* மகிழம்பூவை
சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு
உண்டாகும்.
* தேங்காய்ப்பால்
எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.
* அரசம்பழம்,
வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து
பாலில் கலந்து குடிக்கவும்.
* அமுக்கராங்
கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.
* படுக்கைக்கு
செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.
தாது
விருந்தி:
* முருங்கைப்பூவை
நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ்
பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.
* நெய்,
மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை,
அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை
சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.
* கருவேலமரத்தின்
பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர
பழைய நிலைமைக்கு வரலாம்.
* அரசம்பழத்தை
இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன்
சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால்
சாப்பிட தாது பலம் பெறும்.
* வால்
முளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும்
சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.
No comments:
Post a Comment