சாம்பார் வெங்காயம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து 1 டம்ளர் அளவு வந்தவுடன் அருந்லாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க வேண்டியவை:
சர்க்கரை, குளுக்கோஸ், இனிப்பு பலாகாரங்கள், கேக், சாக்லேட், ஐஸ்கிரீம், வெல்லம், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, குளிர்பானங்கள், கேரட், பீட்ரூட், குறைந்த அளவு மாதம் இரு முறை சாப்பிடலாம்.
உடற் பயிற்சி
நீரிழிவு நோயுள்ள ஒருவர் மட்டுமல்ல, ஒருவர் உட்கொள்ள வேண்டிய உணவில் அதிகளவு காய்கறிவகைகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிaர்கள். அத்துடன் ஆரோக்கியம் தரக் கூடிய எண்ணெய் என்கிaர்கள்.
உடலுக்கு கேடு விளைவிக்காத எண்ணெய் எது?
காலத்துக்க காலம் வர்த்தக நோக்கத்திற்காக இந்த எண்ணெய்யை பாவியுங்கள்.
இதில் (ஷிaturatலீனீ ஜீat) நிறைவுற்ற கொழுப்பு இல்லை. அதை பாவியுங்கள் என சிபாரிசு செய்கிறார்கள். உண்மையில் எதைப் பாவிப்பது?
உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய (ஷிaturatலீனீ ஜீat)
நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ள எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது?
விanola oil எனப்படும் காட்டுக் கடுகு எண்ணெய்யில் 7 வீதம் நிறைவுற்ற கொழுப்பும் ஆலிவ் மற்றும் சோளம் எண்ணெய்யில் 13 வீதமும், சூரிய காந்தி எண்ணெய்யில் 10.3 வீதமும், நல்லெண்ணெய்யில் 14.2 வீதமும், சோயா எண்ணெய்யில் 15 வீதமும் தேங்காய் எண்ணெய்யில் 92 வீதமும் இருக்கிறது. இப்போது எதனை பாவிப்பது என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.
நிறைவுற்ற ஒற்றை நிறைவுறா பல்நிறைவுறா உணவு
உணவு கொழுப்பு கொழுப்பு கொழுப்பு
மொத்தக் கொழுப்பில் எடை சதவிகிதம் (%)
சமையல் எண்ணெய்கள்
காட்டுக்கடுகு
எண்ணெய் 7 59 29
நல்லெண்ணெய் 14.200 39.700 41.700
சோள எண்ணெய் 13 24 59
ஆலிவ் எண்ணெய் 13 74 8
சூரிய காந்தி எண்ணெய் 10.3 19.5 65.7
சோய் அவரை எண்ணெய் 15 24 58
தேங்காய் எண்ணெய் 92 6 2
டொக்டர், நீரிழிவு உள்ளவர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டால் ஆறுவதில்லை. அதேபோல் உயிரோடு இருக்கும் போதே கால் விரலிலிருந்து தொடை வரை வெட்டி அகற்றப்படும் கொடுமையையும் பார்த்திருக்கிறோம். இது எதனால் ஏற்படுகிறது?
கால் மட்டுமல்ல கண் உள்ளிட்ட உடலில் எந்த பாகத்துக்கும் இந்த நிலை ஏற்படலாம்.
நீரிழிவு
முதலில் கூறியது போல குருதியில் கலக்கும் மேலதிக குழுக்கோஸ் உடலிலுள்ள ஏனைய உறுப்புக்களுக்கும் சென்று செயலிழக்கச் செய்கிறது.
குறிப்பாக ஒன்றை மட்டும் நாங்கள் மறந்துவிடக் கூடாது. கால்களின் விரல்களில், அடிப்பாதத்தில் விரல்களுக்கு இடையில் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு அடிப்பாதம் மரத்துப் போவது போல தோன்றும் விரல்கள் மரத்துப் போகும் அங்கே சிறுகாயம் ஏற்பட்டு அது பெரிய காயமாகி நாற்றமெடுக்கும் வரை உணர்வுகள் இருக்காது.
எனவே வாரத்துக்கு ஒருமுறை பாதத்தை நன்கு கழுவி ஒரு கண்ணாடியை வைத்து பாதத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
முகத்துக்கு எந்தளவுக்கு ‘மேக் அப்’ செய்கிறோமோ அதேபோல பாதத்தையும் பாதுகாக்க வேண்டும். சிலர் முகத்தை மட்டும் மினுக்கிக்கொண்டு செல்வார்கள். பாதத்தை பார்த்தால் வெடிப்புகளும், சீரில்லாமலும், ஏனோ தானோ என்றும் இருக்கும்.
வாரத்தில் ஒருமுறை வெதுவெழுப்பான சுடு நீரில் கால்களை ஊற வைத்து தண்ணீரில் கொஞ்சம் உப்பை கலந்துகொள்ள வேண்டும். விரல் இடுக்குகளை பிரஷ்கொண்டு தேய்த்து கழுவி, நகக் கண்கள் சுத்தம் செய்யப்படுதல் மிக மிக அவசியம்.
கால்களில் காயங்கள் ஏற்படாதவாறு சப்பாத்துக்கள் அணிவது சிறந்தது.
நீரிழிவு நோய் என்றதும் இது கிட்டத்தட்ட அதிக வருமானம் பெறுபவர்களுக்கே ஏற்படும் என்று ஒரு அபிப்பிராயம் நம்மத்தியில் இருக்கிறது. ஆனால் இலங்கையை பொறுத்தவரையில் அப்படி இல்லையே?
ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல வெளிநாடுகளில் அப்படித்தான். ஆனால் இலங்கையில் எல்லோரும் எல்லாவித உணவுக்கும் பழக்கப்பட்டுவிட்டார்கள். இலங்கையில் உணவு முறை எல்லோர் மத்தியிலும் சமமாக உள்ளது.
இலங்கையில் நீரிழிவு நோய் பெண்களுக்கா ஆண்களுக்கா அதிகமாகவுள்ளது?
இரண்டுமே சம அளவுதான் ஆனால் பெண்கள் சற்று அதிகமாகத்தான் இருக்கிறார்கள்.
உடல் பருமன் நீரிழிவுக்கு ஒரு காரணமாக அமையுமா?
உடல் பருமன் என்பது நீரிழிவு இதய நோய் என்று எல்லா நோய்களையும் இழுத்து வந்துவிடும்.
‘பி. எம். ஐ. (பாடி மாஸ் இன்டக்ஸ்)னு சொல்ற கணக்கை ஒவ்வொருத்தரும் சுயமா செய்து பார்க்கலாம். கிணியி – wலீight (kg) / ரீhலீight (சீ)மீ 2 இது 24க்குக் கீழ் இருந்தால் நோர்மல். 24 – 28 அதிக எடை, 28 – 32 ஆரம்பக்கட்ட பருமன். 32 – 35 நடுத்தர பருமன். 35 – 38 தீவிர பருமன் 38க்கும் மேல் ஆபத்தான பருமன்.
24 வரை மட்டுமே இருக்க வேண்டிய பி. எம். ஐ. அதிகமானால், உடலில் கொழும்புச் சத்து கூடும். அதன் விளைவாக கணையத்தில் சுரக்கும் இன்சுலின் வேலை செய்கிற தன்மை பாதிக்கப்படும். மெல்ல மெல்ல நீரிழிவை நோக்கி நம்மை இட்டுச் செல்லும். குண்டாக இருக்கிற எல்லோருக்கும் நீரிழிவு இருக்கிறதா எனக் கேட்கலாம். ஆனால் காலப்போக்கில் அவர்களுக்கு கட்டாயம் நீரிழிவு தாக்கும்.
ஏற்கனவே நீரிழிவு பாதிக்கப்பட்டு, அதற்காக மருத்துவம் எடுத்துக்கொள்கிறவர்களுக்கும், சர்க்கரையின் அளவு மட்டும் கட்டுக்குள் வராமலே இருக்கும். காரணம், பருமன்தான். அதிகப்படி எடையை சில கிலோ குறைத்தாலே, சர்க்கரையின் அளவு தானாக கட்டுக்குள் வருவதை உணர்வார்கள்.
பருமனை அலட்சியம் செய்கிறவர்களுக்கு இன்சுலின் சுரப்புக்கு எதிரான சில சுரப்பிகள் வேலை செய்யத் தொடங்கும்.
நீரிழிவுக்கான சோதனையை மேற்கொண்டு பாருங்கள். உணவுக்கு முன்பான சோதனையில் குருதியில் சர்க்கரை அளவு 100 க்கும் கீழ் இருந்தால் மட்டுமே அது நோர்மல். 101 முதல் 125 இருந்தால், அது நீரிழிவுக்கான முந்தைய கட்டம். 126 என்றால் நிச்சய நீரிழிவு. சாப்பாட்டுக்கு 2 மணி நேரத்துக்குப் பிறகான சோதனையில், 140 க்கும் கீழ் என்றால் நோர்மல், 141 – 200 இருந்தால் நீரிழிவுக்கு முந்தைய கட்டம். 200 க்கும் மேல் என்றால் நிச்சய நீரிழிவு.
நீரிழிவிலிருந்து விலகி வாழ விரும்புவோர், முதல் கட்டமாக உடல் பருமனைக் கண்காணித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

நீரிழிவுக்கு நிரந்தர தீர்வு இல்லை என்பதை உணர வேண்டும். சரியான மருத்துவரிடம் முறையான சிகிச்சைப் பெற வேண்டும். மருத்துவர் ஆலோசனைப்படி இரத்த பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை செய்தல், மருந்துக்களை உட்கொள்தல் வேண்டும்.
கண் மருத்துவரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்ய வேண்டும். சரியான உணவை தினம் தோறும் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல், உடலில் அதிகப்படியான எடையை குறைத்தல் போன்றவற்றை ‘சுய கட்டுப்பாட்டுடன்’ கடைப்பிடித்தால் நீரிழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை நடத்தலாம்

No comments:

Post a Comment