Pages

Sunday, February 23, 2014

நீர்முள்ளி

மருத்துவக் குணங்கள்:
  1. நீர்முள்ளி என்ற பெயருக்கேற்ப இது நீர் நிலைகளில் காணப்படும் மூலிகையாகும். இதில் முட்கள் இருக்கும். ஊதா நிறத்தில் பூக்களை கொண்டிருக்கும்.
  2. இதனை நிதகம், இக்குரம், காகன்டம், முண்டகம், என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
  3. நம்மில் பலருக்கு சிறுநீரக கல் அடைப்பு நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
  4. இவற்றை எடுத்து 2 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து எட்டில் ஒரு பங்காக நன்கு வற்ற காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என இரு வேளையும் அருந்தி வந்தால் சிறு நீரக கல் கரைந்து சிறு நீருடன் வெளியேறும்.
  5. நீர் முள்ளி சமூலத்தை கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். மேலும் தாது விருத்தி அடையும். மல சிக்கலை போக்கும்.
  6. நீர்முள்ளி விதை ஆண்மைக்குறைவை போக்குகிறது. மேலும் மூல நோய்க்கு கைகண்ட மருந்தாகும்.

No comments:

Post a Comment