Pages

Saturday, December 21, 2013

இயற்கையாகவே கருச்சிதைவை ஏற்படுத்தும் உணவுகள் பற்றிய குறிப்பு!

 

இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னர் கருத்தரிக்கலாம் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ, உணர்ச்சி வேகத்தில் கருத்தரித்துவிட்டால் அது பெரிய ஆச்சரியத்தையும் தரும். அதிலும் வாழ்வில் நல்ல நிலையில் இல்லாமல், எதிர்பார்க்காத வேளையில் கருத்தரித்துவிட்டால், அது சந்தோஷத்தை விட கஷ்டத்தை தான் அதிகம் கொடுக்கும்.
ஆகவே அந்த நிலையில் செயற்கை முறையில் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு கருவை கலைப்பதற்கு பதிலாக, இயற்கை முறையில் கருவைக் கலைத்தால் நல்லது. மேலும் பல்வேறு நாடுகளில் செயற்கை முறையில் கருவைக் கலைப்பது ஒரு சட்டவிரோதமான செயலாக இருந்தாலும், இயற்கை முறையில் கருவைக் கலைப்பது சட்டப்பூர்வமாக உள்ளது. ஆகவே இப்போதைக்கு கருத்தரிக்க வேண்டாம் என்பவர்கள் இயற்கை முறையை நாடினால், எவ்வித பக்கவிளைவு இல்லாமல் கருவைக் கலைக்கலாம்.
அதிலும் உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா, நீரிழிவு, சிறுநீரக பிரச்சனை இல்லாதவர்களுக்கு மிகவும் நல்லது. மேலும் பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களை சாப்பிட்டாலும், கருச்சிதைவு ஏற்படும். ஆகவே கருத்தரிக்க வேண்டாம் என்பவர்கள் கீழே உள்ள உணவுகளை கருத்தரித்த முதல் மூன்று மாதத்தில் அதிகம் சாப்பிட்டால், கருவை கலைத்துவிடலாம். ஆனால் குழந்தை வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள், இந்த உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
அந்த உணவுகள்
வைட்டமின் சி உணவுகள்…
வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உணவுகளை மாதவிடாய் நெருங்கும் காலத்தில் அதிகம் சாப்பிட்டால், கரு உருவாகி இருந்தாலும் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். ஏனெனில் அதிகப்படியான வைட்டமின் சி உணவுகளை கர்ப்பத்தின் ஆரம்பத்தில் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படுவது உறுதி.
பப்பாளி..
பப்பாளியில் அளவுக்கு அதிகமாக வைட்டமின் சி நிறைந்திருப்பதால் தான், அதனை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, இதில் உள்ள பாப்பைன் என்னும் பொருளும் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அன்னாசி…
முன்னோர்கள் சொல்வது போல், அன்னாசியும் நிச்சயம் கருச்சிதைவை ஏற்படுத்தும். எப்படியெனில், பப்பாளியில் பாப்பைன் உள்ளது போது, அன்னாசியில் ப்ரோமிலைன் என்றும் நொதி உள்ளது. இது கருப்பை வாயை மென்மையடையச் செய்து, கருச்சிதைவிற்கு வழிவகுக்கிறது.
எள்…
தினமும் ஒரு டீஸ்பூன் எள்ளை தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், கருச்சிதைவு ஏற்படும்.
க்ரீன் டீ…
க்ரீன் டீயை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
டப்பாவில் அடைக்கப்பட்ட மீன்…
டப்பாவில் அடைக்கப்பட்ட மீனில், அது கெட்டுப் போகாமல் இருப்பதற்கு கெமிக்கல்கள் பயன்படுத்துவதால், அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, உடலில் நீர் தக்க வைத்தலை அதிகரித்துவிடும். அதுமட்டுமல்லாமல் அதில் உள்ள மெர்குரி, கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்.
காய்ச்சாத பால்…
காய்ச்சாத பச்சை பாலில் உள்ள பாக்டீரியாக்கள், கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆகவே கர்ப்பம் வேண்டாம் என்பவர்கள், காய்ச்சாத பாலை அருந்தலாம்.
ப்ளாக் கோஹோஷ்…
இது ஒரு இயற்கையான கருச்சிதைவை ஏற்படுத்தும் மூலிகை. இந்த சைனீஸ் மூலிகையை அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டால், அது வயிற்றில் வளரும் கருவை கலைத்துவிடும்.
படிக்கட்டு ஏறுவது…
கர்ப்பமாக இருக்கும் போது அதிக கனமான பொருட்களை தூக்குவது, உடலை வருத்தும் வகையில் வேலை செய்வது, படிக்கட்டுகள் ஏறுவது போன்றவையும் கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்.

No comments:

Post a Comment