Pages

Saturday, November 2, 2013

கல்லீரலில் கவனம் தேவை!

*நமது உடம்பில் குறிப்பிடத்தக்க உறுப்புகளில் ஒன்று, கல்லீரல். இது கருஞ்சிவப்பு நிறமுடையது. கல்லீரல், உடம்பில் பெரிய இரத்த வடிகட்டியாகவும், இரண்டாவது பெரிய நோய் எதிர்ப்பு அமைப்பாகவும் இயங்குகிறது.வயிற்றின் இடதுபக்கத்தில் உதரவிதானத்துக்குக் கீழே இடம்பிடித்திருக்கிறது.

*இது, சுழற்சியில் இருக்கும் இரத்த செல்களின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. நோய்த்தொற்றுகளில் இருந்து உடம்பைக் காக்கிறது.குடல்வாலைப் போல கல்லீரலும் தேவையற்ற ஓர் உறுப்பு என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வந்தது.
சோகஉணர்வுக்குக்காரணமான கறுப்பு திரவத்தை கல்லீரல் சுரப்பதாக ஹ்ப்போகிராட்டஸ் என்ற மருத்துவர் ஆய்வாளர் கருதினார்.

*கல்லீரல் முற்றிலும் புதிர்கள் நிறைந்த உறுப்பு என கேலன் என்ற அறிஞர் கூறினார். சீனப் பாரம்பரிய மருத்துவத்தில், அதீதமான கவலைக்குக் காரணமானதாக கல்லீரல் குறிப்பிடப்படுகிறது. ஆங்கில இலக்கியத்தில், கோபம், சோகம் ஆகியவற்றைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாக ‘ஸ்பிலீன் (கல்லீரல்) உள்ளது.

*சாலை விபத்துகள், தடகள விளையாட்டுக்களின் விபத்து அல்லது தாக்குதல்களில் வயிற்றுப் பகுதி காயமடையும்போது கல்லீரல் சேதம் அடைவது பொதுவான அபாயமாக உள்ளது. அந்நிலையில் உடனடியாக அறுவைச்சிகிச்சை செய்யப்படாவிட்டால், கல்லீரலானது அதிர்ச்சிக்கும், மரணத்துக்கும் இட்டுச் செல்லும்.

*செரிமானத்தின்போதும், அதன்பின்பும் கல்லீரலின் அளவு அதிகரிக்கிறது. மலேரியா காய்ச்சல் ஏற்பட்டால் கல்லீரல் 9 கிலோ வரை பெரிதாகக் கூடும். கல்லீரலின் ஒரு பகுதி மட்டும் நீக்கப்பட்டால் அது மீண்டும் வளர்ச்சி அடையக்கூடும். 1549ல் ஆண்டிரானோ ஸாக்கரெல்லோ என்பவர் முதல்முறையாக கல்லீரலை அகற்றினார்.

*கல்லீரல் அகற்றப்பட்ட நோயாளி, அதன்பின்பும் ஆறாண்டுகள்வாழ்ந்தார்.கல்லீரல் நீக்கம் (ஸ்பிலீனக்டமி) செய்யப்பட்டால், எதிர்உயிரிகளை உருவாக்கும், இரத்தத்தில் மாசுகளை அகற்றும் உடம்பின் திறன் குறைகிறது. நோய் எதிர்ப்புத்திறன் தாழ்கிறது. ஆனால் விரைவிலேயே ஈரலும், மற்ற உறுப்புகளும் அந்தப் பொறுப்பை ஏற்கின்றன.

*நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடும் தங்கள் திறனை அதிகரித்துக்கொள்கின்றன. எனினும், கல்லீரல் குறித்து அதிக கவனம் தேவை.

No comments:

Post a Comment